search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94410"

    மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கட்டு
    கடலை மாவு- 1 கப்
    பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:


    கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.

    சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு சூப்பரான உணவு சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாக்லேட் பார் துருவியது - 1 கப்,
    மைதா - 2 கப்,
    பொடித்த சர்க்கரை - 2  டீஸ்பூன்,
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - 1 சிட்டிகை,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன், சர்க்கரை, உப்பு, வெண்ணெய் சேர்த்து சற்று தளர பிசைந்து எண்ணெய் தடவி ஈர துணி போட்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும்.

    பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சாக்லேட் துருவல் வைத்து மூடி, மெதுவாக பரோட்டாவாக திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் நெய் விட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.

    விரும்பினால் மேலே சாக்லேட் சாஸ் ஊற்றி பரிமாறலாம். மைதாவிற்கு பதில் கோதுமை மாவிலும் செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகள் மாலையில் சாப்பிட நூடுல்ஸ், காய்கறிகள் சேர்த்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கேரட் -1
    பீன்ஸ் - 5
    பச்சை பட்டாணி - கொஞ்சம்
    உருளைக்கிழங்கு - கொஞ்சம்
    எண்ணெய் - தேவையான அளவு
    மேகி நூடுல்ஸ் - சின்ன பாக்கெட்
    கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.

    வேகவைத்த மேகி நூடுல்ஸ்சுடன், வதங்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறிது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

    கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்சில் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நுடுல்ஸ் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் வெஜிடபிள் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொறுமொறுப்பான பக்கோடா வகைகளை வீட்டிலேயே தயார் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக டீ, காபியுடன் சேர்த்து ருசிக்கலாம். இன்று மீன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள் நீக்கிய மீன் துண்டுகள் - அரை கிலோ
    முட்டை - 3
    சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இட்லி தட்டில் கழுவிய மீன் துண்டுகளை வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனை சுமாரான அளவுகளில் உதிர்க்கவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அதனுடன் சோளமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

    இந்த கலவையில் உதிர்த்த மீனை கொட்டி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    ருசியான மீன் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு பிடித்தமாதிரி இந்த பன்னீர் உருண்டை செய்து கொடுத்து அசத்துங்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 1 கப்
    பிரட்தூள் - 1/2கப்
    உருளைக்கிழங்கு - 1 சிறியது
    பெரிய வெங்காயம்  - 1 சிறியது
    புதினா இலை  - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள்  - 3/4 தேக்கரண்டி
    சாட் மசாலா  - 1/4 தேக்கரண்டி
    மாங்காய் தூள்  - 1/4 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு  - 2 தேக்கரண்டி
    சோள  மாவு  - 1மேஜைக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம். ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.

    அதனுடன் துருவிய பன்னீர், கொத்துமல்லி, புதினா, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகாய் தூள், சாட் மசாலா, பிரட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுற்றிலும் பொன்னிறமாக வரும் வரை நன்கு பொரித்து எடுக்கவும்.

    சுவையான பன்னீர் உருண்டை தயார்.

    குறிப்பு : உருளைக்கிழங்கை நிறைய வேண்டாம், அது சுவையை மாற்றிவிடும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் மிளகுத்தட்டை. இன்று இந்த தட்டையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்
    உளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகு - அரை டேபிள் ஸ்பூன்
    வெண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு
    பொட்டு கடலை மாவு - கால் கப்
    கடலை பருப்பு - கால் கப்



    செய்முறை :

    மிளகை இரவில் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

    கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

    உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

    பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து அதனுடன் உளுந்தம் பருப்பை சேர்த்து மாவாக்க வேண்டும்.

    அதனுடன் வெண்ணெய், கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை மாவு, மிளகு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் தட்டைகளாக தட்டி கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மிளகு தட்டை ரெடி.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டலில் கிடைக்கும் ஃபிஷ் டிக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் - 1/2 கிலோ,
    தயிர் - 1 கப்,
    கடுகு பவுடர் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    பெருஞ்சீரக தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    வினிகர் - 4 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர், கடுகு பவுடர், உப்பு, சீரகத் தூள், பெருஞ்சீரக தூள், மிளகாய்த் தூள், கடுகு, மஞ்சள் தூள், வினிகர், இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த இந்த மசாலாவில் மீனை சேர்த்து நன்கு கலந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

    பிறகு ஸ்க்யூவர் குச்சியில் ஒவ்வொரு துண்டுகளாக குத்தி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஃபிஷ் டிக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டீ மற்றும் காபியுடன் சாப்பி தட்டை சூப்பராக இருக்கும். இன்று வேர்க்கடலை தட்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - அரை கப்
    பொட்டுக்கடலை - அரை கப்
    கடலை மாவு - அரை கப்
    அரிசி மாவு - அரை கப்
    மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத் தூள் - சிறிதளவு
    வெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    வாணலியில் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்தெடுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பொட்டுக் கடலையையும் தூளாக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலையை போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், வெண்ணெய் ஆகியவற்றை கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    பதத்துக்கு வந்ததும் தட்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து ருசிக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை தட்டை ரெடி.

    இதனை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனை தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைத்து தயார் செய்யப்படுகிறது கால்மி கபாப். இந்த கால்மி கபாப்பை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 1/4 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1/2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பொடி - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    ஃப்ரஷ் கிரீம் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

    எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் போட்டு நன்றாக கலந்து 24 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கால்மி கபாப் ரெடி.

    புதினா சட்னி, வெங்காயம் ஆகியவற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திரட்டு பால் என்பது பால்கோவா போலதான் இருக்கும். வீட்டிலேயே எளிய முறையில் திரட்டு பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பால் - 4 கப்
    சர்க்கரை - கால் கப்,
    பாதாம் - சிறிதளவு,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கனமான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கிளறி விடவும். பால் நன்றாக கொதித்து திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரை போட்டு நன்றாக கிளறவும்.

    பாலுடன் சர்க்கரை கலந்து கிளற கிளற உதிரி உதிரியாக கட்டியாக வரும். அந்த நேரம் அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய பாதாமை சேர்த்து இறக்கி சூடாகவே சாப்பிடலாம்.

    சூப்பரான திரட்டு பால் ரெடி.

    குறிப்பு :

    திரட்டி பால் பாத்திரத்தில் கொதிக்க விடும்போது கிளறி கொண்டே இருப்பது நல்லது. இல்லையெனில் அடிபிடித்து கருகிய வாசனை வந்து விடும். சிலர் பாலை பாத்திரத்தில் காய்ச்ச விடும் முன்னரே 2 டீஸ்பூன் நெய் விட்டு பின் பாலை ஊற்றி காய்ச்சுவர். இதன் மூலம் பாத்திரத்தில் பால் ஒட்டாது கிளற வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த வெஜிடபுள் பணியாரத்தை டிபனாகவும் சாப்பிடலாம், மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சுவைக்கலாம். இன்று பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கிலோ
    உளுந்து - 1/4 கிலோ
    கேரட் - 1 கப்
    தேங்காய் - 1 கப் (சிறியதாக கட் செய்தது)
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    முட்டைக்கோஸ் - 1 கப்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - 1 கப் (சிறியதாக கட் செய்தது)

    தாளிதம் :

    கடுகு, உளுந்தப்பருப்பு, எண்ணெய்.



    செய்முறை :

    கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சரிசியில் வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

    பிறகு உளுந்தப்பருப்பையும் அரைத்து இரண்டையும் உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மறுநாள் காலை கேரட், முட்டைக்கோஸ், தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து மாவு கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை குழிகளில் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வெஜிடபுள் பணியாரம் ரெடி.

    அதனை தேங்காய் சட்னி, புதினா சட்டியுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காபி அல்லது டீயுடன் பிரெட், உருளைக்கிழங்கு சேர்த்து வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 10
    வறுத்த ரவை - அரை கப்
    அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது
    உருளைக் கிழங்கு - 2



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.

    இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான பிரெட் - உருளைக்கிழங்கு வடை ரெடி.

    விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×