search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94433"

    சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.
    தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.

    கண்கள்:


    முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம். நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.

    உதடுகள்:

    தினமும் சிறிதளவு ‘வேசலின்’ எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.

    பாதம்:

    நாள்தோறும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு சோர்வா வருவீங்க இல்லையா? வந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நல்ல நறுமணமுள்ள குளியல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, உங்கள் பாதங்களை அதில் ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். சும்மா இருப்பது போரடித்தால், நல்ல ஸ்க்ரப்பர் கொண்டு குதிகாலைத் தேய்க்கலாம். ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு கால் நகங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றலாம். பின்னர், கால்களை தண்ணீர் அல்லது சோப்பால் நன்கு கழுவிவிட்டு, ‘கோல்ட் க்ரீம்’ அல்லது ‘மாய்சரைசர்’ போட வேண்டும். இதனால் உங்கள் பாதங்கள் மிருதுவாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

    முகம்:

    இரவு உறங்கச் செல்லும்முன் நாள் முழுதும் முகத்தில் படிந்துள்ள அழுக்கை அகற்றுவது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம். அவ்வாறு துடைக்கும்போது உங்கள் கைகளின் அசைவு வட்ட வாக்கில் இருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட்டு தரமான ‘நைட் க்ரீம்’களை உபயோகப்படுத்த வேண்டும். எளிதான மாய்சரைசரும் உபயோகப்படுத்தலாம். இது, உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இந்த மாய்சரைசரை முகம், கைகள், கழுத்து மற்றும் கண்களுக்கு கீழேயும் உபயோகிக்கலாம்.

    தலைமுடி:

    இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். கால்களைப் பராமரிக்க அமரும் அந்த நேரத்தில் இதையும் செய்து முடித்தால் உங்கள் நேரம் மிச்சமாகும்.

    இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!
    வீட்டில் கிடைக்கும் எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
    தூசியால் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

    * முன்னோர் காலத்திலிருந்து பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

    * அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

    * இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

    * கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் “பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

    * சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.

    * தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு “பேக்” போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
    சருமத்தை பராமரிக்க பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் தீர்ந்து போய்விட்டு, வெறும் கோல்டு கிரீம் மட்டும் இருந்தால், அவற்றை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.
    கோடைகாலத்தில் இருந்த நமது சருமத்தின் பளபளப்பு, மென்மைத் தன்மை இந்த குளிர்காலத்தில் இருக்காது. அவ்வாறு இருக்க வேண்டுமெனில் நாம் நமது சருமத்தை நன்கு பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இந்த காலத்தில் பெரும்பாலும் உடல் பெரும் சோர்வுடன் இருக்கும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கு கூட ஒரு வித சோம்பேறித்தனம் இருக்கும். அந்த நேரத்தில் உடலை பராமரிக்க பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் தீர்ந்து போய்விட்டு, வெறும் கோல்டு கிரீம் மட்டும் இருந்தால், அவற்றை பலவிதங்களில் பயன்படுத்தலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!

    * குளிர்காலத்தில் கிரீம்களை காலை வேளையில் பயன்படுத்தினால், அவற்றால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் இருப்பதோடு, அழுக்குகளை எளிதில் உறிஞ்சிவிடும். இறுதியில் சருமத்தில் பிம்பிள் ஏற்பட்டு, பெரும் வலி உண்டாகும். ஆகவே இவற்றிற்கு பதிலாக கோல்டு கிரீம்களை இரவில் படுக்கும் முன்பு சருமத்தில் ஃபேஸ் மாஸ்க் போன்று தடவி, இரவு முழுவதும் ஊற வைத்தால், மறுநாள் சருமம் நன்கு மென்மையோடு பொலிவாக காணப்படும்.

    * உதடு அடிக்கடி வறட்சியடையும் என்பதற்காக பயன்படுத்தும் லிப் பாம் போன்றும், கோல்டு கிரீம்களை பயன்படுத்தலாம். இதனால் உதட்டில் வறட்சியின் காரணமாக ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் போய்விடும்.

    * அதிக குளிர்ச்சியின் காரணமாக, முழங்கால் மற்றும் முழங்கைகளில் ஒருவித சுருக்கங்கள் போன்று காணப்படும். இத்தகைய பிரச்சனை ஏற்படாமல் தடுக்க, கோல்டு கிரீம்களை தடவி வந்தால், தடுக்கலாம்.

    * அதிக களைப்பின் காரணமாக முகத்திற்கு போட்ட மேக்-கப்பை பொறுமையாக நீக்க முடியவில்லையெனில் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போது மேக்-கப் ரிமூவரை எடுத்து செல்லவில்லை என்றால், அப்போது அவசரத்திற்கு கோல்டு கிரீம்களை பயன்படுத்தி நீக்கலாம். அதற்காக இவற்றை பயன்படுத்தி அடிக்கடி நீக்கக் கூடாது. இது வெறும் அவசரத்திற்கு மட்டும் தான்.

    * குளிர்காலத்தில் குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே வெடிப்புகள் வர ஆரம்பிக்கும் போதே கோல்டு கிரீம்களை பயன்படுத்தினால், வெடிப்புகள் வராமல் தடுக்கலாம். ஆனால் அந்த வெடிப்புகள் பெரியதாக இருந்தால், அப்போது அவற்றிற்கு நிச்சயம் வெடிப்பை சரிசெய்ய விற்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

    * நிறைய பெண்கள் முகத்திற்கு கிரீம்கள் மற்றும் மற்ற உறுப்புகளுக்கு லோசன் என்று பயன்படுத்துவார்கள். ஒரு வேளை அவை இல்லாவிட்டால், அப்போது இந்த கோல்டு கிரீம்களை எல்லா இடங்களுக்குமே பயன்படுத்தலாம்.

    * வேக்ஸ் செய்த பின்னர் எப்போதும் அதிக வலி இருக்கும். அதிலும் குளிர்காலத்தில் என்றால் அது பெரும் தொல்லையாக இருக்கும். ஆகவே அந்த மாதிரி வேக்ஸ் செய்த பின்னர் ஏற்படும் வலியை குறைக்க, கோல்டு கிரீம்களை பயன்படுத்தினால், வேக்ஸினால் ஏற்படும் வலியானது தடுக்கப்படும்.
    பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். இதனை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். காற்று புகாத வண்ணம் டைட்டான பாக்ஸில் ஈரப்பசையுடன் வைப்ஸ் இருக்கும்.

    இதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம். தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ முடியாத சமயங்களில் இதனைப் பயன்படுத்தலாம். மேக்கப் ரீமூவ் செய்வதற்கு சருமம் வறண்டு காணப்பட்டால் இதனைப் பயன்படுத்தி முகத்தை துடைக்கலாம்.

    இதனைப் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் இதனால் ஏராளமான தீமைகள் ஏற்படுகிறது.

    ஸ்கின் கேர் வைப்ஸில் ஏராளமான கெமிக்கல்ஸ் இருக்கும். எப்போதும் அவை ஈரப்பதத்துடன் இருப்பதற்காக அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவற்றால் சென்ஸிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் வரண்டு போகும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகும்.

    தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் தான் அதிகமாக இதனை பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதனை பயன்படுத்துவதால் முகம் முழுவதுமாக சுத்தம் ஆகாது. சில நுண்ணிய துகள்கள் முகத்தில் ஒட்டியபடியிருக்கும். இப்படியே அடிக்கடி செய்து வந்தால் அது சருமத்திற்கு பாதிப்பையே உண்டாக்கும்.

    வைப்ஸில் இருக்கும் ஆல்கஹால் நம் சருமத்தை வறட்சியாக்கிடும். இது சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கம் விழுவதற்கு காரணமாக அமைந்திடும். இதனால் பருக்கள், கரும்புள்ளி தோன்றும்.
    பெட்ரோலியம் ஜெல்லியை பெரும்பாலும் மாய்ஸ்சுரைசராக மட்டும் தான் பயன்படுத்துவோம். சரும பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பு, சரும பிரச்சனைகளை போக்க என பலவாறு பயன்படுத்தலாம்.
    பொதுவாக பெட்ரோலியம் ஜெல்லியானது அனைவரது வீட்டிலுமே இருக்கும். இத்தகைய பெட்ரோலியம் ஜெல்லியை பெரும்பாலும் மாய்ஸ்சுரைசராக மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பெட்ரோலியம் ஜெல்லியை பலவாறு பயன்படுத்தலாம். அதிலும் சரும பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பு, சரும பிரச்சனைகளை போக்க என பலவாறு பயன்படுத்தலாம். இங்கு அழகைப் பராமரிக்கும் போது பெட்ரோலியம் ஜெல்லியை எதற்கெல்லாம், எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லி இருந்தால் தவறாமல் பயன்படுத்தி, அதன் நன்மையைப் பெறுங்கள்.

    தினமும் பெட்ரோலியம் ஜெல்லியை இரவில் படுக்கும் போது கண் இமைகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து வாருங்கள். இதனால் கண் இமைகள் நீளமாக வளர்வதோடு, நன்கு அடர்த்தியாகவும் இருக்கும்.

    சிலருக்கு கூந்தல் வறண்டு அசிங்கமாக காணப்படும். அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை சிறிது எடுத்து கூந்தலின் மேல் தடவினால், கூந்தலானது அடங்கி, வறட்சியில்லாமல் காணப்படும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பது போல் வெளிப்படுத்தும்.

    வியர்வை நாற்றம் வராமல் இருக்க, அனைவரும் நிச்சயம் டியோடரண்ட் பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தும் போது, அதில் இருக்கும் நறுமணம் உடலில் நாள் முழுவதும் இருக்க வேண்டுமானால், டியோடரண்ட் அடிக்கும் முன்பு, அதனை உடலில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் நிச்சயம் நறுமணம் நாள் முழுவதும் இருக்கும்.

    கூந்தலுக்கு ஹேர் டை அடிக்கும் முன், கூந்தல் படும் இடங்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொண்டால், ஹேர் டையினால் சருமத்தில் ஏற்படும் கறைகளைத் தடுக்கலாம்.

    கன்னங்களின் மீது பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவினால், அது கன்னங்களை அழகாக ஹை லைட் செய்து காண்பிக்கும். அதேப் போல் இதனை கண்களுக்கு மேக் அப் போடும் முன், கண் இமைகளுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தி, பின் ஐ ஷேடோவைப் பயன்படுத்தினால், கண்கள் அழகாக காணப்படும்.

    உதடுகள் அடிக்கடி வறட்சி அடைந்தால், அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்கு தடவிக் கொண்டால், நீண்ட நேரம் உதடுகள் ஈரப்பசையுடன் இருக்கும்.
    30 வயதை தாண்டிய பெண்களுக்கு வரும் சரும சுருக்கங்களை தவிர்க்க சில வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    உங்கள் 30-வது பிறந்த நாளில் இருந்து நீங்கள் சருமத்தை இளமையாக தக்க வைப்பதற்கான செயல்முறைகளை தொடங்கி விடுவது நல்லது. இது உங்கள் தினசரி வழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். மேலும் முப்பது வயதிற்கு மேல் உங்கள் சருமத்தை பராமரிக்க சில புது சரும பராமரிப்பு சாதனங்கள் மற்றும் சில நிபந்தனைகளை உங்களுக்கு கூறுகிறோம். நீங்கள் இந்த பத்து நிபந்தனைகளை கடைபிடித்தால் உங்கள் சருமம் சுருக்கங்கள் மற்றும் முதிர்ந்த தோற்றம் இல்லாமல் இளமை பொலிவோடு இருக்கும். அதனால் 30 வயதடைந்த பெண்கள் இந்த எளிய சரும பாதுகாப்பு நிபந்தனைகளை படித்து தினசரி செயல்படுத்துதல் வேண்டும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

    1, ரெடினாய்டு, சரும பராமரிப்பில் வெளிப்புற இணைப்புத்திசுக்களை (Collagen) மற்றும் தோல் திசுக்களை (Skin Cells) புதிதாக உற்பத்தி செய்கிறது. நீங்கள் 30 வயதானவராக இருந்தால் உங்கள் சரும பராமரிப்பு முறைகளில் கண்டிப்பாக ரெடினாய்டு உபயோகியுங்கள். நீங்கள் ரெடினாய்டு உள்ளடங்கிய சரும பராமரிப்பு சாதனங்களை தேர்ந்தெடுங்கள். ரெடினாய்டு ஒரு சிறந்த முகப்பரு தடுப்பானாக செயல்படுகிறது. இது சருமச் சுருக்கங்கள் வராமல் தடுப்பதோடு முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. மேலும் இது சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

    2. உங்கள் சருமம் வயதான தோற்ற்றமடைய காரணம் சருமத்தில் வறட்சியே. எனவே நீங்கள் கட்டாயமாக சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க வேண்டும். அதனால் நீங்கள் முப்பது வயதடைந்ததும் சருமத்திற்கு மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துவதை அதிகரிக்கவும். சரும மாய்ஸ்ட்ரைசர்களுக்கு நீங்கள் எடுத்து கொள்ளும் இடைவெளி மிகக் குறைவானதாகவும் எப்போதும் உங்கள் சருமம் நீர்ச்சத்துடை உடையதாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயணங்களின் போதும் கண்டிப்பாக மாய்ஸ்டரைசரை பயன்படுத்த வேண்டும்.

    3. நீங்கள் முப்பது வயதை அடைந்திருக்கும் போதே உங்கள் சரும பராமரிப்பு பொருட்களில் சரும முதிர்ச்சியை தடுக்கும் பயனுள்ளவைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய சரும பராமரிப்பு பொருட்களையே மேலும் தொடர்ந்தால் உங்கள் சருமத்திற்கு தேவையான போஷாக்கு கிடைக்காது, அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சரும பராமரிப்பு பொருட்களில் முதிர்ந்த தோற்றத்தை தடுக்கும் மூலக்கூறுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உயர் ரக பிராண்டுகளில் உள்ள சரும பராமரிப்பு பொருட்களில் சரும முதிர்ச்சியை தடுக்கும் பொருட்களை நீங்கள் உபயோகிக்கலாம்.



    4. வயது முதிர்ச்சியையும் பாலின வேறுபாட்டையும் தாண்டி சூரியனின் புற ஊதாக்கதிர்கள் எப்போதுமே உங்கள் சருமத்திற்கு கெடுதல் தரக்கூடியது தான். சரும முதிர்ச்சியை தடுக்கும் சரும பராமரிப்பு முறைகளை தொடங்கியிருப்பின் அதிகமாக வெயிலில் செல்வதை தவிருங்கள். இதனால் உங்கள் சருமம் மேலும் நிலையான இளமைப்பொலிவோடும், சரும நிறம் மாறாமலும் இருக்கும். முப்பது வயதிற்கு மேல் வீட்டிலேயோ அல்லது அலுவலங்களிலோ உள்ளேயே இருந்து வேலை செய்வதை அதிகப்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கும்
     
    5. உடலில் வயதான தோற்றத்தை முதலில் எடுத்துக்காட்டுவது கண்களும் அதன் சுற்றுப்புறமும் தான் சொறி போன்ற அலர்ஜியான கண்ணிமைகள் அல்லது காக்கைச்சுவடு போன்ற கண்ணிமை கோளாறுகள் கண்ணைச் சுற்றியுள்ள சருமத்தை மிகவும் பலவீனமாகவும் சுருக்கங்கள் உடையதாகவும் மாற்றுகிறது. இதற்கு கண்களுக்கு பிரத்யேகமான அதிக பயன்களுடைய சரும முதிர்ச்சி தடுக்கும் சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிப்பது சிறந்த தீர்வாகும். சாதாரண சரும பராமரிப்பு பொருட்கள் கண்களை சுற்றி சரியாக வேலை செய்யாது காரணம் அது உடலின் மிக மென்மையான பகுதியாகும். இதற்காக நீங்கள் கண் மருத்துவர் பரிசோதித்து பரிந்துரைக்கும் கண்களுக்கு பிரத்யேகமான சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிக்கவும்.

    6. மேற்கூறிய கடின முயற்சிகள் இருந்தாலும் உங்கள் சருமம் கண்டிப்பாக 30 வயதை கடந்ததும் முதிர்ச்சியை காட்டுகிறதென்றால், நீங்கள் தோல் மருத்துவரிடம் உங்கள் சருமத்தை பரிசோதித்து தக்க மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். எனவே உங்களுக்கு சருமத்தில் எந்த பிரச்சினையும் இல்லாவிடிலும் மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் பரிசோதித்து சருமத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் சருமத்தில் ஏதேனும் பிரச்சினைகளை உணர்ந்தால் வீட்டிலேயே தயாரிக்கும் அல்லது நீங்களே செய்து கொள்ளும் ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவதைவிட தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.

    7. 30 வயதை கடந்தவர்கள், சரும பராமரிப்பை மட்டும் கருத்தில் கொண்டிருக்க கூடாது. முடிகளும் முதிர்ச்சி அடைகிறது, எனவே சரும பராமரிப்போடு சிறந்த மற்றும் உரிய கேசத்திற்கான பராமரிப்பையும் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் சருமத்தை விட முடியின் முதிர்ச்சி உங்களுக்கு இன்னும் பத்து வயது கூடுதலாக ஆனது போன்ற ஒரு தோற்றத்தை காட்டிவிடும். ஆதலால் 30 வயது கடந்தவர்களுக்கு சரும பராமரிப்போடு கேசத்திற்கான பராமரிப்பிலும் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
    உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    தன் உண்மையான வயதைவிட இளமையாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை எல்லோரின் ஆழ்மனதிலும் இருப்பதுதான். ஆசை மட்டும் இருந்தால் போதுமா? உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    1. உங்கள் கூந்தல் இளமையாக இருந்தால், நீங்களும் இளமையாகத் தெரிவீர்கள். இதற்கு வாரம் இருமுறையோ அல்லது ஒருமுறையாவது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கூந்தலின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரைத் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஹேர்வாஷ் செய்யவும். எண்ணெய்ப் பசை குறைவான ஹேர்க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். எண்ணெய்க் குளியலும் ஹேர்க்ரீமும் தலைமுடியை லேசான ஈரப்பதத்துடனே வைத்திருக்கும். இந்த ஈரப்பதம், கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் உங்களை இளமையாகக் காண்பிக்கும்.

    2. ஆஃபீஸுக்குப் போகும் அவசத்தில் தலைமுடியைச் சரியாக வாரிக்கொள்ளாமல் அள்ளிமுடிந்து போகாதீர்கள். கலைந்த கூந்தல்தான் உங்கள் வயதை அப்பட்டமாகக் காட்டும் முதல் எதிரி.

    3. மாதம் ஒருமுறை கூந்தலின் நுனியை டிரிம் பண்ணிவிடுங்கள். அடியில் சமமாக இருக்கிற தலைமுடியும் உங்களுக்கு நீட் லுக் கொடுக்கும்.

    4. ஓப்பன் ஹேர் விடுபவர்கள், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது கிளிப்ஸை மாற்றி மாற்றி யூஸ் பண்ணுங்கள்.

    5. தொப்பை இருப்பவர்கள், இன்றைய டிரெண்ட்படி இறுக்கமாக ஆடை அணிந்தால், தொப்பை அசிங்கமாகக் காட்டிவிடும். தொளதொள டிரெஸ்ஸிங்கும் செய்யாதீர்கள். உங்கள் உடல்வாகுக்கு ஏற்றபடி ஆடை அணியுங்கள். முப்பது வயதுகளில் உடம்பு வெயிட் போட்டுவிடும் என்பதால், லாங் டாப் – லெகின் என்று மேட்ச் செய்தால் உடல் மெலிவாகவும் இளமையாகவும் தெரிவீர்கள்.



    6. சில பெண்களுக்கு வயது ஏற ஏற, மேல் கை வெயிட் போட ஆரம்பிக்கும். அது அவர்களுடைய ஜீன். அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், அதை மறைக்கும் வகையில் முட்டி வரை ஸ்லீவ் டிரெஸ் செய்தால், உண்மையான வயது வெளியில் தெரியாது.

    7. மாதத்துக்கு ஒருமுறை புருவங்களை திருத்திக்கொள்ளுங்கள். இது முகத்தை பளிச்சென்றுக் காண்பித்து, இளமையைக் கூட்டும்.

    8. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பார்லருக்குப் போய் ஃபேஷியல் செய்துகொள்ளுங்கள். மரு, மாசு, பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் இல்லாமல் ஈவன் டோனாக இருக்கும். உதட்டுக்கு மேலே பூனை முடிகள் இருந்தால், பார்லரில் திரெட்டிங் செய்துகொள்ளுங்கள். மாசு மருவற்ற சருமம் இளமையின் அடையாளம். பார்லருக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே கடலை மாவு, பயித்தம் மாவு, முல்தானி மிட்டி, பால், தேன், தக்காளிச்சாறு எனப் பயன்படுத்தி சருமத்தில் டெட் செல்கள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான சருமம், லேசான எண்ணெய் பளபளப்புடன் மின்னுவது உங்களை யூத்ஃபுல்லாக காட்டும்.

    9. உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற கலரில் ஆடை அணியுங்கள். இதைக் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் முகத்தின் ஒரு பக்கத்தில் தங்க கம்மலையும், இன்னொரு பக்கத்தில் ஒயிட் மெட்டல் கம்மலையும் வைத்துப் பாருங்கள். தங்க நிறம் பொருத்தமாக இருந்தால் மெரூன், கிரீன், ரெட், பிங்க், பிரவுன் போன்ற ஷேட்ஸ் பொருத்தமாக இருக்கும். ஒயிட் மெட்டல் பொருத்தமாக இருந்தால், ஸ்கை ஃப்ளூ, பேபி பிங்க், லேவண்டர், பர்பிள், லெமன் யெல்லோ போன்றவை உங்கள் ஸ்கின்னுக்கு ஒகே. ஸ்கின் டோனுக்குப் பொருத்தமான கலர் டிரெஸ்ஸை அணிவதும் இளமையாகக் காட்டும் சீக்ரெட் வழிதான்.

    10. நிறையப் பெண்கள் முகத்துக்கும் ஆடைக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, பாதங்களை உலர்வாகவும் பித்தவெடிப்புடனும் ஈரப்பதமே இல்லாமல் வைத்திருப்பார்கள். கைகளும் கால்களும் நம் உண்மை வயதைக் காட்டிக்கொடுக்கும் எட்டப்பன்கள். எனவே, நகங்களைச் சீராக வெட்டி, லேசாக ஆயில் தடவி ஈரப்பதத்துடன் மெயின்டெய்ன் பண்ணுங்கள். ஸ்லிப்பர், ஹேண்ட்பேக் போன்றவற்றை இரண்டு, மூன்று என வைத்துக்கொண்டு டிரெஸ்ஸுக்கு மேட்சாக அணியுங்கள். வருஷம் முழுக்க ஒன்றையே பயன்படுத்தாதீர்கள்.

    பத்து டிப்ஸையும் பிராக்டிகளாக செய்துபாருங்கள். இதில், பெரிதாகச் செலவு இல்லை. அதேநேரம் இளமையாகவும் தன்னம்பிக்கையாகவும் உணர்வீர்கள்.

    கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
    கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

    சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.

    முகப்பருக்கள் வலியைத் தரக்கூடியவை. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு கிரீம் உடன் 2 % மட்டும் கிரீன் டீயை கலந்து 6 வாரங்களுக்கு அப்ளை செய்து வந்தால், பருக்கள் குறைவதை பார்க்கலாம்.

    டீயில் ஆன்டி - மைக்ரோபயல் மூலக்கூறுகள் உள்ளன. இவை கொசுக்கள், மற்றும் பூச்சிக்கடிகளால் உண்டான வீக்கங்கள் மற்றும் காயங்களை குணமாக்க உதவுகிறது. டீ பேக்கை வைத்து காயம் உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுத்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

    கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

    இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கண்களுக்கு மேல் டீ பேக்குகளை வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

    கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.

    பயன்படுத்திய டீ பேக்குகளை செடிகளுக்கு உரமாகவும் போடலாம். இதனால் செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே அவை ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வளர உதவியாக இருக்கும்.
    50 வயதை நெருங்கும் பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவார்கள். ஆரோக்கிய வாழ்க்கை முறை சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே அழகு கூடும்.
    50 வயதை நெருங்கும் பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவார்கள். ஒருசிலர் சரும அழகை மேம்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுப்பார்கள். ஆரோக்கிய வாழ்க்கை முறை சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே அழகு கூடும்.

    * 50 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்களின் செயல்பாடு சீரற்ற நிலையில் இருக்கும். அதன் தாக்கம் மாதவிடாய் சுழற்சியில் வெளிப்படும். மேலும் சரும வறட்சி, முகப்பரு போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன்கள் சீராக செயல்படுவதற்கு வழிவகை செய்யலாம். பெர்ரி வகை பழங்கள், வால்நெட், அவகோடா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவை ஹார்மோன்களின் சீரான செயல்பாட்டுக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்யும்.

    * ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து பெண்கள் சாப்பிட்டு வரலாம். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலின் ஈரப்பதத்தை சம நிலையில் தக்கவைத்து வயதான தோற்றத்துக்கான அறிகுறிகளை தாமதப் படுத்தும். தயிர், மோர், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவை சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

    * உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருப்பதும் சரும சுருக்கத்திற்கு வழிவகுக்கும். பேக்கரி வகை பலகாரங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். 50 வயதை கடந்தவர்கள் இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பங்கம் விளைவிக்கும்.

    * உடலில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதும் தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்தும். வீட்டில் உள் அலங்கார தாவரங்கள் வளர்ப்பதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். அதனை சுவாசிப்பதன் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தலாம்.
    பனிக்காலத்தில் முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். இந்த பிரச்சனையை போக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    பனிக்காலத்தில் ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வாயைச் சுற்றி இழுப்பது மாதிரி இருக்கும். முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கம் தெரியும். தலை ஸ்காப்பும் வறண்டு பொடுகு வர ஆரம்பித்துவிடும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்து கொள்ள முடியும்.

    பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை  உலரச் செய்துவிடும். அதனால்தான், சருமம்  வறண்டு சுருங்கி விடுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத் தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள்.  இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.

    தினமும் இதைச் செய்யமுடியாதவர்கள், வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய்யைத்  தலை முதல் கால் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பச்சைப்பயிறு மாவால் தேய்த்துக் குளியுங்கள். கடலைப்பருப்பு மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள். அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை  சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள்.  சருமம் இன்னும் உலர்ந்துவிடும்.

    குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல், தேங்காய் எண்ணெய்யை இரண்டு விரல்களால் தொட்டு எடுத்து, உடல் முழுக்க தடவுங்கள்.  'எண்ணெய் வேண்டாம்' என்பவர்கள், பாடிலோஷன் பயன்படுத்தலாம்.

    நீங்கள் என்னென்ன பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் சில துண்டுகளை அரைத்து, பால் ஏடுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும். 
    தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.

    வறண்ட சருமத்திற்கு

    முகம் மிகவும் வறட்சியாக உள்ளதா..? பல வகையான வேதி பொருட்களையும் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள் நண்பர்களே. உங்களுக்கென்றே இந்த குறிப்பு உள்ளது.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் பால் - 1/2 கப்
    ரோஸ் நீர் - 1/2 கப்
    ரோஜா இதழ்கள் - சிறிதளவு

    செய்முறை :

    முதலில் நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி கொள்ளவும். அடுத்து அந்த நீரில் தேங்காய் பால், ரேஸ் நீர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும். அத்துடன் உங்களின் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பத்ததுடனும் இருக்கும்.

    இளமையான முகத்திற்கு


    நீண்ட நாட்கள் இளமையாக் இருக்க வேண்டுமென்றால் இந்த அழகு குறிப்பை பயன்படுத்தி வாருங்கள் நண்பர்களே. இது மிகவும் நல்ல பலனை ஒரு வாரத்திலே தரும்.



    தேவையான பொருட்கள் :


    பாதாம் - 6
    தேங்காய் பால் - 1 ஸ்பூன்

    செய்முறை :

    முதலில் பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொள்ள வேண்டும். பிறகு, தேங்காய் பாலை சேர்த்து இவற்றை நன்கு அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறுவீர்கள்.

    பளபளப்பான முகத்தை பெற

    முகம் மிகவும் பளபளப்பாக இருக்க ஒரு அருமையான வழி உள்ளது. அதற்கு இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தினாலே போதும்.

    தேவையான பொருட்கள்  :

    சந்தன பவுடர் - 1 ஸ்பூன்
    தேங்காய் பால் - 1 ஸ்பூன்
    தேன் - 1 ஸ்பூன்
    குங்குமப்பூ - சிறிது

    செய்முறை :

    முதலில் சந்தன பவுடர், தேங்காய் பால் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு, இவற்றுடன் தேன் மற்றும் குங்கும பூ சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மின்னும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
    சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தயிர் நல்ல தீர்வை தருகிறது. இன்று தயிரை எந்த முறையில் பயன்படுத்தி சருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
    உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது  குறையும்.

    எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாறும். தயிரை முகம் மற்றும் உடம்பில்  தடவி வந்தால் வெயினால் ஏற்பட்ட சரும கருப்பு நீங்கும். மேலும் சருமம் மென்மையாகும்.

    டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகப்பருக்கள்  மறையும்.

    தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியில் தடவி காய்ந்ததும் கழுவினால் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதை வாரம் இருமுறை  செய்தாலே போதுமானது.

    1 ஸ்பூன் தேனை 2 ஸ்பூன் தயிருடன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். தொடர்ந்து இதனை செய்யும்போது உங்கள் வறண்ட, டல்லாகியிருக்கிற சருமத்தை, பளிச்சின்னு மாற வைக்கும் என்பது உறுதி 
    ×