search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று 2-வது நாளாக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. #LSPolls #ADMK #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களிடம் நேற்று முதல் நேர்காணல் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்த நேர்காணலை நடத்தினார்கள்.

    முதல் நாளான நேற்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. காலையில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. மாலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர்.

    2-வது நாளான இன்று 19 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. காலையில் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.

    மாலையில் திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் நேர்காணல் நடக்கிறது.

    18 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. #LSPolls #ADMK
    அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி இடம் பெற்றுள்ளன. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

    இதில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதி, பா.ம.க.வுக்கு-7, தே.மு.தி.க-4, புதிய தமிழகம்-1, புதிய நீதிக்கட்சி-1, என்.ஆர்.காங்கிரசுக்கு-1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணியில் த.மா.கா.வை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இன்று உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று ஏற்கனவே அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனாலும் தொகுதிகள் விவரத்தை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளனர்.

    தற்போது அ.தி.மு.க.வில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று மாலையுடன் நேர்காணல் நிகழ்ச்சி முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



    இதில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    1. மத்திய சென்னை, 2, ஸ்ரீபெரும்புதூர், 3.ஆரணி, 4. அரக்கோணம், 5.சிதம்பரம், 6.தர்மபுரி, 7.திண்டுக்கல்.

    தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் :-

    1. வடசென்னை, 2.கள்ளக்குறிச்சி, 3. திருச்சி, 4. விருதுநகர்.

    புதிய தமிழகம்- தென்காசி. #LSPolls #ADMK #ADMKAlliance #PMK #DMDK
    அ.தி.மு.க. அரசை மிரட்டி பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது என்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கூறியுள்ளார். #PrakashKarat #ADMK

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியதாவது:-

    மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பெரிய தொழில் நிறுவனங்களிடம் தேர்தல் நிதி வசூலிக்க நிதி பத்திரத்தை வினியோகம் செய்கிறது. ரபேல் ஒப்பந்தத்திலும் இதுமாதிரி ஊழல் நடந்துள்ளது. இந்த தேர்தலில் மதச்சார்பின்மையை காப்பாற்ற நாம் மோடி அரசை தூக்கி எறிய வேண்டும். கடந்த முறை பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம் 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை அளிப்பதாக கூறியது. ஆனால் பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் 88 லட்சம் பெண்கள் வேலை இழந்துள்ளனர்.

    விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது. பணமதிப்பு இழப்பின் மூலம் நாட்டு மக்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர். பெண்களை பாதுகாக்க தவறிவிட்டனர். ராணுவ வீரர்களின் தியாகத்தை பா.ஜனதா அரசு அரசியலாக்குகிறது. எல்லையில் பாதுகாப்பு இல்லை. காஷ்மீர் பிரச்சினைக்கு காரணமே பா.ஜனதா ஆட்சி தான்.

    தமிழகத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. அரசை மிரட்டி பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க. கூட்டணி மதச்சார்பின்மையை காப்பாற்ற அமைக்கப்பட்டுள்ளது. நாட்டை காப்பாற்ற நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #PrakashKarat #ADMK

    அ.தி.மு.க. ஆலமரம் போன்றது, கூட்டணியில் உள்ளவர்கள் பழம் பறிக்கலாம் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #ministerrajendrabalaji
    கமுதி:

    கமுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:–

     உழைப்பவர்களுக்கு அ.தி.மு.க.வில் எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அ.தி.மு.க.வை நம்பி யாரும் கெட்டதே கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க.கட்சி ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., கைகளில் பத்திரமாக உள்ளது. தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது உயிரையும் பொருட்படுத்தாமல் வளர்த்த கட்சி இது. கமுதி கோட்டைமேடு வெற்றியின் அடையாளம். தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் இங்கிருந்து அறைகூவல் விடுக்கிறேன்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். 

    பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் மோடி தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும். இதில் துளிஅளவும் சந்தேகமில்லை. இந்த ஆட்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 எம்.பி.க்கள் அமைச்சரவையில் பங்கேற்று ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் நாடகமாடுகின்றன. மானங்கெட்டவன்தான் தி.மு.க.வுடன் கூட்டு சேர்வான் என கூறிய ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று அந்த கட்சியுடன் ஒரு சீட்டுக்காக கூட்டணி அமைத்து மானங்கெட்டவனாக மாறிவிட்டார்.

    வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.–தி.மு.க.வுக்கு மட்டுமே இருமுனைபோட்டி. டி.டி.வி.தினகரன் இந்த தேர்தலோடு இருந்த சுவடு தெரியாமல் போய்விடுவார். அ.தி.மு.க. கூட்டணி வரும் தேர்தலில் வரலாறு படைக்கும். மற்ற கட்சிகளின் கூட்டணி தோல்வியால் கட்சி தலைவர்களோடு தகராறு ஏற்படும். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது, இதில் கூட்டணியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பழம் பறிக்கலாம், சாப்பிடலாம். ஆனால் மரத்தை அழிக்க முடியாது. 

    இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji
    தூத்துக்குடி அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் பா.ஜ.க. கொடி யேற்று விழா நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் பா.ஜ.க. கொடி யேற்று விழா நடைபெற்றது. மாநகர தெற்கு மண்டல தலைவர் சின்னத்தங்கம் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் கணேச பெருமாள், துணைத்தலைவர் ஆனந்தகுமார், தெற்கு மண்டலம் ஷிவன். இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாஸ் ஜெயசந்திரன், ஒன்றிய மேலிட பார்வையாளர் இளங்கோவன், கணேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் பிரபாகர், சண்முகம், முருகேசன், மாநகர மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிரபு, சிவராமன் ஆகியோர் வரவேற்றனர். இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கொடியேற்றிவைத்து கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியால் உலகின் வலிமை மிக்க நாடாக இந்தியா மாறியுள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை- சாமானிய மக்களுக்கும் சொந்த வீடு கனவு நிறைவேறியுள்ளது. இது பா.ஜ.க.வின் சாதனையாகும்.

    தமிழகத்தில் பெண்களுக்கு முத்ரா வங்கி கடன் 1 கோடியே 90 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவசமாக கேஸ் வழங்கப்படுகிறது. பெண்களுக்காக பள்ளிகளிலும் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் படிக்க செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் மனநிறைவு கொண்டுள்ளனர். வல்லரசு நாடாக இந்தியாவை உருவாக்கிட பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும். எனவே பா.ஜ.க. - அ.தி.மு.க.கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாலாஜி, தேசிய செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலெட்சுமி, மாவட்ட வர்த்தக அணி துணைதலைவர் உமரி சத்தியசீலன், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பெருங்குளம் நகர தலைவர் ஜோசியர் சின்னத்துரை, வக்கீல் அணி வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு, மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு தலைவர் முள்ளக்காடு வக்கீல் செல்வக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் வழங்க வேண்டும். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது வருகிற 15-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. #SC #TwoLeaves #TTVDhinakaran
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது.

    இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.

    இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னத்தை முடக்கியது.

    பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.



    இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    இந்த அப்பீல் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

    தினகரனின் அப்பீல் மனு வருகிற 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. #SC #TwoLeaves #TTVDhinakaran
    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடங்கியது. #LSPolls #ADMK #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளுக்கும் 1,736 பேர் விருப்ப மனு கொடுத்தனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் அ.திமு.க. போட்டியிடுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நேர்காணல் இன்று தொடங்கியது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், தமிழ் மகன்உசேன், பா.வளர்மதி, டாக்டர் வேணுகோபால் ஆகியோர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் நேர்காணல் நடத்தினார்கள்.


    சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய 10 தொகுதிகளுக்கு காலையில் நேர்காணல் நடந்தது.

    முதலாவதாக சேலம் தொகுதிக்கு தற்போது எம்.பி.யாக உள்ள பன்னீர் செல்வத்திடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு உள்ள சாதக, பாதகம் குறித்து கேட்டறிந்தனர்.

    மாலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

    வேட்பாளர் தேர்வு நடைபெறுவதால் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர். நாளை 12-ந்தேதி மீதமுள்ள 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது. #LSPolls #ADMK #ADMKAlliance
    ரூ.1000, ரூ.2000, ரூ.6000 ஆகிய 3 அணுகுண்டு போன்ற திட்டங்களால் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #LSPolls #TNMinister #SellurRaju
    மதுரை:

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவையில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல் ஆகும். எனவே நாம் தேர்தல் பணிகளை முழுவீச்சாக செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகும் வகையில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

    பொங்கலுக்கு அனைவரது குடும்பத்துக்கும் முதல்-அமைச்சர் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கினார். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    இந்த மூன்று திட்டங்களும் 3 அணுகுண்டுகள் போன்றவை. இந்த திட்டம் மூலம் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #SellurRaju
    வருகிற பாராளுமன்ற தேர்தல் மூலம் புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ரங்கசாமி பேசியுள்ளார். #rangasamy #anbalagan
    புதுச்சேரி:

    அ.தி.மு.க. கூட்டணியில் புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை ரங்கசாமி சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க .தலைமை அலுவலகத்திற்கு ரங்கசாமி இன்று காலை வந்தார். அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். 

    கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவையில் அ.தி.மு.க. என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான் அமைந்திருக்க வேண்டும். தகவல் தொடர்பில் சிறிய இடைவெளி ஏற்பட்டதால்தான்  ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 

    பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நாம் கூடுதலான ஓட்டுக்களை பெறவேண்டும். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். ஆட்சி மாற்றம் வர வேண்டும் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த சந்திப்பின்போது என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #rangasamy #anbalagan
    அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசினார்.
    திருவாரூர்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்த அ.தி.மு.க. திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அசோகன், பாப்பா சுப்ரமணியன், அ.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் மூர்த்தி, சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், பாஸ்கர், சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்திட வேண்டும். அதுபோல் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க .வேட்பாளரை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்திட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மெகா கூட்டணி அமைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. #LSpoll #AIADMKDMDKalliance
    சென்னை:

    பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் ஆகியோர் தேமுதிகவை சேர்ந்த பொது செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் தேமுதிக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர். #LSpoll #AIADMKBJPalliance  
    ×