என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94409
நீங்கள் தேடியது "slug 94409"
மாலையில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் கோதுமை ரவை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
கோதுமை ரவை - ஒரு கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
கோதுமை ரவை - ஒரு கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
சுவையான கோதுமை ரவை வடை தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். இன்று கருப்பு கொண்டை கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு கொண்டை கடலை - 1 கப்
சின்ன வெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
கொத்தமல்லிதழை - தேவைக்கு
செய்முறை:
கொண்டை கடலையை நன்றாக கழுவி 10 மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு அவை பொரிந்ததும் வெங்காயத்தைகொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து கிளறுங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும் அதைத்தொடர்ந்து கொண்டை கடலையை கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
ஆரோக்கிய பலன்: கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோய்க்கும் நல்லது. இதை தொடர்ந்து உண்பதால் உடல் பொலிவு பெறும். படர் தாமரை போன்ற சரும பிரச்சினை வராமலும் தடுக்கும்.
கருப்பு கொண்டை கடலை - 1 கப்
சின்ன வெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
கொத்தமல்லிதழை - தேவைக்கு
கொண்டை கடலையை நன்றாக கழுவி 10 மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு அவை பொரிந்ததும் வெங்காயத்தைகொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து கிளறுங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும் அதைத்தொடர்ந்து கொண்டை கடலையை கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
ஆரோக்கிய பலன்: கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோய்க்கும் நல்லது. இதை தொடர்ந்து உண்பதால் உடல் பொலிவு பெறும். படர் தாமரை போன்ற சரும பிரச்சினை வராமலும் தடுக்கும்.
இடியாப்பத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று இடியாப்பத்தை வைத்து கொத்தமல்லி இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்.
அரைக்க:
கொத்தமல்லி, புதினா - தலா அரை கட்டு,
சிறிய பச்சை மிளகாய் - 3,
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
செய்முறை:
அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளவும்.
அரைத்த மசாலாவை உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து இடியாப்பத்தில் கலந்து பரிமாறவும்.
இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்.
அரைக்க:
கொத்தமல்லி, புதினா - தலா அரை கட்டு,
சிறிய பச்சை மிளகாய் - 3,
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளவும்.
அரைத்த மசாலாவை உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து இடியாப்பத்தில் கலந்து பரிமாறவும்.
சூப்பரான கொத்தமல்லி இடியாப்பம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வேர்க்கடலை சாட் கடைகளில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த வேர்க்கடலை சாட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - ஒரு கப்,
தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா ஒன்று,
பச்சை மிளகாய் - 4,
கிரீன் சட்னி, சாட் மசாலா - தலா ஒரு டீஸ்பூன்,
செய்முறை:
வேர்க்கடலையை முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வேர்க்கடலையை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக அதனுடன் கிரீன் சட்னி, சாட் மசாலா, உப்பு கலந்து பரிமாறவும்.
வேர்க்கடலை - ஒரு கப்,
தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா ஒன்று,
பச்சை மிளகாய் - 4,
கிரீன் சட்னி, சாட் மசாலா - தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வேர்க்கடலையை முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வேர்க்கடலையை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக அதனுடன் கிரீன் சட்னி, சாட் மசாலா, உப்பு கலந்து பரிமாறவும்.
சூப்பரான வேர்க்கடலை சாட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அஜீரண கோளாறு, வயிறு உபாதைகள் உள்ளவர்கள் புதினா - இஞ்சி ரசம் செய்து சாப்பிடலாம். இந்த ரசத்தை சூப் போன்று அருந்தலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புதினா - கால் கப்,
இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு,
மோர் - 3 கப்,
கடுகு, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
செய்முறை :
புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்த புதினாவை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான புதினா - இஞ்சி ரசம் ரெடி.
புதினா - கால் கப்,
இஞ்சி - ஓர் அங்குலத் துண்டு,
மோர் - 3 கப்,
கடுகு, ஓமம் - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி, சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்த புதினாவை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன் மோர், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த வைத்த கலவையை ஊற்றி கொதி வரும் முன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான புதினா - இஞ்சி ரசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லியை பலவிதமான வகைகளில் செய்யலாம். இன்று 4 வகையான பருப்பை வைத்து சுவையான சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை,
அரிசி - கால் கப்
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.
தாளிக்க:
நெய் - ஒரு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயத்துள் - தலா அரை டீஸ்பூன்,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 3,
செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து நன்றாக கழுவி முக்கால் மணி நேரம் ஊறவிட்டு… உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
மாவை புளிக்க விடக்கூடாது.
மாவை சிறிய இட்லி தட்டில் நெய் / எண்ணெய் தடவி மாவை ஊற்றி, 13 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
சூப்பரான சத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி ரெடி
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை,
அரிசி - கால் கப்
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.
தாளிக்க:
நெய் - ஒரு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயத்துள் - தலா அரை டீஸ்பூன்,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 3,
எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து நன்றாக கழுவி முக்கால் மணி நேரம் ஊறவிட்டு… உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
மாவை புளிக்க விடக்கூடாது.
மாவை சிறிய இட்லி தட்டில் நெய் / எண்ணெய் தடவி மாவை ஊற்றி, 13 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
சூப்பரான சத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி ரெடி
இதற்குத் தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி மிகவும் ஏற்றது.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையில் சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கான ரெசிபி இது. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் - 6 துண்டுகள்
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - பாதி
கேரட் - சிறியது 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், கேரட், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும்.
ஒரு மெல்லிய துணியில் தயிரை போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், தக்காளி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும்.
பின்னர் முக்கோணம், சதுரம் என விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும்.
குறிப்பு:
* விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம்.
பிரெட் - 6 துண்டுகள்
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - பாதி
கேரட் - சிறியது 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், கேரட், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பிரெட் துண்டுகளின் ஓரங்களை எல்லாம் கட் செய்து நீக்கிவிடவும்.
ஒரு மெல்லிய துணியில் தயிரை போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், தக்காளி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இக்கலவையை சிறிதளவு எடுத்து ஒரு பிரெட் துண்டின் மேல் பரப்பிவிட்டு மற்றொரு பிரெட் துண்டை அதன் மேல் வைக்கவும்.
பின்னர் முக்கோணம், சதுரம் என விருப்பப்பட்ட வடிவில் இரண்டு பிரெட் துண்டுகளையும் சேர்த்து வைத்து கட் செய்து கொள்ளவும்.
குறிப்பு:
* விருப்பப்பட்டால் பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்தும் உபயோகிக்கலாம்.
* தயாரித்து நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால் தயிர் பிரெட்டுடன் நன்கு ஊறிவிடும் என்பதால், பரிமாறுவதற்கு சற்று நேரம் முன்பாக தயிர் சாண்ட்விச்சைத் தயாரிக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நெல்லிக்காய் விட்டமின்-சி நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது. இன்று நெல்லிக்காயில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 5,
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
துவரம்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப்
பொடி செய்ய:
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு,
தனியா - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
நெய் - சிறிதளவு.
தாளிக்க:
செய்முறை:
பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவிக்கொள்ளவும்.
துருவிய நெல்லிக்காயுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின்னர் பருப்பு வேகவைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி - இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும் (விருப்பப்பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)
பெரிய நெல்லிக்காய் - 5,
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
துவரம்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப்
பொடி செய்ய:
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு,
தனியா - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
நெய் - சிறிதளவு.
தாளிக்க:
எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவிக்கொள்ளவும்.
துருவிய நெல்லிக்காயுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்த பின்னர் பருப்பு வேகவைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி - இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும் (விருப்பப்பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)
சத்தான நெல்லிக்காய் பருப்பு ரசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, நாண், சூடான சாதத்துடன் சாப்பிட முள்ளங்கி பருப்புப் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி - 2
துவரம்பருப்பு - 100 கிராம்
தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
மஞ்சள்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும்.
அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
முள்ளங்கி - 2
துவரம்பருப்பு - 100 கிராம்
தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
மஞ்சள்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும்.
அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
சூப்பரான முள்ளங்கி பருப்புப் பச்சடி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் காலையில் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது),
பால் - ஒரு கப்,
மிளகுத்தூள் - சிறிதளவு,
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 5 பல்,
நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு,
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.
2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.
விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.
நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது),
பால் - ஒரு கப்,
மிளகுத்தூள் - சிறிதளவு,
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 5 பல்,
நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.
2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.
விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.
சூப்பரான சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அதிகளவு சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசியில் பல்வேறு விதமான ரெசிபிகளை செய்யலாம். இன்று கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி - அரை கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
கவுனி அரிசியை நன்றாக கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
கவுனி அரிசியை அரைக்கும் போது தண்ணீரை தனியாக வடித்து வைத்து அரிசியை மட்டும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை அடி கனமாக பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் ஊறவைத்து தனியாக வைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கைவிடாமல் கிளற வேண்டும். கலவை நன்றாக வெந்து திக்கான பதம் வரும் போது பாலை சேர்க்கவும்.
பால் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து கலக்கவும்.
சத்தான கவுனி அரிசி கஞ்சி ரெடி..
கவுனி அரிசி - அரை கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
பால் - 1 கப்
செய்முறை :
கவுனி அரிசியை நன்றாக கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
கவுனி அரிசியை அரைக்கும் போது தண்ணீரை தனியாக வடித்து வைத்து அரிசியை மட்டும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை அடி கனமாக பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் ஊறவைத்து தனியாக வைத்த தண்ணீரை சேர்த்து நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கைவிடாமல் கிளற வேண்டும். கலவை நன்றாக வெந்து திக்கான பதம் வரும் போது பாலை சேர்க்கவும்.
பால் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து கலக்கவும்.
சத்தான கவுனி அரிசி கஞ்சி ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று மணத்தக்காளிக்கீரை மண்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு,
சின்ன வெங்காயம் - 10,
அரிசி களைந்த கெட்டித் தண்ணீர் - 2 கப்,
தேங்காய் பால் - 1 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி, ஆய்ந்து, கொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொரிந்ததும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கீரையைச் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் கீரையை வதக்கியதும், அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும்.
கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
கீரையும் வெந்த பிறகு உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வரும் முன் இறக்கவும்.
சூப்பரான மணத்தக்காளிக்கீரை மண்டி
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு,
சின்ன வெங்காயம் - 10,
அரிசி களைந்த கெட்டித் தண்ணீர் - 2 கப்,
தேங்காய் பால் - 1 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி, ஆய்ந்து, கொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொரிந்ததும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கீரையைச் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் கீரையை வதக்கியதும், அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும்.
கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
கீரையும் வெந்த பிறகு உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வரும் முன் இறக்கவும்.
சூப்பரான மணத்தக்காளிக்கீரை மண்டி
குறிப்பு - இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X