search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பைனாப்பிள் சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பைனாப்பிள் ப்ளெயின் கேக் பொடித்தது - 1/2 கப்,
    வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
    கிரீம் சீஸ் - 1/2 கப்,
    பவுடர் சுகர், பால் பவுடர் - தலா 1/4 கப்,
    வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
    விருப்பமான ஜாம் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :


    ஒரு பவுலில் 2 டீஸ்பூன் கிரீம் சீஸ், 1 டீஸ்பூன் வெண்ணெய், 2 டீஸ்பூன் பவுடர் சுகர் சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் 1/2 டீஸ்பூன் உதிர்த்த கேக், 1/2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவிய பட்டர் பேப்பரில் சமமாக பரப்பவும்.

    மற்றொரு பவுலில் மீதியுள்ள கிரீம் சீஸ், பால் பவுடர், வெனிலா எசென்ஸ், பவுடர் சுகர், வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கேக் கலவையில் பரப்பவும்.

    நடுவில் ஒரு கோடு போல் ஜாம் வைத்து, பட்டர் பேப்பரை நன்கு இறுக்கமாக சுற்றி ஃப்ரிட்ஜில் 4 மணிநேரம் வைத்திருந்த பின்னர் வெளியில் எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.

    சூப்பரான பைனாப்பிள் சுவிஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த சுவிஸ் ரோலை ஸ்நாகஸாக கொடுத்து அனுப்பலாம். இன்று இந்த சுவிஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொடித்த மேரி பிஸ்கெட் - 4 கப்,
    சாக்லெட் சிரப் - 4 டீஸ்பூன்,
    இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 2 டீஸ்பூன்,
    உலர்ந்த தேங்காய்த்துருவல் - அரை கப்,
    பவுடர் சுகர் - 4 டீஸ்பூன்,
    வெண்ணெய் - 8 டீஸ்பூன்,
    பால் - 4 டீஸ்பூன்,
    தண்ணீர் - 4 டீஸ்பூன்,
    பட்டர் பேப்பர் - தேவைக்கு.



    செய்முறை :

    ஒர பாத்திரத்தில் பிஸ்கெட் தூள், சாக்லெட் சிரப், காபி பவுடர், 2 டீஸ்பூன் வெண்ணெய், தண்ணீர் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தேங்காய்த்துருவல், சர்க்கரை தூள், வெண்ணெய், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெய் தடவி சாக்லெட் மாவை வைத்து பூரிக்கட்டையால் அரை இஞ்ச் தடிமனில் தேய்க்கவும்.

    அதன் மீது தேங்காய் கலவையை சிறிதளவு வைத்து பேப்பருடன் சேர்த்து நன்கு அழுத்தமாக உருட்டி, அப்படியே பேப்பருடன் ஃப்ரிட்ஜில் 4 முதல் 6 மணி நேரம் வைத்து செட் செய்து பின்பு பரிமாறவும்.

    சூப்பரான சுவிஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மட்டன் கீமாவில் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த கட்லெட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 500 கிராம்
    உருளைகிழங்கு - 200 கிராம்
    எண்ணெய் - 100 - 150 மில்லி
    பெரிய வெங்காயம்- 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
    கரம் மசாலா - அரைஸ்பூன்
    மிளகுத்தூள் - அரைஸ்பூன்
    சீரகத்தூள் - அரைஸ்பூன்
    பெருஞ்சீரகத்தூள்- அரைஸ்பூன்
    முட்டை - 1
    கொத்தமல்லி, புதினா - சிறிது
    பிரட் தூள் - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கு .



    செய்முறை :


    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    மட்டன் கீமாவை நன்றாக கழுவி நீர் வடிகட்டி விட்டு குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு தேவைக்கு உப்பு, உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் போட்டு வேக வைத்து இறக்கவும்.

    உருளையை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மசித்து கொள்ளவும்.

    வெந்த கீமாவை மீண்டும் அடுப்பில் வைத்து தண்ணீர் சுண்ட வைக்கவும்.

    மசித்த உருளையுடன், வேகவைத்த கீமா, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகத்தூள், கரம்மசாலா துள், ஒரு முட்டை, பிரட் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மசாலா பொருட்கள் கலந்த கீமாவை சிறு உருண்டைகளாக உருட்டி விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டை போட்டு சிவந்து பொரித்து எடுக்கவும்.

    சுவையான சூடான மட்டன் கீமா கட்லெட் ரெடி.

    மாலை நேரத்தில் தக்காளி சாசுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான பிஸ்கெட்டுகளை எளிய முறையில் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். இன்று தேங்காய் பிஸ்கெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 100 கிராம்
    வெண்ணெய் - 80 கிராம்
    சர்க்கரை - 40 கிராம்
    வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்
    வெனிலா சுகர் பவுடர் - அரை தேக்கரண்டி
    பாதாம் பருப்பு தூள் - 15 கிராம்
    உப்பு - சிட்டிகை



    செய்முறை :

    வெண்ணெயை உருக்கி கொள்ளவும்.

    உருக்கிய வெண்ணெயுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் சர்க்கரை, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பிசைந்த மாவை பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

    அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து குளிர்ச்சி தன்மை போனவுடன் சப்பாத்தி போல் சற்று தடிமனாக தேய்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும். அனைத்து மாவையும் இவ்வாறு செய்து கொள்ளவும்.

    செய்தவற்றை 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான தேங்காய் பிஸ்கெட் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் ஏதாவது வித்தியாசமாக சாப்பிட தோன்றினால் மீல்மேக்கர் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    சாட் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு.



    செய்முறை :

    மீல்மேக்கரை நன்றாக கழுவி வேக வைத்து, தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கவும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த உதிர்த்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்துக் கிளறவும்.

    பரிமாறும் முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். இன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - இரண்டு கப்
    வெல்லம் - ஒன்றை கப்
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    தண்ணீர் - நான்கு கப்
    துருவிய தேங்காய் - அரை மூடி



    செய்முறை :


    ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.

    ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.

    பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசியில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 250 கிராம்
    கருப்பட்டி - 100 கிராம்
    தண்ணீர் - 1/8 டம்ளர்
    உப்பு - மிகவும் சிறிதளவு (ஒரு பிஞ்ச்)
    ஏலக்காய் - 4 எண்ணம்
    தேங்காய் - ¼ மூடி


     
    செய்முறை :

    வரகு அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்து கொள்ளவும். அரிசியின் நிறம் மாறி வறுத்த வாசனை வந்ததும் இறக்கி ஆறயதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    கருப்பட்டியை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.

    தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

    அரைத்த வரகு அரிசியுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

    அதனுடன் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் தூளாக்கிய கருப்பட்டியைப் போட்டு 1/8 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைசல் கொதித்தவுடன் இறக்கி வடிட்டி வரகு அரிசி மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும்.

    இந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.

    பிடித்த வைத்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வரகு கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.

    விருப்பமுள்ளவர்கள் தேங்காயை பற்களாகக் கீறிப் போட்டு கொழுக்கட்டை தயார் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் சுக்குப் பொடி சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று கடலைப் பருப்பு வெல்ல கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய:

    கடலைப் பருப்பு - அரை கப்,
    வெல்லத்தூள் - முக்கால் கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
    நெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை:


    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து மலர வேக விட்டு எடுக்கவும்.

    ஆறியதும் அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய், அரைத்த விழுது சேர்த்து சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்யவும்.

    செய்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான கடலைப் பருப்பு வெல்ல கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய :

    கறுப்பு எள் - 50 கிராம்,
    வெல்லம் - 50 கிராம்,
    ஏலக்காய் - 2.



    செய்முறை :

    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும்.

    ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    எள்ளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து களையவும். பிறகு தட்டில் பரவலாக கொட்டி வெயிலில் காய விடவும்.

    வெறும் வாணலியில் காய்ந்த எள்ளை சேர்த்து வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

    அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான எள் பூரண கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பலாக்காய் சிப்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த சிப்ஸ் செய்வது மிகவும் சுலபம். இன்று வீட்டிலேயே பலாக்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பலாச்சுளை பழுக்காதவை - 10,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
    மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    பலாச்சுளையில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளுங்கள்.

    மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றில் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கலந்துகொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பலாக்காய் துண்டுகளை உதிர்த்தாற் போலப் போடுங்கள். நன்றாக வேகவிடுங்கள்.

    உப்பு கலந்த நீரில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதை வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றுங்கள். சத்தம் அடங்கியதும் பலாச்சுளைகளை எண்ணெய் வடித்து எடுங்கள்.

    இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு மிளகாய்ப் பொடி தூவிக் கலந்தால் பலாக்காய் சிப்ஸ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வீட்டில் கிருஷ்ணருக்கு படைக்க 7 வகையான நிவேதனங்கள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    1. அவல் பாயசம்

    தேவையான பொருட்கள் :

    அவல் - ஒரு கப்,
    காய்ச்சிய பால் - ஒரு கப்,
    வெல்லத்தூள் - தேவையான அளவு,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    முந்திரி, திராட்சை - தலா 10.

    செய்முறை:

    பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் அவலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு விட்டு கொதிக்க விடவும். இதனுடன் அவலை சேர்த்து வேக விடவும்.

    பிறகு பால் ,ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

    2. இனிப்பு அவல் பிசறல்



    தேவையான பொருட்கள் :


    கெட்டி அவல் - 100 கிராம்,
    ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்,
    சர்க்கரை - கால் கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்.

    செய்முறை:


    அவலுடன் தண்ணீர் விட்டு அலசி 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும்.

    பாத்திரத்தில் ஊற வைத்த அவலுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.

    3. வெல்ல சீடை:



    தேவையான பொருட்கள் :


    பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
    வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
    வெல்லத்தூள் - அரை கப்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.

    வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

    அதனுடன் ஏலக்காய்த்தூள், எள், அரிசி மாவு, உளுத்த மாவு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

    ஆறிய பின் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

    வாணலியில் எண்ணெய் காய வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    4. உப்பு சீடை:



    தேவையான பொருட்கள் :

    பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
    வெண்ணெய், வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - 2 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
    பெருங்காயத்தூள் - சிட்டிகை.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.

    அரிசி மாவுடன் உளுத்த மாவு, உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து பிசறவும்.

    இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும்.

    பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு உருட்டிய சீடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    5. கோகனட் ரவா லட்டு



    தேவையான பொருட்கள் :

    ரவை, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப்,
    சர்க்கரை - ஒன்றரை கப்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    நெய் - அரை கப்,
    உடைத்த முந்திரி, திராட்சை - தலா 10.

    செய்முறை:


    அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் ரவை, தேங்காய்த் துருவலை தனித்தனியாக சேர்த்து வறுத்தெடுக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் ரவையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.

    பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    அகலமான பாத்திரத்தில் அரைத்த பொருட்களுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கவும்.

     வாணலியில் நெய் விட்டு சூடாக்கி சிறிது சிறிதாக அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாக்கவும்.  

    6. தட்டை



    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்,
    உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
    ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:


    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்த மாவு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், வெண்ணெய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

    பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டவும்.

    வாணலியில் எண்ணெய் காய வைத்து தட்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  

    7. வெல்ல திரட்டுப்பால்



    தேவையான பொருட்கள் :

    காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்,
    வெல்லத்தூள் - கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    பிறகு சிறு தீயில் வைத்து கை விடாமல் கிளறி நன்கு சுண்டக் காய்ச்சவும். (ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து கிளறி காய்ச்சவும்).

    அதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
    உப்பு - 1/2 டீஸ்பூன்
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 150 கிராம்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும்.

    இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!!

    காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு :

    உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும். துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.

    மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×