search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அன்பின் திருவுருவமான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை திருநாளாக கொண்டாடி மகிழும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #easterday #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தியாகத்தின் மறுவுருவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ‘‘பகைவர்களுக்கும் நன்மை செய்யுங்கள், அப்படி செய்வதனால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்’’ என்றுரைத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கொடியவர்களால் சித்ரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக அனுசரித்து, அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் வாழும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

    இந்த புனித நாளில், உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும், சகோதரத்துவம் தழைக்கட்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #easterday #EdappadiPalaniswami

    சட்ட போராட்டத்தில் சசிகலா வென்றால் அ.ம.மு.க.வுடன் அ.தி.மு.க.வை இணைப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #AMMK #TTVDhinakaran #Sasikala

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அ.ம. மு.க.வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின் படி தான் நான் அ.ம.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

    சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்காக மறு பரிசீலனை மனுதாக்கல் செய்ய உள்ளார். எனவே அவரால் இந்த கட்சியை தொடங்க முடியாது. எனவே நான் கட்சியை தொடங்கியுள்ளேன்.

    சசிகலா தேவைப்பட்டால் இங்கு வரலாம். எனவே தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். அ.ம.மு.க. துணைத் தலைவராக நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளை பின்னர் அறிவிப்போம்.


    அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவார். சட்டபோராட்டத்தில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றினால் அ.ம.மு.க.வுடன் அ.தி.மு.க.வை இணைப்போம்.

    அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாண பத்திரம் பெற்றுள்ளோம். அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக வருகிற 22-ந்தேதி மனு அளிக்க உள்ளோம்.

    4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னத்தை கேட்டுள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வெற்றி பெற்றதால் தொண்டர்கள் தொடர்ந்து குக்கர் சின்னத்தை விரும்புகிறார்கள்.

    அ.ம.மு.க. சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 22-ந் தேதி வெளியிடப்படும். அ.தி.மு.க.வில் 95 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. கட்சியே காணாமல் போகப்போகிறது. அமைச்சர்கள் மட்டும் கட்டில் பிடித்து அழுகிற காலம் வரப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #TTVDhinakaran #Sasikala

    எந்த காலத்திலும் அதிமுகவை தினகரன் தரப்பு உரிமை கோர முடியாது என துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #opanneerselvam #dinakaran #admk #sasikala
    சென்னை:

    அதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார்.

    அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இன்று காலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளராக  டிடிவி தினகரன் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், மதுரையில் துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- 

    4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவர். எந்த காலத்திலும் அதிமுகவை தினகரன் தரப்பு உரிமை கோர முடியாது. அமமுகவை தனிக் கட்சியாக பதிவு செய்யும் முடிவு கால தாமதமானது என்று கூறினார். #opanneerselvam #dinakaran #admk #sasikala
    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்.21ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #EPS #OPS
    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம்.

    விண்ணப்பப் படிவங்களை ரூ.25,000-ஐ செலுத்தி பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #ADMK #EPS #OPS
    அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNCM #Edappadipalaniswami #ADMK
    சேலம்:

    தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.

    இதில் 18 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆர்வமுடன் அதிக அளவில் வந்து வாக்களித்து இருக்கிறார்கள்.

    அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

    கடந்த ஆண்டு தேர்தலில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் 77 சதவீதம் வாக்கு பதிவானது. இந்த தடவை 77.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கூடுதலாக வாக்கு பதிவாகி இருக்கிறது.



    இன்றைக்கு அம்மா அரசு சிறப்பாக பணியாற்றிய காரணத்தினாலே சேலம் தொகுதியில் கூடுதலான வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.

    கே:- ஓட்டுப்பதிவின் போது போதிய அளவில் பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளதே?

    ப:- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டப்படிதான் நடக்க வேண்டும். ஏற்கனவே என்னென்ன வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து உள்ளதோ, அந்த வழித்தடங்களில் பஸ்கள் வழக்கம் போல் சென்று கொண்டு தான் இருக்கின்றன.

    தேர்தல் நடத்தை விதி காரணமாக உடனடியாக கூடுதலாக பஸ்களை இயக்க இயலாது. இது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

    தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் அரசாங்கம் முழுவதுமே சென்று விடுகிறது. நிறைய இடங்களில் கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கும் வி‌ஷயத்தில் தேர்தல் நடத்தை விதி குறுக்கிட்டதால் இதில் அமைச்சர்களும் தலையிட முடியாது, மத்தியிலும் யாரும் தலையிட முடியாது. அதிகாரிகள் மட்டத்தில் தான் இதை செயல்படுத்த முடியும்.

    தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் முக்கிய நகரங்களில் இருந்து அதிகமான பேர் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிட்டது. இந்த சூழ்நிலையில்தான் இடர்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. விரைவில் இது சரி செய்யப்பட்டு விடும்.

    கே:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வருகின்ற தேர்தலில் தொடருமா?

    ப:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடருவதற்கு முழு வாய்ப்பு இருக்கிறது.

    கே:- சேலம் மாவட்டத்தில் நேற்று வீசிய சூறைக்காற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

    ப:- சூறை காற்றால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பிறகு தான் தெரியும். கோடை மழை என்பதால் இதை பற்றி உறுதியாக பேச முடியாது.

    நாளை தலைமை செயலகம் சென்றபிறகு, நான் இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்வேன். பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #Edappadipalaniswami #ADMK
    அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #AMMK #MinisterJayakumar

    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய 6 சதவீதம் வாக்குகள் தேவை. ஆனால் தேர்தலில் அது கிடைக்காது. ஒன்று அல்லது 2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.

    எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடைசி வரை குழுவாக மட்டும் செயல்படவே வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் வாக்களித்த பின் கூறியுள்ளார். #anbumaniramadoss #admk #election2019
    திண்டிவனம்:

    திண்டிவனத்தில் மாரியம்மன்கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் இன்று காலை வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடைபெற்ற பாராளு மன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட 39 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவு உள்ளது. வலிமையான பாரதம், வளமான தமிழகம் அமைப்பதற்காக மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளதா செய்திகள் வருகின்றன.

    எங்களது கூட்டணி பாட்டாளி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக உள்ள கூட்டணி. எதிர்கட்சியினர் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ள கூட்டணி. தமிழகத்தில் நடைபெறும் 22 சட்டசபை இடைத்தேர்தலில் மிகபெரிய வெற்றி பெறும். தற்போதைய ஆட்சி தொடர்ந்து நிலையாக நீடிக்கும். எங்கள் கூட்டணி தமிழகத்தில் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய வெற்றியை பெறும்.
     
    வேலூரில் பாராளுமன்ற தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து உள்ளது. இதன் மூலமாக தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுள்ளது தெரிகிறது. வேலூரில் எதிர் அணியினருக்கு சொந்தமான பணம் கைப்பற்றபட்டது குறித்து எந்தந்த வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட இருந்தது குறித்து அறிக்கையை சமர்பித்த பின்புதான் வேலூர் பாராளுமன்ற தேர்தலை ரத்து செய்தது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்னணு வாக்கு எந்திரம் நம்பகத்தன்மையற்று உள்ளதா என அன்புமணி ராமதாசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்த போது, இந்த தேர்தல் நேரத்தில் இதுகுறித்து தற்போது பேச தேவையில்லை, இருந்த போதிலும் வாக்கு அளித்தேன். விவிபேட் எந்திரத்தில் சின்னம் தெளிவாக இருந்தாலும், உலக நாடுகள் அளவில் வாக்குசீட்டு முறையை பயன்படுத்தி வருகின்றனர். வருங்காலத்தில் தேர்தல் ஆணையம் மாற்றங்களை கொண்டு வரலாம் என்றார். #anbumaniramadoss #admk #election2019
    அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். #senthilbalaji #admk #TNElections2019 #mkstalin

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, கரூர் அருகே உள்ள புதுப்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மக்கள் தன்னெழுச்சியோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். அவர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறுவார். இதே நிலைதான் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் காணப்படுகிறது.

    இந்த தேர்தலோடு மத்தியில் ஆளும் மோடியும், தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் வீட்டுக்கு செல்வது உறுதி. ராகுல்காந்தி பிரதமர் ஆவார். 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தற்போது அறிவித்துள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார்.

    கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் பிரசாரம் தொடர்பான எங்கள் மனுவை இரவு நேரமாக இருந்தாலும் அவர் வாங்கியிருக்க வேண்டும். ஏதோ முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தது போல சாதாரணமாக கையாண்டு இருக்கிறார்.


    காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், கலெக்டர் பேசும்போது, தேர்தலை நிறுத்த பரிந்துரைப்பேன் என்று கூறியிருக்கிறார். இது தம்பிதுரை, ஆளுங்கட்சியினரின் குரலாக இருக்கிறது. கலெக்டர் சொன்னது போல் 100 பேர் அவரது வீட்டிற்கு செல்ல வில்லை. வேட்பாளரால் அங்கீகாரம் செய்யப்பட்ட முகவர் செந்தில் உள்பட 10 பேர்தான் சென்றிருக்கிறார்கள். 100பேர் வந்திருப்பதாக சொல்லும் கலெக்டர், அவரது வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வெளியிட வேண்டும். அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #senthilbalaji #admk #TNElections2019 #mkstalin

    அ.தி.மு.க. கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று வாக்களித்த பின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். #ministerspvelumani #TNElections2019 #admk

    கோவை:

    கோவை சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஓட்டுப் போட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒவ்வொருவரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்த ஜெயலலிதாவின் அரசுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும். வாக்குச்சீட்டு முறையை விட புதிதாக தொழில் நுட்ப ரீதியில் வந்த இந்த வாக்கு எந்திரம் நன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerspvelumani #TNElections2019 #admk

    தமிழக அரசின் திட்டங்களால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். #ministerudayakumar #admk #TNElections2019

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் இன்று வாக்குப்பதிவு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசின் திட்டங்களால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

    தேர்தலின்போது ஆளும் தரப்பு மீது வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக புகார் எழுப்புவது, வழக்கமான ஒன்றுதான்.

    சித்திரை திருவிழாவினால் வாக்குப்பதிவு குறையாது. மக்கள் திருவிழாவைக் கொண்டாடிவிட்டு வாக்குப்பதிவு செய்ய வந்து விடுவார்கள்.

    சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதனை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து வாக்குப்பதிவு தொடர்ந்து வருகிறது.

    வாக்குப்பதிவு எந்திரம் பழுதான இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை சிறிது நேரம் அதிகரிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerudayakumar #admk #TNElections2019 

    வாக்குச்சாவடி முன்பு பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுவாக்காளர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக புகார் கூறி உள்ளது. #LokSabhaElections2019 #ADMK #MKStalin
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்காளர்களின் மனதை மாற்றும் வகையில் பேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு தான் வாக்களித்ததாக  கூறியதுடன், மத்திய மாநில அரசுகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பொது வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.



    இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது. எனவே, தேர்தல் ஆணையம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ADMK #MKStalin
    பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டிருப்பதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #TNElections2019 #DMKFilesComplaint
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சிறுசிறு பிரச்சனைகள் தவிர பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இன்று மதியம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குனருக்கு (தேர்தல்) அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவங்கிய காலை முதலே வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக வாக்களித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாலை 3.30 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.



    இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில், காவல் துறையின் பாதுகாப்பினை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்க செய்யப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

    இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNElections2019 #DMKFilesComplaint
    ×