என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94519"
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி ஆனது.
இதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார். #LSPolls #ADMK #PMKConstituencies
இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்களும் பங்கேற்றனர். சிறிது நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில் தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று மதியம் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி பியூஸ் கோயலும் மதியம் 12.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். அவர்கள் இருவரும் நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து கூட்டணி உடன்பாட்டை உறுதி செய்ய உள்ளனர். #LSPolls #ADMK #PMK
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநில கட்சிகளுடன் கூட்டணியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
பீகார், மராட்டியம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்துள்ள பா.ஜனதா தலைவர்கள் அடுத்தக்கட்டமாக தென் மாநிலங்களில் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.
தென்இந்தியாவை பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா கட்சிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் எந்த கூட்டணியும் அமையவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே பா.ஜனதாவுக்கு பலமான கூட்டணி அமைய உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி ஏற்கனவே உருவாகிவிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டணியை உருவாக்க கடந்த சில வாரங்களாக பா.ஜனதா தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆளும் அ.தி.மு.க. தலைமையில் அந்த கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக அ.தி.மு.க. - பா.ஜனதா மூத்த தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேசி வந்தனர். அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் தலா 5 சதவீத வாக்கு வங்கிகளை வைத்துள்ள பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை சேர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இணைவது தொடர்பாக நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உடன்பாட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப அ.தி.மு.க- பா.ஜனதா தலைவர்கள் இன்று காலை தங்களது நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாற்றி அமைத்தனர்.
அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணி அறிவிப்பை வெளியிடும் ஏற்பாடுகள் இன்று காலை மும்முரமாக நடந்தன. இதற்காக இன்று காலை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோல 11 மணிக்கு மத்திய மந்திரி பியூஸ்கோயல் சென்னை வருவார் என்று தகவல்கள் வெளியானது. அதன்பின்னர் காலை 10 மணி அளவில் அமித்ஷாவின் தமிழக பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்று மத்திய மந்திரி பியூஸ் கோயலும் மதியம் 12.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படும். அதன்பின்னர் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. #LSPolls #ADMK #PMK
தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சா.வின் 165-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநில கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது. 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை வெளிப்படையாக எப்படி கூற முடியும். கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. தெளிவாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் இல்லை.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #DMK
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குறை கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே கல்வி கடன் ரத்து என்ற வாக்குறுதியை அவர் அளித்துள்ளார். ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினாலேயே இது போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
ஊராட்சி சபைக் கூட்டங்களில் பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துச் சென்றாலும், தமிழகத்தில் தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது. அதே போல் மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற முடியாது.
இன்றைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் கூட தி.மு.க.வினால் வெற்றி பெற முடியாது. அதனாலேயே உள்ளாட்சிகளில் தி.மு.க.வை பலப்படுத்துவதற்காக ஊராட்சி சபைக் கூட்டங்களை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
தற்போதைய நிலையில் பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு வழங்கக்கூடிய மக்களவை துணை தலைவர் பதவியை நான் வகித்து வருகிறேன். எங்களுக்குள் கூட்டணி இருந்தால் இந்த பதவியை எனக்கு தர முடியாது. இதுவரை அது போன்ற ஒரு நிலை ஏற்படவில்லை. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும், தமிழகத்துக்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது.
இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #admk #parliamentelection
பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது. போலீஸ் ஜீப், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணரெட்டியும் ஒருவர். இந்த வழக்கில் அவர் 72வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு கோர்ட்டு நீதிபதி சாந்தி, பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேரை குற்றவாளியாக அறிவித்து, பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பினால், அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். அதேநேரம், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார். அத்துடன், கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சய்கண்ணா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஆஜராகி, ‘பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணரெட்டி 72வது குற்றவாளி ஆவார். யாரோ செய்த தவறுக்கு, இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் விவரங்களை பரிசீலித்துதான், அந்த தண்டனைக்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு தண்டனைக்கு நாங்களும் தடை விதிக்க முடியாது.
இந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்புகிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு மூலம் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SupremeCourt #BalakrishnaReddy
கரூர் மாவட்டம் பவித்திரம் பகுதியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவிற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உலகிலேயே சிறந்தது இந்திய உளவுத்துறையும், தமிழக உளவுத்துறையும் தான். காஷ்மீர் சம்பவத்தில் உளவுத்துறைக்கு களங்கம் கற்பிப்பது சரியாக இருக்காது.
தவறு நடந்திருந்தாலும் பயங்கரவாதிகள் 350 கிலோ வெடிமருந்துகள் கொண்டு வந்ததை கண்டுபிடித்து கூறியது உளவுத்துறைதான். 2012-ம் ஆண்டு நீட் தேர்வை ஒரு மாநிலத்தில் நடத்தி காட்டியது காங்கிரஸ்தான். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததும் காங்கிரஸ் தான்.
இலங்கை 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க.-காங்கிரஸ்தான். மேலும் காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தி.மு.க.தான் காரணம்.
அ.தி.மு.க. வலிமையான இயக்கம். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விடும் என்பதால் இப்போது மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்திக்கொண்டு இருக்கிறார். பேசுவதற்கு எதுவும் இல்லாததால் அ.தி.மு.க. குறித்து அவர் விமர்சனம் செய்கிறார். வருகிற தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியாது. எப்போதும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டால் பலன் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தம்பிதுரை எம்.பி., கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க.வில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. இதனால் அதுபற்றி நான் கருத்து கூற முடியாது என்றார். #ADMK #ThambiDurai #DMK MKStalin
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீரில் மத்திய அரசின் மோசமான கவனக்குறைவால் தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது.
‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளை கடுமையாக சோதனை செய்தனர். ஆனால் 350 கிலோ வெடி மருந்து ஏற்றி வந்த வாகனத்தை சோதிக்காமல் என்ன செய்தார்கள். பாதுகாப்பு படை வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டியிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வெடிகுண்டு வெடிக்கிறது. இதை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய நினைக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்களோ? அவர்களை ஆராய்ந்து வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது தொண்டர்களுக்கு கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடட்டும். அப்போது அவர் வந்து தீர்ப்பாரா? என்று பார்ப்போம். போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என ரஜினிகாந்த் கூறினார். தற்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு ரஜினிகாந்த் செல்லட்டும்.
அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி என்பது அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தது. அதனால் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கிறது. இல்லையென்றால் எப்போதோ கலைத்திருப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மாநில கட்சிகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.
தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்க இருக்கும் திட்டம் தேர்தலுக்காக தான். நேரடியாக கொடுக்க முடியாது என்பதால் மறைமுகமாக கொடுக்க உள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் முடிவு என்ன என்பது தெளிவாக இல்லை. அ.தி.மு.க., தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டாம் என கமல்ஹாசன் கூறியதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க. அரசின் சாதனை மற்றும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.டி.ராஜன் அனைவரையும் வரவேற்றார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் கண்ணன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் உள்பட பலர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதியோர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் 5 முறை ஆட்சி நடந்த போது கட்சிக்கு வேண்டியவர்கள், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்களுக்கே அதிக அளவில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபை கூட்டங்களில் அ.தி.மு.க. ஆதாரத்துடன் அறிவித்து தி.மு.க.வினரின் முகத்திரையை கிழித்துள்ளது.
எனவே அவரை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக முதலீட்டாளர்கள் மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2-வது முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. எனவே பாடுபடுபவர்கள் யார், பாசாங்கு செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது கூறியதாவது:-
தமிழக மக்கள் மனதில் கடந்த 40 ஆண்டுகளாக அ.தி.மு.க. நீங்காத இடம்பிடித்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் நாட்களை அதன் நிர்வாகிகள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை என தி.மு.க.வினரே புலம்பி வருகின்றனர். எனவே ‘தி.மு.க.வுக்கு தலைமை தாங்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை’.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததே கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடக்காததற்கு காரணம் என மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தேர்தலை நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்ததே தி.மு.க. தான். அதேபோல் திருவாரூர் இடைத்தேர்தலுக்கும் ‘கஜா’ புயலை காரணம் காட்டி தடை கேட்கிறார். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொலை குற்றவாளி என காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுக்கிறார். ஆனால் அது நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் திருமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #DindigulSrinivasan #MkStalin
சிவகாசியில் சபையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 25-ம் ஆண்டு விழா பள்ளியின் தளாளர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட கலெக்டர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
சமூக அக்கறையோடு இந்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. பட்டாசு ஆலைகளில் தற்போது வேலையின்றி உள்ளதால் கல்வி கட்டணத்தில் இந்த பள்ளி சிறப்பு சலுகை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
பட்டாசு ஆலைகளை விரைவில் திறக்க அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வி செல்வம்தான் அழியா செல்வம். கல்வியில் சிறந்த நாட்டில் பொருளாதாரம் உயரும்.
விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வில் 17 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மாணவர்களின் எதிர் காலத்தை மனதில் கொண்டு கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் அழகேஸ்வரிஞானசேகரன், ஏர்போர்ட் அத்தார்டி உறுப்பினர் கதிரவன், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா, கவிஞர் காளியப்பன், பள்ளி முதல்வர் பிரபு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, எதிர்கோட்டை மணி கண்டன், ராமராஜ், திருத் தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், கூட்டு றவு சங்க தலைவர் ஆரோக் கியம், விஸ்வநத்தம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்