search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    மாலையில் டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு வெண்டைக்காய் - 20,
    கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,
    பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
    அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
    சோள மாவு (கார்ன்ஃப்ளவர்) - கால் டீஸ்பூன்,
    கடலை மாவு - 3 டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் நன்றாக துடைத்து விட்டு, நீள துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.

    நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், வெண்டைக்காய்களை அதில் சிறிது, சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும், இந்த சிப்ஸ்.


    குழந்தைகள் கீரை என்றால் சாப்பிட அடம் பிடிப்பார்கள். கீரையை இவ்வாறு கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறுகீரை - அரை கட்டு
    வெங்காயம் - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - அரை அங்குலம் அளவு
    உருளைக்கிழங்கு - 25 கிராம்
    பிரெட் - 25 கிராம்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - முக்கால் டீஸ்பூன்
    ரஸ்க் பவுடர் - 50 கிராம்
    மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பிரெட்டை தண்ணீரில் நனைத்து தண்ணீரை பிழிந்து விட்டு மசித்து வைக்கவும்.

    கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.

    பிறகு, இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து கட்லெட்டுகளாக செய்து வைக்கவும்.

    மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்லெட் மேல் தெளிக்கவும்.

    அதன் மேல் ரஸ்க் பவுடரை தூவவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ண்ணெயைத் தடவி, கட்லெட்டை போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சிறுகீரை கட்லெட் ரெடி.

    இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் பிரெட் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 5 துண்டுகள்
    வெங்காயம் - 2 (நறுக்கியது)
    இஞ்சி துண்டு - சிறிய துண்டு
    மிளகாய் - 3
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், தண்ணீர்- தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    ப.மிளகாய்,  கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சுவையான பிரெட் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாலை நேரத்தில் சாப்பிட சூப்பரான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ  
    மிளகாய் தூள் - தேவைக்கு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    பஜ்ஜி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த சிக்கனுடன் சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனுடன் அரிசி மாவு, பஜ்ஜி மாவு, மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் மாவு கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பக்கோடாவாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு பிரெட் போண்டா. இன்று இந்த போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய பிரட் துண்டுகள் - 10 (ஓரம் நீக்கவும்),  
    எண்ணெய் - தேவையான அளவு.

    ஸ்டஃப் செய்ய :

    உருளைக்கிழங்கு - 2 ,  
    வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
    மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - சிறிதளவு,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்),
    நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி அளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளிவை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், புதினா, முந்திரி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    இந்த கலவை சூடு ஆறியதும் பிசைந்து, சிறிய உருண்டைகள் செய்யவும்.

    பிரெட்டை நீரில் நனைத்து எடுத்து, உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிந்து, உருட்டிய மாவை பிரெட் நடுவே வைத்து நன்கு மூடி, மீண்டும் உருட்டவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள போண்டாவை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் போண்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் பன்னீர் பக்கோடா. இன்று இந்த பன்னீர் பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 2 கப்
    கடலை மாவு - 2 கப்
    சாட் மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - தேவைக்கு
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸை வைத்து சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மேகி நூடுல்ஸ் - 2 கப்
    உருளைக்கிழங்கு - 2
    பொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
    வெங்காயத்தாள் - 1 கட்டு
    பூண்டு - 4 பல்,
    இஞ்சி - சிறிது துண்டு,
    பச்சைமிளகாய் - 2,
    செஷ்வான் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
    மைதா மாவு - 3 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    நூடுல்ஸில் கால் பங்கை நன்றாக நொறுக்கி வைக்கவும்.

    மீதமுள்ள முக்கால் பாகம் நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்த நன்றாக மசித்து கொள்ளவும்.

    மைதா மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கேரட், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி, மேகி நூடுல்ஸ் மசாலா, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள், செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    நொறுக்கிய நூடுல்ஸை ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும்.

    கலந்த கலவையை விருப்பமான வடிவில் பிடித்து மைதா மாவில் முக்கி நொறுக்கி வைத்துள்ள நூடுல்ஸில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கோவைக்காய் சிப்ஸ் அருமையாக இருக்கும். இன்று இந்த சிப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோவைக்காய் - கால் கிலோ,
    ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் - 150 கிராம்,
    எண்ணெய் - 200 கிராம்.



    செய்முறை:

    கோவைக்காயை நன்றாக கழுவி நான்காக நீளவாக்கில் வெட்டவும்.

    ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது) கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறி வைத்த கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்க்கவும். நன்றாக சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான கோவைக்காய் சிப்ஸ் ரெடி.

    குறிப்பு: விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதா விட்டால், கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் கூட ஒன்றாக இருந்து இருக்கும். செய்வது மிக மிக சுலபம்.
    தேவையான பொருள்கள் :

    துருவிய தேங்காய் - 1 கப்
    சர்க்கரை - 1 கப்
    பால் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - 1 சிறிதளவு
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    தேங்காயை நன்றாக துருவி கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயை கொட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.

    ஒரு 5 நிமிடங்கள் கழித்து சர்க்கரை நன்றாக இளக தொடங்கும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    5 நிமிடங்கள் கழித்து சிறிது (25 ml ) பால் சேர்த்து நன்றாக கிளறவும். பால் சேர்ப்பது தேங்காயை நன்றாக இலகுவாக்கும்.

    தேங்காய் சர்க்கரை கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

    கடைசியாக ஏலக்காய் தூள் தூவி கிளறி விடவும்.

    ஒரு தட்டில் நெய் தடவி கிளறிய சூட்டுடனே எடுத்து அதை தட்டில் பரப்பி விடவும்.

    நன்றாக பரப்பி சமப்படுத்தி விரும்பிய வடிவத்தில் வெட்டி அதை நன்றாக ஆற விடவும்.

    ஆறியதும் அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.

    தேங்காய் மிட்டாய்களை ஒரு வாரம் வரை வைத்து உண்ணலாம்.

    குறிப்பு - சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டும் தேங்காய் மிட்டாய் செய்யலாம். வெல்லம் சேர்த்தால் மிட்டாய் பிரவுன் கலரில் வரும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பூவில் வடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்  :

    வாழைப்பூ - 1
    வெங்காயம் - 2
    கடலைமாவு - 200 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    கொத்தமல்லி, கறிபேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்

    வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைப்பூவை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

    சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஸ்வீட் கார்ன், சீஸ் சேர்த்து நக்கட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்
    மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 1
    பிரெட் தூள் - கால் கப்
    சீஸ் துருவல் - கால் கப்
    மைதா மாவு - கால் கப்
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.

    பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.

    அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் ரெடி. சாஸ் உடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - ஒரு கப்
    உப்பு - ஒரு சிட்டிகை
    ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    பன்னீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) - கால் கப்
    சர்க்கரை - அரை கப்
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
    எண்ணெய் - தேவையான அளவு 



    செய்முறை :

    மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும்.

    இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.

    பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக... அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).  

    இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).

    பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும்.

    இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  

    சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×