என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94372"
நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என போலீசாரும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை நகர் பகுதியில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கடைத்தெரு பகுதியில் சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் அந்தணப்பேட்டையை சேர்ந்த முகமது பயாஸ் (வயது 26) என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு வினியோகம்செய்ய மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பயாசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 கிலோ புகையிலை பொருட்களையும் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கீழ்கதிர்பூரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மணிகண்டனை மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனை மர்ம கும்பல் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரை வெட்டியது செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த சதீஷ், கரையாஞ்சாவடியை சேர்ந்த இமானுவேல், பாலாஜி ராஜா, பிரவீன், ஜெகன்ராஜ், மதியழகன் ஆகியோர் என்பது தெரிந்தது.
அவர்கள் 6 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.
கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் (26). இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் கடந்த 15-ம் தேதி அன்று காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், சஞ்சித்தை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது.
இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சஞ்சித் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரில் வந்து தனது கணவரை கொன்றவர்களை தன்னால் அடையாளம் காண முடியும் என்று சஞ்சித்தின் மனைவி கூறியிருந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா என்கிற பயங்கரவாத இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை:
தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 45), இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் முத்துகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி நேற்று இரவு அங்கு சென்ற போலீசார் கோபிநாத்தை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் நடுக்காவேரியைச் சேர்ந்த கலியராஜ் மகன் வேல்முருகன் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வேல்முருகன் வீட்டை சோதனை செய்தபோது 176 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேலும் போலீசார் வேல்முருகனிடம் விசாரணை நடத்தியதில் கோபிநாத் வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடி மறைத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு 6 இரு சக்கர வாகனங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் நடுக்காவேரி போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
மதுரை:
மதுரை நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
இதன்படி தெற்கு துணை கமிஷனர் தங்க துரை உத்தரவின் பேரில் திலகர் திடல் உதவி கமிஷனர் பழனிகுமார் மேற்பார்வையில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் அந்தந்தப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.
ஆரப்பாளையம் கண்மாய்க்கரையை சேர்ந்தவர் ஆனந்த் (30), ஆட்டோ டிரைவர். இவர் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இருந்தார். மர்ம நபர் ஆட்டோவில் இருந்த 2 பேட்டரிகளை திருடுவது தெரியவந்தது.
இதனை தற்செயலாக கவனித்த ஆனந்த், ‘திருடன், திருடன்’ என்று கூச்சல் போட்டார். அந்த பகுதிக்கு தனிப்படை போலீஸ் தற்செயலாக ரோந்து சென்றது.
ஆனந்தின் அலறல் சத்தம் கேட்டதும் தனிப்படை போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.
முதல் கட்ட விசாரணையில் அவர் ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி தெருவை சேர்ந்த செல்வம் (47) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்