என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காங்கயம்"
- அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும்.
- பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால்.
காங்கயம் :
காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா்.இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.சக்திவேல் பேசியதாவது:-
பஞ்சாப் மாநிலம், சண்டிகா் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் (பேக்கிங்) செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரிஜிஸ்டா் பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி இருந்த சூழ்நிலையில், தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும். ரூ.1,000க்கு விற்கப்படும் 25 கிலோ கொண்ட அரிசிப் பை, இனிமேல் ரூ.1,050 ஆக விலை உயரக்கூடும்.
இந்த விலை உயா்வு அடித்தட்டு மக்களை பெருமளவில் பாதிக்கும். எந்த அரசும் மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு இதுவரை வரி அறிவிப்பு செய்ததில்லை. எனவே மக்களை பாதிக்கும் இந்த 5 சதவீத வரியை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.இதில்காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் செயலாளா்சாமியப்பன், பொருளாளா்சின்னசாமி உள்பட அரிசி ஆலை உரிமையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
- தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
- மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
காங்கயம் :
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயம் கரூா் சாலையில் உள்ள ஸ்ரீ மகாராஜா மஹாலில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 15,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.
இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு படித்தவா்கள் மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் படிப்புகளிலும் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் மற்றும் முந்தைய ஆண்டு படிப்பை முடித்த மாணவா்கள், தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
முகாமில் வேலை வாய்ப்புகளோடு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன வழங்கப்பட்டது.
முகாமில் இன்று மாலை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சி.வி.கணேசன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகின்றனர். கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
- மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 103 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
- சந்தையில் அதிகபட்சமாக ரூ.74 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 103 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.74 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
- அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடபெற்று வருகிறது
காங்கயம் :
காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை பலரும் அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது.
தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது. இதனால் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.
- இலவச உணவு தங்குமிடம் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
- கடனுதவி வழங்க மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
காங்கயம்:
காங்கயம், தாராபுரம் சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். காங்கயம் நகர்மன்றத் தலைவர்சூ ரியபிரகாஷ் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் பல்வேறு துறைகள் மூலம் 16 பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த 275 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சிக்கு தேர்வு செய்தனர்.
இவர்களுக்கு இலவச உணவு தங்குமிடம் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. விழாவில் திட்ட இயக்குனர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன், சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் கே.கே.துரைசாமி, துணைத்தலைவர் டி.சண்முகம்,தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்