என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94519"
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் ஆஜரானார். அவருக்கு வழக்கு நகல் வழங்கப்பட்டது. இதன்பின்னர், வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.
இதன்பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான், ஜெயலலிதா தொடர்ந்த வழக்கையே சந்தித்தவன். எடப்பாடி பழனிசாமிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வாய்ப்பு இருந்தால் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்ய தயாராக இருக்கிறேன்.
என்னை பொறுத்தமட்டில் வழக்குகள் போடுவதன் மூலம் மட்டுமே எனது வேகம் அதிகரிக்கும். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.
எதையெல்லாம் செய்வோமோ அதைத்தான் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளது. மோடியை போல் வாய்ச்சொல்லில் வீரராக இல்லாமல் செயல்பாட்டில் காங்கிரஸ் வீரனாக இருக்கும்.
பா.ஜனதாவின் எச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை. எனவே தான், பாஜக. மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். மேலிடம் பட்டியலை வெளியிடும்போது தான் ராஜாவின் பெயர் பட்டியலில் இருக்கப்போகிறதா? அல்லது ஆட்டுப்பட்டியில் அடைபட்டு போகிறாரா? என்பது தெரியும்.
இந்தியா முழுவதும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டி இருப்பதால் காங்கிரஸ் பட்டியல் வெளியாவது தாமதம் ஆகி உள்ளது. விரைவில் பட்டியல் வெளியாகும். அதிமுக. தோல்வி பயத்தில் மிரண்டு போய் உள்ளது.
எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக அதிமுக.வுக்கு ஓட்டு போட்டால் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று கூறி வருகிறார்கள். ஓட்டுக்கு ரூ.1,500 அல்ல, ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் ஒரு இடத்தில் கூட அதிமுக.-பாஜக. கூட்டணி நிச்சயமாக ஜெயிக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #EVKSElangovan #ADMK #BJP
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தை சேர்ந்த டாக்டர் நாராயணசாமி கேசவன் போட்டியிடவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் ரங்கசாமி வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியுடன் திருச்செந்தூர் சென்றார். அங்கு சிறப்பு பூஜை செய்து சாமிதரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து புதுவைக்கு திரும்பிய ரங்கசாமி இன்று சேலத்தில் உள்ள தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலுக்கு சென்றார். அவருடன் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியும் சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று மாலை 4 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஓட்டல் அண்ணா மலையில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு ஆகியவை நியமிக்கப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிவிக்கிறார்.
அதேநேரத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நாளை அறிவிக்கவில்லை. ஓரிரு நாட்களில் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு என்ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் மோடி எதிர்ப்பு அலை வீசுவதுபோல் தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது. எனவே தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கருத்து கேட்டது வரம்பு மீறிய செயல்.
இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #LSPolls #ADMK
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
கனகராஜ், புரட்சித்தலைவி ஜெயலலிதா மீதும் கட்சியின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.
கனகராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SulurMLA #OPS #EPS
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. அதனுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், தி.மு.க. சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தங்களது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் நேற்று விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி ஆகியோர் வரவேற்றனர்.
இதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது:-
1 லிட்டர் பெட்ரோல் ரூ.74.75-க்கு விற்கப்படுகிறது. இது நியாயமான விலை கிடையாது என்று நான் சொல்கிறேன். காரணம் நான், 1996-ல் பெட்ரோலிய துறை மந்திரியாக இருந்தேன்.
இன்றைக்கு என்னிடம் அந்த பொறுப்பை கொடுங்கள். நான் நாளை காலைக்குள் 40 ரூபாயாக பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன். மோடி எங்கெங்கோ சென்று சவால் விடுகிறார்.
நான் சவால் விடுகிறேன். 40 ரூபாய்க்கு நான் பெட்ரோலை கொடுக்கிறேன். அப்படி செய்தால் பா.ஜனதாவினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது. பா.ஜனதாவினரால் அது முடியுமா?.
இவ்வாறு அவர் பேசினார். #TRBaalu #DMK
நடிகை கவுதமி இணைய தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறி இருப்பதாவது:-
கேள்வி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து உங்கள் கருத்து?
பதில்: மனிதர்களால் இத்தகைய செயல்களை எப்படி செய்ய முடியும் என்று அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வாழ்நாள் முழுக்க பாதிக்கலாம். அந்த வலிதான் மிகக்கொடியது.
பாதிக்கப்பட்ட பெண்கள் நம்பிக்கையுடன் மீண்டு வர வேண்டும். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
கேள்வி:- பா.ஜனதாவில் இணைந்த நீங்கள் அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் இருப்பது ஏன்?
பதில்:- அரசியல் என் முழுநேர தொழில் கிடையாது. மற்ற பல பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்துகிறேன். அதற்கே நேரம் சரியா இருக்கிறது. அதனால்தான் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை.
கேள்வி:- மோடி ஆட்சி குறித்து உங்கள் கருத்து?
பதில்: என் பவுண்டேஷன் பணிகள் குறித்துப் பேசவும் மேற்கொண்டு நல்ல யோசனைகளைப் பெறவும் பிரதமரை 2016-ல் சந்தித்தேன். ஆனால் அரசியல் குறித்து அப்போது பேசவில்லை. பிரதமராக மோடி நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார். மத்திய அரசு செய்த பல நல்ல திட்டங்கள் மக்கள் மத்தியில் சரியாக எடுத்துக் கூறப்படவில்லை. அது மக்களுக்கு முழுமையாகத் தெரிந்தால், பா.ஜனதாவின் பலம் இன்னும் கூடும்.
கேள்வி:- பா.ஜனதா- அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி பற்றி?
பதில்:- அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது. இக்கூட்டணி, பல காரணங்களை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து கருத்துச் சொல்ல விருப்பமில்லை.
கேள்வி:- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் மாற்றங்கள்?
பதில்:- தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. ஆனால், ஓர் அரசின் ஆட்சி முடிவடையும் போதுதான் அவர்களின் ஆட்சித்திறனை மதிப்பிடவேண்டும் என்பது என் கருத்து.
அரசியல் தலைவராகவும் சவால்களை கடந்து சாதித்த பெண்ணாகவும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்கும். ஆளுமையுடன் வாழ்ந்த அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் எனக்கு அதிக வருத்தமும் சந்தேகமும் உண்டு. எனக்கு மட்டும் அல்ல கோடிக்கணக்கான மக்களுக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது’’ அதற்கான விடை தெரிந்தே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Gautami #ADMK #DMK
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. ஒரு சில பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
“மது குடிப்பவர்கள் திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. எனவே, குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்” என்றார் அமைச்சர்.
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து கேட்டபோது, அவர் விலகி சென்றதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டுதான் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. #TNLiquorBan #RajendraBalaji
சேலம்:
சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
ஒரு மெகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்த கூட்டணி மிகப் பெரிய கூட்டணி. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே திரும்பி பார்க்கின்ற பலமான கூட்டணியாக அமைந்திருக்கின்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற 40 பாராளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்றம் சேலம் பாராளுமன்றம் என்ற முத்திரையை பதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிற்பகல் அவர் தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு செல்கிறார். அங்கு நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் அவர் தொகுதி முழுவதும் நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவில் சேலம் திரும்புகிறார்.சேலம் மாவட்டத்தில் நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய பாராளுமன்ற தொகுதிகள் வருகிறது. எனவே அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் சேலம் வந்தார். அவருக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalaniswami
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. அமைத்திருக்கும் மெகா கூட்டணியும், அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு தேர்தல் அறிக்கையாக அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளும், அ.தி.மு.க. கூட்டணி களமிறக்கியிருக்கும் தலைசிறந்த தகுதிபடைத்த வேட்பாளர்களின் அணிவகுப்பும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கூட்டணியே பிரமாண்ட வெற்றி பெறும் என்பதனை இப்போதே முன்கூட்டி சொல்லும் விதமாக மக்களிடம் எழுந்திருக்கும் ஏகோபித்த ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி வருவதை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.
வரலாறு காணாத வகையில் வாகை கனி கொய்து வங்கத்து கடலோரம் துயில் கொண்டிருக்கும் நம் தங்கத்தாரகையாம் ஜெயலலிதா, அவரது வலப்புறத்தில் சந்தனப்பேழையில் சாய்ந்துறங்கும் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., திராவிட இயக்கங்களின் வெற்றித் தேரோட்டத்துக்கு வித்திட்ட அண்ணா ஆகியோரது புகழடி பொற்பாதங்களில் 40 தொகுதிகளின் வெற்றியை சமர்ப்பிப்போம் என்கிற குருதி கலந்த உறுதியை நம் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களும் உளமார எடுத்திடவேண்டும்.
40 பாராளுமன்ற தொகுதிகளின் வெற்றியையும், 18 சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றியையும் ஒருசேர ஈட்டுவதன் மூலம் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆளும் என்கிற ஜெயலலிதாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும். இதற்காக இப்பொழுதே மடைதிறந்த வெள்ளமென அ.தி.மு.க. சிப்பாய்கள் படை புறப்படட்டும். மக்கள் திலகம், மகராசி அம்மா ஆகியோரது நல்லாசி நமக்கிருக்க நாற்பதும் நமதாகும். நாளை திருநாடும் நமக்கென ஆகும் என்பதை சொல்லி, வாகை கனி கொய்திட புறப்படும் எனது அருமை அ.தி.மு.க.வின் போர்ப்படை வீரர்களை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #EdappadiPalaniswami
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்