search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று தினை வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை அரிசி - 1 கப்
    வெங்காயம் - 1
    கேரட்  - 1
    ப.மிளகாய் - 2
    தேங்காய் - 1 துண்டு
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுந்து - 2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - 2 கைப்பிடி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    தேங்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தினை அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

    ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கேரட், தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்..

    பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்..

    காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

    மாவு நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் 15 வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தினை வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

    உருளைக்கிழங்கில் பொரியல், சிப்ஸ், வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    அரிசி மாவு - 2 கப்
    கடலை மாவு - 1 கப்
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து, அதோடு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையில் வெண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.

    இப்போது அரைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

    இந்த மாவை சூடான எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்போது உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.

    காலையில் அல்லது மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் இந்த பொரி வெஜிடபிள் சாலட் செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்

    பொரி - 1 கப்
    வெங்காயம் - 2
    கொத்தமல்லி சட்னி - 2 ஸ்பூன்
    கேரட் - 2
    வேர்க்கடலை - கால் கப்
    ப.மிளகாய் - 2
    பீட்ரூட் - 2
    கொத்தமல்லி தழை - 1 கையளவு
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

    வேர்கடலையை வேக வைத்து  கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வேர்க்கடலை, கொத்தமல்லி சட்னி, துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியற்றை சேர்த்து, நன்கு கலந்துகொள்ளவும்.

    பின், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து, உடன் எலுமிச்சை சாறு கலந்தால் சுவையான பொரி வெஜிடபிள் சாலட் தயார்.

    பொரியை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். இன்று பொரி, காய்கறிகளை சேர்த்து சுவையான சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    அரிசி பொரி - 2 பெரிய கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - 1 டீஸ்பூன்
    வேர்க்கடலை - 1/4 கப்
    எலுமிச்சம் பழம் - 1
     
    தாளிக்க:
     
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 4
    கறிவேப்பிலை - தேவைக்கு
    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டாணி - சிறிதளவு
    கொத்துமல்லித் தழை - சிறிது

    செய்முறை :

     
    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
     
    ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
     
    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
     
    வெங்காயம், தக்காளி சற்று வதங்கியவுடன், அதில் உப்பு, மஞ்சள்தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.
     
    பின் அதில் ஊறவைத்தப் பொரி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
     
    அடுத்து அதில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி அதன் மேல் கேரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
     
    சுவையான அரிசி பொரி உப்புமா ரெடி.

    இந்த தீபாவளிக்கு எளிய முறையில் செய்யக்கூடிய பாதாம் பர்ஃபி செய்து குடும்பத்தில் உள்ளவர்களை அசத்துங்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    பாதாம் - 1 1/2 கப்
    சர்க்கரை - 1 1/4 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - 100 மில்லி
    குங்குமப்பூ - அலங்கரிக்க
    பாதாம், பிஸ்தா - அலங்கரிக்க

    செய்முறை:
     
    பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும். தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
     
    சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான் ஸ்டிக் வாணலியில் கொதிக்க விடவேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
     
    பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடாமல் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.
     
    பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போடவும்.

    சுவையான பாதாம் பர்ஃபி தயார்.

    தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 2 கப்
    முந்திரி - 75 கிராம்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த முந்திரி பேஸ்ட், நெய் மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசையவும்.

    வேண்டுமானால் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    எண்ணெய் சூடானதும், முறுக்கு அச்சில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.

    பின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்து, மீதமுள்ள மாவையும் அதேப்போல் பிழிந்து பொரித்து எடுத்தால், முந்திரி முறுக்கு ரெடி!!!

    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட், நட்ஸ் சேர்த்து சத்தான சுவையான பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டார்க் சாக்லெட் - 100 கிராம் (ப்ளெயின்)    
    பேரீச்சம்பழம் - 5    
    வால்நட் - 5    
    பாதாம்பருப்பு - 3    
    முந்திரி - 3    
    அத்திப்பழம் - 5 (உலர்ந்தது)
    பூசணி விதை - 2 மேஜைக்கரண்டி.



    செய்முறை

    பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் பொடியாக நறுக்கிய பூசணி விதை, வால்நட், பாதாம் பருப்பு, முந்திரியை சேர்த்து கலக்கவும்.

    இதில் டார்க் சாக்லெட்டைத் துருவிக் சேர்க்கவும்.

    எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். சாக்லெட் கெட்டியாகிவிடும்.

    சுவையான சாக்லேட் நட்ஸ் பால்ஸ் தயார்.

    குறிப்பு : பொதுவாகவே ப்ளெயின் சாக்லெட் ஃபுட் எஸன்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும். பூசணி விதையில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. கூடவே zinc, magnesium மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பேபிகார்னில் சாலட், பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பேபிகார்னை வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபிகார்ன் - 12,
    கடலை மாவு - 1 கப்,
    அரிசிமாவு - 1 டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவைக்கு,
    ஆப்ப சோடா - சிட்டிகை

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்.



    செய்முறை:

    பேபிகார்னை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு வைத்து பின்னர் எடுக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு பேபி கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காயில் வறுவல், கிரேவி, சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காய் வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய கத்தரிக்காய் - 1,
    கடலை மாவு - 1 கப்,
    மைதா மாவு - 1 டீஸ்பூன்,
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு,
    ஆப்ப சோடா - அரை சிட்டிகை.

    அரைக்க:

    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.



    செய்முறை:

    கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள்.

    அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள்.

    இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள்.

    கடலை மாவுடன் உப்பு, மீதமுள்ள அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சூப்பரான கத்தரிக்காய் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அவல் போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தட்டை அவல் - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    பச்சை மிளகாய் - 3,
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
    உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :  

    அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்து போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிரைந்து கொள்ளவும்.

    இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில், அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான அவல் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மதியம் மீந்த சாதத்துடன், காய்கறிகள் சேர்த்து கட்லெட் செய்தால் அருமையாக இருக்கும். சரி, இப்போது ரைஸ் வெஜிடபிள் கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி சாதம் - 1 கப்  
    உருளைக்கிழங்கு - 1  
    மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சாதத்தை வேகவைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.

    காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சாதம், பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித்தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை மாவில் இனிப்பு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    வெல்லம் - அரை கப்
    தேங்காய் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி



    செய்முறை :

    கோதுமை மாவை வாசம் வரும் வரை வெறும் வாணலியில் போட்டு குறைந்த தீயில் வறுத்துக் கொள்ளவும்.

    வெல்லத்தை தட்டி வைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் தட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

    வடிகட்டிய வெல்ல கரைசலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்ததும், தீயின் அளவை குறைத்து விட்டு பொடியாக நறுக்கிய தேங்காய், ஏலக்காய் தூள், நெய், கோதுமை மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    மாவு வாணலியில் ஒட்டாமல் ஒன்றாக சேர்ந்து வரும். இதுவே சரியான பதம். பதம் வந்ததும், அடுப்பை அணைத்து மூடி போட்டு சற்று நேரம் ஆற விடவும்.

    சூடு சிறிது குறைந்ததும், மாவை சிறிது எடுத்து பிடி கொழுக்கட்டைகளாக செய்து வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    ஏற்கனவே கோதுமை மாவை வெல்லத் தண்ணீரில் வேக வைத்து விட்டதால் இந்த கொழுக்கட்டைகள் சீக்கிரம் வெந்து விடும். எனவே ஐந்து அல்லது ஏழு நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தாலே போதுமானது.

    சுவையான சத்தான கொழுக்கட்டை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×