search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy

    பெங்களூரு:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது.

    இந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வந்தாலும் இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

    எங்களுக்கு சின்னமே இல்லை என்று கேலி செய்தவர்களுக்கு சின்னம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இப்போது இரட்டை இலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் குக்கர் சின்னத்தை மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும்.

    எந்த காலத்திலும் அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy

    தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. #Parliamentelection #DMK #ADMK

    சென்னை:

    தற்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

    ஆளும் பா.ஜனதாவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட முடிவு செய்துள்ளன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் பிரதான கூட்டணியாக உருவாகி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் உள்ளது. தே.மு.தி.க, பா.ம.க, ஆகிய கட்சிகளையும் அ.தி. மு.க. கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இதுதவிர ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பெறுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் சென்னையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை இணைக்க முடிவாகி உள்ளது. அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க இருக்கிறது. பா.ம.க. இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். எனவே தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர வாய்ப்பு இல்லை.

    இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அ.தி.மு.க, பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளை நேரடியாக விமர்சித்து வந்தார். இதனால் அவர் தி.மு.க. பக்கம் சாய்வார் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. அல்லாத கூட்டணியை உருவாக்கும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டார்.

     


    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவரது யோசனை ஏற்கப்படாததால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று கமல்ஹாசன் திடீர் என்று அறிவித்தார்.

    மேலும் அ.தி.முக.வைப் போல் தி.மு.க.வும் அழுக்கு மூட்டை என்று கமல்ஹாசன் விமர்சித்தார். இது தி.மு.க.வுக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க.வும் நடிகர் சந்திரசேகர் மூலம் கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டது. இதனால் கமல்ஹாசன் தனியாக ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    அவருக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சமீபகாலமாக சுயேச்சையாக அரசியலை விமர்சித்துவரும் நடிகர் பிரகாஷ்ராஜும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தி.மு.க.வுடன் சேரும் முடிவில் இருப்பதால் கமல்ஹாசன் தனித்தே 3வது அணியாக களம் இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அ.ம.மு.க. கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். ஆர்.கே. நகரில் பணபலத்தால் அவர் வெற்றிபெற்றதாக கமல்ஹாசன் விமர்சித்தார். இதனால் கமல்ஹாசனும், தினகரனும் சேரும் வாய்ப்பு இல்லை. தினகரன் தற்போது தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

    இவரை கூட்டணி தொடர்பாக எந்த கட்சியும் அழைக்காத நிலையில் தனியாக களத்தில் நிற்கிறார். தினகரனுக்கு தி.மு.க., அ.தி.மு.க. போல் கூட்டம் அதிகம் வருவதால் அந்த தைரியத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.

    தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. கூட்டணி பேச்சு வார்த்தைகள் ஆரம்பகட்ட நிலையில் தான் தீவிரமாக இருக்கிறது.

    எனவே அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கமல்ஹாசனுக்கும் தி.மு.க.வுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு காங்கிரஸ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. கமல்ஹாசனுக்கும் , தி.மு.க.வுக்கும் இடையே சமரச முயற்சியாகவே காங்கிரசின் அழைப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.#Parliamentelection #DMK #ADMK

    அதிமுகவுடன் கூட்டு சேரும் கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று அம்ம மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinakaran

    விழுப்புரம்:

    அம்ம மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு பயணம் நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, தியாக துருகத்தில் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-‘

    18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு சாதகமாக வரும் என்று நினைத்தோம். ஆனால் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரவில்லை. எனினும் மக்கள் தீர்ப்பு வழங்கும் வாய்ப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலும், அதனோடு சேர்ந்துவரும் 20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் வர இருக்கிறது.

    இதில் 8 தொகுதிகளில் பழனிசாமி அணி வெற்றி பெற முடியவில்லை எனில் இந்த ஆட்சி தானாகவே முடிவுக்கு வந்துவிடும் நிலை ஏற்படும். இந்த ஆட்சியாளர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. காரணம் அவ்வளவு எதிர்ப்பாக இந்த ஆட்சியின் மீது வெறுப்பாக உள்ளனர்.

    ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்று தெரிந்திருக்கின்ற காரணத்தினால் தான் இங்கே ஆட்சியில் இருப்பவர்கள் பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கொண்டு வந்தாலாவது தலை தப்பிக்குமா? என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் ஆளும் கட்சியொடு சேர்ந்து வரப்போகின்ற அனைவருமே, ஆளும் கட்சியை போன்று பூஜ்ஜியமாகப் போகிறார்கள்.

    எத்தனை கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வந்தாலும் இவர்களால் வெற்றிபெற முடியாது. டெபாசிட் பெறுவதே கடினம்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் நிதி இல்லை என்பவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு 2 மடங்கு உயர்த்தி ரூ.1 லட்சம் சம்பளம் வழங்குகிறார்கள்.

    மக்கள் இந்த ஆட்சியை விரும்பாததால் இருக்கும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற காரணத்தினால் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இருந்தால் போதும் என்று சட்டமன்ற உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவது போல 8 கோடி தமிழக மக்களின் நலனில் இவர்கள் அக்கறை காட்டவில்லை.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து ஏற்கனவே தொழில் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் பணமதிப்பு இழப்பால் வியாபாரங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று நாட்டின் வியாபாரத் தொழிலையே ஒழித்துவிட்டார்கள். மேலும் தமிழக விவசாயிகளை குறிவைத்து மத்திய அரசு தாக்குகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TTVDhinakaran

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தலைமை தாங்கும் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. #ParliamentaryElection #DMK #ADMK
    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி தொடர்பான திரை மறைவு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுகின்றன.

    அதேபோல், தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 23 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 8 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதில், பெரம்பலூர் தொகுதி கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சிக்கும், நாமக்கல் தொகுதி மற்றொரு கூட்டணியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் பா.ஜ.க. வழங்க இருக்கிறது. இந்த 2 கட்சிகளும் பா.ஜ.க.வின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

    இதேபோல், பா.ம.க.வுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி, சிதம்பரம் உள்பட 4 தொகுதிகள் வழங்கப்படுகின்றன. ராஜ்ய சபா எம்.பி.யும் ஒன்று தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.வுக்கு கள்ளக்குறிச்சி உள்பட 3 தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி வழங்கப்பட இருக்கிறது. அந்த தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறார். புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுகிறது. இதுதான் அ.தி.மு.க.வின் கூட்டணி கணக்கு என்று சொல்லப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 27 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு (புதுச்சேரி உள்பட) 8 தொகுதிகளும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட இருக்கின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும் தி.மு.க. பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அந்த கட்சியும் கூட்டணியில் இணைந்தால் மயிலாடுதுறை தொகுதியை வழங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. தான் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றை குறைத்துக்கொள்ளவும் தி.மு.க. தயாராக இருக்கிறது.



    தி.மு.க. கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று இன்னும் முடிவு செய்யப்படாத பட்சத்தில், 40 தொகுதிகளுக்கும் தலா 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தயாரித்து வழங்கியுள்ளனர்.

    இதேபோல், அ.தி.மு.க.வும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்று அடையாளம் கண்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 41 தொகுதிகளில் 8-ல் மட்டுமே வெற்றி பெற்றது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்தது. அதேபோன்ற சூழ்நிலையை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படுத்த அ.தி.மு.க. வியூகம் அமைத்து வருகிறது.

    தி.மு.க.வில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை பார்த்து அ.தி.மு.க. போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தி.மு.க. நேரடியாக போட்டியிடும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கவும் அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற வியூகத்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்றும் அ.தி.மு.க. கருதுகிறது.

    பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் தங்களது கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டாலும், இரண்டு கட்சிகளுக்கும் தலா 8 தொகுதிகளே வழங்கப்பட உள்ளது. எது எப்படி இருந்தாலும், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தங்களது கூட்டணியை அறிவிக்க இருக்கின்றன. #ParliamentaryElection #DMK #ADMK
    பா.ஜனத, தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது என்று தம்பிதுரை எம்பி கூறியுள்ளார். #thambidurai #admk #dmk #tamilisai #parliamentelection

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களுக்கும் உரிமை, தன்மானம் இருக்கிறது. எங்கள் இயக்கத்தை யார் மதிக்கிறார்களோ, தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ?, அவர்களுடன்தான் கூட்டணி என்பதை தமிழக முதல்வர் தெளிவாக கூறியுள்ளார்.

    இன்று நம்நாட்டில் தேசிய கட்சிகளே கிடையாது. எல்லாம் கட்சிகளும் சில மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, அவ்வளவுதான். தனிப்பட்ட முறையில் எந்த கட்சியும் தேசிய கட்சி நிலைமையில் இல்லை என்றார்.

    பின்னர் அவரிடம் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தம்பித்துரை பதில் அளித்ததாவது:-

    பா.ஜ.க.வுடன் இதுவரை கூட்டணி குறித்து நாங்கள் பேசவே இல்லை. பா.ஜ.க. கூட்டணியிலும் இல்லை. பாஜ.க. என்னை விமர்சனம் செய்வதாலேயே நான் பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடனே கூட்டணி வைப்போம்.


    திராவிட கட்சிகளை தமிழகத்தில் வர விட மாட்டோம் என்று தமிழிசை கூறுகிறார். திராவிடக் கட்சிகள் வரக்கூடாது என்றால் தேசிய கட்சிகளை நாங்கள் எப்படி வர விடுவோம். பா.ஜ.க., தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. புதுச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெறுகின்ற ஒரே தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #admk #dmk #tamilisai #parliamentelection

    துரோகிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தேர்தலை எதிர்பார்க்கிறார்கள் என்று டிடிவி தினகரன் பேசினார். #dinakran #parliamentelection #admk #pmmodi

    கள்ளக்குறிச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 6-ந்தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    3-வது நாளான நேற்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தலூருக்கு வந்த அவர் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

    தியாகதுருகத்தில் இருந்து சித்தலூர் வரை உள்ள சாலை, போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. காரணம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நியாயத்தின் பக்கம் இருப்பதால், சாலையை சீரமைக்காமல் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் இருந்து வருகிறார்கள். மக்கள் வெறுக்கும் இந்த ஆட்சி தொடரக்கூடாது என்பது தான் தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.

    இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நல்லதொரு சந்தர்ப்பமாக விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலோடு, 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வர இருக்கிறது. அந்த 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறாது.

    தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. காரணம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மத்தியில் அதிக பெரும்பான்மை கிடைக்க போவதில்லை. இதனால் தமிழக மக்களாகிய நீங்கள் இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் நாங்கள் போராடுவோம்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.

    அதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் சின்னசேலம் பஸ் நிலையத்தில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தின் 47 பக்க தீர்ப்பில் நமக்கு சாதகமாகத்தான் உள்ளது. தொடர்ந்து உரிமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுவோம். குக்கர் சின்னம் நமக்குதான். ஆனால், விரைவில் அ.தி.மு.க. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கி விடுவார்கள்.

    தமிழகம் முழுவதும் நமக்கு மக்கள் பெரும் ஆதரவையும், வரவேற்பையும் தருகிறார்கள். நியாயத்தின் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். துரோகிகளுக்கு பாடம் புகட்ட தேர்தலை எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #dinakran #parliamentelection #admk #pmmodi

    தேர்தல் முடியும் போது யார் நிலைத்து நிற்பார்கள், யார் நாட்டை விட்டு போகிறார்கள் என்பது முடிவுக்கு வரும் என கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ சவால் விடுத்துள்ளார். #kadamburraju #kamal #parliamentelection

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு அறிவித்த பட்ஜெட் மணம் கொண்டது என டி.டி.வி. தினகரன் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் வீடியோ பைரசியை ஒழிக்க முடியும்.

    திராவிட இயக்கங்களை பற்றி கருத்துக் கூற நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை. திராவிட இயக்கத்தின் வரலாறு, பாரம்பரியத்தை அறியாதவர். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறினார்.

    தேர்தல் முடியும் போது யார் நிலைத்து நிற்பார்கள், யாரை ஊரை விட்டு போகிறார்கள், யார் நாட்டை விட்டு போகிறார்கள் என்பது முடிவுக்கு வரும். கமல்ஹாசன் நிலை இல்லாத கருத்து கொண்டவர்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். #kadamburraju #kamal #parliamentelection

    அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalaniswami

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கிறது. இதில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    நாளை திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் இருவரும் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு மாலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி 6.15 மணிவரை நடந்தது.

    இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது:-

     


    தமிழகத்தில் அ.திமு.க. தலைமையில் தான் பலமான மெகா கூட்டணி அமையும். இந்தக் கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக இருக்கும். தேர்தல் வெற்றிக்கு நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

    பல்வேறு மாவட்டங்களில் இன்னும் பூத் கமிட்டி அமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடங்களில் எல்லாம் உடனடியாக பூத் கமிட்டி அமைத்து அதுபற்றிய தகவல்களை தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தொண்டர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். இப்போதே தேர்தல் பணியை தொடங்குங்கள். ஜெயலலிதா இருந்த போது வெற்றி பெற்றது போல் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நமது அணி வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    ஜெயலலிதா பிறந்த நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடவும், ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி பேசப்படவில்லை.

    பின்னர் இது பற்றி அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கட்சிப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாற்பதும் நமதே என்பது ஜெயலலிதாவின் முழக்கம். இலக்கு, அந்த இலக்கை அடையவும், பூத் கமிட்டி தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து பேசவில்லை. எந்தக் கட்சி வந்தாலும் அ.திமு.க. தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும்.

    தற்போதுவரை எந்த கூட்டணியும் அமையவில்லை. அமைந்தால் அது மெகா கூட்டணியாக இருக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து முறையாக அறிவிக்கப்படும் கூட்டணி குறித்து யாரிடமும் கருத்து கேட்கப்படவில்லை. மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #EdappadiPalaniswami

    மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார் தெரிவித்துள்ளது.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க கட்சி நிர்வாகிகளை முடுக்கி விட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

    அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் முக்கிய கட்சிகள், நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து கட்சியின் திட்டங்கள், கொள்கைகளை விளக்கி ஆதரவு திரட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பணிகளில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

    இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் கவுன்சிலர் திலகர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன், மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் ஆசைத்தம்பி மற்றும் ம.தி.மு.க., ஜனதா தள கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேதி அறிவிப்புக்கு முன்பே ஆளும் அ.தி.மு.க. வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    மதுரை மாநகர் பகுதியில் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு வாக்காளர்களின் செல்போன் எண் மற்றும் முகவரியுடன் நேரடியாக வாக்காளர்களை சந்தித்து விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கையை அ.தி.மு.க.வினர் மேற் கொண்டுள்ளனர். எனவே இதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அரசியல் கட்சிகள் புகார் அளித்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். எனவே, தி.மு.க. தோழமை கட்சிகளும் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில், பாராளுமன்ற தேர்தல் பணிகள், அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட ‘பூத் கமிட்டி’ விவரங்கள், ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில், “பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும், தேர்தல் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும், அயராது உழைக்க வேண்டும்” என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

    மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் 6.15 மணியளவில் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பேட்டி தருமாறு நிருபர்கள் அழைத்தனர். அதற்கு அவர், அண்ணன்(ஓ.பன்னீர்செல்வம்) வந்து தருவார் என்று கூறிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியே வந்தார். அப்போது அவர் திங்கட்கிழமை உங்களை(பத்திரிகையாளர்கள்) அழைத்து பேசுகிறேன் என்று தெரிவித்தார்.

    பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் குறித்து கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான வருகிற 24-ந்தேதி ஏழை மக்கள் இருக்கும் இடத்துக்கு தேடிச்சென்று அறுசுவை உணவு, இலவச சீருடை, ஆதரவற்றோர்-முதியோர் இல்லங்களில் உணவு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பாராளுமன்றத் தேர்தல் பணிகள், ஏற்கனவே முடுக்கிவிடப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் எண்ணமான ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ எனும் இலக்கை அடைய, அரசின் திட்டங்களை குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் மக்களோடு இருந்து பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டிகள் அமைத்து, எதிர் வரும் தேர்தலில் அ.தி.மு.க. இமாலய வெற்றி பெறும் வகையில் பணிகள் அமையவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.



    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஏதாவது பேசப்பட்டதா?

    பதில்:- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், கூட்டணி குறித்து முறையான அறிவிப்பை அ.தி.மு.க. வெளியிடும். இன்றைய கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை.

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் யாருடன், யார் கூட்டணி? என்பது தெரியும். எதிரியாக உள்ள தி.மு.க., முதுகில் குத்திய துரோகியான அ.ம.மு.க. தவிர, அ.தி.மு.க. தலைமையில் யார் வந்தாலும், தொகுதி பங்கீடு பேசி, முடிவுகள் வெளியாகும். இன்றைய நிலையில் கூட்டணி முடிவாகவில்லை. அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணி மெகா கூட்டணியாகத்தான் இருக்கும்.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணிக்கு இதுவரை எந்தெந்த கட்சிகள் முன்வந்திருக்கின்றன?

    பதில்:- பலர் எங்களுடன் கூட்டணி சேர தயாராக உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட அ.தி.மு.க.வுடன் வருவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது. அது ரகசியம்.

    கேள்வி:- ‘அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி’, என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளாரே?

    பதில்:- அவருக்கு ஏன் பேதியா கிறது? என்று தெரியவில்லை.

    கேள்வி- தமிழக பட்ஜெட் ஒரு உதவாக்கரை பட்ஜெட் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

    பதில்:- பொதுவாகவே அறிவியலாளர்கள், அறிவுப்பூர்வமாக யோசிப்பவர்கள், அரசியல் ஞானம் உள்ளவர்கள் இந்த 3 தகுதியும் உடையவர்கள் நிச்சயமாக, ‘இந்த பட்ஜெட் நாட்டுக்கு உதவும் நல்ல பட்ஜெட்’, ‘ஏழை மக்களுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்’ என்று பாராட்டுவார்கள். இந்த மூன்று தகுதிகளுமே மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

    மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். #MinisterJayakumar #ADMK
    பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என்று ரங்கசாமி அறிவித்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #parliamentelection #nrcongress #rangasamy

    புதுச்சேரி:

    தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் எதிர் தரப்பில் அ.தி.மு.கவின் கூட்டணி முடிவாகவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெறும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. புதுவையை பொறுத்தவரை தமிழகத்தில் அமையும் கூட்டணியே இங்கேயும் தொடரும்.

    இதன்படி புதுவையிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. அதே நேரத்தில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுவையில் மாநில கட்சியாக திகழ்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் உள்ளது.

    அந்த கட்சியின் வேட்பாளர்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

    இதனால் காங்கிரசுக்கு எதிராக தமிழகத்தில் உருவாகும் அ.தி.மு..க, பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்று பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் பேச்சு உள்ளது. இதை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று உறுதி செய்தார்.

    கட்சியின் ஆண்டு விழாவையொட்டி நிருபர்களை சந்தித்த ரங்கசாமி, அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார்.

    அதோடு புதுவை பாராளுமன்ற தொகுதியில் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார். வழக்கமாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பொறுத்தவரை அதிரடியாக எந்த முடிவையும் அறிவிக்க மாட்டார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் இறுதிவரை யாருடன் கூட்டணி என்று சொல்லவில்லை. வேட்புமனு தாக்கல் செய்த பிறகுதான் வேட்பாளர் யார்? என்றே தெரியவந்தது.

    தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் வேட்புமனு தாக்கலுக்கு நெருக்கத்தில்தான் அறிவிப்பு வெளியிடுவார் என கட்சியினரே எதிர்பார்த்தனர்.

    ஆனால், இதற்கு நேர் எதிராக கட்சியின் ஆண்டு விழாவில் உறுதிபட பாராளு மன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இது, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என உறுதிபூண்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.

    சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தமிழக மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #Budget2019 #Balakrishnan
    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தமிழக மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். மக்களை ஏமாற்றுவதற்காக வெத்து வேட்டு அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு ஆதார விலை கிடைக்கவில்லை. இதை பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.



    தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதற்கு பட்ஜெட்டில் எந்த முக்கிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.

    கஜா புயலுக்காக மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிவாரண நிதியையும் தமிழக அரசால் பெற முடியவில்லை. இது போன்ற நிலையில் பா.ஜ.னதாவுடன் அ.தி.மு.க. எவ்வாறு கூட்டணி வைக்கலாம். இவர்கள் அமைக்கும் கூட்டணி தமிழக மக்களால் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் கூட்டணி குறித்து தி.மு.க.வுடன் பேசி வருகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNBudget #Budget2019 #Balakrishnan
    ×