search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பை திரும்பிய பயங்ரவாதி பல்வேறு சதி திட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸ் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
    மும்பை:

    பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பை திரும்பிய பயங்ரவாதி பல்வேறு சதி திட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸ் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.

    மும்பை மேற்கு பகுதியில் உள்ள புறநகரில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஒரு பயங்ரவாதி பதுங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்கத்தா போலீசின் தனிப்படை மும்பைக்கு விரைந்து வந்தது. மும்பை போலீசாரும், கொல்கத்தா போலீசாரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பயங்ரவாதி பிடிபட்டான். அவனது பெயர் மிர்சா பைசல் கான் என்று தெரிய வந்துள்ளது. 32 வயதாகும் இவன் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவன்.

    சில மாதங்களுக்கு முன்பு இவன் பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளான். வெடி குண்டு தயாரிப்பதோடு தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கும் அவன் பயிற்சி பெற்றான்.

    கடந்த வாரம் அவன் மும்பை திரும்பி இருந்தான். கொல்கத்தா போலீசாருக்கு அவனை பற்றிய தகவல்கள் கிடைத்ததால் சரியான நேரத்தில் பிடிபட்டுள்ளான்.

    பயங்ரவாதி மிர்சா பைசல்கான் மராட்டியத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரை கடத்தி கொண்டு கொலை செய்ய திட்டமிட்டு இருந்தான். பிரபல இந்தி நடிகர் ஒருவருக்கும் அவன் குறிவைத்து இருந்தான்.

    இவை தவிர இந்தியாவில் சில நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அவன் சதி திட்டம் தீட்டி இருந்தான். பாகிஸ்தானில் உள்ள பயங்ரவாதிகள் உத்தரவு வந்ததும் தனது சதி திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்தான். அதற்கு முன்னதாக அதிரடி போலீசார் அவனை பிடித்துவிட்டனர். அவனை 21-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. #tamilnews
    தேனி மாவட்டத்தில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.
    உத்தமபாளையம்:

    தேனி அருகே தேவாரம் சாலைத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 5 வயது மகள் அப்பகுயில் விளையாடச் சென்றார். அப்போது திடீரென அவர் மாயமானார். இது குறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    18-ம் கால்வாய் பகுதியில் 2 மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடத்தப்பட்ட சிறுமியை 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து வீட்டில் விட்டுள்ளார்.

    அந்த சிறுவனிடம் சிறுமியின் உறவினர்கள் விசாரித்த போது சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுவனை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தேவாரம் பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் தேவாரம் போலீஸ் நிலையம் அருகே குவிந்தனர். வீரபாண்டி திருவிழாவுக்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர்.

    இதனால் போலீஸ் நிலையத்தில் குறைந்த அளவே போலீசார் பணியில் இருந்துள்ளனர். தொடர்ந்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசாரால் கட்டுபடுத்த முடியவில்லை.

    மேலும் போலீஸ் மெத்தனமாக செயல்படுவதாக கூறி அவர்களை கண்டித்து சிறுமியின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தில் சிலர் கல் வீசியதால் அரசு பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்தது. எனவே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடத்தப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அசோக் பிரபாகரன் (16) என்ற சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    கேரளாவில் சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த சிறுமியிடம் ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் தொழிலதிபர் ஈடுபடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது யாரும் திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடிப்பதை தடுக்கவும், சினிமா தியேட்டரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள எடப்பால் என்ற இடத்தில் உள்ள ஒரு சினிமா தியேட் டரின் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் நிர்வாகிகள் போட்டுப்பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயதுக்காரர் ஒருவர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது. படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தார்.

    அந்த சிறுமி இதுபற்றி தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் படம் பார்ப்பதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

    சினிமா தியேட்டரில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் சிறுமியிடம் தியேட்டரில் செக்ஸ் சில்மி‌ஷம் செய்யும் காட்சி கேரளாவில் உள்ள டி.வி.யில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் பற்றி சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு காமிரா காட்சியை போலீசார் முழுமையாக போட்டுப் பார்த்த போது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்தவர் தியேட்டரில் இருந்து சொகுசு காரில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் மைதீன்குட்டி என்பது தெரியவந்தது. தொழில் அதிபரான அவரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி புகார் செய்தும் அதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    அந்த சிறுமியுடன் தியேட்டருக்கு வந்த பெண்ணையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். அந்த பெண் சிறுமியின் தாயாரா? அவருக்கும் சிறுமிக்கும் என்ன தொடர்பு என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சிறுமிக்கு தியேட்டரில் செக்ஸ் கொடுமை நடந்தது பற்றி உரிய விசாரணை நடத்தாத போலீசார் மீதும், அதனை தடுக்காத அந்த சிறுமியுடன் வந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) மோகன்தாஸ் உத்தரவிட்டு உள்ளார்.  #tamilnews
    ×