search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். #ADMK #VaigaiChelvan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகி உள்ளது.

    தமிழகம்-புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்து தே.மு.தி.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஜி.கே.வாசனின் த.மா.கா., கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி ஆகியவை அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தி வருகிறது.

    இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியில் த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம்பெறுகின்றன. இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்கள் எங்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்கள். ஓரிரு நாளில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

    அப்போது அவரிடம் இந்த கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடும் என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், “கடந்த தேர்தலில் சிறிய கட்சிகளுக்கு அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.



    அது போல் இந்த தேர்தலில் இந்த கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது” என்றார்.

    இந்த 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து செய்திகள் வருகின்றன. நடந்து முடிந்த காலங்களில் சூழ்நிலைக்கேற்ப கருத்துக்கள் கூறுவது வழக்கம். அது காலப்போக்கில் மறைந்து விடும். கூட்டணி என்று வந்த பிறகு பழையவற்றை தோண்டி பார்க்க கூடாது.

    தற்போதைய நிலைப்பாட்டைதான் பார்க்க வேண்டும். தி.மு.க., காங்கிரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் லட்சியம். அதனால்தான் ஒன்று சேருகிறோம். ஜெயலலிதா இருக்கும் போது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

    இந்த தேர்தலில் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவோம். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அடையாளம் தெரியாமல் போய்விடும்.

    டி.டி.வி. தினகரன் அணியில் உள்ளவர்கள் தேர்தலுக்குள் தாய் கழகத்தில் சேருவார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #VaigaiChelvan #TamilMaanilaCongress

    அதிமுக - பாஜக கூட்டணி தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று நெல்லை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு வட மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. இந்த பயத்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு இவர்கள் ரூ.50 கோடி செலவழிக்க திட்டம் வகுத்துள்ளார்கள்.

    இதற்காக போலீஸ் வாகனங்கள் மூலமும், ஆம்புலன்ஸ் மூலமும் பணத்தை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் எதிர்கட்சியினரும், வியாபாரிகளும் ரூ.50 ஆயிரம் கொண்டு சென்றால் கூட அதை பார்த்துக்கொள்வார்கள்.

    பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியினர் நினைக்கிறார்கள். ஆனால் பணபலத்தை மக்கள் தூக்கி எறிந்து விட்டு எங்கள் கூட்டணிக்கு வெற்றி தருவார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க. தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.

    காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதி கொடுத்துள்ளது. காவிரி டெல்டா பகுதியை மீத்தேன் எடுக்கும் பாலைவனமாக மாற்ற முயற்சிக்கிறது. கஜா புயலின் போது பலியானவர்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இழப்பீடு வழங்க மிக மிக குறைவாக பணம் ஒதுக்கி உள்ளது. இன்னும் ஏராளமான வஞ்சகம் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 4½ கோடி வாக்காளர்களும் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

    இதனால் அ.தி.மு.க.- பா.ஜ.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தோற்பது உறுதி. தி.மு.க. கூட்டணி வெல்வது உறுதி. தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இப்போது தான் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிமுக - பாஜக - பாமக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #LSPolls
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடும், பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவுடனான கூட்டணியில் இழுபரி ஏற்பட்டுள்ளது.



    இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘அதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக-பாமக கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அநாகரிமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். 
    வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
    சென்னை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க இடம் பெற்றுள்ளது. கூட்டணி தொகுதி பற்றி பேச மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 



    இதற்கிடையே, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் பாஜக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance  
    தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #NEET #NEETExam #Sengottaiyan
    நெல்லை:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார். தொடர்ந்து அவர் நெல்லையப்பர் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாகவும், மின் மிகை மாநிலமாகவும் உள்ளது. அடிப்படை திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 3 லட்சத்து 4 ஆயிரத்து 31 கோடி செலவில் புதிய தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



    இதன் மூலம் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. ‘நீட்’ தேர்வுக்காக 16 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மிகச்சிறந்த 4 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகளில் நடைபெறும். பொதுத்தேர்வு முடிந்தவுடன் பயிற்சி நடக்கும்.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பின் 4-ல் ஒரு பங்கினர் வரி செலுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் 2 லட்சத்து 81 ஆயிரம் சி.ஏ. படித்த ஆடிட்டர்கள் உள்ளனர். இது போதுமானது அல்ல. மேலும் காமர்ஸ் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே பிளஸ்-2 வில் காமர்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்கள் சி.ஏ. படித்து ஆடிட்டராக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே விரைவில் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய வண்ண சீருடை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் தமிழகத்திலேயே எழுதலாம். இதற்காக வெளிமாநிலம் செல்ல அவசியமில்லை.

    தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 1½ லட்சம் பேர் தேர்வு எழுதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NEET #NEETExam #Sengottaiyan
    அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். #ParliamentElection #ADMK #PMK #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தொகுதிகளை பிரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ம.க.வினர் இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். 

    மேலும், 21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக-பாமக கூட்டணி குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    2009-ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பா.ம.க.-அ.தி.மு.க. கூட்டணி. அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டுவிட்டு, தற்போது அக்கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். நாட்டைப் பற்றி ராமதாசுக்கு கவலையில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் கிடைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி விமர்சித்து புத்தகம் எழுதிய பாமக, தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளது அவமானமாக இல்லையா? ராமதாசுக்கு சூடு, சொரணை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். #ParliamentElection #ADMK #PMK #DMK #MKStalin
    ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
     
    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    குறிப்பாக, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கடந்த 14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.



    இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலை வந்தடைந்தனர்.

    இன்று நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance 
    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதையடுத்து, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாமக கொடுத்துள்ளது. #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது 7 மக்களவைத்  எம்.பி. தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தையும் அதிமுக ஒதுக்கி கொடுத்துள்ளது.

    முன்னதாக பா.ம.க. கேட்ட சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது. இதையடுத்து பா.ம.க. தலைவர்களில் சிலர் தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். ஆனால், தொகுதிகள் விஷயத்திலும், திமுக விதித்த நிபந்தனைகளாலும் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் பாமக தயக்கம் காட்டிவந்தது.

    இதை அறிந்த அ.தி.மு.க-பா.ஜனதா தலைவர்கள் உடனே பா.ம.க.வை கூட்டணிக்குள் இழுக்கும் பணிகளை தொடங்கினர்.

    “நீங்கள் கேட்கும் தொகுதிகளை தருகிறோம். செலவையும் பார்த்துக் கொள்கிறோம்” என்று அ.தி.மு.க.-பா.ஜனதா தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இன்று பா.ம.க. ஐக்கியமாகி உள்ளது.



    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை எம்.பி. இடம் மற்றும் 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் பட்டியலையும் அ.தி.மு.க.விடம் பா.ம.க. தலைவர்கள் கொடுத்தனர். அதில் பா.ம.க. மொத்தம் 8 தொகுதிகளை குறிப்பிட்டுள்ளது. அந்த 8 தொகுதிகள் விவரம் வருமாறு:-

    1. ஸ்ரீபெரும்புதூர்

    2. மத்திய சென்னை

    3. கடலூர்

    4. அரக்கோணம்

    5. கள்ளக்குறிச்சி

    6. விழுப்புரம்

    7. திருவள்ளூர்

    8. காஞ்சீபுரம்

    இந்த 8 தொகுதிகளில் இருந்து 7 தொகுதிகளை ஒதுக்கி தர பா.ம.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ள அ.தி.மு.க. அந்த 7 தொகுதிகளில் ஒரு தனி தொகுதியையும் ஒதுக்க முடிவு செய்துள்ளது. அதை பா.ம.க. ஏற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இன்னும் ஓரிரு தினங்களில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது தெரிந்து விடும். #LSPolls #ADMK #PMKConstituencies
    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுகவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார். அவை வருமாறு:-

    1. காலம் காலமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து வந்த காவிரி பாசன மாவட்டங்கள் இப்போது படிப்படியாக ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவும், பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு இறுதியில் மேலும் இரு ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. அதன் காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    எனவே கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் தொடங்கி புதுக்கோட்டை - ராமநாதபுரம் மாவட்ட எல்லை வரை உள்ள காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

    2. தமிழகத்தின் பாசனத் தேவைகளை ஓரளவு நிறைவேற்றக்கூடிய அளவில் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

    ரூ.60,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 1100 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும். இது கர்நாடகத்திடமிருந்து நாம் பெறக்கூடிய காவிரி நீரை விட ஆறு மடங்குக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தவிர அத்திக்கடவு - அவினாசித் திட்டம், பாலாறு பாசனத் திட்டம், பாண்டியாறு, காவிரியில் தடுப்பணைகள், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் உள்பட 20 பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    3. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கவுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் சமூகநீதி யாருக்கு தேவை என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    எனவே, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்து சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

    4. ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அதற்கான தீர்மானத்தை கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் 164 நாட்களாகியும் இதுவரை எந்த பயனும் இல்லை.

    இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசின் மூலமாக ஆளுனருக்கு அழுத்தம் கொடுத்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுனரை திருப்பி அனுப்பச் செய்ய வேண்டும். பின்னர் அதே பரிந்துரையை அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்கும்போது வேறு வழியின்றி அதை ஆளுனர் ஏற்றுக்கொண்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்து தான் தீர வேண்டும்.

    5. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தலா 500 மதுக்கடைகளை மூடியது. அதன்பிறகு வேறு எந்த மதுக்கடைகளும் மூடவில்லை. இந்த வி‌ஷயத்தில் வாக்குறுதி கடைபிடிக்கப்பட வேண்டும்.



    அதன்படி உடனடியாக தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மீதமுள்ள மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்க வேண்டும்.

    6. தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைவது, கடல் நீர் ஊடுருவுதல், பாலங்கள், அணைகள் போன்றவை வலிமை இழப்பது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் செயற்கை மணல் உற்பத்தியையும், வெளிநாட்டு மணல் இறக்குமதியையும் அதிகரிப்பதன் மூலம் இப்போது செயல்பாட்டில் உள்ள மணல் குவாரிகளை படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    7. தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அந்த கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதால் அவற்றை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    8. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்

    மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணை கட்ட அனுமதி வழங்காமல் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    9. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, ரூ.5,800 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார்.

    கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

    10. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies

    அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? என்பது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அ.திமு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். பாராளுமன்ற மக்களவைக்கானத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவது தான் வாய்ப்பாக இருந்தது.

    அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011-ம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? ஆகிய வினாக்கள் எழுந்தன.

    2011-ம் ஆண்டு தீர்மானத்தில் உறுதியாக இருந்து மக்களவையில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமல் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க முடியாமலும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை போராடிப் பெற முடியாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக சமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட இரு கட்சிகளின் ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்கப் போகிறோமா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன். மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.

    அடுத்து அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப் போராடி பெற்றாலும், அதை செயல்படுத்துவதில் பெருந்துணையாக எந்தக்கட்சி இருக்கும்? என்ற வினாவுக்கு கிடைக்கும் விடைதான், யாருடன் கூட்டணி என்ற வினாவுக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

    அ.தி.மு.க. மீது விமர்சனங்களே இல்லையா? என்று கேட்டால் இல்லை என்று பதிலளிக்க முடியாது. ஆனால் கல்வித்துறை சீர்த்திருத்தங்கள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த பல்வேறு யோசனைகளை அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டது.



    7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரைத்தது. பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது. கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை கொள்கை அளவில் கைவிட்டது.

    விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தது, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது என பா.ம.க. சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அ.தி.மு.க. அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி உள்ளது.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவற்கும், அ.தி.மு.க. அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. மத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசில் தமிழகத்திற்கான திட்டங்களையும், உரிமைகளையும் போராடிப் பெறும் வி‌ஷயத்தில் இணைந்து செயல்படவும் அ.தி.மு.க.வும்., பா.ம.க.,வும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திற்கு பல நன்மைகளை பெற்றுத்தரும் என்று பா.ம.க. நம்புகிறது. கூட்டணி வி‌ஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்துகொண்டாலும் கூட, அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    அதன்படி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்த கூட்டணியில் இணையும் அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைக்கவும் பா.ம.க. தீர்மானித்துள்ளது.

    தமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ம.க. பாடுபடும். அதேநேரத்தில் பா.ம.க. அதன் கொள்கைகளில் எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளாது.

    கடந்த காலங்களில் எப்படி தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டதோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பா.ம.க. விட்டுக் கொடுக்காது என உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies

    எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி. நாங்கள் அமைத்திருப்பது வெற்றிக் கூட்டணி என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    அ.தி.மு.க.- பா.ம.க. தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி. மெகா கூட்டணியாக உருவாகி இருக்கிறது. இது வெற்றிக் கூட்டணி. புதுவை உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை நீங்கள் அறிவீர்கள். இப்போது அ.தி.மு.க.வுடன் பா.ம.க. இணைந்துள்ளது. எதற்காக இந்த கூட்டணியில் இணைந்துள்ளேன் என்பதை தமிழக மக்களுக்கு தனி அறிக்கையில் விளக்கி உள்ளேன்.



    இதுதொடர்பாக நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் சொல்வார். தமிழக மக்களின் நலன்களை காக்கவும், உரிமைகளை மீட்கவும் 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

    இந்த கோரிக்கைகளை இரண்டு கட்சியினரும் ஏற்றுள்ளோம். அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது,

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார். #LSPolls #ADMK #PMKConstituencies
    அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், ஓசூர் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. #BalakrishnaReddy #HosurConstituency
    சென்னை:

    ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது. போலீஸ் ஜீப், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.

    இதுகுறித்து போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணரெட்டியும் ஒருவர். இந்த வழக்கில் அவர் 72வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

    வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு கோர்ட்டு நீதிபதி சாந்தி, பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேரை குற்றவாளியாக அறிவித்து, பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்பினால், அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். அதேநேரம், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார். அத்துடன், கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.



    இந்த இடைக்கால மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது’ என்று கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சய்கண்ணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதிகள், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் விவரங்களை பரிசீலித்துதான், அந்த தண்டனைக்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு தண்டனைக்கு நாங்களும் தடை விதிக்க முடியாது.  இந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்புகிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட் நிலையில் ஓசூர் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் முறைப்படி அறிவித்துள்ளார்.

    2019 ஜனவரி 7 முதல் ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் ஓசூர், திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. #BalakrishnaReddy  #HosurConstituency
    ×