search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார். #ADMK #DoubleLeafSymbol #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
     
    இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

    இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த நிலையில்,  நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 



    இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது செல்லும் என தெரிவித்தனர். 

    இந்நிலையில், நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தத் தீர்ப்பின் மூலம் உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கான ஆதாரங்களை நாங்கள் கோர்ட்டில் வழங்கியுள்ளோம். நல்ல தீர்ப்பு கிட்டியுள்ளது. தினகரன் எங்களுக்கு இடையூறு கொடுக்கவே வழக்கு தொடர்ந்தார். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். #ADMK  #DoubleLeafSymbol #EdappadiPalaniswami
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Athikadavuavinashiproject #EdappadiPalaniswami
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,063 ½ கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.

    மேலும் ரூ.604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகியவை ரூ.66 கோடியில் மேம்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் மொத்தம் ரூ.1,875 கோடியே 47 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன.

    இந்த திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாஇன்று (வியாழக்கிழமை) திருப்பூர்- காங்கயம் ரோடு பத்மினி கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட அனைத்து திட்டங்களும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தெரியாமல் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. இது மக்கள் விரோத ஆட்சி என பேசிவருகிறார்.

    வேண்டும் என்றே மக்களை குழப்பி வருகிறார். எத்தனையோ கனவு கண்டார். அத்தனை கனவுகளும் கானல் நீராகிவிட்டது. அம்மா இறந்தவுடன் அ.தி.மு.க. உடைந்து விடும் என கனவு கண்டார். அது நடக்கவில்லை. அதன் பிறகு ஆட்சி இன்று கலைந்து விடும், 6 மாதத்தில் கலைந்து விடும். இன்னும் ஒரு ஆண்டு மட்டும் தான் இந்த ஆட்சி இருக்கும் என நினைத்தார்.

    ஆனால் 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-வது ஆண்டையும் தொடங்கியுள்ளோம். தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பாலம் கட்ட அடிக்கல் நாட்டி அப்படியே நிறுத்திவிட்டனர். ஆனால் அந்த பாலப்பணிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

    தற்போதைய அ.தி.மு.க. அரசு அனைத்து அதிகாரிகளுடன் ஒரு முறைக்கு பல முறை ஆலோசனை நடத்தி சரியான முறையில் திட்டமிட்டு ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றி வருகிறோம். மத்திய, மாநில அரசு இணைந்து திருப்பூரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை இன்று தொடங்கியுள்ளோம்.

    இந்த திட்டங்கள் அனைத்தும் 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும். 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து திருப்பூருக்கு வருபவர்கள், இது திருப்பூரா, அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று யோசிக்க தோன்றும் அளவுக்கு திருப்பூர் மாறிவிடும்.

    இந்த திட்டங்கள் குறித்து எல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. இதற்காகத்தான் இந்த திட்டங்கள் மூலம் திருப்பூருக்கு என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை எல்.இ.டி. டிவி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

    தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. ஆனால் அ.தி.மு.க. அப்படி அல்ல. விசுவாசமாக பணியாற்றும் ஒவ்வொரு தொண்டனுக்கும் வீடு தேடி பதவி வரும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. திருப்பூரில் 2-வது கூட்டு குடிநீர்திட்டத்தை எம்.ஜி.ஆர். அரசு நிறைவேற்றியது. 3-வது கூட்டு குடிநீர் திட்டத்தை அம்மா அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இன்று 4-வது கூட்டு குடிநீர் திட்டத்தை அம்மா வழியில் வந்த அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

    இன்று நடைபெற்ற விழாவில் 10 பணிகளுக்கு 1807 கோடியே 45 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டுவதும் நாங்கள் தான், 2 ஆண்டுகளில் பணிகளை முடித்து நாங்களே வந்து திறந்து வைப்போம். திருப்பூரில் மட்டும் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.



    ஸ்டாலின் ஊர், ஊராக சென்றாலும் சரி, தெரு, தெருவாக சென்றாலும் சரி, மக்கள் அவரை பற்றி நன்கு அறிந்து வைத்து உள்ளனர்.

    இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலமாக தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மின்சார துறை, உள்ளாட்சி துறை, போக்குவரத்து துறை என ஒவ்வொரு துறையும் சிறப்பாக செயல்பட்டதற்காக அ.தி.மு.க. அரசு விருது பெற்று இருக்கிறது.

    மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 14 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களது வங்கிகணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அம்மா அரசு தொழிலாளர்களின் நலன் கருதி 2 ஆயிரம் ரூபாயை அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இப்போது பெறப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிலர் விடுப்பட்டு உள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். உடனே அதிகாரிகளுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளேன். விடுப்பட்டுள்ள அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தை வருகிற 4-ந்தேதி சென்னையில் நான் தொடங்கி வைக்கிறேன்.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி உயராமல் பார்த்து கொண்டு இருக்கிறோம். பொது விநியோக துறை, மருத்துவ துறை போன்றவற்றில் சிறப்பான சேவையை செய்து வருகிறோம். இன்னும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ஒவ்வொன்றாக அறிந்து செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். எம்.பி.க்கள் சத்திய பாபா, மகேந்திரன், செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜய குமார், கரைப்புதூர் நடராஜன், தனியரசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாக ஆணையாளர் கார்த்திகேயன் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, எம்.எஸ்எம். ஆனந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  #Athikadavuavinashiproject #EdappadiPalaniswami
    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாவிட்டால் த.மா.கா.வுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. #TamilMaanilaCongress #GKVasan #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. இடம் பெற்றுள்ளது. தே.மு.தி.க.வும் இடம் பெறும் என்று அமைச்சர்களும், பா.ஜனதாவினரும் கூறி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். த.மா.கா. தங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது.

    த.மா.கா.வுக்கு ஒரு இடம் தருவதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பில் வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு அந்த கட்சி வந்தால் அதற்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இந்த கூட்டணி முடிவானால் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாவிட்டால் த.மா.கா.வுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்னும் 2 நாளில் இதுபற்றி முடிவு செய்யப்பட்டு விடும் என்று த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #TamilMaanilaCongress #GKVasan #ADMK
    மத்திய பாரதிய ஜனதா ஆட்சியிடமிருந்தும், அவர்களுக்க அடிமை சாசனம் எழுதி கொடுத்த அ.தி.மு.க. அரசிடமிருந்தும் நாட்டையும், மக்களையும் மீட்க வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    கோவை:

    கோவை கொடிசியாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது-

    எனது தந்தை கம்யூனிஸ்ட் கொள்கையில் ஆர்வம் கொண்டு எனக்கோ அன்றைய தினத்தில் இறந்த ரஷிய அதிபரின் பேரான ஸ்டாலின் என்ற பெயர் வைத்து உள்ளார்.

    இப்பெயரால் எனக்கு பள்ளியில் இடம் தர மறுத்து நிர்வாகம் அறிவுறுத்தியது.பெரியாரை கலைஞர் சந்திக்காவிட்டால் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருப்பார்.மா. சிங்கார வேலுவிற்கு 1925- ல் கம்யூனிஸ்டு கட்சி கொடி ஏற்ற வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் ரஷிய அதிபர் ஸ்டாலினை பெரியார் சந்தித்து இருந்தால் தி.மு.க. என்ற இயக்கம் வந்திருக்காது.

    அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்ற ஆட்சி கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி. மக்களுக்கு பயன் தராத ஆட்சி எடப்பாடி, மோடி ஆட்சி. ரபேல் ஊழலில் லஞ்சம் இல்லை என எதிர் கட்சிக்கு பிரதமர் இதுவரை பதில் தர இல்லை. 5 விமான நிலையங்கள் பராமரிப்பு செய்ய அதானி குடும்பத்திற்கு ஒதுக்கியது ஊழல் இல்லையா?

    இந்த ஆட்சி தொடர்ந்தால் பல அனிதாக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டி இருக்கும். தற்போது இருப்பது எம்.ஜி.ஆர். ஆட்சி அல்ல.

    பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழல் ஒரே இடத்தில் உள்ளது. இதற்காக ஒரே நாடு என்ற கோசத்தை முன்னிலைபடுத்தி வருகின்றனர். பல நேரங்களில் பல வீரர்கள் உயிரிழந்தனர். இதனை மூடி மறைக்க பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயல்கிறார். இந்த ஆட்சி தொடர்ந்தால் வேலை வாய்ப்பு பறிபோகும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நாட்டை விற்று கொண்டிருக்கும் மத்திய பாரதிய ஜனதா ஆட்சியிடமிருந்தும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த அ.தி.மு.க. அரசிடமிருந்தும் நாட்டையும், மக்களையும் மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    2 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் மத்திய அரசு 15 லட்சத்தை தருவதாக அறிவித்து ஏன் இது நாள் வரை தரவில்லை. தமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது. தமிழிசை கூறுவது போல ஒரு போதும் மலராது. இந்தியா முழுவதும் தாமரை கருகி கொண்டு உள்ளது. 21 சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி அரசு வீட்டிற்கு செல்லும். எந்த முகத்தோடு எடப்பாடிக்கு ராமதாஸ் வாங்கு கேட்பார். எடப்பாடி பா.ம.க.வினருக்கு அல்வா கொடுத்து உள்ளார். ஓபிஎஸ் வழக்கு தீர்ப்பு வரும்போது இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். அமித்ஷா அண்ட புளுகை அரங்கேற்றி வருகிறார். அனைத்து மக்கள் நலன்களை காக்க உருவான அணி இந்த அணி. 40 மக்களவை தொகுதியிலும், 21 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    ஒரு யுத்தம் மூண்டு விட்ட பிரமையை சித்தரித்து கொண்டிருக்கின்றனர். எல்லையை காக்கும் இந்திய வீரர்களை எங்கள் மனதில் பூஜிக்கிறோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தா? மோடி ஒரு பாசிஸ்ட் என குற்றம்சாட்டுகிறேன் , அவரிடம் நேராகவே கேட்பேன்.

    முசோலினி ,ஹிட்லர் போல மோடி பேசுகிறார். கம்யூனிஸ்ட் வளர்ந்து வருவதை பொறுக்காமல் பெர்லின் பாராளுமன்ற கட்டிடத்தை ஹிட்லரே எரித்து விட்டு கம்யூனிஸ்ட் மீது குற்றம்சாட்டினர். இதே போலவே முசோலினியும் செய்தார் தான் நினைத்ததை சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவர் தான் பாசிஸ்ட். 6 சர்வதேச விமான நிலையங்கள் அதானிக்கு 50 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது-

    இந்தியா மதவெறி சக்திகளிடமும் ,கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருந்தால் இப்போது வரை 10 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும் . 15 லட்சம் ரூபாயின் மதிப்பு 6ஆயிரம் ரூபாயாக குறைந்து விட்டது. தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருக்கின்றது. எதிர்கால சந்ததிக்கு வாழ்வா? சாவா ? ஜனநாயகம் இருக்க வேண்டுமா? இல்லையா ? என்பதற்கான தேர்தல். இப்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக கொந்தளிப்பு. இதை மோடிக்கு ஆதரவாக மாற்ற முயல்கின்றனர் இதனால் தேர்தலை தள்ளிப்போடுவார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டு இருக்கின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விடுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது-



    நாட்டையும், தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது கொள்கை சார்ந்த கூட்டணி. தொலைநோக்கு பார்வையில் உருவான கூட்டணி. ஸ்டாலினை முதல்வராக முன்னிலைபடுத்தி 40 இடங்களிலும் வெற்றி பெற கூடிய கூட்டணி. சனாதன சக்திகளை விரட்டியடிக்க இந்த மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றியிருப்பது வரவேற்கதக்கது. சாதி மத வெறி கும்பல்களிடையே இந்த ஆட்சி பிடி கொண்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மகாத்மா காந்தியின் படத்தை பொது இடத்தில் வைத்து துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர். இந்திய அரசியலைப்பு சட்டத்தை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தூக்கி எறிவர். ஒரே மதம். ஒரே மொழி, என்ற ஒற்றை கோட்பாடு கொண்டு எதிர் கால திட்டத்தில் செயல்படுகிறது. போர் நடக்கும் சூழல் உருவாகி உள்ளதால் தேர்தல் தள்ளி போகலாம் என்ற செய்தி வருகிறது. தேசத்தையும், தமிழகத்தையும் காப்பதற்காக இங்கு ஒன்று பட்டு உள்ளோம். மக்களிடையே பகையை உருவாக்க முயற்சி நடக்கிறது. கார்ப்பரேட் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இந்த ஆட்சி உள்ளது. எதிர் கட்சி கேள்விக்கு மோடியிடம் பதில் இல்லை. அயல் நாட்டு பயணங்களில் கார்ப்பரேட் நிர்வாகிகள் உடன் சென்றனர். 2000 ரூபாய் விவசாயிகள் வங்கியில் செலுத்த மோடி அரசு முனைப்புடன் உள்ளது. அதனை தொடர்ந்து எடப்பாடி அரசு நலிந்த தொழிலாளர்கள் கணக்கில் 2000 செலுத்தப்படுகிறது. மோடி அரசை காப்பி அடிக்கும் அரசாக உள்ளது. பா.ம.க.இந்த கூட்டணிக்கு வராததால் தமிழகம் காப்பாற்றப்பட்டு உள்ளது. சாதி வெறி, மத வெறி அப்புறப்படுத்த வேண்டும். சமூக நீதியை காப்பாற்றுவதை தவிர வேற நாதியில்லை. ஆகவே நாங்கள் அனைவரும் கை கோர்த்து நிற்கிறோம். இந்திய தேசத்தை காப்பாற்ற மோடி ஆட்சியை அப்புறப்படுத்துவோம். மாநிலத்தில் எடப்பாடி அரசு விரட்டியடிக்கப்பட்டு அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது-

    மக்களை ஒன்றினைப்பதற்காக மட்டுமே தி.மு.க. தலைமையில் இந்த கூட்டணி. மிக, மிக வலுவான கூட்டணி தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மதசார்பின்மைக்கு இந்த கூட்டணியே சான்று. இந்தியா ஒன்றுமைக்கு நலன் பயக்கும் அனைவரையும் சகோதர்களாகவே பார்ப்போம். இந்தியாவை முன்னேற்றியதில் 10 ஆண்டுகாலத்தில் 7 ஆயிரம் கோடி விவசாய கடனை கலைஞர் தள்ளுபடி செய்தார். தேர்தல் நேரத்தில் 6000 வழங்குவது எந்த விதத்தில் பயன் அளிக்கும். இந்திய பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. புதிய தொழிற்சாலை உருவாக இல்லை. வளர்ச்சியை உருவாக்க மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. செயல் திட்டம் என்பது மோடி , எடப்பாடி அரசுக்கு இல்லை. இட ஒதுக்கீட்டை அமல் படுத்தியவர் நேரு. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டை பெரியார் முன் எடுத்து சென்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், டி.ராஜா, சுதாகர் ரெட்டி, நல்லகண்ணு, தா. பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினார். #DMK #MKStalin
    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருப்பதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்தார். #ActorRanjith #TTVDinakaran
    சென்னை:

    சிந்துநதிபூ, மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரஞ்சித். இவர் முதலில் அ.தி.மு.க.வில் இருந்து வந்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ம.க.வில் இணைந்தார். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது, ‘நாட்டை மீட்டெடுத்து சீர்ப்படுத்தக்கூடிய தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் உண்டு. அன்புமணி ராமதாஸ், தமிழகத்தை ஆளும் தலைமை பதவியை ஏற்றால்தான் முடியும். அவருக்கு உறுதுணையாகவே கட்சியில் சேர்ந்தேன்’ என்றார்.

    ரஞ்சித்துக்கு பா.ம.க.வில் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி கூட்டங்களிலும் பங்கேற்றார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, கூட்டணியில் பா.ம.க இணைந்தது. இதனால் ரஞ்சித் பா.ம.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்தார்.

    தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ரஞ்சித், “மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு தமிழக மக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். தற்போது அவர்கள் தன்மானத்தை விட்டு கூட்டணிக்காக விலை போய்விட்டனர். அதனால்தான் அந்தக்கட்சியிலிருந்து வெளியேறி அ.ம.மு.க.வில் இணைந்திருக்கிறேன்.

    என்னை தொடர்ந்து நிறைய பேர் அந்த கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அ.ம.மு.கவில் இணைந்து எனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். டி.டி.வி.தினகரன் ஒரு நல்ல மக்கள் தலைவராக வலம் வருகிறார். வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறேன்” என்றார்.  #ActorRanjith #TTVDinakaran
    பிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #ADMK #RajendraBalaji #PMModi #Pakistan
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஸ்வநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. என்ற இயக்கம் எங்கள் நாடி நரம்புகளில் கலந்துவிட்ட ஒன்று. அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது. அ.தி. மு.க. அமைத்துள்ளது மங்களகரமான கூட்டணி. தி.மு.க. அமைத்துள்ளது மங்கிப்போன கூட்டணி. தி.மு.க. கூட்டணி உதிர்ந்து போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. ஒன்றுக்கும் ஆகாத கூட்டணி.

    விருதுநகர் மாவட்டத்தை பல்வேறு துறைகளில் முதல் மாவட்டமாக உருவாக்கி உள்ளோம். தற்போது நாட்டில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்துகிறார்கள். 40 வீரர்கள் இறந்ததற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

    வீரத்தில் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை நமது இந்திய ராணுவம் அழித்திருக்கின்றது. தேசிய பற்றுடைய மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வர வேண்டும்.

    இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் கட்சிகளுக்கு நீங்கள் ஓட்டு போடாதீர்கள். இந்திய இறையாண்மைக்கு உழைக்கின்ற பி.ஜே.பி., அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணியை ஆதரியுங்கள். இன்றைக்கு மோடியை கண்டு சர்வதேச நாடுகள் பயப்படுகின்றன.


    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலறுகின்றார். மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது. இந்த வி‌ஷயத்தில் அண்ணா தி.மு.க. தொண்டன் மட்டுமல்ல நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மோடியின் கரத்தை உயர்த்தி பிடிக்க தயாராக இருக்கின்றனர்.

    அமிர்தசரசில் இருந்து லாகூர் சில கிலோ மீட்டர் தான். ஒரு குண்டு போட்டால் உங்களது ஊரே காலியாகி விடும். நாட்டின் பிரதமராக மோடி தொடர்ந்து இருக்க வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழக முதலமைச்சராக இருக்க வேண்டும்.

    நாட்டு மக்கள் அண்ணா தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள். எம்.பி. தேர்தல், இடைத்தேர்தல்களில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் நலன் ஒன்றே தாரக மந்திரம் என்ற அடிப்படையில் செயல்படும் இந்த ஆட்சிக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #ADMK #RajendraBalaji #PMModi #Pakistan
    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. உறுதியாக வரும். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். #pollachijayaraman #admk #dmdk

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக அரசிடம் இருந்து தொடர்ந்து நிதிபெற்று தந்து பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    மருத்துவமனை விரி வாகத்திற்காக 5 மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.10.50 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை செவ்வாய்கிழமை நடைபெற்றது.

    பூமிபூஜையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தொடங்கி வைத்தார். மகேந்திரன் எம்.பி., முன்னாள் நகர்மன்றத்தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், தொழில் வர்த்தக சபைத்தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப் பினர்கள் ஜேம்ஸ்ராஜா, நீலகண்டன், அதிமுக நிர்வாகிகள் வீராசாமி, வக்கீல் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூமிபூஜையின்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது,

    பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு என அனைத்து சிகிச்சை பிரிவுகளும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வால்பாறை, பழனி, தாராபுரம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்றார்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. உறுதியாக வரும். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி. தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த காலங்களில் தி.முக. வை கடுமையாக விமர்சித்துள்ளன.

    இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தன. ஆனால், தற்போது, திமுகவுடன் அதே கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது எப்படி என்று தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார். #pollachijayaraman #admk #dmdk

    கரூர் அருகே விபத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கிய சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #MinisterVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம் ரெங்கநாதன்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றார். க.பரமத்தி அருகே சென்றபோது, தென்னிலை பகுதியில் உள்ள குவாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது.

    இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரி, அமைச்சர் காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் காரின் முன்பக்க விளக்குகள் உடைந்து சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

    இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் வரை அதே காரில் சென்று அங்கிருந்து வேறொரு காரில் பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை ஓட்டி வந்தது தஞ்சையை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது. மதுபோதையில் அவர் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 23-ந்தேதி நடந்த கார் விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி., ராஜேந்திரன் இறந்தார். மறுநாள் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.பி. காமராஜ் கார் விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பினார். இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விபத்தில் சிக்கியது அ.தி.மு.க. கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #MinisterVijayabaskar
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். #ministersellurraju #admk #parliamentelection

    மதுரை:

    மதுரை மாநகர் அருள் தாஸ்புரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர்ராஜூ பேசியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த இயக்கத்தை மக்கள் போற்றும் மகத்தான இயக்கமாக வழிநடத்தி வருகிறார்கள்.

    ஏழை எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும் காலம் இது. எனவே மக்கள் இந்த அரசு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

    ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மெகா கூட்டணியை அ.தி.மு.க. ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும்.

    வெற்றியுடன் பிறந்த இயக்கம். இதனை வீழ்த்த யாராலும் முடியாது. தமிழக மக்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தந்துள்ளோம். எனவே இந்த ஆட்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., நிர்வாகிகள் தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், சோலை ராஜா, பரவை ராஜா, சண்முகவள்ளி, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #admk #parliamentelection

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமானது என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார். #admk #dmdk #parliamentelection

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அ.தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

    இந்த கண்காட்சியை கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் அமைச்சர் துரைகண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பட்டுகோட்டை எம்.எல்.ஏ. சி.வி.சேகர், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியளித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கட்சியோடு கூட்டணி சேர மற்ற கட்சிகளோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் ஆத்மா எங்களை வழி நடத்துகிறது. இதனால் தான் 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட சிலரால் முடியவில்லை. எந்த கட்சி தான் எந்த கட்சியை விமர்சனம் செய்யாமல் இருந்துள்ளது. எனவே கூட்டணி என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு.

    தே.மு.தி.க. இடைதேர்தலில் எம்.எம்.ஏ. மற்றும் மாநிலங்களவையில் எம்.பி. சீட் கேட்பதால் தான் அவர்களுடன் கூட்டணியில் இழுபறி என கருத்து நிலவுகிறதே என நிருபர்கள் கேட்டதற்கு, இதையெல்லாம் நாங்கள் வெளியில் சொல்ல முடியாது. இது ரகசியமானது.

    கூட்டணி பற்றி ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு கருத்துகளை கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என்ன சொல்கிறார்களோ அது தான் கட்சியின் இறுதியான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார். #admk #dmdk #parliamentelection

    அதிமுக- பாமக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று நெய்வேலியில் டிடிவி தினகரன் எம்எல்ஏ பேசினார். #dinakaran #pmk #admk

    நெய்வேலி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 2-வது நாளாக மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.

    குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சத்திரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். முத்தாண்டிகுப்பம் கடைவீதி, நெய்வேலி புதுநகர் மெயின் பஜார், வடலூர் ஆகிய இடங்களுக்கு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. பா.ம.க. இணைந்தது கேள்விக்குறியான செய்தியாக உள்ளது. பா.ம.க. இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என கூறியிருந்தனர். ஆனால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது.


    அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இந்த கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க. அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. மக்கள் நம்பிக்கையை இழந்த இந்த அரசை இனிமேலும் தொடரவிடக்கூடாது. எனவே மக்கள் பொறுத்திருந்தது போதும்.

    எனவே உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து எங்களை வெற்றி பெற செய்யவேண்டும். தமிழர்கள் தான் இனிமேல் பாராளுமன்றத்தில் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை தமிழர்களுக்கு மட்டுமே தரக்கூடிய எங்கள் அணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் என்னிடம் பலகுறைகளை கூறினார்கள். அதில் மிக முக்கியமாக நடந்து முடிந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் மூலம் நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு தரவேண்டிய புதிய ஊதியத்தை காலம் தாழ்த்தி வருவது தெரியவந்தது.

    இதில் மத்திய நிலக்கரி துறை மந்திரி உடனடியாக கவன ஈர்ப்பு கொண்டு வந்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய புதிய ஊதிய மாற்று ஒப்பந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் வீடு, நிலம் இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்

    ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #pmk #admk

    அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே, பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போகமாட்டோம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #ThambiDurai #BJP
    கரூர்:

    கரூர் ஏமூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை ஒழித்து கட்டிய இந்திய ராணுவ வீரர்களின் செயல் பாராட்டுக்குரியது. நாட்டின் மரியாதையை காக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதனை நாட்டில் உள்ள அனைவரும் பாராட்டுகின்றனர்.

    தீவிரவாதிகளும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக போர் செய்ய முனைந்தால் அதனை எதிர்கொள்ளும் வலிமை இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை எதிர்கொள்ள பா.ஜ.க. எங்களுக்கு துணை நிற்கிறது. இது தேர்தலுக்கான கூட்டணி. கொள்கைக்கான கூட்டணி அல்ல.



    கூட்டணிக்காக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போகமாட்டோம். மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டால் அதனை கடுமையாக எதிர்ப்போம். அந்த கொள்கையில் பின் வாங்கப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #BJP
    ×