search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    தீபாவளி பலகாரங்களில் இனிப்பு கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு சாமை அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி மாவு - 3 கப்
    துருவிய வெல்லம் - 3 கப்
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    சாமை அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வடிகட்டி நிழலில் உலறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் சாமை அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும்.

    ஏலக்காய் தூளும் சேர்த்துக்கொள்ளவும்.

    இந்த மாவு கலவையை 2 நாட்கள் அப்படியே வைத்துவிடுங்கள்.

    பின்பு அந்த மாவை அதிரசமாக தட்டி வைக்கவும்.

    தட்டி வைத்த மாவை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து நன்றாக எண்ணெயை வடித்து ருசிக்கவும்.

    சூப்பரான சாமை அதிரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தீபாவளி என்றதும் இனிப்புகளும் பலகாரங்களும்தான் அனைவருக்கும் பிடித்தமானது. இன்று நாவிற்கினிய இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    சர்க்கரை - 3/4 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    எண்ணெய் - பொரிக்க,
    உலர்ந்த திராட்சை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி - தேவையான அளவு.



    செய்முறை  :

    முதலில் கடலை மாவை சிறிது ஆப்ப சோடா கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    நிறம் வர சிறிது வண்ண எசன்ஸ் கலந்து கொள்ளவும். வண்ணம் தேவையில்லையெனில் அது வெள்ளை கலர் பூந்தியாகவும் செய்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவைகளை பொரித்து வைத்து கொள்ளவும்.

    வேறு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கரைத்த கடலை மாவை ஜல்லி கரண்டியில் விட்டு முத்து முத்தாய் பொரித்து எடுத்து கொள்ளவும்.

    அதன் பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். அதாவது கம்பி பதத்தில் சர்க்கரை பாகு வரவேண்டும்.

    இதில் பொரித்த பூந்திகளை போட்டு கிளறி உதிரியாக செய்து அதனுடன் பொரித்த முந்திரி, திராட்சைகளை கலந்து பரிமாறவும்.

    சூப்பரான இனிப்பு பூந்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தென் இந்திய பகுதிகளில் கிடைக்கும் மைசூர்பாகு போன்றதுதான். இராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் மிக பிரபலமான இனிப்பான மோகன்தால் செய்வது சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    இதற்கு கடலை மாவு- 2 கப்,
    நெய் - 3 டீஸ்பூன்
    பால் - 3 டீஸ்பூன்,
    நெய் - 1 கப் தனியாக,
    சர்க்கரை - 1 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    ஏலக்காய் தூள், குங்குமப்பூ - கொஞ்சம்



    செய்முறை :

    கடலை மாவுடன் 3 டீஸ்பூன் பால் மற்றும் 3 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து அதனை சல்லடையில் சலித்து வைத்து கொள்ளவும்.

    முதலில் வாணலியில், ஒரு கப் நெய் விட்டு சூடாக்கவும்.

    சூடான நெய்யில் இந்த கடலை மாவை போட்டு பொன்னிரமாக வரும்வரை கிளறி கொள்ளவும்.

    பின் வேறு வாணலியில் சர்க்கரை 1 கப், கால் கப் தண்ணீர் விட்டு சூடாக்கி கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

    இதில் ஏலக்காய் தூள் போட்டு கிளறி பின் கடலை மாவை போட்டு நன்கு கிளறவும்.

    இது நன்கு கலந்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கி பாத்திரத்தில் கொட்டி விட்டு சூடான பதத்தில் வெட்டிக் கொள்ளவும்.

    பின் அலங்கரிக்க குங்குமப்பூவை தூவி பரிமாறவும்

    சூப்பரான மோகன்தால் இனிப்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளி பலகாரங்களில் இனிப்புகளை போன்று கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்,
    பாசிப்பருப்பு மாவு - ½ கப்,
    பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    தேங்காய் பால் - ¼ கப்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வறுத்த பயத்தம் பருப்பை நன்றாக மாவாக்கி எடுத்து கொள்ளவும்.

    அரிசி மாவு, பயத்தம் மாவு, உப்பு, தேங்காய் பால், சர்க்கரை, நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை நட்சத்திர வடிவிலான அச்சில் போட்டு வட்டவடிவமாக பிழிந்து விட்டால் மகிழம்பூ முறுக்கு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு எளிய முறையில் வீட்டிலேயே பாசிப்பருப்பு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப் பருப்பு -1 கப்
    பொடித்த சர்க்கரை - 1 கப்
    நெய் - 100 கிராம்
    ஏலக்காய் - 4
    முந்திரி பருப்பு -10



    செய்முறை :

    வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வறுத்து மிக்சியில் மாவாக்கிக்கொள்ளவும். அதனை சலித்துக் கொள்ளவும்.

    ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

    பின்னர் அவற்றை பாசிப் பருப்பு மாவுடன் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    வாணலியில் நெய்யை ஊற்றி அதனை உருக்கி மாவு மீது ஊற்றி சூடு பொறுக்கும் அளவுக்கு இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.

    ருசியான பாசிப்பருப்பு லட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு தேன்குழல் முறுக்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கிலோ
    தோல் நீக்கிய முழு உளுந்து - 150 கிராம்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பச்சரிசியை தண்ணீரில் அலசி கழுவிவிட்டு நிழலில் உலர்த்திக்கொள்ளவும்.

    உளுந்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் இரண்டையும் மாவாக இடித்து சலித்துக்கொள்ளவும்.

    பின்னர் மாவுடன் பெருங்காயத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    அதனுடன் சிறிதளவு சூடான எண்ணெயும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து அச்சில் போட்டு கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை கொதிக்கும் எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

    சூப்பரான தேன்குழல் முறுக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரெட்டில் பிரெட் பட்டர் ஜாம், பிரெட் சென்னா, சான்விச் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 15
    நெய் - 50 கிராம்
    தக்காளி - 2
    குடை மிளகாய் - 1
    இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 1 ஸ்பூன்

    தாளிக்க...

    கிராம்பு - 1
    ஏலக்காய் - 1
    பட்டை - 1 சிறிய துண்டு
    சோம்பு - ½ ஸ்பூன்



    செய்முறை :

    பிரெட்டை ஓரங்களை நீக்கி விட்டு துண்டுகளா வெட்டி கொள்ளவும்.

    குடைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு தாளித்து பின் இஞ்சி விழுது சேர்தது வதக்கிய பின்னர் தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது கிளறி அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி எடுக்கவும்.

    இதில் சிறிது சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    சூப்பரான பிரெட் பொரியல் ரெடி.

    தேவைப்பட்டால் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிரெட் பொரியலை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாலக்கீரை நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. இன்று பாலக்கீரையில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 3 கப்
    கடலை மாவு - 1 ½ கப்
    அரிசி மாவு - 2 ½ டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    வறுத்து அரைத்த சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
    இஞ்சி விழுது - ½ டீஸ்பூன்
    புதினா இலை - 12
    கொத்தமல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன்
    சூடாக்கிய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    பாலக்கீரை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, கொத்தமல்லி, புதினா, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இறுதியாக சூடாக்கிய எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும். பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போதுதான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து பாலக் கீரை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும். அது பொன்னிறமாக ஆகும் வரை வறுக்கவும்.

    பாலக் கலவையை வாணலியில் அளவாக போட்டால் நன்றாக மொறுமொறுவென வரும். இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

    சூப்பரான பாலக் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கார்ன், பன்னீர் சேர்த்து கபாப் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சோளம் - 2
    உருளை கிழங்கு - 1 கப்
    பன்னீர் - 1/2 கப்
    நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்
    இஞ்சி - சிறிது
    கொத்தமல்லி - தேவைகேற்ப
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    சீரக தூள் - 1/2 ஸ்பூன்
    சோள மாவு - 2 ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப



    செய்முறை :

    சோளம், உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

    இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் (தேவைப்பட்டால் கேரட்டையும் துருவி சேர்த்துக்கொள்ளலாம்) பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கபாப் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

    இந்த கலவையை கபாப்புகளாக தட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கபாபை போட்டு பொரித்தெடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்துக் கொள்ளலாம்.

    சூப்பரான கார்ன் - பன்னீர் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வடமாநிலங்களில் டோக்ளா மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இன்று கோதுமை ரவையை வைத்து சூப்பரான டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    இஞ்சி - சிறிய துண்டு,
    கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு டேபிள்ஸ்பூன்,
    புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.

    இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    வறுத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு... உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும்.

    ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும்.

    இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். பின்பு வெளியே எடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து மேலே பரவலாக போடவும்.

    அடுத்து அதன் மேலே கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும்.

    பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும்.

    கோதுமை ரவை டோக்ளா தயார்.

    இதை விருப்பப்படி துண்டுகள் செய்து, புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மட்டனை வைத்து எளிய முறையில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரைக்க...

    மட்டன்கொத்துக்கறி - 150 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,
    சோம்பு தூள் - அரை தேக்கரண்டி,
    மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
    உப்பு - சிறிது.



    செய்முறை :

    மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான மட்டன் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை சத்தான சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் பேரீச்சம்பழம் குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம். இன்று இந்த பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பதப்படுத்திய அரிசி மாவு - 2 கப்,
    பேரீச்சம்பழம் - 20,
    காய்ந்த திராட்சை - 10,
    தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
    பொடித்த முந்திரி - 1 டீஸ்பூன்,
    வெல்லம் - சிறிதளவு,
    உப்பு - சிறிது,
    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    கடைசியாக அதனுடன் அரிசி மாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல், வெல்லம், முந்திரி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் குழிக்கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பேரீச்சம்பழம் பணியாரம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×