search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    குழந்தைகளுக்கு மதியம் பள்ளிக்கு கொடுத்தனுப்ப சுவையான வித்தியாசமான உணவு செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    சீரகம் - கால் டீஸ்பூன்
    கோதுமை மாவு - 2 கப்
    மஞ்சள் தூள் -  கால் சிட்டிகை,
    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
    கேரட் - 1
    குடைமிளகாய் - 1
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    உருளைக்கிழங்கு - 2



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கோதுமை மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    இப்போது மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.

    சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பட்டாணி கபாப் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பட்டாணி - அரை கப்
    கடலைப்பருப்பு - அரை கப்
    புதினா, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - தேவைக்கு
    மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    ரொட்டித்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை:

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, பச்சைப் பட்டாணி இரண்டையும் தனியாக வேக வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இஞ்சி, புதினா, கொத்தமல்லி தழை, பூண்டு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பட்டாணி, கடலைப் பருப்பு விழுது, மைதா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி தூளில் பிரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குக்கீஸை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நட்சத்திர குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 100 கிராம்
    வெண்ணெய் - 50 கிராம்
    பட்டைத்தூள் - அரைடீஸ்பூன்
    தூளாக்கிய சர்க்கரை - தேவைக்கு
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன்
    பட்டர் பேப்பர் - தேவைக்கு
    உப்பு - சிறிதளவு



    செய்முறை:

    வெண்ணெயுடன் மைதா மாவு, சர்க்கரை, கிராம்புத்தூள், பட்டைத்தூள், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் சப்பாத்தி தயார் செய்வது போல் மெலிதாக உருட்டிக்கொள்ளுங்கள்.

    அதனை நட்சத்திர வடிவங்களில் வெட்டி பட்டர் பேப்பர் மேல் வைத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வையுங்கள்.

    பின்னர் வெளியே எடுத்து ஓவனில் உள்ள பேக்கிங் டிரேவில் பட்டர் பேப்பர்களை விரித்து அதில் நட்சத்திர வடிவ குக்கீஸ்களை வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கால் மணி நேரம் வையுங்கள்.

    குக்கீஸ்களின் விளிம்பு பகுதி பிரவுன் நிறத்திற்கு மாறியதும் வெளியே எடுத்து ஆறவைத்து ருசிக்கலாம்.

    சூப்பரான நட்சத்திர குக்கீஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான சாலட் செய்து கொடுக்க விரும்பினால் கஸ்டர்ட் பழ சாலட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த கஸ்டர்ட் பழ சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - கால் லிட்டர்
    ஆப்பிள் பழம் - 1
    வாழைப்பழம் - 1
    திராட்சை பழம் - 100 கிராம்
    மாதுளை முத்துக்கள் - அரை கப்
    முந்திரி பருப்பு - 50 கிராம் (தூளாக்கவும்)
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
    கஸ்டர்ட் பவுடர் - 1 டீஸ்பூன்



    செய்முறை:


    ஆப்பிள், வாழைப்பழத்தை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.

    பாலை கொதிக்க வைத்து அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கஸ்டர் பவுடர் ஆகியவற்றை கொட்டி, கட்டிப்பிடிக்காமல் கரைத்துக்கொள்ளவும்.

    நன்றாக கொதித்து வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும்.

    அதில் ஆப்பிள், வாழை, திராட்சை, மாதுளை, முந்திரி பருப்பு போன்றவற்றை கொட்டி கிளறவும். ருசியான கஸ்டர்ட் பழ சாலட் ரெடி.

    சத்தான சுவையான கஸ்டர்ட் பழ சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான சாட் செய்து கொடுக்க விரும்பினால் வெள்ளரிக்காய் சாட் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 1
    கேரட் - 1
    கெட்டி தயிர் - அரை கப்
    சாட் மசாலா - ஒன்றரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
    ஓமப்பொடி (அ) மிக்ஸர் - அலங்கரிக்க
    புதினா இலைகள் - 1 கைப்பிடி
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். இரண்டு மணிநேரத்தில் தயிரில் உள்ள நீர் வடிந்து கெட்டியாகிவிடும்.

    வடிகட்டிய கெட்டி தயிரில் உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    வெள்ளரித் துண்டின் மேல் ஒரு டீஸ்பூன் தயிர் கலவையைத் தடவி, அதன் மேல் துருவிய கேரட் மற்றும் ஓமப்பொடியைத் தூவ வேண்டும்.

    அதன்மேல் புதினா இலையை வைத்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் சேர்த்து சூப்பரான பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மக்ரோனி பாஸ்தா - 1 கப்
    சீஸ் - 1/2 கப்
    உருளைக்கிழங்கு - 1
    குடை மிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூ
    சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    பிரெட் க்ரெம்ப்ஸ் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மக்ரோனி பாஸ்தாவை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேவையான உப்பு சேர்த்து வேக வைத்து, வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிய வேண்டும். வெந்த பாஸ்தாவை கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில், சீஸ், தக்காளி சாஸ், மிளகாய் தூள் / சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, நறுக்கிய குடை மிளகாய், ஒரிகானோ, மைதா மாவு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக அதனுடன் மசித்த பாஸ்தாவை போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கைகளால் பிசையவும்.

    இதை சிறு உருண்டைகளாக உருட்டி பிரெட் க்ரெம்ப்ஸில் புரட்டி எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை பொன் நிறம் ஆகும் வரை வேக விட்டு பொரித்து எடுக்கவும். தீயை குறைத்து வைத்து பொரிக்கவும்.

    சுவையான பாஸ்தா சீஸ் பால்ஸ் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாலையோர கையேந்தி பவன்களில் கிடைக்கும் புளிப்பும் காரமும் சேர்ந்த வடை, போண்டாவை பிரியப்பட்டு சுவைப்போர் ஏராளம்..இவைகளை நீங்கள் வீட்டிலேயே சுவையாக தயாரித்து உண்ணலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - கால் கப்
    துவரம்பருப்பு - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கால் கப்
    பச்சரிசி - 1 கைப்பிடி
    காய்ந்த மிளகாய் - 3
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் சிறிதளவு
    தேங்காய் துருவல் - கால் கப்
    உப்பு - ருசிக்கேற்ப
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - பொரித்தெடுக்க



    செய்முறை:


    பருப்பு, அரிசி வகைகளை நன்றாக கழுவி ஒன்றாக ஊறப் போடுங்கள்.

    அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள்.

    2 மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் கொட்டி கலந்து கொள்ளுங்கள்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுக்கவும்

    புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த போண்டா.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று எள்ளுத்தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - கால்கிலோ
    உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    வெல்லம் - 150 கிராம் (தூளாக்கவும்)
    வெள்ளை எள் - 100 கிராம்
    நல்லெண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பச்சரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, மாவு தயாரித்துக்கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.

    அவற்றுடன் எள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சூடானதும் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    பின்னர் பாகுவை அரிசி மாவு கலவையில் ஊற்றி கிளறவும்.

    இந்த மாவை தட்டைகளாக தட்டி உலற வைக்கவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கலாம்.

    சூப்பரான எள்ளுத்தட்டை ரெடி.

    இந்த தட்டையை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுவைமிகுந்த மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று அரிசி தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அ‌ரி‌சி - 2 கப்
    ப‌ச்சை ‌மிளகா‌ய் - 3
    பெரு‌ங்காய‌த்தூள் - ‌ சி‌றிதளவு
    எ‌ள் - 1 டீஸ்பூன்
    தே‌ங்கா‌ய் துருவ‌ல் - கா‌ல் க‌ப்
    வெ‌ண்ணெ‌ய் - சிறிதளவு
    உ‌ப்பு, எ‌ண்ணெ‌ய் - தேவைக்கு



    செய்முறை:

    அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி மாவாக இடித்துக்கொள்ளவும்.

    பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியை சூடாக்கி அதில் மாவை கொட்டி லேசாக வறுத்தெடுக்கவும்.

    அதனுடன் பெருங்காயத்தூள், எள், தேங்காய் துருவல், வெண்ணெய், பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்பு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி தட்டை மாவு பதத்தில் பிசைந்து தட்டைகளாக தட்டிக்கொள்ளவும்.

    துணியில் தட்டைகளை பரப்பி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான அரிசி தட்டை ரெடி.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்தில் மாலையில் டீ, காபியுடன் சாப்பிட முந்திரி பக்கோடா அருமையாக இருக்கும். இன்று முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முந்திரி பருப்பு - 30
    மிளகாய் வற்றல் - 4
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை
    அரிசிமாவு - கால் கப்
    கடலை மாவு - 1 கப்
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - 1 கொத்து



    செய்முறை :


    முந்திரிபருப்பை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

    பிறகு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, அரைத்த மசாலா, நெய் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து முந்திரியின் மேல் தூவவும்.

    இப்போது சுவையான முந்திரி பக்கோடா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, பாலக்கீரை சேர்த்து கட்லெட் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு,
    உருளைக்கிழங்கு - 2,
    பிரெட் ஸ்லைஸ்கள் - 4,
    பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    மைதா மாவு - அரை கப்,
    சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆலு பாலக் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காயில் கூட்டு, பொரியல், குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வெண்டைக்காயில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 10
    அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - அரை கப்
    மஞ்சள் தூள், மிளகு தூள் - சிறிதளவு
    சீரக தூள், தனியாத்தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    ரொட்டித்தூள் - சிறிதளவு



    செய்முறை :

    வெண்டைக்காயை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் மசாலா தூள் வகைகளை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் வெட்டிய வெண்டைக்காய், போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இந்த கலவையை அரைமணி நேரம் ஊற விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த வெண்டைக்காயை ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×