search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94462"

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung



    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்தவகையில் கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. மற்றும் வைபை அலையன்ஸ் சான்று பெற்றிருக்கிறது. இதனால் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த வாரம் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ20 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    தோற்றங்களை வைத்து பார்க்கும் போது புதிய கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் பார்க்க கேல்கஸி எஸ்10இ மாடலின் விலை குறைந்த பதிப்பாக இருக்கும் என தெரிகிறது. கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0, வைபை, ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.



    இவைதவிர புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி அதிகப்படியான விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7885 சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம். அந்த வகையில் கேலக்ஸி எஸ்10, எஸ்10இ, கேலக்ஸி ஏ20 மற்றும் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன்களிடையே அதிகளவு வேறுபாடுகள் இருக்காது என தெரிகிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றி சாம்சங் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போனுடன் ஏப்ரல் 10 ஆம் தேதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம். கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி. தரத்தில் வழங்கப்பட்டது. இத்துடன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
    லெனோவோவின் மோடடோராலா நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Motorola



    மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. 

    இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மோட்டோரோலா பி30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக மோட்டோரோலா பி40 என்ற பெயரில் அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் வடிவமைப்பு பற்றிய விவரங்களும் வெளியாகியிருக்கின்றன. 

    அதன்படி மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்புறம் டிஸ்ப்ளே நாட்ச் இடம்பெறாமல், பன்ச்-ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனும் இதேபோன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது.



    இத்துடன் ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், ஸ்பீக்கர் கிரில் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில் டூயல் கேமரா செட்டப் இடம்பெற்றிருக்கிறது.

    இதில் ஒன்று 48 எம்.பி. சென்சார் என கூறப்படுகிறது. கேமரா சென்சார்களின் கீழ் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா லோகோவும் ஸ்மார்ட்போனின் பின்புறம் காணப்படுகிறது. இதனுள் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. ரெசல்யூஷனில் 1080x2560 பிக்சல் டிஸ்ப்ளே, சாம்சங் எக்சைனோஸ் 9610 சிப்செட், 3 ஜிபி. / 4 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Motorola



    மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் FHD+ மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். சிப்செட், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கிளாஸ் பேக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனுடன் மோட்டோரோலா ஒன் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.



    மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:

    - 6.24 இன்ச் 2270x1080 பிக்சல் ஃபுல் ஹெசி.டி. பிளஸ் 19.5:9 ரக டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆகடா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i கோட்டிங்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.25um பிக்சல்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2 
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத் 4.2
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் டர்போ சார்ஜிங்



    மோட்டோரோலா ஒன் சிறப்பம்சங்கள்:

    - 5.9 இன்ச் 1520x720 பிக்சல் 18.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i நானோ கோட்டிங்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன்கள் க்ளியர் வைட் மற்றும் செராமிக் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.16,999 மற்றும் ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து பயனர் விவரம் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹெச்.எம்.டி. குளோபல் பதில் அளித்துள்ளது. #HMDGlobal



    நோக்கியா ஸ்மார்ட்போன்களில் இருந்து சீனாவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது, நோக்கியா மொபைல் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஃபின்லாந்தின் தகவல் பாதுகாப்பு நிறுவனம் நோக்கியா மொபைல் போன்கள் விதிகளை மீறியதா என்பதை ஆய்வுக்கு பின் அறிவிப்பதாக தெரிவித்தது. 

    இந்த விவகாரத்தில் புதிய தகவல்களுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தகவல் திருட்டில் பயன்படுத்தப்பட்டதா என்பதற்கான பதில் இடம்பெற்றிருக்கிறது. மென்பொருள் கோளாறு காரணமாக இந்த பிழை ஏற்பட்டது, எனினும் இதில் எவ்வித தகவலும் மூன்றாம் தரப்புக்கு பகிர்ந்து கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.

    “நாங்கள் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ததில், ஒரு பங்கு நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சீன வேரியண்ட்களில் இடம்பெறும் டிவைஸ் ஆக்டிவேஷன் குறியீடுகள் இடம்பெற்றிருந்தன. இவை தவறுதலாக மூன்றாம் தரப்பு சர்வெருக்கு தகவல்களை அனுப்ப முயன்றன. எனினும், இந்த தகவல்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதில் பயனரின் தகவல்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.” என ஹெச்.எம்.டி. குளோபல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த பிழை பிப்ரவரி மாதத்திலேயே சரி செய்யப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து சாதனங்களிலும் பிழை அப்டேட் மூலம் கிட்டத்தட்ட சரி செய்யப்பட்டுவிட்டன. நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழை சரி செய்யப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ் -- சிஸ்டம் -- அபவுட் போன் -- பில்டு நம்பர் உள்ளிட்டவற்றை க்ளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும் ‘00WW_3_39B_SP03' or ‘00WW_3_22C_SP05'  என்ற பில்டு நம்பர் வந்திருந்தால் உங்களது நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே பிழை சரி செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை உங்களது மொபைல் அப்டேட் செய்யப்படவில்லை எனில், ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் -- அட்வான்ஸ்டு -- சிஸ்டம் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்து மொபைலை அப்டேட் செய்ய வேண்டும்.

    நோக்கியா 7 பிளஸ் தவிர மற்ற நோக்கியா போன்களிலும் இதேபோன்ற பிழை ஏற்பட்டதாக வெளியான தகவல்களை ஹெச்.எம்.டி. குளோபல் மறுத்திருக்கிறது. மேலும், சீனா வேரியன்ட் தவிர மற்ற நோக்கியா போன்களின் விவரங்களும் ஹெச்.எம்.டி. குளோபல் சர்வர்களில் சேமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரியல்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி 3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme



    இந்தியாவில் குறுகிய காலக்கட்டத்தில் ஒப்போவின் ரியல்மி பிராண்டு அதிக பிரபலமாகி இருக்கிறது. ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அதிக விற்பனையை பதிவு செய்திருக்கிறது. 

    ரியல்மியின் முதல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமானது. எனினும், இதுவரை ரியல்மி ஆறு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துவிட்டது. ஏற்கனவே ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகி வரும் நிலையில், விற்பனையை மேலும் அதிகப்படுத்த சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரியல்மி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் மொபைல் பொனாசா விற்பனை நாளை (மார்ச் 25) துவங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் இந்த மொபைல் பொனாசா விற்பனை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.



    சிறப்பு விற்பனையில் ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி யு1 மற்றும் ரியல்மி 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விற்பனையில் ரியல்மி 3 பேஸ் வேரியண்ட் விலை ரூ.8,999 என்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.500 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதே விற்பனையில் ரியல்மி 3 ரேடியண்ட் புளு வெர்ஷனும் விற்பனை செய்யப்படுகிறது. 

    இத்துடன் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு நாட்களுக்கு மட்டும் கிடைக்கும். இதேபோன்று ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
    பப்ஜி மொபைல் விளையாட அதிக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளதை தொடர்ந்து அதிக நேரம் விளையாடினால் எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. #PUBGMobile



    குரஜராத் அரசாங்கம் பப்ஜி மொபைல் கேம் விளையாட இந்த ஆண்டு துவக்கத்தில் தடை விதித்தது. இந்த கேம் விளையாடுவோர் அதற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் கேம் விளையாட தடை விதிப்பதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி பப்ஜி விளையாடிய பத்து பேர் சமீத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், கேம் விளையாட விதிக்கப்பட்டிருக்கும் தடையை கருத்தில் கொண்டும் இதேபோன்று மற்ற பகுதிகளில் கேம் விளையாட தடை ஏற்பட கூடாது என்பதால் இந்த கேமினை உருவாக்கியவர்கள் கேமில் சில மாற்றங்களை செய்திருக்கின்றனர். அதன்படி தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடும் போது திரையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.

    ஹெல்த் ரிமைண்டர் என அழைக்கப்படும் இந்த அம்சம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பப்ஜி விளையாட முற்படும் போது, கேமினை நிறுத்திவிடும். பின் கேம் சொல்லும் நேரத்தில் மீண்டும் விளையாட முடியும். இது தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடுவோருக்கு இடைவெளி போன்று அமைகிறது. 



    பப்ஜி விளையாடுவோரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஹெல்த் ரிமைண்டர்களை ஆக்டிவேட் செய்ய கேம் கோருகிறது. இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனதும், தொடர்ந்து ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக பப்ஜி விளையாடினால் கேம் தானாக நிறுத்தப்பட்டு விடுகிறது. 

    சிலருக்கு இந்த இடைவெளி இரண்டு மணி நேரங்களிலும் ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த இடைவெளியை கடக்கும் வழிமுறை பற்றி எவ்வித தகவலும் இல்லை. பப்ஜி விளையாடுவோர் மத்தியில் ஹெல்த் ரிமைண்டர் அம்சத்திற்கு கலவையான விமர்சங்கள் எழுந்துள்ளன. 

    சிலர் திடீரென கேம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 18 வயத்துக்கும் அதிகமானவர்களுக்கும் ரிமைண்டர் வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த அம்சம் எதிர்ப்புக்குரல் எழுப்புவோருக்கு சற்று ஆறுதலான விஷயமாகவே இருக்கும்.

    ஏற்கனவே பப்ஜி கேம் தொடர்பான கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக பப்ஜி உருவாக்கிய டென்சென்ட் மொபைல்ஸ் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்வதாகவும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. இதில் புதிய ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. #OnePlus7



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் 360-டிகிரி வீடியோ லீக் ஆகியுள்ளது. ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் 7 நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பிரைமரி கேமரா செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் மூன்று: பிளாக், பர்ப்பிள் மற்றும் கிரே நிறங்களில் உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் சரியாக அறியப்படவில்லை என்றாலும், இதில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவதால் ஆல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.



    இத்துடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படும் என்றும், புகைப்படங்களை எடுக்க 40 எம்.பி. + 20 எம்.பி. மற்றும் 5 எம்.பி. என மூன்று வித கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    மெமரியை பொருத்தவரை ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட்போனினை சக்தியூட்ட 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்படலாம். புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படாது என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
    சியோமியின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Xiaomi



    சியோமியின் Mi ஏ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி எட்டு மாதங்களாகி விட்ட நிலையில், சியோமியின் இரண்டாவது ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.

    ஆர்சிட் ஸ்பிரவுட் எனும் குறியீட்டு பெயரில் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக எக்ஸ்.டி.ஏ. மூலம் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி இரண்டு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவை பேம்பு ஸ்பிரவுட் மற்றும் காஸ்மோஸ் ஸ்பிரவுட் என இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் பிக்சிஸ் என்ற பெயரில் உருவாக்கி வருகிறது. இது இரு ஸ்மார்ட்போன்களின் சீன பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.


    கோப்பு படம்

    முன்னதாக Mi ஏ1 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருந்தது. புதிய ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே பல்வேறு சியோமி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டிருக்கிறது.

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 6757 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் டாட் ரக நாட்ச் வழங்கப்படலாம் என்றும் இதில் AMOLED டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    விவோ நிறுவனம் இந்தியாவில் வி15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #VivoV15



    விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனினை தொடர்ந்து விவோ நிறுவனம் இந்தியாவில் வி15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய வி15 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ இன்-ஸ்கிரீன் LCD கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ P70 சிப்செட், முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமராவும், பின்புறம் 12 எம்.பி. டூயல் பிக்சல் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 8 எம்.பி. 120-டிகிரி வைடு ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ வி15 மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 
    மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி. வசதி வழங்கப்பட்டிருக்கிறது.



    விவோ வி15 சிறப்பம்சங்கள்:

    - 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
    - 900MHz ARM மாலி-G72 MP3 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9
    - டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78
    - 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
    - 8 எம்.பி. ஏ.ஐ. 120-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, சாம்சங் ISOCELL GD1 சென்சார், f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் விவோ வி15 ஸ்மார்ட்போன் ராயல் புளு, ஃபுரோசன் பிளாக் மற்றும் கிளாமர் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.23,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் விவோ வி15 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா ஸ்டோர், அமேசான், ப்ளிப்கார்ட், பேடிஎம் மால் மற்றும் இதர ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வலைதளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விற்பனை ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்குகிறது.

    அறிமுக சலுகைகள்:

    தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக்
    ஸ்மார்ட்போன் வாங்கும் முதல் ஆறு மாதங்களுக்குள் ஒருமுறை ஸ்கிரீனை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வசதி
    12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி
    பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.2000 வரை தள்ளுபடி
    ஜியோ பயனர்களுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது 
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nokia9PureView



    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ஐந்து கேமரா சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. 

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் வீடியோவினை நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் மூன்று மோனோக்ரோம் மற்றும் இரண்டு ஆர்.ஜி.பி. சென்சார்களை கொண்டிருக்கிறது.



    நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 9 பியூர் வியூ மொபைல் வெவ்வேறு கோணங்களில் காணப்படுகிறது. இத்துடன் விரைவில் நோக்கியா 9 கொண்ட தலைசிறந்த புகைப்படங்களை படமாக்க தயாராகுங்கள் என்ற வார்த்தை பதிவிடப்பட்டிருக்கிறது.

    சர்வதேச சந்தையில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.48,300) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.

    எனினும், இந்திய விலை மற்றும் விற்பனை பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. இந்தியாவில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    - வயர்லெஸ் சார்ஜிங்
    சியோமியின் போகோ பிராண்டு எஃப்1 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.2000 குறைக்கப்படுகிறது. #PocoF1



    சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் விலை நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. அதன்படி போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை குறுகிய காலத்திற்கு குறைக்கப்படுகிறது. அந்த வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ.2,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

    தற்சமயம் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ அறிவித்திருக்கும் ரூ.2000 தள்ளுபடி மார்ச் 25 ஆம் தேதி முதல் துவங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இந்த தேதிகளில் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை வழக்கமான விலையில் விற்பனை செய்யப்படும். முன்னதாக 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல்கள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 



    போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. சிறப்பு விற்பனையின் போது போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சியோமியின் துணை பிராண்டு போகோ இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.23,999 விலையில் அறிவிக்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீல் புளு, கிராஃபைட் பிளாக், ரோஸோ ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. #motog7



    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன்கள் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    கடந்த மாதம் அறிமுகமான மோட்டோ ஜி7 சீரிஸ் இல் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    சமீபத்தில் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மோட்டோ ஜி7 வெளியீட்டு தேதியை மோட்டோரோலா தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது.



    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மார்ச் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அறிவிப்பை சிறிய டீசர் வீடியோவுடன் மோட்டோரோலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது. 

    மோட்டோ ஜி7 மாடலில் 6.24 இன்ச் 1080x2270 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க டூயல் லென்ஸ் 12 எம்.பி. மற்றும் 5 எம்.பி. பிரைமரி கேமரா, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 
    ×