search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94462"

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Redmi



    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுவதும், சிவப்பு நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரெட்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்குவதை சியோமி உறுதி செய்திருந்தது. எனினும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

    ரெட்மி தலைவர் லு வெய்பிங் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாகவும், இதில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போது அதில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.



    இவை தவிர ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மெட்டாலிக் பில்டு கொண்டிருக்கும் என்றும் இது சிவப்பு நிறத்தை தழுவி இருக்கும் என தெரிகிறது. முன்புறம் பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் ஆன்டெனா பேண்ட்களும் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமராக்களும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    முன்னதாக ரெட்மி 2 ப்ரோ என்ற பெயரில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி இருந்தது. இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது. இரு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பை பார்க்கும் போது இவற்றின் பாப்-அப் செல்ஃபி கேமரா வித்தியாசமாக பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது. 

    இதனால் எந்த ஸ்மார்ட்போனினை ரெட்மி உருவாக்கி வருகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    புகைப்படம் நன்றி: Weibo- Alvin
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. இது இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Pixel3a



    கூகுள் நிறுவன பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கூகுள் வலைதளத்திலேயே பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டது.

    பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் பிக்சல் 3 மாடலின் சிறிய ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. கூகுள் ஸ்டோர் வலைதளத்தில் பிக்சல் 3ஏ என்ற பெயரில் ஸ்மார்ட்போன் தவறுதலாக பட்டியலிடப்பட்டு, பின் நீக்கப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் ஸ்டோரின் போன்ஸ் (Phones) பிரிவின் கம்பேர் போன்ஸ் (Compare Phones) பிரிவில் காணப்பட்டது.

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் கோடை காலத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கூகுள் நிறுவனம் 2019 I/O நிகழ்வை மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் பலமுறை வெளியானது. அதன்படி பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இருவித பதிப்புகளில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இவற்றில் ஸ்னாப்டிராகன் 670 ரக பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் OLED டிஸ்ப்ளே, 12 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் மீண்டும் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    சியோமி ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு செயலியில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு செயலியில் பிழை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிழை பாதுகாப்பு செயலியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் மால்வேர் நிறுவுதல் மற்றும் பயனர் விவரங்களை சேகரிக்க வழி செய்ததாக கூறப்படுகிறது.

    பிழைக்கான காரணம் `கார்டு' செயலியின் அடிப்படை வடிவமைப்பு தான் என தெரிகிறது. இந்த செயலியின் பாதுகாப்பு பிழையை செக்பாயின்ட் எனும் பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்த தெரிவித்துள்ளது. பிழை மட்டுமின்றி இதன் மூலம் ஏற்படும் பாதிப்பையும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    அவாஸ்ட், ஏ.வி.எல். மற்றும் டென்சென்ட் உள்ளிட்ட ஆண்டிவைரஸ் பிராண்டுகள் ஒற்றை செயலியில் இடம்பெற்றிருந்தது தான் பிழைக்கான காரணம் என கூறப்படுகிறது. பல்வேறு ஆண்டிவைரஸ் செயலிகள் இருப்பது மட்டும் இந்த பிரச்சனைக்கு காரணமாக கருத முடியாது. 



    இரண்டு ஆண்டிவைரஸ் செயலிகளின் மென்பொருள் வளர்ச்சி அமைப்பு (SDK) ஒன்றுடன் தகவல் பரிமாற்றம் செய்ததால் சியோமி சாதனங்களில் குறியீடை செயல்படுத்த வழி செய்துள்ளன. சியோமி பாதுகாப்பு செயலியில் வழங்கப்படும் இண்டர்நெட் என்க்ரிப்ட் செய்யப்படாததால் ஹேக்கர்கள் இரண்டடுக்கு தாக்குதல்களின் மூலம் தீங்கிழைக்கும் தகவல்களை சாதனத்தில் புகுத்த முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற தாக்குதல்களில் ஹேக்கர் பயனரின் ரவுட்டர் அல்லது இணைய மேடெம்களை வைரஸ் மூலம் பாதிப்பில் ஆழ்த்துவர் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் செயலியின் இறுதி வடிவத்தை எட்ட பல்வேறு எஸ்.டி.கே. பயன்படுத்துவதால் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட காரணமாக அமைகிறது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் எஸ்.டி.கே.களில் பாதுகாப்பு பிழை இருக்கிறது என கருதமுடியாது. இதுபற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இம்முறை சீனாவின் அன்டுடு வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #OppoReno



    சீன ஸ்மார்ட்போனின் நிறுவனமான ஒப்போ விரைவில் ரெனோ எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏப்ரல் 10 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ ரெனோ விவரங்கள் சீன பென்ச்மார்க்கிங் வலைதளமான அன்டுடுவின் லீக் ஆகியுள்ளது. 

    அதன் படி ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படுகிறது. முன்னதாக ஸ்மார்ட்போன் கேஸ் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில் புதிய ரெனோ ஸ்மார்ட்போனில் நாட்ச்லெஸ் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரியவந்தது.

    அன்டுடு தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ஸ்மார்ட்போன் PCAM00 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே மாடல் நம்பர்கள் சீனாவின் TENAA வலைதளத்திலும் லீக் ஆகியிருந்தது. இதுதவிர அன்டுடு தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் 1,66,935 புள்ளிகளை ஒட்டுமொத்தமாக பெற்றிருக்கிறது. 

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை ரெனோ ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340x1080 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. 



    ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி 8GB RAM
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, 0.8um பிக்சல்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - பாஸ்ட் சார்ஜிங்

    இந்த ஸ்மார்ட்போனுடன் உயர் ரக சிறப்பம்சங்கள் கொண்ட ஒப்போ ரெனோ வேரியண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், மூன்று பிரைமரி கேமராவும், 10X ஹைப்ரிட் சூம் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: AnTuTu | TENAA
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #MotorolaOneVision



    மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை கூகுள் உறுதிப்படுத்தியிருக்கிறது. 

    மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வசதியை சப்போர்ட் செய்யும் சாதனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9610 சிப்செட் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் போன்று புதிய ஒன் விஷன் ஸ்மார்ட்போனும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் மோட்டோ ஸ்மார்ட்போனில் மென்பொருள் அப்டேட்கள் வேகமாக கிடைக்கும்.



    மோட்டோரோலா ஒன் விஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 21:9 ரக ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2520 பிக்சல் டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 9610 சிப்செட்
    - ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் (சீனாவில் மட்டும்)
    - 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா 
    - ஹோல் பன்ச் டிஸ்ப்ளே 
    - டூயல் பிரைமரி கேமரா
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டால்பி ஆடியோ

    புகைப்படம் நன்றி: TigerMobiles
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இையத்தில் லீக் ஆகியுள்ளது. #NokiaX71



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏப்ரல் 2 ஆம் தேதி தாய்வானில் நிகழ்சிக்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்வில் அந்நிறுவனம் புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 8.1 பிளஸ் மாடலுடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.  இதுதவிர புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா 6 (2019) மாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியானது. 

    இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. பென்ச்மார்க் தளத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் சோகனையில் 1455 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 5075 புள்ளிகளை பெற்றிருக்கிறது. 



    முன்னதாக நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் சீனாவில் கிளியரன்ஸ் சான்று பெற்றிருந்தது. பென்ச்மார்க் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    கடந்த ஆண்டு வெளியான நோக்கியா 6.1 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் வழங்கப்பட்டிருந்தது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனி்ல் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற நோக்கியா ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய மாடலிலும் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் தற்சமயம் 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.  

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா மாட்யூல் வழங்கப்படும் என்றும் இதில் ஒன்று 48 எம்.பி. சென்சாராக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    புகைப்படம் நன்றி: OnLeaks | 91mobiles
    ஒப்போவின் ரெனோ பிராண்டு ஸ்மார்ட்போனில் புதிய வகை பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட இருப்பது சமீபத்திய வீடியோவில் தெரியவந்துள்ளது. #OPPOReno



    ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் PCAM00 மற்றும் PCAT00 என்ற மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. சீனாவின் TENAA வலைதளத்தில் ரெனோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியானது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனோ ஸ்மார்ட்போனில் புதிய வடிவமைப்பு கொண்ட பிரத்யேக பாப்-அப் ரக கேமரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. பின்புறம் இரண்டு பிரைமரி கேமராவும், டாப் எண்ட் மாடலில் 10X லாஸ்லெஸ் சூம் வசதி வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் இரண்டு வெர்ஷன்களிலும் சோனியின் IMX586 48 எம்.பி. சென்சாரும் இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷன் 12 ஜி.பி. ரேமுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி 8GB RAM
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, 0.8um பிக்சல்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - பாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ நிறுவனம் தனது ரெனோ ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 10 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிரைமரி கேமரா கொண்ட 2019 ஐபோன் விவரங்கள் CAD ரென்டர்களில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய ஐபோனின் வடிவமைப்பு பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

    அதன்படி புதிய ஐபோன்களின் வடிவமைப்பு பார்க்க தற்சமயம் விற்பனையாகும் ஐபோன்களை போன்றே இருக்கும் என்றும், இவற்றின் மிகப்பெரும் மாற்றம் கேமராவில் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரத்தில் மூன்று வட்ட வடிவங்களும், இரு சதுரங்க வடிவ பகுதிகளில் கேமரா வழங்கப்பட இருக்கின்றன.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் ஏற்கனவே வெளியான விவரங்களுடன் ஒற்றுப்போகும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் இது புத்தம் புதிய ஐபோன் XR மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை போன்றே ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    புதிய ஐபோன் XR மாடலில் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் அடுத்த ஆண்டு முதல் அனைத்து ஐபோன்களிலும் OLED பேனல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆன்லீக்ஸ் முன்னதாக வெளியிட்ட புகைப்படத்தில் ஐபோனின் பின்புறம் சதுரங்க வடிவ பகுதியில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுவது தெளிவாக தெரிந்தது. 

    ஆப்பிள் திட்டங்களை முன்கூட்டியே சரியாக கணிப்பதில் பிரபலமாக அறியப்படும் மேகோடகாராவும், ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களுக்கென பல்வேறு வடிவமைப்புகளை சோதனை செய்வதாக தெரிவித்திருந்தார். ஹூவாய் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் நான்கு பிரைமரி கேமராக்களை வழங்கியிருக்கின்றன.

    அந்த வகையில் இந்நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த ஆப்பிள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க ஐபோன் மாடல்களின் விற்பனை சரிந்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதிக கேமராக்களை வழங்கி இந்த ஆண்டு ஐபோன் விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    புகைப்படம் நன்றி: Digit India | Mr White/Forbes
    இந்தியா முழுக்க 4ஜி சிக்னல் பரப்பளவு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. #4G



    ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் சீராக கிடைக்கவில்லை என பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை அதிரச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. 

    இந்தியாவில் 4ஜி சேவை கிடைக்கும் 50 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்து நகரங்களிலும் 4ஜி சிக்னல் பரப்பளவு குறைந்தபட்சம் 87 சதவிகிதம் என தெரியவந்துள்ளது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் 4ஜி சிக்னல் பரப்பளவு 95.3 சதவிகிதமாக இருக்கிறது.

    4ஜி சிக்னல் பரப்பளவில் இரு இந்திய நகரங்கள் 95 சதவிகித அளவை கடந்துள்ளன. அந்த வகையில் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி இரண்டாவது இடம்பிடித்திருக்கிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 50 இந்திய நகரங்கள் 4ஜி பரப்பளவில் 87 மற்றும் அதற்கும் அதிகளவு புள்ளிகளை பெற்றிருக்கின்றன. இது வரும் காலங்களில் மேலும் வளர்ச்சியடையும் என தெரிகிறது.




    தன்பாத், ராஞ்சியை தொடர்ந்து ஸ்ரீநகர், ராய்பூர் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில் பாட்னாவில் 4ஜி சிக்னல் பரப்பளவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

    ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி இந்தியாவின் பெருநகரங்கள் 4ஜி சிக்னல் பரப்பளவில் சிறு பகுதிதளை வீழ்த்த முடியவில்லை. டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் 4ஜி சிக்னல் பரப்பளவு 90 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கிறது. 

    இந்த அறிக்கையின் படி சென்னையில் 4ஜி சிக்னல் பரப்பளவு 91.1 சதவிகிதம் ஆகும். முன்னதாக ஜனவரி மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகங்களில் நவி மும்பை முதலிடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் அலகாபாத் கடைசி இடம் பிடித்துள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Google



    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

    கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன் விவரங்கள் ஆண்ட்ராய்டு கோட் மூலம் வெளியானது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கூகுளின் மிட்-ரேஞ் ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக இதே பெயர்கள் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்புக்கான கோடிங்கில் காணப்பட்டது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் 64 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. ஜெர்மனியில் இத்தகைய மெமரி வழங்கப்படும் என கூறப்படும் நிலையில், மற்ற சந்தைகளில் எவ்வளவு மெமரி வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



    இத்துடன் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வைட், பிளாக் மற்றும் ஐரிஸ் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐரிஸ் நிறம் புளு-வைலட்டில் இருந்து வைலட் நிறங்களில் கிடைக்கும் ஷேட் ஆகும். பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் விலை 450 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.36,600) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 4 ஜி.பி. ரேம், 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்படுகிறது. பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களை கூகுள் எப்போது அறிமுகம் செய்யும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    புகைப்படம் நன்றி: SlashLeaks | 91Mobiles
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung



    சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் உருவாகி இருப்பதும், இதில் 5.0 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 சிப்செட் வழங்கப்படுவதும் தெரியவந்தது.

    தற்தமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் என்ட்ரி-லெவல் கேல்கஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A260F என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ20 என்ற பெயரில் அழைக்கப்படலாம் என கூறப்பட்டது. ஏற்கனவே இதே ஸ்மார்ட்போன் SM-A205F என்ற மாடல் நம்பர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD 540x960 பிக்சல் டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட், 1 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 வழங்கப்படுகிறது. முன்புற கேமரா பற்றி எவ்வித தகவலும் இல்லை. இவற்றுடன் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், எஃப்.எம். ரேடியோ, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி ஏ2 கோர் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் என்பதால் இதில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் வழங்கப்படுகிறது. 

    புகைப்படம் நன்றி: Samsung
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. #MiMix4



    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சியோமி தனது Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், சியோமி தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனிற்கான டீசரை தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ளது. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் Mi மிக்ஸ் 4 என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் ஸ்மார்ட்போனின் மாடல் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

    முன்னதாக சியோமி Mi மிக்ஸ் ஸ்மார்ட்போன் 2016 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக கான்செப்ட் வடிவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனில் டிரை-பெசல் லெஸ் டிஸ்ப்ளே மற்றும் செராமிக் பேனல் வழங்கப்பட்டிருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் நவம்பர் 2017 இல் அறிமுகம் செய்யப்பட்டது. 



    இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் சில மாற்றங்களுடன் 2018 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், Mi மிக்ஸ் 3எஸ் மற்றும் Mi 4 பற்றி எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது.

    முந்தைய வழக்கப்படி சியோமி தனது Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வெய்போவில் வெளியாகி இருக்கும் டீசரை பார்க்கும் போது புதிய சியோமி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.

    புதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அதிகளவு மாற்றங்களுடன் ஸ்கிரீன் அளவு முந்தைய Mi மிக்ஸ் 3 மாடலை விட பெரியதாக இருக்கும் என்றும் பின்புறம் பெரிஸ்கோப் லென்ஸ் உடன் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×