search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்பன்"

    ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந்தேதி வரை படி பூஜைகளும், 26-ந்தேதி ஐயப்பன் வெள்ளிரத ஊர்வலமும் நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், அபிஷேகம் நடக்கிறது. சபரிமலை பிரதான தந்திரி டி.கே.எம்.எம்.மகேஷ்மோகளு குழுவினரால் பிரம்மோற்சவ பூஜைகள் நடைபெற உள்ளன.

    27-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கொடி இறக்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 1-ந்தேதி மாலை 6 மணிக்கு 18-ம்படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

    அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மண்டல மஹோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மஹோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான மண்டல மஹோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 9.15 மணிக்கு தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் அர்ச்சகர்கள் கொடியை ஏற்றினார்கள்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நாராயண பாராயணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பினு, ஆபரண பெட்டி வரவேற்புக் குழு தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.அரிகரன் மற்றும் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை கருப்பன் துள்ளல் நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது ஏன் என்று பார்க்கலாம்.
    சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி, காட்டுக்கு அனுப்பிய ராணியும், அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர்.

    அந்த நாட்களில், அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல், உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது. அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே, அந்த 41 நாட்கள் அமைந்தன.

    கடைசியில், காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே, ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது.

    பின்னர் அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும்.
    பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது. அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையைத் தொடங்குவார்கள். இதன்படி ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும். இதன்படி செய்ய அவர் கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட்டால்தான் மகர ஜோதி தரிசனத்துக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இடையில் கோவிலுக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட மகர விளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும். இதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். இதனை ‘திரிகரணசுத்தி’ என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது. பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப்பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.
    தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் விரத வழிபாடு.
    ஒவ்வொரு இறை அவதாரமும் வடிவமும் அவற்றின் பின்னணியும் கூர்ந்து கவனிக்கபட வேண்டியவை. எல்லாவற்றிற்கும் காரண காரியம் உண்டு. சிலசமயங்களில் நமக்கு புரியாமல் போவதால் அவற்றின் மகிமை தெரியாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றின் காரணங்களும் அந்த வழிபாட்டு முறையின் சிறப்புகளும், அவற்றின் அவசியமும் நாம் அறியாமல் வாழ்வது நமக்கு தான் இழப்பு.

    நம் இறந்த கால வாழ்க்கையில் (முன் பிறப்பும், இந்த பிறப்பும் உட்பட) நாம் செய்த அனைத்து செயல்களுக்கும் ஏற்றவாறு நமது நிகழ்காலம் அமைகிறது. சுருக்கமாக சொன்னால், இன்று நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் அதுவே காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா! இதை நம் முன்னோர்கள் அழகாக ஒரே வார்த்தையில் கர்மா என்று குறிப்பிடுகின்றனர்.

    நம் கர்மவினையின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு அல்லல் படும்போது சில சமயங்களில் இந்த வலியும் வேதனையும் துரிதமாக முடிந்து விட்டால் நிம்மதி என்று நமக்கு தோன்றும். தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் வழிபாடு.

    இந்த பின்னணியில் தான் ஐயப்பன் வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளன. இந்த பாதையை தேர்ந்தெடுத்ததற்கு அடையாளமாக, குருவின் கருணையோடும், வழிகாட்டுதலுடனும் மாலை அனிந்து, உணவை குறைத்து, புலால் உணவு நீக்கி, கள்ளுண்ணாமை பின்பற்றி, விரதம் முடியும் வரை பிரம்மச்சர்யம் கடைபிடித்து, போதை வஸ்துக்களை தவிர்த்து - எல்லாம் நம் கண் முன்னே இருந்தும் ஒழுக்கமாக வாழும் கலை. அவ்வளவு ஏன்? காலில் செருப்பு அணியாமல், சிகை அல்லங்காரம் கூட இல்லாமல், கருப்பு உடை அணிந்து, வயது வித்யாசம் பாராமல் அனைவரையும் மரியாதையுடன் 'சாமி' என அழைத்து, அரை பட்டினியில் ஒரு பிச்சைக்காரனை போல் வாழ்ந்து நம் கர்ம வினையை தீர்க்கும் ஒரே அற்புத மார்க்கம. விரதம் முடிக்க காடு மலை தாண்டி நடந்து சபரி மலை சென்று ஐயனை தரிசித்து வாழ்க்கையில் மீள்வதே நோக்கம்.

    முத்தாய்ப்பாக - நெய் தேங்காய் என்ற ஒரு விஷயம். தேங்காயில் உள்ள ஓடே நம் எலும்புகள், நார் நமது நரம்புகள், வெள்ளை தேங்காய் நம் தசை, நீர் நமது குருதி. நாம் திருந்தி தெளிந்ததற்கு அடையாளமாக நெய். பாலிலிருந்து, தயிராகி பின் நெய்யாக மாறுவது நம் ஆத்ம தரிசனம். பாலில் நேரடியாக நெய் தெரியாது. பல கட்டங்களுக்கு பிறகு திரிந்து மாறி நெய்யாகிறது என்பதே தத்துவம். அந்த நெய்யும் இறுதியாக இறைவன் மீது அபிஷேகமாகிறது. நம் ஜீவாத்மா இறைவனை அடைவதே இந்த தத்துவம். அனால் சுமந்து சென்ற தேங்காய் கோவில் வாசலில் ஓமகுண்டத்தில் தீக்கிரையாகிறது. அது நம் உடலின் நிலையாமையை உணர்த்துவது.

    இறுதியாக, இந்த வழிபாட்டு முறை கர்ம வினையை கழுவுவதற்கு மட்டும் அல்ல. வருங்காலத்தில் ஒழுக்கமாக வாழவும் ஒரு பயிற்சியே. கர்ம வினை தீர தீர, ஒழுக்கம் மேலோங்க சுபீட்சமான வாழ்க்கை கிட்டும். இதுவே சிறந்த தவமாகும்.
    ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை இருவேளையிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பனின் 108 சரணத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
    ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
    ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
    ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
    ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
    ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
    ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
    ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
    ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா
    ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
    ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
    ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
    ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
    ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
    ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
    ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
    ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
    ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
    ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
    ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
    ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
    ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

    ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
    ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
    ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
    ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
    ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
    ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
    ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
    ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
    ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
    ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
    ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
    ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
    ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
    ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
    ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
    ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
    ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
    ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
    ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
    ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
    ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
    ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

    ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
    ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
    ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
    ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
    ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
    ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
    ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
    ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
    ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

    ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
    ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
    ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
    ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
    ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
    ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
    ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
    ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
    ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
    ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
    ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
    ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
    ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
    ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
    ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
    ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
    ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

    ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
    ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
    ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
    ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
    ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
    ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
    ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
    ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
    ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
    ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

    ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா! 
    மாலை அணிந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழி நடைசரணத்தை தினமும் பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
    சுவாமியே........ அய்யப்போ     
    அய்யப்போ..... சுவாமியே
    சுவாமி சரணம்..... அய்யப்ப சரணம்
    அய்யப்ப சரணம்.... சுவாமி சரணம்
    தேவன் சரணம்..... தேவி சரணம்
    தேவி சரணம்..... தேவன் சரணம்
    ஈஸ்வரன் சரணம்.... ஈஸ்வரி சரணம்
    ஈஸ்வரி சரணம்.... ஈஸ்வரன் சரணம்
    பகவான் சரணம்.... பகவதி சரணம்
    பகவதி சரணம்... பகவான் சரணம்
    சங்கரன் சரணம்.... சங்கரி சரணம்
    சங்கரி சரணம்.... சங்கரன் சரணம்
    பள்ளிக்கட்டு.... சபரிமலைக்கு
    சபரிமலைக்கு.... பள்ளிக்கட்டு
    கல்லும் முள்ளும்...காலுக்கு மெத்தை
    காலுக்கு மெத்தை... கல்லும் முள்ளும்
    குன்டும் குழியும்... கண்ணுக்கு வெளிச்சம்
    கண்ணுக்கு வெளிச்சம்... குன்டும் குழியும்
    இருமுடிக்கட்டு...... சபரிமலைக்கு
    சபரிமலைக்கு.... இருமுடிக்கட்டு
    கட்டும் கட்டு.... சபரிமலைக்கு
    சபரிமலைக்கு...... கட்டும் கட்டு
    யாரை காண.... சுவாமியை காண
    சுவாமியை கண்டால்... மோக்ஷம் கிட்டும்
    எப்போ கிட்டும்... இப்போ கிட்டும்
    தேக பலம் தா... பாத பலம் தா
    பாத பலம் தா... தேக பலம் தா
    ஆத்மா பலம் தா... மனோ பலம் தா
    மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
    நெய் அபிஷேகம்.... சுவாமிக்கே
    சுவாமிக்கே... நெய் அபிஷேகம்
    பன்னீர் அபிஷேகம்..... சுவாமிக்கே
    சுவாமிக்கே... பன்னீர் அபிஷேகம்
    அவலும் மலரும்...... சுவாமிக்கே
    சுவாமிக்கே... அவலும் மலரும்
    சுவாமி பாதம்... ஐயப்பன் பாதம்
    ஐயப்பன் பாதம்... சுவாமி பாதம்
    தேவன் பாதம்... தேவி பாதம்
    தேவி பாதம்... தேவன் பாதம்
    ஈஸ்வரன் பாதம்... ஈஸ்வரி பாதம்
    ஈஸ்வரி பாதம்... ஈஸ்வரன் பாதம்
    சுவாமி திந்தக்க தோம் தோம்..... அய்யப்ப் திந்தக்க தோம் தோம்.. 
    சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும் போது 18 வழிபாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    1. பதினெட்டு படி நெருங்கியதும், படிக்கு வலதுபுறம் சுவரில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். உடன் நமது மனதில் ஐயனிடம் பிரார்த்திப்பதை மனதில் வேண்டிக்கொண்டு 18 படிகளையும் தொட்டு வணங்கிக்கொண்டே 18 படி ஏற வேண்டும்.

    2. தீபஸ்தம்பம் (கொடிமரத்தை) வணங்கி பின் நிதானமாக வரிசையில் நின்று அகிலாண்ட கோடி நாயகன் ஐயன் ஐயப்பனை திவ்ய தரிசனம் செய்து மனமுருக வேண்ட வேண்டும். நமது குறைகளை கூறி நிவர்த்திக்க வேண்ட வேண்டும்.

    3. சன்னிதானத்தின் மேலேயுள்ள கன்னிமூல கணபதியை வலம் வந்து கபற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும்.

    4. வேண்டுதல் இருந்தால் மணி கட்ட வேண்டும்.

    5. கணபதி கோவிலுக்கு அருகில் உள்ள நாகராஜா (ஸ்ரீசண்முக சுவாமி சன்னதியை) வணங்கி பன்னீர் சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றை வைத்து சுவாமியை வணங்க வேண்டும்.

    6. சன்னிதானத்தில் இருந்தே நடைமேடை வழியாக மஞ்சமாதா கோவில் அடைந்து முதலில் கருப்ப சாமியை வணங்கி, அவல், நெல் போரி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்த பொரி காணிக்கை இங்கு வைக்க வேண்டும். கருப்பசுவாமிக்கு திராட்சை பழம், கற்கண்டு, கற்பூரம் காணிக்கை வைத்து வணங்க வேண்டும்.

    7. சர்ப்ப தோஷம் சத்ரு தோஷம் ஏற்படாமல் இருக்க அங்குள்ள புள்ளுவன்களிடம் அமர்ந்து பாட்டு படிக்க வேண்டும்.

    8. மணிமண்டபம் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

    9. அடுத்து நாகராஜா,, நாகயட்சி ஆகிய தெய்வங்களுக்கு கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.

    10. நவக்கிரகங்களை 9 முறை சுற்றி வந்து கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.

    11. மலை தெய்வங்களை (காட்டு தேவதைகளை) மஞ்சள் பொடி தூவி வணங்கி வலம் வர வேண்டும்.

    12. மஞ்சமாதா எழுந்தருளியுள்ள கோவிலை முழுத் தேங்காயை கீழே உருட்டி கோவிலை வலம் வர வேண்டும். இந்த மாளிகைப்புரத்தம்மா சன்னதியில் அம்மனுக்கு பட்டு துண்டு, மஞ்சள் பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு வைத்து வணங்க வேண்டும். வணங்கிய பின் அம்மனை தொழுதபடியே முதுகை கோவில் பின் பக்கம் பார்த்த நிலையில் படி இறங்கி தங்குமிடம் செல்ல வேண்டும்.

    13. வாபர் கோவிலில் சென்று நெல் மிளகு ஊதுபத்தி வைத்து வணங்க வேண்டும்.

    14. அவரவர் இருமுடி கட்டுப் பிரித்து குருசாமி மூலம் நெய் தேங்காய் உடைத்து மஞ்சமாதா கோவிலுக்கு அருகில் கிடைக்கும் நெய் அபிஷேக சீட்டு பெற்று ஐயன் பூதநாதனுக்கு நம் நெய்யை அபிஷேகம் செய்து தரும் நெய்யை பெற்று வர வேண்டும். டப்பாவில் நெய்யை அடைத்துக் கொள்ள வேண்டும்.

    15. அரவணப்பாயாசம் அப்பம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

    16. திரும்ப செல்லும் போது (அனுமதித்தால் 18 படி ஐயப்பனை பார்த்தபடி இறங்கலாம்). 18 படிக்கு அருகில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

    17. ஓமகுண்டத்தில் ஒரு தேங்காய் மூடி போட வேண்டும்.

    18. பம்பை திரும்ப வேண்டும்.
    திருமணத் தடை இருப்பவர்கள் கேரள மாநிலம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சாஸ்தாவான ஐயப்பனை வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.
    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார். திருமணத் தடை இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.

    தல வரலாறு :

    பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோவில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய ஐந்து இடங்களில் சாஸ்தாவிற்கான கோவில்களை நிறுவியிருக்கிறார். அவற்றில் ஆரியங்காவு சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருக்கிறது என்று தல வரலாறு கூறுகிறது.

    ஐயப்பன் திருமணம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்று, இந்தக் கோவிலில் இருக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரியாக இல்லாமல், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தவராகக் காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்பனுக்குத் திருமணம் நடந்தது பற்றி சுவையான கதை ஒன்று இருக்கிறது.

    மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெசவு செய்து கொண்டு போய் விற்பனை செய்து வந்தனர். அப்படிச் சென்ற வணிகர்களில் ஒருவர், ஒரு முறை தனது மகள் புஷ்கலையையும் உடன் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சென்றார். அவருக்கு மகள் புஷ்கலையைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்வது மிகவும் கடினாமக இருந்தது.

    அவர்கள் இருவரும் ஆரியங்காவு கணவாய்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். புஷ்கலை அதற்குள்ளாகவே மிகவும் களைத்துப் போயிருந்தார். இனி அவளை திருவிதாங்கூருக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று நினைத்த அந்த வணிகர், அங்கிருந்த சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரைச் சந்தித்து, தான் திருவிதாங்கூர் சென்று திரும்பி வரும் வரை, தனது மகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்துச் சென்றார்.

    சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டில் தங்கிய புஷ்கலை, சாஸ்தா கோவிலுக்குத் தேவையான சில பணிகளைச் செய்து வந்தார். நாளடைவில், அவளது மனத்தில் அந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தாவையேத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது.

    இந்நிலையில், புஷ்கலையின் தந்தை திருவிதாங்கூர் சென்று துணிகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் அவரை, மதம் பிடித்த யானை ஒன்று விரட்டத் தொடங்கியது. அதனைக் கண்டு பயந்த அவர் வேகமாக ஓடத் தொடங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன், அந்த மத யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான்.

    தன்னைக் காப்பாற்றிய இளைஞனுக்கு நன்றி தெரிவித்த அவர், அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அந்த இளைஞன், ‘உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு, வணிகர் ஆரியங்காவு வந்து சேர்ந்தார்.

    ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்ற வணிகருக்கு, கோவில் கருவறையிலிருந்த சாஸ்தாவின் உருவம், காட்டில் மதயானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞரின் உருவமாகத் தெரிந்தது. தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியே சாஸ்தா, காட்டிற்குள் மதம் பிடித்த யானையைக் கொண்டு, நம்மை ஓடச் செய்து, காப்பாற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

    அதன் பிறகு வணிகர், அந்தக் கோவில் அர்ச்சகரிடம் காட்டில் நடந்த கதையைச் சொல்லித் தன் மகள் புஷ்கலையை சாஸ்தாவிற்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னார். அர்ச்சகரும், கோவில் உயர் அதிகாரிகளுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து வரச் செய்தார். வணிகரும், தனது ஊரான மதுரையிலிருந்து தனது உறவினர்களை வரச் செய்தார்.

    அதன் பிறகு, சாஸ்தாவிற்கும் புஷ்கலைக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையை மனைவியாக ஏற்றுத் தன்னுடன் ஆட்கொண்டார் என்று இக்கோவிலில் ஐயப்பன், புஷ்கலை திருமணம் நடந்த கதை மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது.

    புஷ்கலையுடன் ஆரியங்காவு ஐயப்பன்

    கோவில் அமைப்பு :

    கேரளக் கட்டுமான அமைப்புடன் அமைந்த இக்கோவில் கருவறையில், ஐயப்பன் வலது காலைக் கீழே ஊன்றியும், இடது காலைச் சிறிது உயர்த்தியும் வைத்து அமர்ந்த நிலையில் அரசர் தோற்றத்தில் இருக்கிறார். இவருக்கு வலது புறம் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபுறம் புஷ்கலை நின்ற நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில், நாகராஜர், கணபதி, வலியக்கடுத்தா கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோரும் துணைக் கடவுள்களாக இருக்கின்றனர்.

    வழிபாடுகள் :

    இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில், சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இங்கு ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதத்தில் ஐயப்பன் - புஷ்கலை திருமண விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் பாண்டியன் முடிப்பு எனப்படும் நிச்சயதார்த்த நிகழ்வும், தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வும், சமபந்தி விருந்தும் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.

    திருமணத்தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் சாஸ்தாவை வழிபட்டு வேண்டினால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    ஆரியங்காவு பெயர்க்காரணம் :

    ‘ஆரியன்’ என்ற சொல்லுக்கு ‘உயர்ந்தவன்’ என்று பொருள். ‘காவு’ என்றால் ‘சோலை’ என்று பொருள். ‘உயர்ந்தவன் குடியிருக்கும் சோலை’ என்ற பொருளில், இவ்விடம் ‘ஆரியன் காவு’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆரியங்காவு’ என்று மருவி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவிலும், புனலூர் நகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரியங்காவு உள்ளது. இங்கு செல்ல மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதி இருக்கிறது.

    அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது என்று தோணி கபடி குழு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆரி தெரிவித்தார். #DhoniKabadiKulu #Aari
    கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது:-

    நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கு எங்கு இருந்தோ நிவாரண உதவிகள் குவிகின்றன.

    ஆனால் சென்னையைத் தாண்டி மற்ற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று கஜா புயலால் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.



    அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது.

    சினிமாவை வாழவைக்க வேண்டும். திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #DhoniKabadiKulu #Aari

    ஐயப்பனை தரிசிக்கும் வரை மாலையை கழற்ற மாட்டோம் என்று சபரிமலைக்குச் செல்ல கேரள அரசிடம் பாதுகாப்பு கேட்ட 3 இளம்பெண்கள் கூறினர். #Sabarimala #YoungWomen
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது கோவிலின் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று ஐயப்ப பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு 2 முறை கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில் மண்டல பூஜை விழாவுக்காக கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. இனி மண்டல பூஜை நடக்கும் டிசம்பர் 27-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். இந்த கால கட்டத்தில் கோவிலுக்குச் செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

    இதனால் சபரிமலையில் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என போலீசார் கருதினர். எனவே சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். போலீஸ் தடையையும் மீறி சபரிமலையில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    சபரிமலைக்கு வந்த புனேவைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் பீதிக்கு ஆளான பெண்கள் பலரும் இதுவரை சபரிமலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த், அனிலா, கொல்லத்தைச் சேர்ந்த தன்யா ஆகிய 3 பெண்களும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று நாங்கள் 3 பேரும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளோம். இந்த தகவல் வெளியானதும் எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. வெளியில் நடமாடவும் பயமாக இருக்கிறது.

    ஆனால் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை. எனவே சபரிமலைக்குச் செல்ல அரசாங்கம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களால் இப்போது எங்களால் அங்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறி பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் நிலை வர வேண்டும். அப்படி வந்தால் அது எதிர்கால பெண்களுக்கு பலன் உள்ளதாக அமையும்.

    இப்போது கோவிலுக்குச் செல்ல அணிந்துள்ள மாலையை கோவிலுக்கு சென்ற பின்பு தான் அகற்றுவோம். அதுவரை மாலையை கழற்ற மாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  #Sabarimala #YoungWomen


    கேரளாவுக்கு மீண்டும் வந்து கொரில்லா பாணியில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன் என்று திருப்பி அனுப்பப்பட்ட திருப்திதேசாய் ஆவேசமாக கூறி உள்ளார். #TruptiDesai #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி சபரிமலை வரும் இளம்பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியும் வருகிறார்கள்.

    இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் பூமாதா பிரிகேட் அமைப்பைச் சேர்ந்த பெண்ணீய ஆர்வலர் திருப்திதேசாய் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

    அதன்படி, நேற்று திருப்திதேசாய் 6 இளம்பெண்களுடன் மும்பையில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தார். திருப்திதேசாய் வருவதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே கொச்சி விமான நிலையம் முன்பு திரண்டனர்.

    திருப்திதேசாய் வந்த விமானம் அதிகாலை 4.40 மணிக்கு கொச்சி வந்ததும், அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வர விடாமல் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும், சுமூக நிலை ஏற்படவில்லை. திருப்திதேசாயை ஓட்டலுக்கு அழைத்துச்செல்ல கார் டிரைவர்களும் முன் வரவில்லை. இதனால் அதிகாலை 4.40 மணி முதல் இரவு 9.40 மணி வரை 17 மணி நேரம் விமான நிலையத்திலேயே தவித்த திருப்திதேசாயை திரும்பிச் செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.



    சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர், திரும்பிச் செல்ல வேண்டும் என்ற போலீசாரின் வேண்டுகோளை ஏற்று திருப்திதேசாய் திரும்பிச் சென்றார். இது குறித்து திருப்திதேசாய் அளித்த பேட்டி வருமாறு:-

    சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான் வருவதை முன்கூட்டியே அறிந்த போராட்டக்காரர்கள் பயந்து விட்டனர். எனவேதான் என்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வர விடாமல் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தை கண்டு நான் பின்வாங்க மாட்டேன். மீண்டும் கேரளா வருவேன். அப்போது கொரில்லா பாணியில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

    கேரள போலீசார் என்னிடம் கனிவாக நடந்து கொண்டனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் எனவே நான், திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

    எனது வருகையால் இங்கு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது. வன்முறைக்கு நான், காரணமாகி விடக் கூடாது. எனவேதான் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இப்போது திரும்பிச் செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே விமான நிலையத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஐயப்ப பக்தர்கள் 250 பேர் மீது நெடும்பாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  #TruptiDesai #Sabarimala


    ×