என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94341"
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட வணிகர்களின் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது.
இதில் அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு தொகுப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வணிகர்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை. மாநில அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் தடை விதிப்புக்கு வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வணிகர்களை மிரட்டி வரும் அதிகாரிகள் தங்களது தவறை நிறுத்தி கொள்ளாவிட்டால் வணிகர்கள் சாலையில் இறங்கி போராடவும் தயாராக உள்ளனர். அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டினால் அவர்களை தண்டிக்க பேரமைப்பின் உதவியை வணிகர்கள் நாட வேண்டும்.
வணிகர் சங்கங்களின் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
18 மற்றும் 28 சதவீத வரி விதிப்பை அறவே அகற்றப்பட வேண்டும். திருப்பி செலுத்தக்கூடிய வகையில் நிலுவையில் உள்ள 93 ஆயிரம் கோடி உள்ளீட்டு வரி பணத்தை அரசு திருப்பி அளிக்க வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடை சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ரூ.5 லட்சம் வரை முழுமையாக வரி விலக்கு கொடுக்கப்பட வேண்டும். 60 வயதை கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
வரும் தேர்தலில் எந்த கட்சி தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்கு சாதகமாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறதோ அந்த கட்சிக்கு தான் வணிகர்கள் வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார். #Parliamentelection
மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று பாராளுமன்ற இருஅவைகளிலும் எதிரொலித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இவ்விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறாமல் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று பாராளுமன்றம் கூடியபோது மாநிலங்களவையில் இதே பிரச்சனையை மையமாக வைத்து திரிணாமுல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கோஷமிட்டனர்.
இதனால், பகல் 12 மணிவரையிலும்,பிற்பகல் 2 மணிவரையிலும், பின்னர் 4 மணிவரையிலும் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார். 4 மணிக்கு பின்னர் அவை கூடியபோது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement
மேற்கு வங்காளம் மாநிலத்தில் சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது.
மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படும் சி.பி.ஐ.யை வைத்து எதிர்க்கட்சிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மிரட்டி வருவதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் நேற்றிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை கண்டிக்கும் வகையில் பேசினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்கு மேல் பாராளுமன்றம் கூடியபோதும் இந்த பிரச்சனையை மையப்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்ததால் நாளைவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #LokSabhaadjourned #RajyaSabhaadjourned #TMCmembers #CBIissue
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தி முடிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றம் கூடியது. நாளை பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி (பொறுப்பு) பியூஸ்கோயல் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்று இருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நமது நாடு உறுதியற்ற காலத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. தேர்தலுக்கு பிறகு அனைத்து பிரச்சனைகளும் சமாளிக்கப்பட்டு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு உள்ளது.
தற்போது நாம் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எனவே 2019-ம் ஆண்டு நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும்.
மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கும் வகையில் நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சி திட்டங்களும் செய்யப்பட்டு வருகின்றன. டாக்டர் அம்பேத்கார் வகுத்து கொடுத்த சட்ட திட்டத்தின்படி சமூக மற்றும் பொருளாதார நீதியை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து துறைகளிலும் சம வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏழை-எளிய மக்கள் பலன் பெறும் வகையில் பிரதமரின் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல ஏழைகள் உரிய மருத்துவ வசதி பெற மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய காப்பீடு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
பிரதமரின் சவுபாக்கியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 2 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டு இந்தியாவில் கழிவறை வசதியுடன் சுமார் 40 சதவீதம் வீடுகள் தான் இருந்தன. தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 98 சதவீதம் பேர் கழிவறை பெற்றுள்ளனர்.
ஏழைகளுக்கு அதிக பணம் கொடுத்து மருந்துகள் வாங்கும் சக்தி இல்லை என்பதால் இந்தியா முழுவதும் 600 மாவட்டங்களில் குறைந்த விலை மருந்து கடைகள் 700-க்கு மேல் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் 4 ஆயிரத்து 900 மருந்து வகைகள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஏழை பெண்கள் நலனுக்காக மானிய விலையில் கியாஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 6 கோடிக்கு மேற்பட்ட பெண்கள் பலன் அடைந்து உள்ளனர். இதன் மூலம் ஏழைகள் விறகு அடுப்பு புகை தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.
13 கோடி பேருக்கு மானியம் விலையில் சமையல் கியாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பலன் பெற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து செயல்படும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம் ஆகும்.
முத்தலாக் பிரச்சனை காரணமாக முஸ்லிம் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது முஸ்லிம் பெண்கள் அச்சமின்றி வாழும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கடந்த 4½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற வேண்டும் என்ற இலக்குடன் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் 1 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
ஏழை எளியவர்களுக்காக முத்ரா கடன் பெறும் வசதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் மூலம் 15 கோடி பேர் பலன் பெற்றனர். அவர்களில் 73 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகி உள்ளது. முன்பு 3.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர். தற்போது 6.8 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்பு பணத்தின் வேர் வெட்டப்பட்டுள்ளது. பினாமி முறையில் சொத்து சேர்ப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை சீரடைந்துள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை குறைந்துள்ளன.
சரக்கு மற்றும் சேவை வரியால் நீண்ட காலத்துக்கு நன்மை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு பணிகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி மிகவும் கை கொடுக்கும்.
எல்லையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு விஷயத்தில் இந்த புதிய கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
இந்திய விமான படையில் விரைவில் அதிநவீன ரபேல் போர் விமானம் சேர்க்கப்படும். இது நமது விமானப் படையின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும்.
காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 4 மாதங்களில் 10 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தேசிய சுகாதார காப்பீடு திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் 50 கோடி பேருக்கு மேல் பலன் அடைவார்கள்.
சுகாதாரத்துக்காக நாட்டின் நான்கு புறமும் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுரையிலும், காஷ்மீரில் குல்காம் நகரிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மறைந்த பிரதமர் வாஜ்பாய் முக்கியத்துவம் அளித்தார். அவரது வழியில் தற்போது சாலைகள் இணைப்பு மேம்பாடு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் திறமையை மேம்படுத்த “ஸ்டாண்டு ஆப்” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் 7 ஐ.ஐ.டி., 7 ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. மாணவர்கள் தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு உதவி செய்யும்.
நாடு முழுவதும் கேந்திர வித்யா பள்ளிகள் அதிகளவில் திறக்கப்படும். முதல் கட்டமாக 103 கேந்திர வித்யா பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயத்துக்காக புதிய உபகரணங்கள் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதற்காக கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.7 லட்சம் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விவசாயிகளின் வருவாய் 1½ மடங்கு அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தக்க உதவிகள் செய்வதால் தற்போது சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதால் மேலும் பல ஏழைகள் சம அளவில் முன்னேற்றம் பெறுவார்கள்.
மகளிருக்கு பேறுகால விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த வளர்ச்சி வளர்ந்து உள்ளது.
இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மரியாதையாக நடத்தும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
முழு பட்ஜெட்டா, இடைக்கால பட்ஜெட்டா?
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.
மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.
உடனே காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது. அது மட்டும் இன்றி இதில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஏற்கனவே 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.
எனவே தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முழு பட்ஜெட் என்றால் அரசு பெரிய அளவில் தனது கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியும், நலத்திட்டங்களை வெளியிட இயலும். உத்தேச வரவுகளை பதிவு செய்ய முடியும். செலவினங்களை கணித்துக்கூற இயலும்.
இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை.
தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். #Budget #PiyushGoyal
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர், பிப்ரவரி 13-ந் தேதி வரை நீடிக்கும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும்.
இந்த ஆண்டு, பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுதான், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
எனவே, பிப்ரவரி 1-ந் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், இடைக்காலமாக அப்பொறுப்பை கவனிக்கும் பியூஷ் கோயல், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் இரு அவைகளின் தலைவர்களும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 30-ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, பட்ஜெட் தொடர் தொடங்கு வதற்கு முன்பு, 31-ந் தேதி காலையில், சபையில் உள்ள கட்சிகளின் குழு தலைவர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்.
அதுபோல், மத்திய அரசும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் என்று தெரிகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார். #Parliament #Budgetsession
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 7 மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பாராளுமன்றம் மற்றும் 7 மாநில சட்டசபை தேர்தல் குறித்து தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் 9 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், காஷ்மீர், மராட்டியம், அரியானா ஆகிய 7 மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும், இதன் மூலம் அரசுக்கு தேர்தல் நடத்தும் செலவும் குறையும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலை தளங்களில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை என்ற பெயரில் ஒரு பட்டியல் வெளியானது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில் இதுபோன்று வெளியான தகவல்கள் தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தை கருத்தில் கொண்ட தேர்தல் கமிஷன் இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீசின் தகவல் தொழில்நுட்ப பிரிவு களத்தில் இறங்கியுள்ளது.
தேர்தல் அட்டவணை முதன் முதலில் எங்கு இருந்து பரவியது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Election #Parliament
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ல் நடந்த பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்களும் ஆதரவு அளித்தனர்.
இப்போது இங்கிலாந்து முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே முடுக்கி விட்டார். இது ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது.
ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆனால் இது இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் எதிர்த்தது. இருந்தபோதும் இந்த ஒப்பந்தத்துக்கு கடந்த நவம்பர் மாத கடைசியில் ஐரோப்பிய கூட்டமைப்பு தனது ஒப்புதலை அளித்தது.
இதன் காரணமாக பிரதமர் தெரசா மே வரலாறு காணாத தோல்வியை சந்திக்க நேரிட்டது. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
அதே சூட்டோடு சூடாக தெரசா மேயின் அரசு மீது எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பின், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் தெரசா மே அரசுக்கு மிக மோசமான தோல்வி கிடைத்ததால், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த ஓட்டெடுப்பு இந்திய நேரப்படி நேற்று முன்தினம் (புதன்கிழமை) நள்ளிரவில் நடந்தது. அதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 306 ஓட்டுக்களும், எதிராக 325 ஓட்டுக்களும் கிடைத்தன. 19 ஓட்டுகள் வித்தியாசத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்றுப்போனது. இதன் காரணமாக தெரசா மே அரசு பிழைத்துக்கொண்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் எல்லா கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்களுடன் பேசத் தீர்மானித்துள்ளார்.
ஆனால் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாக ஒப்பந்தம் இல்லாத ‘பிரெக்ஸிட்’ திட்டத்துக்கு பிரதமர் தெரசா மே உறுதி அளிக்க வேண்டும் என்று தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பின் கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்.
அதே நேரத்தில் பிரதமர் தெரசா மே, ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்த நிலையில், பிரதமர் தெரசா மே தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே பேசினார். அப்போது அவர், அனைவரும் தங்கள் சொந்த நலன்களை புறந்தள்ளி விட்டு நாட்டு நலனை கருத்தில் கொண்டு ‘பிரெக்ஸிட்’ திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் அவர் வரும் 21-ந் தேதி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளதாக லண்டனில் இருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது.
இது போன்ற வேண்டுகோளை 170 முன்னணி தொழில் அதிபர்களும் பிரதமர் தெரசா மே மற்றும் தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பின் முன் வைத்துள்ளனர். #BrexitVote #TheresaMay
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்