என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94409
நீங்கள் தேடியது "slug 94409"
சப்பாத்தி, நாண், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் கிரேவி. இன்று மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1/2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பால் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (சிறியது)
தக்காளி - 2 (சிறியது)
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!
மீல் மேக்கர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1/2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பால் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (சிறியது)
தக்காளி - 2 (சிறியது)
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெயில் காலத்தில் வெள்ளிரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இன்று சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் - 1 கப்
வெள்ளரி - 1
தக்காளி - 1
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
தேன் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
செய்முறை :
வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை நன்றாக கலந்து கொள்ளவும்.
நறுக்கிய வெள்ளரி, தக்காளி, மிளகு தூள், தேன், உப்பை தயிரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
தயிர் - 1 கப்
வெள்ளரி - 1
தக்காளி - 1
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
தேன் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையானளவு
கொத்தமல்லி இலை - அலங்கரிக்க
செய்முறை :
வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை நன்றாக கலந்து கொள்ளவும்.
நறுக்கிய வெள்ளரி, தக்காளி, மிளகு தூள், தேன், உப்பை தயிரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான, குளு குளு வெள்ளரி தளிர் தக்காளி சாலட் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கத்தரிக்காயில் வறுவல், கிரேவி, சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காய் வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய கத்தரிக்காய் - 1,
கடலை மாவு - 1 கப்,
மைதா மாவு - 1 டீஸ்பூன்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு,
ஆப்ப சோடா - அரை சிட்டிகை.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
செய்முறை:
கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள்.
அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள்.
இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள்.
கடலை மாவுடன் உப்பு, மீதமுள்ள அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.
பெரிய கத்தரிக்காய் - 1,
கடலை மாவு - 1 கப்,
மைதா மாவு - 1 டீஸ்பூன்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு,
ஆப்ப சோடா - அரை சிட்டிகை.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள்.
அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள்.
இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள்.
கடலை மாவுடன் உப்பு, மீதமுள்ள அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.
சூப்பரான கத்தரிக்காய் பஜ்ஜி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அவல் போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தட்டை அவல் - ஒரு கப்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
பச்சை மிளகாய் - 3,
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
செய்முறை :
அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்து போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிரைந்து கொள்ளவும்.
இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில், அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.
தட்டை அவல் - ஒரு கப்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
பச்சை மிளகாய் - 3,
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு.
செய்முறை :
அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்து போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிரைந்து கொள்ளவும்.
இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில், அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.
சூப்பரான அவல் போண்டா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பல்வேறு வகையான தோசைகள் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசிப்பருப்பில் சுவையான சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 1 கப்,
பச்சரிசி - கால் கப்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
சின்ன வெங்காயம் - 10,
செய்முறை:
அரிசி + பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நன்றாக ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.
பாசிப்பருப்பு - 1 கப்,
பச்சரிசி - கால் கப்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
சின்ன வெங்காயம் - 10,
பெருங்காயம் - 1 சிட்டிகை.
செய்முறை:
அரிசி + பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நன்றாக ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.
சூப்பரான பாசிப்பருப்பு தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரியோர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிட சத்தான உணவு கோதுமை ரவை புட்டு. இன்று இந்த புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 3 கப்
தேங்காய்த் துருவல் - 2 கப்
வாழைப்பழம் - 2
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை :
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் போடவும்.
இதில் கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத்துடன் பிசைந்து கொள்ளவும்.
புட்டுக் குழலில் தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு அடுத்து பிசைந்த ரவை போட்டு மீண்டும் தேங்காய் துருவல் என நிரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கோதுமை ரவை - 3 கப்
தேங்காய்த் துருவல் - 2 கப்
வாழைப்பழம் - 2
நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை :
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் போடவும்.
இதில் கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத்துடன் பிசைந்து கொள்ளவும்.
புட்டுக் குழலில் தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு அடுத்து பிசைந்த ரவை போட்டு மீண்டும் தேங்காய் துருவல் என நிரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சூப்பரான கோதுமை ரவை புட்டு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெயில் காலத்தில் கூழ், களி சாப்பிடுவது உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று அரிசி மாவுடன் மோர் சேர்த்து களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 கப்
மோர் - ½ கப்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
இந்துப்பு - சிறிதளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் மோர் சேர்த்து நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டுத் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை ஊற்றி கிளறவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும்.
சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி பரிமாறவும்.
அரிசி மாவு - 1 கப்
மோர் - ½ கப்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
இந்துப்பு - சிறிதளவு
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - சிறிதளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் மோர் சேர்த்து நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டுத் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை ஊற்றி கிளறவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும்.
சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான அரிசி மாவு மோர் களி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையில் சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இன்று சத்தான தக்காளி ஆலிவ் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 2
வெள்ளரிக்காய் - 1
பிளாக் ஆலிவ் - 6
வெங்காயம் - 2
உப்பு - சுவைக்க
மிளகு தூள் - சுவைக்க
துளசி இலை - 3-4
செய்முறை :
வெங்காயம், பிளாக் ஆலிவ், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
துளசி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பிளாக் ஆலிவ், வெள்ளரிக்காய், தக்காளியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகு தூள், பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) சேர்த்து நன்றாக கலந்து துளசி இலை தூவி பரிமாறவும்.
தக்காளி - 2
வெள்ளரிக்காய் - 1
பிளாக் ஆலிவ் - 6
வெங்காயம் - 2
உப்பு - சுவைக்க
மிளகு தூள் - சுவைக்க
துளசி இலை - 3-4
பால்சமிக் வினிகர்(Balsamic vinegar) - 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
வெங்காயம், பிளாக் ஆலிவ், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
துளசி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பிளாக் ஆலிவ், வெள்ளரிக்காய், தக்காளியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகு தூள், பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) சேர்த்து நன்றாக கலந்து துளசி இலை தூவி பரிமாறவும்.
சூப்பரான சத்தான சத்தான தக்காளி ஆலிவ் சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க ராஜ்மா அடிக்கடி உபயோகிக்கலாம். இன்று ராஜ்மாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராஜ்மா - 1/4 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 3 பல்,
பிரிஞ்சி இலை - 1,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
உப்பு - தேவையான அளவு,
செய்முறை :
ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கிய பின்னர் ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் போனவுடன் ராஜ்மாவை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும். ஃப்ரெஷ் கிரீமுக்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.
சத்தான சுவையான ராஜ்மா சூப் ரெடி.
ராஜ்மா - 1/4 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 3 பல்,
பிரிஞ்சி இலை - 1,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
உப்பு - தேவையான அளவு,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கிய பின்னர் ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் போனவுடன் ராஜ்மாவை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும். ஃப்ரெஷ் கிரீமுக்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.
சத்தான சுவையான ராஜ்மா சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மதியம் மீந்த சாதத்துடன், காய்கறிகள் சேர்த்து கட்லெட் செய்தால் அருமையாக இருக்கும். சரி, இப்போது ரைஸ் வெஜிடபிள் கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி சாதம் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
சாதத்தை வேகவைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.
காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சாதம், பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித்தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
அரிசி சாதம் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
சாதத்தை வேகவைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.
காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சாதம், பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித்தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. இன்று ராஜ்மா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ராஜ்மா - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
ஆளிவிதைப் பொடி - அரை டீஸ்பூன்
செய்முறை
ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி அதிகம் வதங்கக்கூடாது.
அடுத்து அதில் கொத்தமல்லி, புதினா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு வேக வைத்த ராஜ்மாவை போட்டு கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, ஆளிவிதைப் பொடி தூவி பரிமாறவும்.
ராஜ்மா - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
ஆளிவிதைப் பொடி - அரை டீஸ்பூன்
ராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி அதிகம் வதங்கக்கூடாது.
அடுத்து அதில் கொத்தமல்லி, புதினா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு வேக வைத்த ராஜ்மாவை போட்டு கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, ஆளிவிதைப் பொடி தூவி பரிமாறவும்.
சத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பட்டாணிப் பருப்பு - 200 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
பட்டாணிப் பருப்பு - 200 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X