search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    பாவ் பாஜி மும்பையில் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இந்த பாவ் பாஜியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    உருளைக்கிழங்கு - 4
    பட்டாணி - 100 கிராம்
    காலிபிளவர் - 100 கிராம்
    கேரட் - 1 சிறியது
    குடைமிளகாய் - 1
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    பாவ் பாஜி மசாலா - 1 மேஜைக்கரண்டி
    வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு, குடை மிளகாய், கேரட் இரண்டையும் தோல் சீவி துண்டுகளாக  வெட்டி வைக்கவும். காலி பிளவரையும் நறுக்கி வைக்கவும்.

    குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர், பட்டாணி, சிறிது உப்பு சேர்த்து 3 விசில் வரும் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
     
    விசில் அடங்கியதும் மூடியை திறந்து வெந்த காய்கறிகளை ஒரு மத்து கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    குடைமிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து  ஒரு நிமிடம் கிளறவும்.

    பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி 100 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.

    மசாலா கெட்டியானதும் வெண்ணெய் சேர்த்து கிளறி பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான பாவ் பாஜி மசாலா ரெடி.

    பாவ் பன் செய்முறை

    தேவையான அளவுக்கு பாவ் பன் எடுத்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசை கல்லை வைத்து லேசாக சூடானதும் 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் கரைந்ததும் பன்னை அதில் சேர்த்து இருபுறமும் லேசாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

    சூடு படுத்திய பாவ் பன்னோடு இந்த மசாலாவை சேர்த்து அதன் மேல் சிறிது வெண்ணெய் வைத்து பரிமாறவும்.

    சூப்பரான பாவ் பாஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தகி வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான ரெசிபி. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உளுந்து - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
    வறுத்த சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - 1 கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    தண்ணீர் - 1 டம்ளர்
    கெட்டித் தயிர் - 400 கிராம்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டேபிள்
    ஸ்பூன் சாட் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்  
    கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
    மாங்காய் சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
    மாதுளை பழ விதைகள் - அலங்கரிக்க



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வறுத்த சீரகத்தை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை 4 மணிநேரம் ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும். அதனுடன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    இந்த மாவுக் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வறுத்து பொடித்த சீரகம், சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெய் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

    வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். வடை நன்றாக மென்மையாக ஊறியவுடன் அதில் உள்ள தண்ணீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.

    தயிரில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.  

    ஊறிய வடையை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மேல் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.

    அடுத்து அதன் மேல் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை தூவவும்.

    கடைசியாக மாதுளை விதைகள், கொத்தமல்லி இலைகளை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான தகி வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜஸ்தான் உணவுகளில் மால்புவா இனிப்பு மிகவும் பிரபலம். இன்று இந்த மால்புவாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 1 கப்
    கோதுமை மாவு - 1 கப்
    ரவை/ சூஜி - 1 கப்
    துருவிய பன்னீர் - 1/2 கப்
    சர்க்கரை - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    எண்ணெய்
    பருப்புகள் - 1/2 தேக்கரண்டி
    பெருஞ்சீரகம் - 1 டீக்கரண்டி
    ஏலக்காய் தூள் - 1 டீக்கரண்டி



    செய்முறை :

    பாத்திரம் ஒன்றில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் சர்க்கரைப் பாகினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த மாவு வறண்ட பதத்தில் இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த இந்த மாவை 4 மணிநேரம் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் மாவை பரப்பி ஊற்றவும். கலவையை அதிக தீயில் சுட்டு எடுக்கவும்.

    அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி பரிமாறவும்.

    சூப்பரான மால்புவா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலையில் இந்த தேங்காய் பால் பணியாரம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - அரை கப்
    உளுந்து - அரை கப்,
    தேங்காய் - ஒன்று,
    பால் - ஒரு டம்ளர்,
    ஏலக்காய் - சிறிதளவு
    சர்க்கரை - கால் கப்



    செய்முறை

    உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

    தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

    அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து வைக்கவும்.

    அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.

    நல்ல பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைக்கவும்.

    பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.

    குழந்தைகள் இந்த பணியாரத்தை விரும்பி சாப்பிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடைகாலத்தில் கிடைக்கும் நுங்கில் பல்வேறு சுவையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று நுங்கை வைத்து புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நுங்கு - 10,
    பால் - ஒரு கப்,
    வெனிலா எசன்ஸ் - சிறிதளவு,
    சைனா கிராஸ் - 1 டீஸ்பூன்,
    சர்க்கரை - தேவையான அளவு.



    செய்முறை:

    நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    பாலை நன்றாக சுண்ட காய்ச்சி ஆறவைக்கவும்.

    சைனா கிராஸை கால் கப் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.

    பாலுடன் வெனிலா எசன்ஸ், சர்க்கரை, சைனா கிராஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    சர்க்கரை கரைந்த பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து கலக்கவும்.

    சிறிய கண்ணாடி கிண்ணங்களில் ஊற்றி ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

    பிறகு ஒரு தட்டில் கிண்ணத்தை கவிழ்த்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×