search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94500"

    சாம்சங் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போன் சீரிஸ் விற்பனை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யவே இல்லை. இந்த ஆண்டுக்கு பதில் 2022 ஆம் ஆண்டு புதிய நோட் சீரிஸ் மாடலை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தென் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிரந்தரமாக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. நோட் சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மீது கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

     கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்

    2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டத்தில் இருந்து கேலக்ஸி நோட் சீரிஸ் நீக்கப்பட்டு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது என தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    2019 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் 1.27 கோடி நோட் சீரிஸ் மாடல்களை விற்பனை செய்து இருந்தது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 97 லட்சம் நோட் சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டன. 2022 ஆண்டு கேலக்ஸி இசட் சீரிஸ் விற்பனை இலக்கு 1.3 கோடி யூனிட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் சிறப்பான செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் இசட் ப்ளிப் 3 மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில், சாம்சங் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மற்றும் இசட் ப்ளிப் 4 மாடல்களின் அம்சங்கள் தற்போதைய மாடல்களில் இருப்பதை விட மேம்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     கேலக்ஸி இசட் ப்ளிப் 3

    புதிய கேலக்ஸி இசட் போல்டு 4 மாடலில் மேம்பட்ட அண்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இரு செல்பி கேமராக்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஒரு சென்சார் டிஸ்ப்ளேவின் மேல் மற்றொரு சென்சார் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் எடை முன்பை விட குறைவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி என இரு வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை புது சாம்சங் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், 8 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது.

    இத்துடன் 50 எம்பி பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ12

    சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே 
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் 
    - மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு 
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கோர் 3.1
    - டூயல் சிம் 
    - 50 எம்பி பிரைமரி கேமரா
    - அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
    - டெப்த் / மேக்ரோ கேமரா 
    - 8 எம்பி செல்பி கேமரா 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனினை (6ஜிபி+128ஜிபி) இந்தியாவில் ரூ. 21,999 துவக்க விலையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி+128ஜிபி மாடல் வெளியாகி இருக்கிறது. புதிய வேரியண்ட் விலை ரூ. 23,499 ஆகும். 

    இந்த வேரியண்ட் ஆசம் பிளாக், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ32

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ32 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3, புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய சாம்சங் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா அம்சங்கள் பற்றிய புது தகவல்கள் ட்விட்டரில் இடம்பெற்று இருக்கிறது.

    அதன்படி புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் மேம்பட்ட 108 எம்பி கேமரா மோட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டு உருவாகிறது. இது ஐசோசெல் ஹெச்.எம்.4 அல்லது ஐசோசெல் ஹெச்.எம்.5 சென்சார்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

     சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ்

    மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்றே வளைந்து இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை விட புதிய ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் அதிகளவு வளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2200 சிப்செட், ஆர்.டி.என்.ஏ. 2 கிராபிக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான மாடல்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஜாக் மற்றும் பட்டன்கள் நீக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மற்ற ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் சமீபகாலங்களில் நீக்கப்படும் பல்வேறு அம்சங்கள் இதுவரை வெளியான கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன.



    ஸ்மார்ட்போன்களில் மெமரியை நீட்டிக்கும் வசதி அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது. கேலக்ஸி நோட் 10 மாடலில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவது அந்நிறுவன வாடிக்கையாளர்களை பாதிக்கலாம். மற்றபடி ஸ்மார்ட்போனின் பட்டன்களை பொருத்தவரை பவர் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் போன்றவை நீக்கப்படும் என தெரிகிறது.

    ஏற்கனவே பலமுறை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இருவித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவை கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ரோ என அழைக்கப்படும் என தெரிகிறது.

    இதன் ஸ்டான்டர்டு மாடலில் 6.28 இன்ச் டிஸ்ப்ளேவும், ப்ரோ மாடலில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 சீரிசின் முன்புற பேனல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதன் ஒற்றை செல்ஃபி கேமரா பன்ச் ஹோல் முறையில் டிஸ்ப்ளேவின் மேல்புற மத்தியில் பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.



    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை 2019 ஆண்டின் முதல் காலாண்டில் 2.7 சதவிகிதம் சரிவை சந்தித்ததாக கார்ட்னர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ள போதும் ஹூவாய் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பதாக கார்ட்னர் அறிவித்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    2019 முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் 19.2 சதவிகித பங்குகளுடன் முதலிடம் பிடித்து இருப்பதாக கார்ட்னர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் ஐந்து இடங்களை பிடித்த நிறுவனங்கள் பட்டியலில் ஹூவாய் நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



    குறைந்தளவு புதிய தொழில்நுட்பங்களும், அதிகளவு விலை நிர்ணயிக்கப்பட்டதால் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை சரிந்துள்ளது. 2019 முதல் காலாண்டில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விற்பனை முறையே 15.8 சதவிகிதம் மற்றும் 3.2 சதவிகிதம் குறைந்துள்ளது.

    ஐரோப்பா மற்றும் சீனாவில் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இரு நாடுகளில் ஹூவாய் ஸ்மார்ட்போன் விற்பனை முறையே 69 சதவிகிதம் மற்றும் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சீனாவில் மட்டும் ஹூவாய் நிறுவனம் 29.5 சதவிகித பங்குகளை கொண்டிருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டீசரை சாம்சங் தனது அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது.

    இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா உள்ளிட்டவை புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. 



    சாம்சங் எம் சீரிசில் நான்காவது மாடலாக கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    இத்துடன் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் சாம்சங் தனது வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.



    ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படலாம்.

    இதுவரை சாம்சங் வெளியிட்ட எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் வழங்கப்பட்ட நிலையில், இவற்றுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கும் பணிகளை சாம்சங் துவங்கி இருக்கிறது. 



    முதற்கட்டமாக கேலக்ஸி எம்30 மாடலுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இரு ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் இந்த அப்டேட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தயை கேலக்ஸி எம் மாடல்களில் எக்சைனோஸ் பிராசஸர்கள் வழங்கப்பட்ட நிலையில், ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் வெளியாக இருக்கும் முதல் கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எம்40 இருக்கும். இத்துடன் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 128 ஜி.பி. மெமரி மற்றும் வைபை 802.11ac. கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.



    சாம்சங் நிறுவனம் தனது கேல்க்ஸி ஏ50 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.19,990 மற்றும் ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கேலக்லஸி ஏ 50 ஸ்மார்ட்போனின் இருவித வேரியண்ட்களின் விலையில் ரூ.1500 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் ரூ.1500 விலை குறைக்கப்பட்டு ரூ.18,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.21,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9610 10 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இவற்றுடன் பிக்ஸ்பி விஷன், பிக்ஸ்பி வாய்ஸ், பிக்ஸ்பி ஹோம் மற்றும் பிக்ஸ்மி ரிமைன்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்க 25 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா, லைவ் ஃபோகஸ் மற்றும் 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் 64 எம்.பி. கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் மார்ச் மாதத்தில் 32 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா கொண்ட கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்சமயம் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70எஸ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ70 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்றும் இதில் 64 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ70எஸ் மாடலில் ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



    இது சாம்சங்கின் 48 எம்.பி. ISOCELL பிரைட் GW1 போன்றே பிக்சல்-மெர்ஜிங் டெட்ராசெல் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதை கொண்டு இந்த கேமரா குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை தெளிவாக வழங்க முடியும். இதில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து புகைப்படங்கள் அதிக தெளிவாக மாற்றப்படுகின்றன.

    இத்துடன் இந்த சென்சாரில் டூயல் கன்வெர்ஷன் கெயின் எனும் அம்சம் இருக்கிறது. இது சென்சார் பெறும் வெளிச்சத்தை எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றி ஆட்டோ-ஃபோகஸ் தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படவைக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சீர் செய்யப்பட்ட வெர்ஷன் புதிய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து விற்பனையை தள்ளிவைத்தது. ஸ்மார்ட்போனை மடிக்கும் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை கண்டறியப்பட்டு விட்டதாக சாம்சங் நிறுவன அதிகாரி ஏற்கனவே தகவல் வழங்கிய நிலையில், தற்சமயம் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் புதிய வெளியீட்டு விவரம் வெளியாகி இருக்கிறது.

    அதன்படி சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் வெளியிடலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தென்கொரியாவில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் புதிய வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய கேலக்ஸி ஃபோல்டு அமெரிக்காவில் மூன்று நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஃபோல்டு மாடலில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய அந்நிறுவனம் ஸ்மார்ட்போன் ஃபிரேம் அடியில் பாதுகாப்பான பிளாஸ்டிக் கோட்டிங் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.



    கேலக்ஸி ஃபோல்டு மாடலின் ஹின்ஜ் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய கீழ் பகுதியில் இருந்த இடைவெளி குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இரு டிஸ்ப்ளேக்களின் இடையில் தூசு போன்றவை நுழையாது. இதனால் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேல்கஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அந்நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2019 விழாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதே நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருப்பதையொட்டி சாம்சங் அங்கு புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

    முன்னதாக 2018 ஆம் ஆண்டு கேலக்ஸி நோட் ஒலிம்பிக் எடிஷன், 2014-இல் கேலக்ஸி நோட் 3 ஒலிம்பிக் எடிஷன், 2016-இல் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஒலிம்பிக் எடிஷன், கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 8 விண்டர் ஒலிம்பிக் கேம்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்திருக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் டோக்யோ ஒலிம்பிக்ஸ் சின்னம் பேக் கவரில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரிசம் வைட் நிறம் கொண்டிருக்கிறது. வழக்கமான கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலை விட ஸ்பெஷல் எடிஷன் மாடலில் புதிய பேக்கேஜ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் விசேஷ வடிவைப்பு கொண்ட கேலக்ஸி பட்ஸ் இயர்போன்களும் வழங்கப்படுகிறது.



    மற்றபடி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் டைனமிக் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    இத்துடன் 12 எம்.பி. டூயல் பிக்சல் மற்றும் டூயல் அப்ரேச்சர் கொண்ட பிரைமரி கேமரா சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் விலை 1000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.70,420) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×