search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    பொள்ளாச்சி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய கமல்ஹாசனுக்கு அதிமுக நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது. #pollachiissue #kamalhaasan #admk

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என்றுகமல்ஹாசன் அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் கறைபடிந்த கட்சிகள் என்றும், அவற்றுடன் ஒரு போதும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று கமல் கூறியுள்ளார்.

    இதன் காரணமாக கடந்த மாதம் தி.மு.க. நாளிதழான முரசொலியில் கமல்ஹாசனை விமர்சித்து கட்டுரைகள் வெளி வந்தன. பா.ஜனதாவின் அழுத்தம் காரணமாக தன்னிலை மறந்துவிட்ட கமல்ஹாசன் ஏதேதோ பிதற்றுவதாக அதில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

    பொள்ளாச்சி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியிருந்தார். அதில் தமிழக அரசையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.


    இந்த நிலையில் அ.தி.மு. க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் கமலை விமர்சித்து கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    பொள்ளாச்சி விவகாரத்தில் புழுதிவாரி தூற்றுகிறாரே உளறல் நாயகன். அ.தி.மு.க. மீது வன்மம் கொண்டிருக்கும் கமல் போன்றோர் உள்நோக்கம் கற்பிக்க வெறிபிடித்து அலைகின்றனர்.

    குற்றம் இழைத்த பாதகர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஆளும் அதிமுக அரசு மீது அவதூறு பரப்புவதற்கு இதுவே தருணம் என்று குற்றச்சாட்டுகளை வீசும் தி.மு.க.வுடன், கமல்ஹாசனும் கைகோர்க்கிறார்.

    சான்றோருக்கு இரங்கல் என்று ஜெயலலிதாவின் மரணத்தையே அடிமனதினுள் கொண்டாடிய அரக்கன் தான் இந்த உத்தம வில்லன் என்பதை உலகம் அறியும்.

    இவ்வாறு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #pollachiissue #kamalhaasan #admk

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - திமுக கட்சிகள் 8 தொகுதிகளில் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரட்டை இலை - உதயசூரியன் 11 இடங்களில் மோதுகின்றன. #Election2019 #ADMK #DMK
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-வும், திமுக-வும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. அந்த தொகுதிகள் விபரம் வருமாறு:-

    1. சேலம் 2. பொள்ளாச்சி 3. திருவண்ணாமலை 4. நீலகிரி (தனி) 5. திருநெல்வேலி 6. மயிலாடுதுறை 7.காஞ்சிபுரம் (தனி) 8. தென்சென்னை

    அதிமுக.வும், திமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னமும், உதயசூரியன் சின்னமும் நேரடியாக 11 இடங்களில் களத்தில் மோதுகின்றன.

    பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 2 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. இந்த 2 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறது. அதிமுக இந்த 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறது. இங்கு திமுக போட்டியிடுகிறது.

    இரட்டை இலை 21 தொகுதிகளிலும், உதயசூரியன் 23 தொகுதிகளிலும் (விழுப்புரம்) போட்டியிடுகிறது.

    பாமக-வுக்கும், திமுக-வுக்கும் இடையே 6 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் வருமாறு:-

    மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, திண்டுக்கல், கடலூர்.

    விழுப்புரம் (தனி) தொகுதியில் பா.ம.க. - விடுதலை சிறுத்தைகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    பா.ஜனதா கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசுடனும், தூத்துக்குடியில் திமுகவுடனும், ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக்குடனும், கோவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடனும் மோதுகிறது.

    தேமுதிக வடசென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் திமுகவுடனும் திருச்சி, விருதுநகர் ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசுடனும் மோதுகிறது.

    தஞ்சாவூர் தொகுதியில் தமாகா-வுக்கும், திமுக-வுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    தென்காசி தொகுதியில் திமுகவும், புதிய தமிழகமும் நேரடியாக மோதுகிறது.

    அதிமுக மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுடனும், நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்டுடனும் மோதுகிறது.

    காங்கிரஸ் - அதிமுக இடையே 5 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதன்விபரம்:-

    திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், தேனி,

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் (தனி), தொகுதியில் நிற்கிறார். அவரை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது.

    ஈரோட்டில் அதிமுக-வுக்கும் மதிமுக-வுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். #pollachiissue #kanimozhi

    தூத்துக்குடி:

    தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், வன்முறை சம்பவத்தை அரசும், போலீசும் மூடி மறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அது பெரிய அச்சத்தை உருவாக்கி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

    ஆனால் அரசாணையில் கூட பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அரசு வெளியிட்டுள்ளது. போலீசும் தொடர்ந்து பெயரை வெளியிட்டு வருகிறது. இது இனிமேல் யாரும் புகார் கொடுக்க கூடாது என்பதற்காக, அவர்களை அச்சுறுத்தவே செய்யக் கூடியதாக தோன்றுகிறது.

    7 ஆண்டுகளாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற சூழலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் எந்த பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. தற்போது வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

    இதுவரை விசாரணையில் தாமதம் செய்து போலீசும், அரசும் யாரை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தாண்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக கோர்ட்டு ஏற்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இருப்பதால் அவர்கள் பிரதமரை ‘டாடி’ என்று அழைக்கக்கூடிய நிலைக்கு சென்று உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கடம்பூர் அருகே ஓணமாக்குளத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய தாவது:-

    தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தின் எந்த உரிமைகளை இழந்தாலும், ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் அ.தி.மு.க. அரசு, தமிழ் விரோதிகளான பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமல் பா.ஜ.க. அரசு அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.

    அந்த கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை நடத்தும் தொழில் அதிபர்களை விட்டு விட்டு, சில ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் வாங்கிய மாணவர்களை கடனை திருப்பி செலுத்துமாறு பா.ஜ.க. அரசு மிரட்டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று மத்தியில் தி.மு.க. அங்கம்பெறும் ஆட்சியும் அமையும். அப்போது மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #pollachiissue #kanimozhi

    இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.

    இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னத்தை முடக்கியது.

    பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

    இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.



    இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    மேலும் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran 
    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது என்று அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் கூறினார். #Pollachicase #ADMK #Nagaraj
    கோவை:

    பொள்ளாச்சியில் ஆபாச படம் எடுத்து பாலியல் மிரட்டல் விடுப்பதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் புகார் அளித்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பொள்ளாச்சி அ.தி.மு.க. பிரமுகரான பார் நாகராஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் நடத்தி வந்ததாக கூறப்பட்ட டாஸ்மாக் மது பாரும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது.நாகராஜுக்கு பாலியல் வழக்கிலும் தொடர்பு இருப்பதால் அவரை கைது செய்ய கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் நாகராஜ் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பொள்ளாச்சியில் நடந்துகொண்டிருக்கும் ஆபாச வீடியோ வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது அரசியல் வாழ்விலும், பொதுவாழ்விலும் என்னை பிடிக்காத சிலர் சமூகவலைத்தளம் மற்றும் ஊடகங்கள் மூலமாக இந்த வழக்கில் என்னையும் சம்பந்தப்படுத்தி தவறான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    வேறு யாரோ உள்ள ஆபாச வீடியோவை காட்டி நான் அதில் இருப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. என்மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள். இதனை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பொள்ளாச்சி நகர பாசறை துணைச்செயலாளராக முன்பு இருந்தேன். இப்போது அந்த பதவியில் இல்லை. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் மது பார் நடத்தி வந்தேன். இப்போது நான் பார் நடத்தவில்லை. சேதப்படுத்தப்பட்டது எனது பார் இல்லை.

    இந்த வழக்கில் கைதான 4 பேர் எனக்கு தெரியும். ஆனால் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியாது. பாலியல் வன்முறை சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை. என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Pollachicase #ADMK #Nagaraj
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் உத்தேசி தொகுதிகள் ஓரளவு முடிவாகி உள்ளன. #LSPolls #ADMK #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.,புதிய தமிழகம், த.மா.கா., புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க. வுக்கு 7 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், புதிய தமிழகம், த.மா.கா., புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் ஒப்படைத்துள்ளன. அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் ஓரளவு முடிவாகி உள்ளன.

    அ.தி.மு.க.- கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச பட்டியல் வருமாறு:-

    அ.தி.மு.க.

    1. தென்சென்னை

    2. திருவள்ளூர்

    3. காஞ்சிபுரம் (தனி)

    4. திருவண்ணாமலை (தனி)

    5. சேலம்

    6. நாமக்கல்

    7. ஈரோடு

    8. திருப்பூர்

    9. நீலகிரி (தனி)

    10. பொள்ளாச்சி

    11. கிருஷ்ணகிரி

    12. திண்டுக்கல்

    13. கரூர்

    14. பெரம்பலூர்

    15. சிதம்பரம் (தனி)

    16. நாகப்பட்டினம் (தனி)

    17. மயிலாடுதுறை

    18. மதுரை

    19. தேனி

    20. திருநெல்வேலி

    பா.ஜனதா

    1. ராமநாதபுரம்

    2. கன்னியாகுமரி

    3. தூத்துக்குடி

    4. கோவை

    5. சிவகங்கை

    பா.ம.க.

    1. மத்திய சென்னை

    2. ஸ்ரீபெரும்புதூர்

    3. அரக்கோணம்

    4. தர்மபுரி

    5. ஆரணி

    6. விழுப்புரம் (தனி)

    7. கடலூர்

    தே.மு.தி.க.

    1. வடசென்னை

    2. கள்ளக்குறிச்சி

    3. திருச்சி

    4. விருதுநகர்

    புதிய தமிழகம்

    1. தென்காசி

    த.மா.கா.

    1. தஞ்சாவூர்

    புதிய நீதிக்கட்சி

    1. வேலூர்

    என்.ஆர்.காங்கிரஸ்

    1. புதுச்சேரி  #LSPolls #ADMK #ADMKAlliance
    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக செயல்பட்டு வருகிறது என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியுள்ளார். #arjunsampath #admkgovt
    தென்காசி:

    இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன்சம்பத் தென்காசிக்கு வந்தார். தென்காசி மலையான்தெருவில் உள்ள மறைந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.குமார்பாண்டியன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சக்திபாண்டியன் தலைமை தாங்கினார்.  சேகர்பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:- 

    பாராளுமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பா.ஜ.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.  தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தோல்வி கூட்டணி ஆகும். தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. 

    மோடி பிரதமர் ஆன பிறகு தான் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுடுவது தடுத்து நிறுத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மக்கள் அனுபவித்தார்கள். இப்போது தமிழகம் முன்மாதிரி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். 

    நிகழ்ச்சியில் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொன்னுச்சாமி, மாநில இளைஞரணி செயலாளர் ஓம்கார பாலாஜி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஹரி, தென்காசி பா.ஜ.க. தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி, பா.ஜ.க. மேலிட பார்வையாளர் தென்காசி ராஜ்குமார், 32-வது வார்டு பா.ஜ.க. தலைவர் இசக்கிமுத்து, தென்காசி நகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  #arjunsampath #admkgovt
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இருகட்சி தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர். #LSpolls #TMConeseat #AIADMKallaiance
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.  

    இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.

    பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இருகட்சி தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர். #LSpolls #TMConeseat #AIADMKallaiance 
    திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றிபெறும் எனவும் தமிழகத்தில் மோடிக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் எதிரான அலை வீசுகிறது எனவும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress

    தூத்துக்குடி:

    தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று அரசு, குற்றவாளியை பாதுகாக்கும் விதத்திலோ, காப்பாற்றும் விதத்திலோ செயல்படக்கூடாது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    தி.மு.க. கூட்டணி திடீரென உருவான கூட்டணி அல்ல. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போராட்டம் நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில் கூட்டணி உருவாகி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை மோடியால் மிரட்டி வைக்கப்பட்ட கூட்டணி. அ.தி.மு.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கூட்டணிக்கு செல்லவில்லை என்றால் வெளியில் இருப்பதே கஷ்டம். இதனால் அச்சுறுத்தி கூட்டணிக்கு கொண்டு வந்தார்கள். அதன்பிறகு இரவில் ஒரு கட்சியிடம் பேசிவிட்டு காலையில் மற்றொரு கட்சியுடன் பேசி கூட்டணி அமைக்கிறார்கள். இது கொள்கை ரீதியான கூட்டணி அல்ல. பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி மூழ்கும் கப்பல். இதில் ஏறி உள்ள எல்லா கட்சிகளும் மூழ்கும்.

    கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. விவசாயி முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை, அ.தி.மு.க. அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. அதே நேரத்தில் எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. எங்கள் கூட்டணி 39 தொகுதியிலும் மகத்தான வெற்றியை பெறும். ராகுல்காந்தி நாட்டின் பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #Congress

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது. இதற்கான கூட்டணி உடன்பாடு இன்று மாலை கையெழுத்தாகிறது. #LSPolls #ADMK #GKVasan #ADMKAlliance
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.

    இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று மாலை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.

    பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும், இன்று காலை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியூரில் இருப்பதால் இன்று காலை கையெழுத்தாகவில்லை.



    இன்று மதியம், ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்புகிறார். அதன்பிறகு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மயிலாடுதுறை தொகுதி த.மா.கா.வுக்கு கிடைக்கும் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் ஜி.கே.வாசன் கையெழுத்திடுவதன் மூலம் ஜி.கே.வாசன், அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் முதல் முறையாக இணைகிறார். இதனால் இந்த கூட்டணியில் கட்சியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. #LSPolls #ADMK #GKVasan #ADMKAlliance
    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன்பிறகு தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #ADMK

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.

    அ.தி.மு.க. அணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த சில தினங்களாக இந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகள், தே.மு.தி.க. 4 தொகுதிகள், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு இன்று ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    புதுச்சேரி தொகுதியை தோழமைக்கட்சியான என். ஆர்.காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்து இருப்பதால் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் களம் இறங்குகிறது. எனவே சுமார் 15 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் நேரடி பலப்பரீட்சை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    90 சதவீதம் அளவுக்கு இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுவிட்டது. ஓரிரு தொகுதிகள் தொடர்பாக மட்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இன்று காலை அதிலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.


    கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் அ.தி.மு.க. தோழமைக்கட்சி தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், சுதீஷ், கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய பிரசாரத்தை மேற்கொள்வது என்பது பற்றி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்கும் கூட்டங்களை எந்தெந்த நகரங்களில் நடத்துவது என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

    முக்கிய தொகுதிகள் பற்றியும் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை முடிந்த பிறகு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    அ.தி.மு.க. அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தெளிவானதும் உடனடியாக வேட்பாளர்களை அறிவிக்கவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு நடந்து முடிந்து விட்டது.

    அது போல பா.ம.க.விலும் வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது. தே.மு.தி.க.விலும் வேட்பாளர்களை அறிவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    எனவே இந்த வார இறுதிக்குள் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #ADMK

    அரசியலமைப்பு சட்டத்தை சீரழிக்கும் பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பிரகாஷ் காரத் ஆவேச மாக பேசினார். #PrakashKarat
    மதுரை:

    மதுரை பழங்காநத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:-

    பிரதமர் மோடி நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்து வருகிறார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நாட்டை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பன்முக தன்மை கொண்ட இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்கிறார். இந்த தேர்தல் மூலம் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

    மோடி கடந்த தேர்தலின் அளித்த போது வாக்குறுதிகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார். அவர்களது ஆட்சியின் சொந்த புள்ளி விரவமே அதனை பொய்யாக்குகிறது.

    45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலை வாய்ப்பு பறிபோய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 11 கோடி பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

    பண மதிப்பிழப்பு அறிவிப்பால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. வோடு சேர்ந்து பாரதிய ஜனதா மோசமான கூட்டணியை அமைத்துள்ளது. அதில், அ.தி.மு.க. அடிமையாக உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #tamilnews
    ×