search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94341"

    ‘குடும்பமே முதலில்’ என்று சிலர் செயல்படுகின்றனர். ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு வர விடாமல் தடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #Rafale #Congress #Modi #WarMemorial
    புதுடெல்லி:

    டெல்லியில், இந்தியா கேட் வளாகத்தையொட்டி, 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.176 கோடி செலவில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதில், பலியான 25 ஆயிரத்து 942 ராணுவ வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் தங்க எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட ஸ்தூபியும், அணையா தீபமும், இந்திய ராணுவம் ஈடுபட்ட முக்கிய போர்களை விளக்கும் 6 சுவர் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி, இந்த போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதை குறிக்கும் வகையில், அவர் தீபத்தை ஏற்றிவைத்தார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா பூக்கள் தூவப்பட்டன.



    இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரிடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினரின் குறைகளை தீர்க்க ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, அவர்கள் ஒவ்வொரு இடத்துக்கும் அலைய வேண்டியது இல்லை. இந்த நினைவு சின்னம் கட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டும், முந்தைய அரசுகளின் அலட்சியம் காரணமாக தாமதம் ஆனது. இது, உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.

    படைவீரர்களின் நலன்களையும், பாதுகாப்பையும் முந்தைய மன்மோகன் சிங் அரசு அலட்சியம் செய்தது. குண்டு துளைக்காத 1 லட்சத்து 86 ஆயிரம் உடைகள் வாங்க 2009-ம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டுவரை மன்மோகன் சிங் அரசு எதுவுமே செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான், 2 லட்சத்து 30 ஆயிரம் உடைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சிலர், ‘குடும்பமே முதலில்’ என்று செயல்படுகிறார்கள். ஆனால், நான் ‘இந்தியாவே முதலில்’ என்று செயல்பட்டு வருகிறேன்.

    ரபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வர விடாமல் தடுக்க சிலர் கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து பறக்கத் தொடங்கும்போது அவர்கள் வாயடைத்து போவார்கள்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், “இந்த நினைவு சின்னம், மற்றொரு ஆன்மிக தலமாக இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் இங்கு வந்து, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்” என்று கூறினார்.

    டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி நரேந்திர மோடி இன்று திறந்து வைத்ததுடன் அணையா ஜோதியையும் ஏற்றி வைத்தார். #NationalWarMemorial #Modidedicates #ModidedicatesWarMemorial
    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைநகரான டெல்லியில் முக்கிய சின்னமாக அமைந்திருப்பது ‘இந்தியா கேட்’ எனும் பிரம்மாண்டமான நுழைவாயில். பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள முக்கிய சாலையான ராஜ்பாத்தில் அமைந்துள்ள இந்த நுழைவாயில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கான  போர் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டது.

    சர் எட்வின் லுத்யான்ஸ் என்பவரால் கட்டப்பட்ட இந்த நினைவிடத்துக்கு அகில இந்திய போர் நினைவுச் சின்னம் என பெயர் வைக்கப்பட்டாலும் அது, இந்தியா கேட் என்றே அழைக்கப்படுகிறது.

    இந்த நுழைவுவாயிலின் தூண்களில் முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த நம் நாட்டின் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ‘அழியாப் புகழ் உடைய போர் வீரர் ஜோதி’ (அமர்ஜவான் ஜோதி) என்ற பெயரில் 1971-ம் ஆண்டு முதல் ஒரு அணையா ஜோதியும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

    இதை விரிவுபடுத்தி, புதுப்பித்து உலக அளவில் ஒரு போர் நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே 1962-ல் நடந்த போருக்குப் பின் கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்த இந்தக் கோரிக்கை, கடந்த 1999-ல் நடந்த கார்கில் போருக்கு பிறகு மேலும் வலுப்பெற்றது.

    இதற்கிடையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் புதுப்பொலிவுடன் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுன்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

    அந்த வாக்குறுதிய நிறைவேற்றும் வகையில் மிக பிரமாண்ட அளவில் இந்த போர் நினைவுச் சின்னம் விரிவுப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததுடன் அணையா ஜோதியையும் ஏற்றி வைத்தார். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான முன்னாள், இந்நாள் ராணுவ உயரதிகாரிகள் இந்த திறப்புவிழாவில் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘டெல்லியில் மாபெரும் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதை மத்தியில் முன்னர் ஆட்சி செய்த அரசு கவனிக்கவில்லை. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இதற்கான முதல்கட்ட ஏற்பாடுகள் நடந்தன. பின்னர், ஆட்சி மாறியபோது இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

    2014-ம் ஆண்டில் எங்கள் ஆட்சி அமைந்த பின்னர் இதற்கான பணிகள் தொடங்கி இந்த போர் நினைவுச் சின்னம் இன்று திறக்கப்படுகிறது. இதை புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வரலாற்று சிறப்புக்குரிய இந்த இடத்தில் இருந்தவாறு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு எனது மரியாதைகளை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    முன்னதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகளுடன் போர் நினைவுச் சின்னத்தில் உள்ள சில வீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைடங்களை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி வீரவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியின்போது ராணுவப்படையினருக்காக புதிதாக 3 அதிநவீன சிறப்பு மருத்துவ மனைகள் தொடங்கப்படும் எனவும் மோடி அறிவித்தார். #NationalWarMemorial #Modidedicates #ModidedicatesWarMemorial
    தமிழகத்தில் மதுரை உள்பட 20 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தேசிய பெண்கள் கட்சி அறிவித்துள்ளது. #Parliamentelection

    மதுரை:

    இந்தியாவில் முதன் முறையாக பெண்களின் பங்களிப்புடன் கூடிய தேசிய பெண்கள் கட்சி மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்வேதா ஷெட்டி, நிருபர்களிடம் கூறும்போது, பாராளுமன்றத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் அமர வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய குறிக்கோள்.

    எங்கள் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மதுரை, வேலூர், மத்திய சென்னை, காஞ்சிபுரம் உள்பட 283 பாராளுமன்ற தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம்.

    தமிழகத்தில் மட்டும் 20 தொகுதிளில் போட்டியிடுவோம். இதற்கான வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது.

    வேட்பாளர் தேர்வில் வக்கீல், சமூக ஆர்வலர்களுக்கு முன்னுரிமை தரப்படும். எங்கள் இயக்கத்தின் கொள்கையுடன் ஒத்துப்போகும் ஆண்களை வேட்பாளராக நிறுத்த உள்ளோம்.

    எங்கள் இயக்கத்துக்கு தேசிய அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை. அது மாநில அளவில் இயங்கி வரும் கட்சி. அதே நேரத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கலந்து கொண்டார்.  #Parliamentelection

    5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தலா ரூ.6,000 வழங்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். #PMModi
    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தலா ரூ.6,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 தவணையாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான பட்டியல் தயாரிப்பு பணி நாடு முழுவதும் நடைபெற்றது.

    அனைத்து மாநில அரசுகளும் பயனாளிகள் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. பிரதமர் மோடி இந்த திட்டத்தை வருகிற 24-ந்தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்கி வைக்கிறார்.

    இதேபோல் தமிழக அரசு வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை சட்டசபையில் அறிவித்தது. இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த 16-ந்தேதி அரசாணை வெளியிட்டது. அதில் ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.2,000 செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை கண்காணிக்கவும் பயனாளிகள் விவரம் சேகரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை மறைந்த ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தின் கீழ் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள் அனைத்து ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்குகளிலும் ரூ.2,000 செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதேபோல் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் முதல் தவணை நிதி உதவி ரூ.2,000 இந்த மாத இறுதிக்குள்ளும், 2-வது தவணை தொகை ரூ.2,000 மார்ச் முதல் வாரத்திலும் வங்கி கணக்கில் போடப்படும் என்று அறிவித்துள்ளது.

    அத்துடன் தமிழக அரசு வழங்கும் ரூ.2,000 இம்மாத இறுதிக்குள் போடப்படுவதால் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.6,000 கிடைக்கும். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த உதவித் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #PMModi
    புல்வாமா தாக்குதலையடுத்து அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க நாளை காலை டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது. #Allpartymeeting #Parliamentlibrary #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதுதொடர்பாக, டெல்லியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.  மேலும், மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



    இதைதொடர்ந்து, புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக நாளை காலை 11 மணியளவில் அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

    பாராளுமன்றத்தில் உள்ள நூலக அரங்கில் நடைபெறும் நாளையை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Allpartymeeting #Parliamentlibrary #PulwamaAttack
    மோசடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கும் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. #LokSabha #ChitFundAct
    புதுடெல்லி:

    சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்கிறவர்களை, நிதி மோசடியாளர்களை பிடித்து கடுமையான தண்டனையும், கடும் அபராதமும் விதிக்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.

    இதுதொடர்பாக கட்டுப்பாடற்ற டெபாசிட் திட்டங்களை தடை செய்யும் மசோதா ஒன்றை தயாரித்தது.

    இந்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது நேற்று சிறிய அளவில் விவாதம் நடந்தது.

    விவாதத்தின்போது, மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பேசினர்.

    காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, “மேற்கு வங்காளத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளது. லட்சக்கணக்கான மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் திருப்பித்தரப்பட வேண்டும்” என கோரினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. முகமது சலீம் பேசும்போது, “ ஊழல் காரணமாகத்தான் திரிணாமுல் காங்கிரஸ் (அதிகாரத்துக்கு) வந்துள்ளது. அதன் சில உறுப்பினர்கள் சிறைக்கு போக வேண்டும்” என கூறினார்.

    அப்போது பா.ஜனதா எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

    முகமது சலீம் பேச்சு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

    விவாதத்துக்கு நிதி மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உரிய அங்கீகாரமின்றி டெபாசிட்டுகளை பெற்றது தொடர்பாக 978 சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 326 சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

    இத்தகைய அங்கீகாரமற்ற டெபாசிட்டுகளை பெறுவதை முடிவுக்கு கொண்டு வர அரசு விரும்பி உடனே செயல்பட்டது. இந்த மசோதாவில் ஓட்டைகள் இல்லை என்பதை உறுதி செய்தோம்.

    இந்த மசோதா, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்து, அவற்றை விற்று டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க வகை செய்கிறது.

    சட்டத்தை தவறாக பயன்படுத்தாதபடிக்கு பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிதி மந்திரி பியூஸ் கோயலின் பதில் உரையைத் தொடர்ந்து மசோதா, குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது.
    கட்டிப்பிடிப்பது, கண் சிமிட்டுவது என நடிகர்களே அசரும் வகையில் ராகுல் காந்தி நடிக்கிறார் என்று பாராளுமன்ற கடைசி கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். #PMModi #RagulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது. தேதி குறிப்பிடப்படாமல் கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

    முன்னதாக, கடைசி நாள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல், அவரை கிண்டல் செய்து பிரதமர் மோடி பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    நாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று ஒருவர் பேசியதை நாம் கேட்டோம். 5 ஆண்டு ஆட்சி முடிவடைய போகிறது. ஆனால், பூகம்பம் வரவே இல்லை.

    அவர்கள் விமானத்தை பறக்க விட முயன்றார்கள். ஆனால், நமது வலிமையான ஜனநாயகமும், சபையின் கண்ணியமும் அதை அனுமதிக்கவில்லை.

    இந்த சபையின் முதல் தடவை உறுப்பினர் என்ற முறையில், புதிய விஷயங்களை இங்கு நான் பார்த்தேன். கட்டிப்பிடி அரசியலை பற்றி தெரிந்துகொண்டேன். ஒருவரை கட்டிப்பிடிப்பதற்கும், அவமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை முதல் முறையாக உணர்ந்தேன். கண்கள் வழியாகவே அந்த அவமரியாதை வெளிப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டு, இச்சபையில் பார்க்கப்பட்டது.

    மேலும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு நான் பதில் அளித்தபோது, பலத்த சிரிப்பொலியையும் கேட்டேன். பெரும்பாலான நடிகர்கள் கூட அத்தகைய நடிப்பை நடிக்க முடியாது. கேளிக்கை உலகமே இந்த நடிப்பை கற்றுக்கொள்ளலாம்.

    இந்தியாவுக்கு உலக அரங்கில் மரியாதை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், பெரும்பான்மை கொண்ட அரசு அமைந்திருப்பதுதான். 30 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பான்மை கொண்ட அரசு அமைந்துள்ளது.

    பெரும்பான்மை இல்லாத அரசு அமைந்தபோதெல்லாம் இந்தியாவுக்கு உலக அரங்கில் பாதிப்பே ஏற்பட்டது. பெரும்பான்மை கொண்ட அரசின் தலைவராக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அங்கு கிடைக்கும் மரியாதையே தனியாக உள்ளது.

    இந்த மரியாதைக்கு நானோ, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜோ காரணம் அல்ல. பெரும்பான்மை ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்குத்தான் இந்த பெருமை சேரும்.

    ஆகவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை கொண்ட அரசையே தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    உலக அளவில் 6-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி நாடு விரைந்து கொண்டிருக்கிறது.

    இந்த 16-வது மக்களவையில் மொத்தம் 17 கூட்டத்தொடர்கள் நடந்தன. அவற்றில் 8 தொடர்கள், 100 சதவீதம் ஆக்கப்பூர்வமாக நடந்தன. 219 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

    சபையை நடத்தியதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் தலைமைப்பண்பு பாராட்டுக்கு உரியது. மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விவாதங்களில் சிறப்பாக பங்கேற்றார். அவர் என்ன பேசி இருக்கிறார் என்பதை வைத்தே எனது உரைகளை தயாரிப்பேன்.

    நான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று வாழ்த்திய முலாயம்சிங் யாதவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    16-வது மக்களவையின் கடைசி அலுவல் தினமும் நேற்று என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகள் கூறி பிரியா விடை பெற்றனர். #LokSabhaadjourns #RajyaSabhaadjourns
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 16-வது மக்களவையின் கடைசி அலுவல் தினமும் நேற்று என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகள் கூறி பிரியா விடை பெற்றனர்.

    இதையொட்டி கட்சி தலைவர்கள் உரையாற்றினர். இதில் சமாஜ்வாடி தலைவரும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் பேசும்போது, 16-வது மக்களவையில் இடம்பெற்றிருக்கும் அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வாழ்த்தினார்.

    மேலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் எனவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறினார். இதை பிரதமர் மோடி இருகரம் கூப்பி ஏற்றுக்கொண்டார். அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி கோஷமிட்டனர்.

    இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் கருணாகரன் பேசும்போது, சபாநாயகர் சுமித்ரா மகாஜனை பாராட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக புன்சிரிப்புடன் சபையை நடத்தியதாக கூறிய அவர், சில நேரங்களில் கோபப்பட்டாலும் தனது சிரிப்பை வெளிக்காட்ட தவறவில்லை எனவும் தெரிவித்தார்.

    தெலுங்குதேசம் கட்சி தலைவர் ஜிதேந்தர் ரெட்டி தனது உரையில், பா.ஜனதாவை விமர்சித்தார். ‘உங்கள் (பா.ஜனதா) ஆட்சியின் தொடக்கத்தில் உங்கள் நண்பன் யார்? எதிரி யார்? என்பதை நீங்கள் அறியவில்லை’ என்று தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்த தெலுங்குதேசம், பின்னர் அந்த கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. #LokSabhaadjourns  #RajyaSabhaadjourns
    பாராளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் - சோனியா, ராகுல், மன்மோகன் சிங் பங்கேற்பு Sonia Gandhi, Rahul Rafale Protest Outside Parliament
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள கட்சித்தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார் காகிதத்தில் செய்யப்பட்ட மாதிரி விமானங்களை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தற்போதைய ரபேல் ஒப்பந்தத்தை விட முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம்தான் சிறந்தது என, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட ராணுவ அமைச்சக அதிகாரிகள் குழுவில் இடம்பெற்று இருந்த 7 அதிகாரிகளில் 3 பேர் கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

    இதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி 2 வாதங்களை வைத்திருந்தார். அதாவது, சிறந்த விலை மற்றும் விரைவான வினியோகம் என அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த வாதங்கள் அனைத்தும் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியால் தவிடுபொடியாகி இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதைப்போல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஆங்கில நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி கூறுகையில், ‘திருடன் அகப்பட்டு விட்டார்’ என்று தெரிவித்து இருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்டு இருந்த ஒப்பந்தத்தை விட தற்போதைய 36 விமானங்கள் 55 சதவீதம் விலை அதிகம் எனவும், யூரோபைட்டர் நிறுவனம் வழங்கிய 25 சதவீத தள்ளுபடியை கணக்கில் கொள்ளாததால் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். Sonia Gandhi, Rahul Rafale Protest Outside Parliament


    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார். #RahulGandhi #Rahulrally #RahulinGujarat #Gujaratrally
    அகமதாபாத்:

    16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை பிடித்துவிட காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.

    இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத ஒரு ஆட்சியை உருவாக்க சில மாநிலங்களில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயன்று வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெறுவது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து கட்சிகளிலும் பரபரப்பு தொற்றியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நாளை பிற்பகல் அவர் உரையாற்றுகிறார். 

    கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலின்போது பிரசாரம் செய்வதற்காக இங்கு வந்திருந்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல்முறை குஜராத்துக்கு மீண்டும் வருவதால் சிறப்பான முறையில் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

    2017-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டசபையில் உள்ள 182 இடங்களில் 99 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அதற்கு முன்னர் 60 எம்.எல்.ஏ.க்களாக இருந்த காங்கிரசின் பலம் 77 ஆக உயர்ந்தது.

    ஆனால், 2009-பாராளுன்ற தேர்தலில் 11 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ்,  2014-பாராளுன்ற தேர்தலில் ஒரு இடத்தைகூட பிடிக்க முடியாமல் இங்கு படுதோல்வி அடைந்தது. அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 26 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றனர் என்பது நினைவிருக்கலாம். #RahulGandhi #Rahulrally #RahulinGujarat #Gujaratrally
    மக்கள் தொகையில் 2-வது பெரிய நாடான இந்தியாவில் ஆதார் அட்டை திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எங்கள் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளில் ஒன்று என மோடி குறிப்பிட்டார். #Parliament #PMModi #LokSabhaadjourns
    புதுடெல்லி:

    பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் என்பதால், இன்று பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். இறுதியாக, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    லோக்சபாவை சிறப்பாக வழிநடத்தியதற்காக சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பல தொடர்கள் ஆக்கப்பூர்வமாக இருந்தன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. 16வது லோக்சபாவில் என்னுடன் பணியாற்றிய அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் செயற்கைக்கோள்கள் அதிகளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. வங்கதேசம்-இந்தியா இடையிலான நில பிரச்சினையை தீர்த்துள்ளோம்.

    பெண் எம்.பி-க்களுக்கு எனது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பெண்கள் என்பது பெருமை. உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம் பெற்றுள்ள அமைச்சரவை இது. இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடைபெறுகிறோம். இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.



    ஐ.நா. அவையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன; கடந்த 5 ஆண்டுகளில் இடர்ப்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்திருக்கிறோம். வெளிநாட்டுத் தலைவர்களும் தற்போது இந்திய தலைவர்களை மதிக்கத் தொடங்கியுள்ளனர். எனது ஆட்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத 1400 சட்டங்கள் ஒழிக்கப்பட்டன.

    மக்கள் தொகையில் 2-வது பெரிய நாடான இந்தியாவில் ஆதார் அட்டை திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எங்கள் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளில் ஒன்று.

    பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவீதத்திற்கும் மேல் உழைத்துள்ளது. உண்மையாக கட்டிப்பிடிப்பதற்கும், வலுக்கட்டாயமாக கட்டிப் பிடிப்பதற்குமான வித்தியாசம் எனக்கு தெரியும். கடந்த 5 ஆண்டுகளில் உங்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டு உள்ளேன். என்னை வழிநடத்திய மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Parliament #PMModi #LokSabhaadjourns
    2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் கூடிய 16-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. #LokSabhaadjourns #RajyaSabhaadjourns
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
     
    16-வது மக்களவையின் இறுதி (இடைக்கால) பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது.

    இன்றைய கூட்டத்தின்போது, கவர்ச்சிகரமான போலி முதலீட்டு திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

    மேலும், டெல்லியில் 1951ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவகம் நிர்வாகத்தின் நிரந்தர உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி வகிக்க முன்னர் அதிகாரமளிக்கப்பட்டு இருந்தது. இந்த உரிமையை ரத்துசெய்யும் சட்டத்திருத்தமும் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    எனினும், ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் முடங்கிக் கிடக்கும் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் மாநிலங்களவையில் முடங்கிக்கிடக்கும் நிலையில் 16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. 



    இறுதிநாள் கூட்டத்தின்போது மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய சட்டங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார். இவற்றுக்கெல்லாம் ஆதரவு அளித்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

    பின்னர், தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக இன்று மாலை 5 மணியளவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். முன்னதாக, இன்று பிற்பகல் 2 மணியளவில் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். #LokSabhaadjourns  #RajyaSabhaadjourns
    ×