search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள் குறித்த பிரேமலதா கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #premalatha

    கோவை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களால் பலனில்லை என்ற பிரேமலதா விஜயகாந்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியை சேர்ந்த பிரதமர் இல்லாததால், இவ்வளவு எம்.பி.க்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்று தான் தெரிவித்துள்ளார். அவர் சொன்னதன் கருவை புரிந்து கொள்ள வேண்டும்.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். கூட்டணி அமைத்தால் ஒன்றிபோக வேண்டும். அப்போது தான் கூட்டணி வலுபெறும். கூட்டணி அமைத்தவர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.


    கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தமிழக அரசை குறை கூறி தான் அரை சதவீத ஓட்டு வாங்குகின்றனர். கூட்டணி சேரவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி காணாமல் போய்விடும். அவர்கள் கூறும் பொய்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அரசு விழாக்களில் தேர்தல் பிரசாரம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகத்தான் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அது குற்றமா?. தற்போது எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணியை தொடங்கி வைத்து உள்ளார். இதனால் எதிர் கட்சிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போது எத்தனை முறை பிரதமர் வந்து தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைப்பார்கள். அதுகுறித்து பொதுமக்களும், நீங்களும் சிந்திக்க வேண்டும்.

    தற்போதைய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சரியான கூட்டணியா? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது யார் ஆட்சியில் இருந்தார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது வெட்கக் கேடான ஒன்று. பா.ஜனதா கட்சியை தி.மு.க. மதவாத கட்சி என்கிறார்கள். அவர்களுடன் மத்தியில் அங்கம் வகித்து 5 ஆண்டு ஆட்சி சுகத்தை அனுபவித்து விட்டு தற்போது மதவாத கட்சி என்று குறை கூறுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை தி.மு.க. ஆட்சியில் பரோலில் விட்டார்களா? ஆனால் அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

    7 பேர் விடுதலைக்காக தி.மு.க. எதையும் செய்யவில்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் வேண்டும் என்றே மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தலுக்காக இதுபோன்ற நாடகம் ஆடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மீது பாசம் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியில் விடுதலை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னரிடம் கொடுத்துள்ளோம். அவர் மத்திய அரசிடம் ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பார். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை முதல் கோவை வரை யார் ஆட்சியில் குண்டு வெடித்தது என்று ராகுல்காந்திக்கு இல.கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார். #ilaganesan #rahulgandhi #pmmodi

    மதுரை:

    பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் யார் ஆட்சி காலத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஏதோ வரலாற்று ரகசியத்தை கண்டுபிடித்த மாதிரி இப்போது கேள்வி கேட்டுள்ளார்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகருக்கு கடத்தி சென்று விட்டனர்.

    இந்திய விமானத்தில் பயணித்த பயணிகளை விடுவிப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விதித்த ஒரே நிபந்தனை இந்திய சிறையில் இருக்கும் மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான்.

    இந்திய விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களோ எங்களது பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் அதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதியை விடுவிக்கக்கூடாது என்றனர்.

    இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தூண்டுதலின்பேரில் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை பிரதமர் வீட்டு முன்பு திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    இதனால்தான் பிரதமர் வாஜ்பாய் வேறு வழியின்றி மசூத் அசாரை விடுதலை செய்ய நேரிட்டது. இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம்.

    நான் ராகுல்காந்தியை பார்த்து கேட்கிறேன். இந்தியாவில் மும்பை முதல் கோவை வரையிலான பயங்கர குண்டு வெடிப்புகள் யார் ஆட்சி காலத்தில் நடந்தது.


    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மொழிப் பிரச்சினையை தூண்டும் வகையில் தமிழகத்தில் ஓடும் ரெயில்களுக்கு தேஜஸ், அந்தியோதயா என இந்தியில் பெயர் வைக்கலாமா? என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அந்த கட்சியின் பெயரில் உள்ள மார்க்சிஸ்ட் தமிழ் வார்த்தையா? என்று கேட்க விரும்புகிறேன். ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 11, 12-ந்தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அது கோடை விடுமுறை காலம். இதனால் அவர் சொல்லி இருக்கலாம்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைக்க ஆளும் கட்சி தலைவர்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆனாலும் பா.ஜனதா நெருக்கடி காரணமாகத் தான் தே.மு.தி.க.வுடன் பேச்சுவர்த்தை நடக்கிறது என்று கூறுவது சரியல்ல.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதை தமிழக முதல்வர் வரவேற்றுள்ளார். தமிழக அரசியலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் பலத்தை அதிகப்படுத்துவதும், எதிர் கட்சிகளின் பலத்தை அதிகரிக்காததும் தான் ராஜதந்திரம். அத்தகைய பணிகளில்தான் அ.தி.மு.க. கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் பாராளு மன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவு இல்லை. ராகுலுக்கு ஆதரவு என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இல.கணேசன், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படாததால் மு‌ஷரப் அவ்வாறு கூறி இருக்கலாம் என்றார். #ilaganesan #rahulgandhi #pmmodi 

    அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பாக இன்று மாலைக்குள் உரிய பதில் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #MinisterThangamani

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை காலத்தில் எவ்வளவு மின்சார தட்டுப்பாடு இருந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் மின்சார வாரியம் தயாராக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 15 ஆயிரத்து 689 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தது.

    இனி வரும் காலங்களில் 16 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி திருப்திகரமாக  உள்ளது. அதனால் கோடைகாலத்திலும் மின்வெட்டு என்பதே வராது.

    தமிழகத்தில் மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தில் 2 மணி நேரம் குறைப்பு என்று கோர்ட்டு கூறியுள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணியில் இதர கட்சிகள் (தே.மு.தி.க.) இணைவது தொடர்பாக இன்றுமாலைக்குள் உரிய பதில் கிடைத்துவிடும். மத்தியில் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் நலன் கருதியே செயல்பட்டு வருகின்றனர்.

    இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு வாழ்வாதாரம் பெற்றுத்தரும் வகையில் போராடி நிரந்தர தீர்வாக காவிரி ஆணையத்தை பெற்றுத் தந்துள்ளனர்.

    அதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது. மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தியது பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார். #MinisterThangamani

    கூட்டணி ரகசியங்களை காப்பாற்ற முடியாத தி.மு.க.வால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #admk #mkstalin #parliamentelection #dmdk

    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா எங்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்லலாமே தவிர, அவர்கள் தயவில்தான் அ.தி.மு.க. ஆட்சி செய்கிறது என்று சொல்லக்கூடாது. சட்டமன்றம்தான் ஆட்சி செய்யும் அதிகாரத்தை தருகிறது. அங்கு அ.தி. மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு நல்ல ஆட்சியை அமைத்து தந்தார். அந்த ஆட்சியை இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறந்த முறையில் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி ஜெயலலிதாவையும், எம்.ஜி. ஆரையும் பாராட்டி சென்றார்.

    சென்னை மத்திய ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டுவதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. வலிமையான மக்கள் இயக்கம். தமிழக மக்களின் உரிமைக்காகவும், மாநில சுய ஆட்சிக்காகவும், மொழியை காப்பதற்காகவும், பெரியார்,அண்ணா வழியில் எம்.ஜி.ஆர்., கட்சியை தொடங்கினார்.

    வருகிற சட்டமன்ற இடைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஜெயலலிதா தந்த 123 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 124ஆக மாறும் நிலை ஏற்படும்.

    ரகசியங்களை எப்போதும் வெளியிடுவது தி.மு.க.வின் வாடிக்கை. துரைமுருகன் கூட்டணி பேசிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் போர் நடந்த போது சந்திரசேகர் பிரதமராகவும் அவருக்கு ராஜூவ்காந்தி ஆதரவாகவும் இருந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை இலங்கைக்கு தந்ததால் அன்றே ஆட்சி கலைக்கப்பட்டது. கூட்டணி ரகசியங்களை காப்பாற்ற முடியாத தி.மு.க.வால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.


    மு.க.ஸ்டாலினின் அண்ணன் அழகிரி தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று கூறியிருக்கிறார். அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. துரோகத்தை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி.

    2014 தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஜெயலலிதா அப்போது தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பா.ஜனதா கூட்டணி 3 தொகுதிகளில் வென்றது. ஆனால் இன்றைய நிலை அவ்வாறு இல்லை. இரு முனை போட்டி நிலவுகிறது. அதனால்தான் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #admk #mkstalin #parliamentelection #dmdk

    அதிமுக எம்.பி.க்களால் பயனில்லை என்று பிரேமலதா கூறியதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ADMK #MinisterJayakumar #PremalathaVijayakanth
    சென்னை:

    சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களை ஒருமையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் பற்றி பிரேமலதா விமர்சனம் செய்ததற்கும் பதில் அளித்தார்.


    யாராக இருந்தாலும் ஒருமையில் பேசக்கூடாது. பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதை பிரேமலதா தவிர்த்திருக்கலாம்.

    37 அ.தி.மு.க. எம்.பி.க்களால் பயன் இல்லை என்று பிரேமலதா கூறியதை ஏற்க முடியாது. மேகதாது பிரச்சனையில் அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள்தான் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர்.

    தே.மு.தி.க. மீது நாங்கள் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. யாரையும் கடுமையாக விமர்சித்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்பதுதான் எங்கள் கொள்கை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #PremalathaVijayakanth
    அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான நேர்காணல் தலைமை கழகத்தில் வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் வேட்பாளர் பட்டியலை 13-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். #admk #parliamentelection

    சென்னை:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளை இந்த கூட்டணியில் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுத்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான நேர்காணல் தலைமை கழகத்தில் வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதன் பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை தயார் செய்கின்றனர்.

    அதன் பிறகு 13-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே எம்.பி.யாக உள்ளவர்களில் யார்- யாருக்கு ‘சீட்’ கிடைக்கும், யாருக்கெல்லாம் ‘சீட்’ இல்லை என்பது அப்போது தெரியவரும்.

    தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்ட நிலையில் இன்று தி.மு.க. நிர்வாகிகளுக்கான நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது.

    21 சட்டசபை தொகுதிகளுக்கு இன்றும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது.

    இதன் பிறகு தி.மு.க. வேட்பாளர் பட்டியலை 11-ந்தேதி மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #admk #parliamentelection

    தேமுதிக தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக தங்கள் முடிவை நாளைக்குள் அறிவிக்கும்படி அதிமுக மூத்த தலைவர்கள் கறாராக கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இந்த கட்சிகள் தவிர விஜயகாந்தின் தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஏற்கனவே 15 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 25 தொகுதிகளில் 4 தொகுதிகளை தே.மு.தி.க. வுக்கு தருவதாகவும் அ.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டது.

    ஆனால் 4 தொகுதிகளை ஏற்க மறுத்த தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையாக 7 தொகுதிகள் வேண்டும் என்று முதலில் முரண்டு பிடித்தது. அ.தி.மு.க.வை மிரட்டும் வகையில் மற்றொரு பக்கம் தி.மு.க.வுடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது.

    மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசியதால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அதிக தொகுதிகளை கேட்டு தி.மு.க.விடமும் தே.மு.தி.க. பிடிவாதம் பிடித்ததால் தி.மு.க.வினர் அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கவில்லை.

    இதன் காரணமாக அ.தி.மு.க.விடம் கூட்டணி சேருவதை தவிர வேறு வழியில்லை என்ற பரிதாப நிலைக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் தே.மு.தி.க. தலைவர்களிடம் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தனர்.

    தே.மு.தி.க.வின் இரட்டை நிலை காரணமாக அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. தலைவர்கள் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள்தான் தர முடியும் என்று தெரிவித்தனர். பிறகு அது 4 தொகுதியாக அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    4 தொகுதிகளை பெற்றுக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாக தே.மு. தி.க. மூத்த தலைவர்களும் சம்மதித்துள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக நேரம் சரியில்லை என்று கூறி கூட்டணி உடன்பாட்டுக்கு தே.மு.தி.க. தலைவர்கள் வரவில்லை.

    இதனால் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய நிலை எடுக்கும் என்ற கேள்விக்குறி நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் சரமாரியாக தாக்கி பேசினார். அதோடு தனித்து போட்டியிட பயப்பட மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினார்.



    பிரேமலதாவின் இந்த பேட்டி அ.தி.மு.க. மூத்த தலைவர்களை யோசிக்க வைத்துள்ளது. தே.மு.தி.க.விடம் கூட்டணிக்காக கெஞ்சக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

    பா.ஜனதாவின் வேண்டுகோளுக்காகவே தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க. தலைவர்கள் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் தே.மு.தி.க. தலைவர்கள் தொடர்ந்து தொகுதி பங்கீட்டை முடிவு செய்யாமல் இழுபறி செய்த படியே இருப்பது மற்ற தேர்தல் பணிகளை பாதிப்பதாக அ.தி.மு.க.வில் அதிருப்தி உருவாகி உள்ளது. எனவே தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பில் கெடு விதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை)க்குள் தே.மு.தி.க தனது முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கெடுவை அ.தி.மு.க. மூத்த தலைவர்களே மிகவும் கறாராக கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க. தலைவர்களின் அதிருப்தி, கோபம் வெடிக்க தொடங்கி இருப்பதால் தே.மு.தி.க. தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை நாளை காலை நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை தே.மு.தி.க. தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர்.

    அப்போது தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டதும் இரு கட்சிகளின் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

    தே.மு.தி.க.வை தொடர்ந்து த.மா.கா.வுடனும் நாளை தொகுதி பங்கீட்டை அ.தி.மு.க. முடித்து விடும் என்று தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள 19 அல்லது 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. நாளை தே.மு.தி.க., த.மா.கா.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அ.தி.மு.க. கூட்டணி உடன்பாடு முழுமை பெற்று விடும்.

    இதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் தொகுதிகள் ஒதுக்கீடும் முடிவு செய்யப்பட்டு விடும். 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    பா.ஜனதா, பா.ம.க. வேட்பாளர்களையும் அடுத்த வாரம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. #LSPolls #ADMKAlliance #DMDK
    பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களின் செல்போன் எண்ணில் ஜெயலலிதா குரலில் தேர்தல் பிரசார ஆடியோ மூலம் வாக்கு சேகரிக்க அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. #ADMK #ParliamentElection #Jayalalithaa
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தேர்தல் வியூகம் ஆகியவற்றில் தீவிரமாக உள்ளன.

    தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரசார யுக்திகளை ஒவ்வொரு கட்சியும் ஆராய்ந்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியும் வருகிறார்கள்.

    கட்சி தலைவர்களின் குரலை பதிவு செய்து அதை பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி பிரசாரம் செய்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் சமூக வலைதளங்களில் பிரசாரம் தொடங்கப்பட்டுவிட்டது.



    ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் அவரது குரலை வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி பிரசாரம் செய்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் குரல் பதிவு தொழில் நுட்பத்தை அ.தி.மு.க. மேலும் மேம்படுத்தி இருக்கிறது. அதில் வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு வரும் ஜெயலலிதா குரல் பிரசார ஆடியோவில், அந்த செல்போன் எண்ணுக்கு உரியவரின் பெயரை அழைத்து வாக்கு கேட்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த பிரசார குரல் தினமும் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு அனுப்பப்படுகிறது. #ADMK #ParliamentElection #Jayalalithaa

    பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார். #kanimozhi #admk #bjp #parliamentelection

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம், ஏ.வேலாயுதபுரம் ஆகிய இடங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    தி.மு.க.வின் ஊராட்சி சபை கூட்டம் பொதுமக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இதுபோன்ற ஊராட்சி சபை கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு, மக்களின் அனைத்து குறைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் மிரட்டலுக்கு பயந்து, தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு, பா.ஜ.க.வுக்கு காவடி தூக்கி வருகிறது.

    நீட் தேர்வு திணிப்பு, ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் போன்றவற்றில் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், மக்கள் விரோத போக்கை அ.தி.மு.க. அரசு கடைப்பிடித்து வருகிறது. தமிழக அரசின் தவறான கொள்கைகளால், கிராமங்களில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன.

    கிராமங்கள்தோறும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர்.

    மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு எதிர்த்த பல திட்டங்களை தற்போது அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு கூட நேர்மையாக இல்லாத அ.தி.மு.க.வினர், மக்களுக்கு எப்படி நேர்மையாக இருப்பார்கள்?. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று, சந்தர்ப்பவாத கூட்டணிக்கு பாடம் புகட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #admk #bjp #parliamentelection

    அ.தி.மு.க.,-பா.ஜ.க. கூட்டணியின் வாக்குகள் நோட்டாவிற்கு கீழ் செல்லும் என அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். #parliamentelection #admk #thangatamilselvan

    திருப்பரங்குன்றம்:

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    துணைச்செயலாளர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஒன்றிய செயலாளர் கருத்தக் கண்ணன், பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் ராமமூர்த்தி, சுமதிமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பகுதி செயலாளர் வீரமணி வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் அ.ம.மு.க. வில் உள்ளனர். மத்திய, மாநில அரசு மீது மக்கள் அதிருப்தி உள்ளது. பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிரான வாக்குகள் அ.ம.மு.க.விற்கே வந்து சேரும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த ஆட்சியை எதிர்க்க திராணி இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளதால் தி.மு.க.விற்கு வாக்களிக்க மாட்டார்கள். பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணி குறித்து சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை பார்த்தால் ராமதாஸ், அன்புமணி ஆகிய. இருவரும் தமிழகத்தை விட்டே வெளியேறும் நிலை உருவாகும். அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியின் வாக்கு சதவீதம் நோட்டாவிற்கு கீழ் செல்லும்.

    இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும் என்பதை அ.ம.மு.க. நிர்ணயிக்கும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுப்போம். அடிமை அரசின் அவலத்தால் மத்தியஅரசு தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது.

    ஆர்.கே.நகரை போன்று வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க.விற்கே வெற்றி எளிதில் கிட்டும். இளம் வாக்காளர்கள் அ.ம.மு.க.வின் பக்கமே உள்ளனர்.

    மெகா கூட்டணி, மேஜிக் கூட்டணி அமைத்தாலும் வெற்றி அ.ம.மு.க. விற்கே, அடுத்த ஆட்சி அ.ம.மு.க.வின் ஆட்சி தான் என்பதை பொதுமக்களே கூறுகின்றனர். அ.ம.மு.க. ஒன்றரை ஆண்டில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.

    தீப்பெட்டி கூட எடுத்துச் செல்ல முடியாத காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென தாக்குதல் நடத்துவதற்கான சூட்சுமம் என்ன? பாராளுமன்ற தேர்தல் வருமா? போர் வருமா? என்ற நிலை உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை தழுவும், அ.ம.மு.க. 40 இடங்களிலும் வெல்லும்.

    ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்த நிலையில் அம்மா இறப்பில் மர்மம் இல்லை என்பது தெரிந்தால் சசிகலாவிற்கு ஆதரவு பெருகும் என்ற நிலை உள்ளது.

    எனவே ஆணையம் விசாரணை முடிவுக்கு வரவில்லை. தர்ம யுத்தம் நடத்திவிட்டு தற்போது ஆணையத்தில் ஆஜராகாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலம் தாழ்த்தி வருகிறார்.

    வழக்கை முடிக்காமல் பா.ஜ.க.. அ.தி.மு.க. மூடி மறைக்கிறது. மக்களவை தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளைஞரணி செயலாளர் டேவிட் அண்ணாத் துரை, அமைப்பு செயலாளர் சோழன் பழனிச்சாமி, ஒன்றிய துணைச்செயலாளர் நிலையூர் முத்துராஜா, ஆசைத்தம்பி, சங்கேஸ்வரன், பி.முருகன், முருகன், ரங்கராஜ், கிருஷ்ணமூர்த்தி, சூரி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். #parliamentelection #admk #thangatamilselvan

    தே.மு.தி.க. நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #ministerrajendrabalaji #dmdk #admk

    சிவகாசி:

    சிவகாசி நகராட்சி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. புதிய தமிழகம், தே.மு.தி.க. வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தே.மு.தி.க. நிச்சயம் எங்கள் அணிக்கு வரும்.

    ஜெயலலிதா இருந்த போது பா.ம.க. எங்கள் அணிக்கு வரவில்லை. தற்போது அம்மா இல்லாததால் வலுவான கூட்டணி அமைக்க பா.ம.க,வுடன் சேர்ந்துள்ளோம். கமல், ரஜினியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் தற்போது அமைத்துள்ளதுதான் வலுவான கூட்டணி.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வேதனை தெரிவித்துள்ளார். #ThambiDurai
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கரடிப்பட்டி பகுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறது. பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது.



    மோடி அரசு தைரியமாக ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து, அவர்களின் திறமையை பாராட்டி அவர்களுக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது.

    இது நம் நாட்டின் நலனுக்காக செய்யப்பட்ட ஒன்று. இதில் ராணுவத்தின் வலிமையும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஒரு வலிமையான நாடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் எல்லாம் இனி இந்தியாவை எப்போதும் தாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால், இனிமேல் அதையெல்லாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் ராணுவம் வலிமை வாய்ந்ததாக இந்தியாவில் இருக்கிறது. அதற்கான முழு பெருமையும் மோடியையே சாரும்.

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு எப்போதும் பதற்றமாகவே இருப்பதால் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்களின் ஆதரவை பெற்று ராணுவத்தையும் வலிமைப்படுத்தி எந்த நாடும் தாக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார்.

    எப்போது போர் மூண்டாலும் இந்தியாவை நோக்கி படையெடுப்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது. நம்முடைய ராணுவம் வலிமையாக உள்ளது. யாரும் ஊடுருவ முடியாது. போர் வந்தால் சந்திக்கின்ற தெம்பும் திராணியும் ராணுவத்திற்கு உள்ளது. அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆகவேதான் மோடி கன்னியாகுமரி உள்ளிட்ட எங்கு வேண்டும் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ThambiDurai
    ×