search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அதிமுக, பாரதிய ஜனதாவிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளதாக கனிமொழி எம்பி கூறியுள்ளார். #kanimozhi
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வேம்பாரில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கலைஞர் கருணாநிதி எப்போதும் சொல்லுவார், எனது குடும்பத்தை ஒரு புகைப்படத்தில் அடக்க முடியாது. என் குடும்பம் என்பது எல்லா தமிழர்களையும் அடக்கியது. தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக இருந்தாலும் சரி, நமது கூட்டணி கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் சரி நாடும் நமதே 40-ம் நமதே என்ற உணர்வோடு தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி மக்களை படாதபாடு படுத்திக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் கூலிப்படை போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. மோடியின் பெயரை சொன்னாலே மக்கள் மத்தியில் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்று நன்கு தெரிகிறது.

    விளாத்திகுளம் இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜனதாவிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.



    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விளாத்தி குளம்எட்டயபுரம் ரோட்டில் தேர்தல் அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். #kanimozhi
    ஆர்.கே. நகர் 20 ரூபாய் டோக்கன் போல் சீர்காழியில் அ.தி.மு.க.வினர் வினியோகித்த பெட்ரோல் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls #ADMK

    சீர்காழி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி பாரா ளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் கட்சி தொண்டர்களுக்கு மது வாங்கி கொடுக்கிறார்களா? எனவும் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை ஆர்.கே. நகரில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கட்சி தொண்டர்களுக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வினர் சீர்காழியில் முதல்நாள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

    பிரச்சாரத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க, த.ம.கா, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துடன் திரண்டிருந்தனர்.

    இதனிடையே சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கட்சி கொடியுடன் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பலர் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் போலீசார் பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.

    பறக்கும் படையினரை கண்ட கட்சியினர் பலர் அங்கிருந்து விரைந்து சென்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது கட்சி தொண்டர்கள் பலர் அ.தி.மு.க. பொறுப்பாளர் ஒருவரின் பெயருடன் கூடிய ரப்பர் ஸ்டாம்பு அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100 பெட்ரோல் நிரப்பியது தெரிய வந்தது.

    இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்து அடுத்த நிமிடம் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ. 10 ஆயிரத்து 870 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

    இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் கணக்கரிடம் விசாரணை செய்து அறிக்கை பெற்றனர். அறிக்கை பெற்ற பின்பு இந்த பெட்ரோல் செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வினர் மூலம் வழங்கப்பட்ட பெட்ரோல் டோக்கன் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #LSPolls #ADMK

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #vaiko #admk

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலானது ஜனநாயகத்துக்கும், பாசிசத்துக்கும் இடையே நடக்கிற யுத்தம் போன்றது. இங்கு அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். சைவமும், வைணவமும் இணைந்து தமிழை வளர்த்தது. தி.மு.க. எந்த சமயத்துக்கும் எதிரானது அல்ல. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு, மதம் என்ற பெயரில் பிற மதத்தினரை வாழ விடாமல் செய்வது நாட்டுக்கே பேராபத்தாக முடியும்.

    பொறியியல் படித்த பல லட்சம் மாணவர்கள் உரிய வேலை கிடைக்கப் பெறாமல் திண்டாடி வருகின்றனர். அவர்கள் குறைந்த சம்பளத்தில் ஏதேனும் வேலை செய்து பிழைக்கும் நிலை உள்ளது. கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கப் பெறாமல் பாலைவனமாக மாறி விடும்.

    பின்னர் அந்த நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி, நிலத்தடியில் உள்ள மீத்தேன், ஹைட்டோ கார்பன் போன்ற எரிவாயுக்களை எடுப்பார்கள். இதன் மூலம் 5 ஆண்டுகளிலே தமிழகம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பியா நாட்டைப் போன்று மாறி விடும். தமிழகத்துக்கு இதுபோன்ற பேராபத்து இதுவரையிலும் வந்தது கிடையாது.

    மத்திய பா.ஜனதா அரசு நீட் தேர்வை திணித்ததால், ஏழை மாணவர்களின் மருத்துவ கல்விக்கு கொள்ளி வைத்தனர். சமூக நீதி, இட ஒதுக்கீட்டால் வறுமையில் வாடிய ஏழைகளின் பிள்ளைகளும் உயர்கல்வி பெற்று, டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் சமுதாயத்தில் தலைசிறந்து வாழ்கின்றனர். இதனை மத்திய பா.ஜனதா அரசு அழிக்க முயற்சிக்கிறது.

    தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அ.தி.மு.க. அரசு உள்ளது. இந்த ஆண்டு ஆட்சி மாற்றங்களின் ஆண்டாக அமையும். பாசிச பா.ஜனதா ஆட்சியும், ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசும் அகற்றப்படும்.

    தேர்தலில் வீடு வீடாக பல ஆயிரம் ரூபாய் வழங்கி வெற்றி பெற்று விடலாம் என்று அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். அவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். மக்கள் தங்களை விற்க தயாராக இல்லை. பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை காக்க முயலாமல், அதில் தொடர்புடைய ஆளுங் கட்சியினரை காக்க அரசு முயலுகிறது. பெண்களின் உரிமைகளை காக்கவும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும் கனிமொழி குரல் கொடுத்து உள்ளார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    தி.மு.க. கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #dmk

    ஆற்காடு:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து ஆற்காடு பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு தெளிந்த நீரோடை, அதனை அள்ளி பருகலாம். ஆனால் தி.மு.க. தலைமையில் அமைத்துள்ள கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை ஆகும்.

    அ.தி.மு.க.வில் சாமானியர்கள் கூட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி, நான் டாக்டராக இருந்தாலும் அடிப்படையில் விவசாயி தான். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும், பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையும் ஒத்த கருத்துகள் உடையது. தேர்தல் அறிக்கையில் உள்ள கருத்துக்களை நிறைவேற்றுவார்கள். நான் அவர்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பேன்.

    பா.ம.க.வின் தேர்தல் அறிக்கைகளை தி.மு.க.வினர் காப்பி அடித்துள்ளனர். நாங்கள் தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்பதற்காக பல நல்ல திட்டங்களை கூறியிருக்கிறோம். மாணவர்களின் கல்வி கடன் மற்றும் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் கூறியிருக்கிறோம்.

    மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவோம். தற்போது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். ஆனால் 18 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார்கள். எதையும் செய்யவில்லை. இவர்கள் போராடியது எல்லாம் தங்கள் கட்சிக்கு மத்தியில் நல்ல இலாகா வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். நமது பிள்ளைகள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறோம்.

    நூறாண்டுகளில் காங்கிரஸ் கட்சிதான் வாரிசு அரசியலை வளர்த்து வருகிறது. அதேபோல் இங்குள்ள குடும்ப அரசியலை மக்கள் வெறுத்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தனர். அண்ணா ஏழையாக கட்சியை தொடங்கினார். ஏழையாகவே மறைந்தார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று ஏழைகளை ஒழிக்கிறார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியும், அ.தி.மு.க.வும் இணைந்து செயல்படுவதற்கு மாம்பழம் தான் சாட்சி, இரட்டை இலைதான் சாட்சி. அனைவரும் இணைந்து செயல்படுவோம். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சிகள். ஆனால் எதிரணியில் இருப்பவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ramadoss #dmk

    தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரு, தெருவாக பணத்தை அள்ளி இரைக்கிறார்கள் என்று தங்க. தமிழ்ச்செல்வன் புகார் தெவித்துள்ளார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    குன்னம்:

    பெரம்பலூரில் அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் எனக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்தால் நல்லது. ஆளும் கட்சிக்கு உடனே ரிசல்ட் கொடுக்கிறார்கள். எங்கள் கட்சியை நசுக்க பார்க்கிறார்கள்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி இரைக்கிறார்கள். தெரு, தெருவாக ரோட்டில் பணத்தை போட் டுக்கொண்டே போகிறார்கள். அந்த அளவுக்கு அத்துமீறல் நடக்கிறது. ஆனால் போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள்.


    கலெக்டர் இதனை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர் போனது எங்கள் இயக்கத்திற்கு பெரிய இழப்பு இல்லை. தேனி பகுதியில் 25 ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்.

    பணம் மட்டுமே முதலீடாக வைத்து தேர்தலை பார்க்க முடியாது. பணத்தை கொடுத்தால் யாரும் ஓட்டு போடமாட்டார்கள். மக்கள் மனநிலை நேரத்திற்கு ஏற்ப மாறும். பணம், அதிகாரத்தை வைத்து வெற்றி பெற முடியாது. பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டது அ.ம.மு.க. மட்டுமே தான். எத்தனை ஆண்டுகளாக ஜாக்டோஜியோ அமைப்பினர் போராடுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சியும் ஏன்? அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தேர்தல் அறிக்கையில் வெளியிடவில்லை.

    எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் நல்ல மெஜாரிட்டி உள்ளது. தற்போது மிகப் பெரிய அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் ஓட்டு போட்டு தருவார்கள்.

    புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் பேசக்கூடாது என தடை போட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பேசி வருகின்றனர். இது தேர்தல் விதிமீறல்.

    இதனால் முதல்வர், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துணிவிருக்கிறதா? 100 சதவீதம் குக்கர் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். குக்கர் சின்னம் கிடைக்கா விட்டால் தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் டி.டி.வி. அலை வீசுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அற்புதமான தம்பதிதான் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி விவாகரத்தான கூட்டணி என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். #ministerRajendraBalaji
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 24 கட்சிகளை சேர்த்துக்கொண்டு, பிரதமர் வேட்பாளராக 24 பேரை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியினர் மட்டுமே மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் எனக்கூறி வாக்கு கேட்கிறோம். எம்.பி. தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் வந்து விடும். இந்த தேர்தலில் கோட்டை விட்டால் பின்னால் அந்த ஓட்டையை அடைப்பது கடினம்.

    நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அற்புதமான தம்பதிதான் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. தி.மு.க. தலைமையிலான கூட்டணி விவாகரத்தான கூட்டணி. இந்தியாவின் இரும்பு மனிதர் பிரதமர் மோடி தான். அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “டி.டி.வி.தினகரன் அணி கரைந்து கொண்டிருக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் வருவதற்குள் அங்கிருந்து வெளியேறி விடுவார். தினகரன் தேனியில் நின்றால் 20 ரூபாய் டோக்கனை கொண்டு கேள்வி கேட்பார்கள். அதனால் நிற்கவில்லை. இந்த தேர்தலோடு அ.ம.மு.க.விற்கு மூடுவிழா நடத்திவிட்டு அனைவரும் அ.தி.மு.க.விற்கு வந்து விடுவார்கள்” என்றார்.#ministerRajendraBalaji
    கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று அரூர் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #MKStalin #EdappadiPalanisamy
    தர்மபுரி:

    தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி, அரூர் (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிரு‌‌ஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இங்கு கூடியுள்ள கூட்டத்தில் கால்வாசி கூட்டம் கூட அவர்களுக்கு கூடவில்லை. திறந்தவெளி வேனில் காலியாக உள்ள சாலைகளில் முதல்-அமைச்சர் பிரசாரம் செய்கிறார். சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தன்னை நம்பி அ.தி.மு.க.வை விட்டு சென்று உள்ளதாக பேசி உள்ளார்.

    ஆனால் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்த எடப்பாடி பழனிசாமி மோடியையும், அமித்‌ஷாவையும் தெய்வமாக வணங்கி கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வை அமித்‌ஷாவிடம் அடகு வைத்துவிட்டார். மார்வாடி கடையில் நகையை அடகு வைத்தால் மீட்டுவிடலாம். ஆனால் அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது. தன் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவை அமித்‌ஷாவிடம் அடகு வைத்து உள்ளார்.



    அ.தி.மு.க.வின் கதை என்று பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டவர் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதாவை திட்டி தீர்த்து புத்தகம் எழுதியவரிடம் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து உள்ளார். இவர் எப்படி ஜெயலலிதா வழியில் செயல்படுவார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என்று கேள்வி கேட்டவர் ஜெயலலிதா. தற்போது அதை மறந்து விட்டு தங்களை காப்பாற்றிக்கொள்ள கட்சியை அடமானம் வைத்துவிட்டு பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து உள்ளனர்.

    இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மெகாகூட்டணி என்ற பெயரில் மோசமானவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தால் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தற்போதே அந்த நிலை இருக்கும்போது அவ்வாறு கூறுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க. அரசு முகம் சுளிக்காத அளவிற்கு ஆட்சி நடத்துவதாக கூறினார். அவருடைய இந்த பேச்சை கேட்டு தமிழக மக்கள்தான் முகம் சுளிக்கிறார்கள். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று கூறி 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்கு போட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சரிடம் கொடுத்துள்ள 10 அம்ச கோரிக்கைகளில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தவில்லை.

    இந்த கூட்டணி மூலம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது கம்பீரம் மற்றும் கவர்ச்சியை இழந்து விட்டார். அவர் மனப்பூர்வமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இன்னும் வேட்புமனுவை வாபஸ் பெற காலஅவகாசம் இருக்கிறது. எனவே அன்புமணிராமதாஸ் தனது வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #MKStalin #EdappadiPalanisamy
    அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. #ADMK
    சென்னை:

    தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    அ.தி.மு.க. 134 தொகுதிகளை கைப்பற்றியது. தி.மு.க. 89 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தப்பட்டது.

    தேர்தல் முடிந்ததும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சீனிவேல் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அ.தி.மு.க.வின் பலம் 133 ஆக குறைந்தது. பின்னர் நடந்த இடைத்தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 136ஆக அதிகரித்தது.

    இந்த நிலையில் முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இதனால் அ.தி.மு.க. பலம் 135 ஆக குறைந்தது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஆதரவு கொடுத்தனர்.

    இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிரானார்கள். இதையடுத்து, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சமீபத்தில் திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மரணம் அடைந்தார். குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பால கிருஷ்ணரெட்டி பதவியை இழந்தார். அதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 115 ஆக குறைந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியானது. இதனால் தி.மு.க. பலம் 88 ஆனது.

    பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உள்பட 21 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், 3 தொகுதிகளுக்கு வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 18 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேறு கட்சிகளை சேர்ந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக உள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் தினகரன் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    இதனால் அ.தி.மு.க.வுக்கு 110 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவு இருந்தது. இதனால் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. குறைந்தது 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது.

    இந்த நிலையில், சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் நேற்று திடீர் என்று மரணம் அடைந்தார். எனவே, அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. #ADMK
    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-


    மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு அளிக்கிறது.  அ.தி.மு.க. எதிர்கால நலன் மற்றும் வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது.

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.  
    அ.தி.மு.க நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளேன்.  அ.தி.மு.க. தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    தேர்தலுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.   #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls #Deepa
    தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் இன்று திடீரென மாற்றப்பட்டுள்ளார். #ADMKCandidate #PeriyakulamCandidate
    தேனி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தொடங்கினார்.

    இந்நிலையில் பெரியகுளம் தொகுதி வேட்பாளரை அதிமுக தலைமை திடீரென மாற்றி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில், “அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18-4-2019 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்குப் பதிலாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, அல்லி நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் எம்.மயில்வேல் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

    முருகன்

    வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முருகன், ஓ.பி.எஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முருகன் மீது கட்சி பிரமுகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. #ADMKCandidate #PeriyakulamCandidate
    கடந்த காலங்களில் அ.தி.மு.க. இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது கட்சியின் வெற்றிக்கு பா.ம.க.உறுதுணையாக இருந்ததாக விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நினைவு கூர்ந்தார்.
    விழுப்புரம்:

    தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம்(தனி), கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற போகிறோம். மீண்டும் நம்முடைய மோடி பிரதமராக வரப்போகிறார். கருத்துக்கணிப்பும் அப்படித்தான் சொல்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு, அமைச்சரவை கூட்டத்தை நடத்தி கவர்னருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக 7 பேரும் விடுதலை ஆவார்கள் என்று நம்புகிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கூறி வந்த தி.மு.க. ஆட்சி கட்டிலில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் தமிழுக்கும் ஒன்றும் செய்யவில்லை, மாநில சுயாட்சியையும் பெற்றுத்தரவில்லை.

    இப்போது இந்த தேர்தலில் மாநிலத்தின் சுயாட்சியை பெற்றுத்தருவோம் என்று (அ.தி.மு.க., பா.ம.க.) நாங்கள் இருவரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த கூட்டணி அமைந்ததற்கு தம்பி சி.வி.சண்முகமும் காரணம். உள்ளாட்சி தேர்தல் ஜூன், ஜூலையில் வந்தே தீரும். அந்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறப்போவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    ஜெயலலிதா இல்லாமல் நாம் சந்திக்கிற முதல் தேர்தல் இது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்து விடும், தலை தூக்க முடியாது என்று பேசியவர்கள் முகத்தில் கரியை பூசுகிற வகையில் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். தற்போது இந்த தேர்தலில் வெற்றிக்கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். நம்மை பார்த்து ஏளனம் பேசியவர்கள் இந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகவே எந்த சுணக்கமும் இல்லாமல் அனைவரும் சுறுசுறுப்பாக பணியாற்றி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும்.

    1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.தோல்வி அடைந்தது. அம்மாவும் தோல்வி அடைந்தார்.

    அ.தி.மு.க. இதோடு அழிந்து விட்டது என்று தீய சக்திகள் நினைத்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் 1998-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு பா.ம.க.கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்றார்.

    2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு கேப்டன் கூட்டணி அமைத்தார். அம்மா முதல்-அமைச்சர் ஆவதற்கு உறுதுணையாக இருந்தார்.

    தற்போது அ.தி.மு.க. இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு பா.ம.க., தே.மு.தி.க., ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்த தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.

    இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். 5 ஆண்டு காலம் அ.தி.மு.க.ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் இருந்து இன்று பிரசாரத்தை தொடங்கினார். முதல் நாளான இன்று கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி கூட்டணி வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். #LSPolls #EdappadiPalaniswami
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து இன்று பிரசாரத்தை தொடங்கினார். வழக்கமாக எந்த தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்குவார். வழக்கம்போல் இந்த தேர்தலிலும் கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.


     
    முதற்கட்டமாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரை சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து, கடை கடையாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர்  திறந்த வேனில் சென்று சுதீஷுக்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றும், நாட்டை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியால்தான் முடியும் என்றும் முதலமைச்சர் பேசினார். #LSPolls #EdappadiPalaniswami
    ×