search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணிப் பருப்பு - 200 கிராம்,
    கடலைப் பருப்பு - 50 கிராம்,
    அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
    இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.



    செய்முறை :

    இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் கோதுமை ரவை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்
    வெள்ளை உளுந்து - 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1/2 கப்
    பச்சைமிளகாய் - 2
    இஞ்சி - ஒரு சின்ன துண்டு
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 கொத்து
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

    பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.

    அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.

    மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

    சுவையான கோதுமை ரவை வடை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பார்லியில் அதிகளவு நார்சத்து இருக்கின்றது. பார்லி என்றாலே கஞ்சி தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல்..இப்படி கட்லெட்டும் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த பார்லி - 1 கப்
    ஒட்ஸ் - 1 கப்
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    வதக்கி கொள்ள :

    எண்ணெய் - 1 தே.கரண்டி
    கடுகு - தாளிக்க
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    கேரட் துருவல் - கால் கப்
    பீன்ஸ் - 10
    கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
    கரம்மசாலா தூள் - 1/2 தே.கரண்டி



    செய்முறை :

    வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்தும் கொள்ளவும்.

    வேகவைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.

    அடுத்து அதில் கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கொத்தமல்லி, புதினா தூவி, சிறிது நேரம் ஆறவிடவும்.

    ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேகவிடவும். ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

    சுவையான சத்தான சத்தான ஓட்ஸ் பார்லி வெஜ் கட்லெட் ரெடி.

    இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வேர்க்கடலை சாட் கடைகளில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த வேர்க்கடலை சாட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - ஒரு கப்,
    தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா ஒன்று,
    பச்சை மிளகாய் - 4,
    கிரீன் சட்னி, சாட் மசாலா - தலா ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வேர்க்கடலையை முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வேர்க்கடலையை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக அதனுடன் கிரீன் சட்னி, சாட் மசாலா, உப்பு கலந்து பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலை சாட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேரட், கோவா சேர்த்து வீட்டிலேயே சூப்பரான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 200 கிராம்,
    தேங்காய்த்துருவல் - 1 கப்,
    பொடித்த கோவா - 1/2 கப்,
    சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,
    மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு,
    உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    அலங்கரிக்க விருப்பமான நட்ஸ் - தேவைக்கு.



    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

    அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை போட்டு வதக்கவும். ‘

    கேரட் சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் 10 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும்பொழுது வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும்.

    ஆறியதும் லட்டுகளாக பிடித்து பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான கேரட் கோவா லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சப்பாத்தி, நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இது இரண்டையும் சேர்த்து சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    நூடுல்ஸ் - ஒரு கப்,
    பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்,
    பால் - 2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
    தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    பிறகு நூடுல்ஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

    பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்யவும்.

    தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சப்பாத்தியை ஒரு நிமிஷம் போட்டு எடுத்து நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான சப்பாத்தி  நூடுல்ஸ் ரோல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சுசியம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 1 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    வெல்லம் / பனை வெல்லம் - 1 கப்
    கடலைபருப்பு - 1 கப்
    துருவிய தேங்காய் - 1 கப்
    ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
    நெய் - 1 தேக்கரண்டி



    செய்முறை:

    கடலைபருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    ஒரு கடாயில் வெல்லம் எடுத்து தண்ணீர் விட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் அதை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் வேக வைத்த கடலை பருப்பு, வடிகட்டிய வெல்லப் பாகு, துருவிய தேங்காய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.

    அது கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வைக்கவும்.

    பின்னர் அவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுவையான சுசியம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஜிலேபி மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜிலேபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுத்தம் பருப்பு - 250 கிராம்
    அரிசி - 30 கிராம்
    சர்க்கரை - 1 கிலோ
    லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ்
    டால்டா, நெய், அல்லது ரீபைண்ட் ஆயில்



    செய்முறை :

    அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து (தண்ணீரில் சர்க்கரை மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும். சீனிபாகு கம்பி பதம் வந்தவுடன் பாகு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் மிதமான தணலில் வைக்கவும்.

    அதே நேரம் உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்..

    வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.

    நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். ஒரு தடவைக்கு 4,5, ஜிலேபி போட்டு எடுக்கவும்.

    சுவையான இனிப்பான ஜிலேபி ரெடி.

    ஜாங்கிரி பிழியும் ரெட்டில் இல்லாதவர்கள் கனமான கைக்குட்டை போன்ற துணியால் சுண்டு விரல் நுழையக் கூடிய அளவு ஒரு சின்ன ஓட்டைப் போட்டு அதில் ஒரு கைப்பிடி மாவை எடுத்து வைத்து கை முறுக்கு பிழிவது போன்றும் பிழியலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பர்கர் உங்களுக்கு மிகவும் பிடிக்குமானால், அதனை கடைகளில் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இன்று சிக்கன் பர்கர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பர்கர் பேட்டி செய்ய…


    எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்,
    வெங்காயம் - 1,
    கொத்தமல்லி - 1 கைப்பிடி,
    மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,
    பிரெட் தூள் - 1 கப்,
    உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

    பர்கர் பரிமாற…

    பர்கன் பன் - 4,
    சீஸ் ஸ்லைஸ் - 4,
    மையோனஸ், வெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
    லெட்டூஸ் - தேவைக்கு.



    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த சிக்கன் கலவையில் சிறிதளவு எடுத்து கட்லெட் போன்று தட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    பர்கர் பன்னை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    பன்னில் உட்புறம் வெண்ணெய் தடவி, செய்த பர்கர் (கட்லெட்) பேட்டியை அதன் நடுவில் வைத்து அதன் மேல் லெட்டூஸ் வைத்து மையோனைஸ் 1 டீஸ்பூன் தடவி, அதற்கு மேல் சீஸ் ஸ்லைஸ், பர்கர் பன்னை வைத்து மூடி பல் குச்சி சொருகி, தேவையானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் பர்கர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஃபலூடா ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் :

    பால் - 1 கப்
    ஓரம் நீக்கப்பட்ட பிரட் -3
    சர்க்கரை - 1/2 கப்
    எசன்ஸ் - 1 தேக்கரண்டி

    ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள் :

    வேகவைத்த சேமியா - 1 கப்
    ஜெல்லி - 1 கப்
    நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
    செர்ரி பழம் -3



    செய்முறை :

    முதலில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.

    அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

    பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்

    பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

    ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும்.

    பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.

    கடைசியாக அதன் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்.

    சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மாலையில் சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு வாழைப்பழ அடை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - ஒரு கப்,
    வெல்லம் - முக்கால் கப்,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    செவ்வாழைப்பழம் - 1
    நெய் - தேவையான அளவு.



    செய்முறை:

    வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

    பின்னர் அதனுடன் கேழ்வரகு மாவு, வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சத்தான கேழ்வரகு வாழைப்பழ அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கவுனி அரிசியில் சத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி மாவு - அரை கப்
    பொட்டுக்கடலை மாவு - அரை கப்
    பாதாம் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
    நெய் - கால் கப்
    துருவிய வெல்லம் - முக்கால் கப்
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு



    செய்முறை:

    வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், முந்திரியைச் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் கவுனி அரிசி மாவைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.

    மாவு ஆறியதும் மீதமுள்ளவற்றில் நெய், முந்திரி தவிர்த்து பொட்டுக்கடலை மாவு, பாதாம் பவுடர், துருவிய வெல்லம், ஏலக்காய்த்தூள், போட்டு இதில் உருக்கிய நெய்யை ஊற்றி கைப்பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும்.

    லட்டின் மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

    சத்தான கவுனி அரிசி லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×