search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    குஜராத்தில் இந்த பட்ரா ஸ்நாக்ஸ் மிகவும் பிரபலம். இன்று இந்த ஸ்நாக்ஸை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகத்தூள், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
    கடுகு - சிறிது,
    எள் - 1/2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
    சேப்பங்கிழங்கு இலை - 5 மீடியம் சைஸ்.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஆப்ப சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    இலைகளை நன்கு கழுவி துடைத்து வைத்துக் கொள்ளவும்.

    சப்பாத்திக்கல்லின் மேல் ஒரு இலையை எடுத்து தலைகீழாக வைத்து அதன் மேல் கடலை மாவு கலவையை இலை முழுவதும் தடவி விடவும். பிறகு மற்றொரு இலையை அதன் மேல் அதேபோல தலைகீழாக வைத்து மீண்டும் கடலை மாவு கலவையை இலை முழுவதும் தடவி விடவும்.

    இப்படியாக அனைத்து இலைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ரோல் செய்து கொள்ளவும்.

    இட்லி தட்டில் எண்ணெய் தடவி ரோல் செய்து வைத்துள்ள பாட்ராக்களை வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஆறியதும் வட்டமாக கட் செய்து வைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பிறகு எள்ளு சேர்த்து வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள பத்ராக்களை சேர்த்து சிறிது பிரவுன் கலர் ஆனதும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பட்ரா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாம்பே காஜா ஸ்வீட்டை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாம்பே காஜா ஸ்வீட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 300 கிராம்
    சர்க்கரை - 750 கிராம்
    கார்ன் மாவு (சோள மாவு) - 3 டேபிள் ஸ்பூன்
    ஆரஞ்சு கலர் - 1/4 டீஸ்பூன்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1/2 லிட்டர் (பொரிக்க)
    டேபிள் சால்ட் - ஒரு சிட்டிகை.



    சர்க்கரை பாகு வைக்க :

    பாம்பே காஜாவிற்கு இரண்டு கம்பி பதம் பாகு நீர்க்க இருக்க வேண்டும். சர்க்கரை முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஆரஞ்சு கலர் சேர்த்து மிதமான சூட்டில் கனமான பெரிய பாத்திரத்தில் கொதிக்க விடவும்.

    பாகை விரலில் தொட்டுப் பார்க்கும் போது இரண்டு நூலாக வரும் போது அடுப்பை அணைக்கவும். பாம்பே காஜா போட்டு எடுக்கும் போது சர்க்கரை பாகு இறுக இறுக சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.

    செய்முறை :


    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, டேபிள் சால்ட் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கார்ன் மாவு நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பிறகு பிசைந்து வைத்த மைதா மாவை இரண்டு அல்லது மூன்று அப்பளமாக மெல்லியதாக இட்டு கொள்ள வேண்டும்.

    கார்ன் மாவு நெய் கலவையை அப்பளங்களின் ஒரு புறம் முழுமையாக தடவி கொள்ளவும். பின் அப்பளங்களை மெல்லியதாக சுருட்டிக் கொள்ளவும் (ரோல்). ரோல் செய்த அப்பளங்களை வேண்டிய அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் (பாம்பே காஜாவின் அளவு துண்டுகளின் அளவை பொருத்தது ).

    வெட்டிய துண்டுகளை மீண்டும் மெல்லிய அப்பளங்களாக இட்டுக் கொள்ளவும். அப்பளத்தை பாதியாக வெட்டி ஒவ்வொரு பாதியையும் இரண்டாக மடித்துக் கொள்ளவும் (முக்கோணமாக).

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கோணங்களை எண்ணெயில் (அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும் ) போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்து எடுத்த பாம்பே காஜாக்களை தயாராக வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளி மற்றும் சிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய ஸ்நாக்ஸ் இது. இன்று பட்டர் முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 3 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    உளுந்து மாவு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 2 மேசைக் கரண்டி
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 5 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.

    வெண்ணெயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும். மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.

    பிசைந்த மாவின் மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.

    முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, தேவையான அளவு மாவை அச்சில் போட்டுக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெயில் மாவை முறுக்குகளாக பிழியந்து பொன்னிரமாக எடுக்கவும்.

    சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் உலர்ந்த பழங்களை எடுத்து கொள்வது நல்லது. இன்று உலர்ந்த பழங்களை வைத்து சத்தான உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உலர்ந்த அத்திப்பழம் - 20
    உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை - தலா கால் கப்
    ரூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
    பேரீச்சம்பழம் - 15
    தேன் - சிறிதளவு.



    செய்முறை :

    உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் பேரீச்சம்பழம, அத்திப்பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும். நைசாக அரைக்க கூடாது. ஒரு சுற்று சுற்றினால் போதுமானது.

    அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை, தேன், ரூட்டி ஃப்ரூட்டி சேர்த்து  நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகளாக வேண்டிய வடிவில் பிடிக்கவும்.

    அத்திப்பழம் நட்ஸ் உருண்டை ரெடி.

    மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எள்ளை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளை வைத்து இன்று சத்தான சுவையான பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    வெள்ளை ( அல்லது ) கருப்பு எள் - 4 கப்
    கருப்பட்டி அல்லது வெல்லம்  - 2 கப்
    ஏலக்காய் - 6
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    கருப்பட்டி அல்லது வெல்லத்தை தூள் செய்து கொள்ளவும்.

    எள்ளுவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஏலக்காயை தூளாக்கி கொள்ளவும்.
     
    வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். மிக்ஸியில் வறுத்த எள்ளுவை போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
     
    ஒரு வாணலியில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து இடைவிடாது கிளறி பாகு காய்ச்ச வேண்டும்.

    பின்பு இந்த பாகில் வறுத்த பொடித்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பி விடவும்.

    ஆறியதும் துண்டுகளாக போட்டு சுவைக்கவும்.

    சூப்பரான எள்ளு பர்ஃபி ரெடி.

    எள் பர்ஃபியை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும், எள் பர்ஃபியை தொடர்ந்து சாப்பிடுவதால் போக்க முடியும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நவதானியங்களை சேர்த்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி  - தலா 4 டேபிள்ஸ்பூன் அல்லது சமஅளவு,

    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
    பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை

    அரைக்க:

    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    இஞ்சி - சிறிய துண்டு.
    சோம்பு - கால் டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு.



    செய்முறை:

    இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    தானியங்கள் அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து 2 மணிநேரம் ஊறவைத்து ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த தானியம், அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.

    பச்சை வாசனை போனதும், இறக்கவும்.

    சத்தான சுவையான நவதானிய சுண்டல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அல்வா செய்யும் போது சர்க்கரை, வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் அருமையாக இருக்கும். இன்று கருப்பட்டி சேர்த்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - 200 கிராம்,
    கருப்பட்டி - 175 கிராம்,
    முந்திரி - 30 கிராம்,
    திராட்சை - 30 கிராம்,
    பாதாம் - 20 கிராம்,
    பிஸ்தா - 20  கிராம்,
    நெய் - 100 கிராம்,
    தண்ணீர் - 200 மி.லி.,
    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
    சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.

    ஒரு  வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை  நன்றாகக் கிளறவும்.

    பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலா ஜாமூன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் காலா ஜாமூனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இனிப்பில்லாத கோவா -  1/4 கிலோ,
    சர்க்கரை - 750 கிராம்,
    மைதா - 60 கிராம்,
    ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
    ஏலக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன்,
    ஜாதிக்காய் தூள் - 1/2  டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :
     
    சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்கவும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க  வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறத்தில் வறுக்க வேண்டும்.

    வறுத்த உருண்டைகளை சூடாக இருக்கும் ஜீராவில் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.

    சூப்பரான காலா ஜாமூன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாக்லேட் பேடாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பேடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோயா (khoya) - 1 கப்
    கோக்கோ பவுடர் - 2 மேஜைக்கரண்டி
    சக்கரை - 1/4 கப்
    வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி
    பாதாம் - 20
    வெண்ணெய் - 1 தேக்கரண்டி


     
    செய்முறை :

    10 பாதாமை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    10 பாதாமை துருவிக்கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில், கோயா, சாக்லேட் பவுடர், சக்கரை, வெண்ணெய், பொடியாக வெட்டிய பாதாம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடு செய்யவும். தீ மிதமாக இருக்கவேண்டும். நன்கு கலந்து விடவும்.

    எல்லாம் கலந்து நன்கு இளகும். இப்பொழுது, வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். ஓரங்கள் ஒட்டாமல் கெட்டியாகி கரண்டியுடன் சேர்ந்து கலவைச் சுற்றும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

    இந்த சாக்லேட் கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், கையில் நெய் தடவிக்கொண்டு, சம அளவு உருண்டைகளாக பிரித்து சிறிய பாதுஷா வடிவில் தட்டலாம். அல்லது ஒரு சிறிய வட்டமான மூடியில் நெய் தடவி,  சீவிய பாதாம் சிறிது தூவி, அதன் மேல் சாக்லேட் கலவையை வைத்து, வட்டமாகத் தட்டவும். பேக்கிங்  ஷீட்டில் வைத்து 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கலாம்.

    சூப்பரான சாக்லேட் பேடா ரெடி.

    குறிப்புகள்

    தீயை எப்பொழுதும் மிதமாக வைக்கவேண்டும். முதலில் பிசுபிசுப்பாக இருப்பது போல இருக்கும். ஆனால் பிறகு, காய்ந்து விடும். ஓரிரு நாட்களில் சாப்பிட்டு விட வேண்டும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    குழந்தைகளுக்கு தேங்காய் பிஸ்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த தேங்காய் பிஸ்கெட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 1/4 கப்
    சர்க்கரை - 3/4 கப்
    வெண்ணெய் - 100 கிராம்
    பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1/2 கப்



    செய்முறை :

    மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 2-3 முறை சலித்து கொள்ளவும்.

    அவன் ப்ரூஃப் தட்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து, அதில் தேங்காய் துருவலை வைக்கவும்.

    Oven-ஐ 300F ப்ரீஹீட் செய்து தேங்காய்த்துருவல் தட்டை வைத்து 10-15 நிமிடங்கள் (நல்ல பொன்னிறமானால் போதும், பத்து நிமிடங்களுக்குப் பின் அவ்வப்பொழுது பார்த்து கவனமாக எடுக்கவும். தே.துருவல் சீக்கிரம் கருகிவிடும், ஜாக்கிரதை! :)) bake செய்யவும்.

    வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க்-ஆல் சில நிமிடங்கள் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    வெண்ணெய், சர்க்கரை கலவை கிரீமியாக வரும்வரை நன்றாக கலக்கவேண்டும். கிட்டத்தட்ட உளுந்துமாவு போல fluffy-ஆக ஆகும்வரை கலக்கவும்.

    பிறகு அதனுடன் சலித்துவைத்த மாவு, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து விரல்களால் மிருதுவாக கலந்துவிடவும். (அழுத்திப் பிசையவேண்டாம்).
    தேங்காய்த் துருவலையும் மாவுக்கலவையுடன் சேர்த்துப் பிசிறி விடவும்.

    இப்பொழுது மாவு கிட்டத்தட்ட புட்டுமாவு போல, உருட்டினால் உருண்டை சேரும், உதிரி, உதிரியாகவும் இருக்கும்
     
    பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் விரித்துக் கொண்டு, மாவுக் கலவையை விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும். உங்க வசதிக்கேற்ப உருண்டையாகவோ, சதுரமாகவோ, கன சதுரமாகவோ செய்துக்கலாம்.

    எல்லா பிஸ்கட்டுகளையும் செய்து அடுக்கிய பிறகு பேக்கிங் ட்ரேயை 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.

    Oven-ஐ 350F ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.

    பிஸ்கட் ட்ரேயை oven-ல் வைத்து 15 நிமிடங்கள் bake  செய்யவும்.
     
    பிஸ்கட்டுகள் வெந்து இப்படி நிறம் மாறி இருக்கும். oven-ல் இருந்து எடுத்து நன்றாக ஆறவைக்கவும்.

    சுவையான தேங்காய் பிஸ்கெட் தயார்.

    காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.  

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான டோஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாவிற்கு...


    மைதா - அரை கப்,
    ஓமம் - 1/4 டீஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    தண்ணீர் - தேவைக்கு.

    பூரணத்திற்கு...

    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு - சிறிது,
    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    கடலை மாவு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்  தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3  பாகங்களாக கீறி விடவும். பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில்  போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஜெல்லி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜெல்லி பர்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    இளநீர் - ஒரு கப்
    அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) (agar agar kadal pasi) - ஒரு டீஸ்பூன்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    தேங்காய்ப் பால் - ஒரு கப்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வையுங்கள்.

    ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை கைவிடாமல் கிளறுங்கள்.

    கண்ணாடி போல் கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள்.

    இதேபோல் தேங்காய்ப் பாலில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொஞ்சம் கொட்டியானதும் முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள்.

    அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும்.

    பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

    சூப்பரான ஜெல்லி பர்பி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×