என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94519
நீங்கள் தேடியது "slug 94519"
அ.தி.மு.க. தொண்டர்கள் அளித்த வாக்கால் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு சுமார் 4.59 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து அவர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலை, சத்தியமூர்த்தி சிலை, அண்ணாசிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கூட இந்த முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்துள்ளது. அதே போல புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிகமான வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது.
அதாவது உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். நடுநிலையாளர்களும் எனக்கே வாக்களித்து உள்ளனர்.
மேலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர அ.தி.மு.க.வில் உள்ளவர்களும் எனக்கு வேண்டிய, எனக்கு பழக்கமான, என் நீண்ட நாள் நண்பர்கள் என பலர் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினரும் எனக்கு வாக்களித்துதான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.
அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இருந்தாலும் இங்கு உள்ளவர்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் எனக்கு வெற்றி வாய்ப்பு சரியாக இருந்தது.
3 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தநிலையில் பிற மாநிலங்களில் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என காங்கிரஸ் கட்சி ஆராயும். எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி உரிய முறையில் உள்ளதா? மீண்டும் வாக்குச் சீட்டு முறை சரியாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி, வாதாடி மக்களுக்கு பெற்றுத்தருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு சுமார் 4.59 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து அவர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலை, சத்தியமூர்த்தி சிலை, அண்ணாசிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை அ.தி.மு.க.வினர் மட்டும் தான் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இந்த முறை நான் 4.59 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன்.
அதாவது உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். நடுநிலையாளர்களும் எனக்கே வாக்களித்து உள்ளனர்.
மேலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர அ.தி.மு.க.வில் உள்ளவர்களும் எனக்கு வேண்டிய, எனக்கு பழக்கமான, என் நீண்ட நாள் நண்பர்கள் என பலர் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினரும் எனக்கு வாக்களித்துதான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.
அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இருந்தாலும் இங்கு உள்ளவர்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் எனக்கு வெற்றி வாய்ப்பு சரியாக இருந்தது.
3 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தநிலையில் பிற மாநிலங்களில் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என காங்கிரஸ் கட்சி ஆராயும். எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி உரிய முறையில் உள்ளதா? மீண்டும் வாக்குச் சீட்டு முறை சரியாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி, வாதாடி மக்களுக்கு பெற்றுத்தருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 38 பாராளுமன்ற தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம் குறித்து பார்ப்போம்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் பாராளுமன்றத்தில் பா.ஜனதா, காங்கிரசை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 ஓட்டுகள் கிடைத்தன. இது 44.34 சதவீதம் ஆகும்.
கடந்த தேர்தலில் தி.மு.க. 34 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. தி.மு.க.வுக்கு அப்போது 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஓட்டுகள் கிடைத்தன. இது 23.61 சதவீதம் ஆகும்.
தி.மு.க. இந்த தேர்தலில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அ.திமு.க. 78 லட்சத்து 30 ஆயிரத்து 520 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது 18.5 சதவீதம் ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அ.தி.மு.க. 1 கோடியே 1 லட்சத்து 52 ஆயிரத்து 648 வாக்குகளை இழந்துள்ளது.
அதே நேரத்தில் தி.மு.க. தனது வாக்கு வங்கியை 23.61 சதவீதத்தில் இருந்து 32.78 சதவீதமாக உயர்த்தியுள்ளது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் பாராளுமன்றத்தில் பா.ஜனதா, காங்கிரசை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 ஓட்டுகள் கிடைத்தன. இது 44.34 சதவீதம் ஆகும்.
கடந்த தேர்தலில் தி.மு.க. 34 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. தி.மு.க.வுக்கு அப்போது 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஓட்டுகள் கிடைத்தன. இது 23.61 சதவீதம் ஆகும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க. போட்டியிட்டது. அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தி.மு.க. இந்த தேர்தலில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அ.திமு.க. 78 லட்சத்து 30 ஆயிரத்து 520 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது 18.5 சதவீதம் ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அ.தி.மு.க. 1 கோடியே 1 லட்சத்து 52 ஆயிரத்து 648 வாக்குகளை இழந்துள்ளது.
அதே நேரத்தில் தி.மு.க. தனது வாக்கு வங்கியை 23.61 சதவீதத்தில் இருந்து 32.78 சதவீதமாக உயர்த்தியுள்ளது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக டி.டி.வி. தினகரன் தனியாக செயல்பட்டார். இவருக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் உள்பட 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைவரும் தன்னலமின்றி கட்சியில் இணைந்து பணியாற்றுவோம்’ என்று அழைப்பு விடுத்து இருந்தனர்.
அமைச்சர் ஜெயக்குமார் விடுத்த அழைப்பில், “அ.தி. மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்து பாதுகாக்கப்பட்ட இயக்கம். சசிகலா, தினகரன் குடும்பம் தவிர பிரிந்தவர்கள் அனைவரும் தாய் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வம், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். இதையடுத்து சபாநாயகர் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறிய தினகரனின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவரது அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.
எனவே, சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் இனி அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே, சபாநாயகர் தனது நடவடிக்கையை விலக்கிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக டி.டி.வி. தினகரன் தனியாக செயல்பட்டார். இவருக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் உள்பட 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
என்றாலும் 9 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. எனவே ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
அமைச்சர் ஜெயக்குமார் விடுத்த அழைப்பில், “அ.தி. மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்து பாதுகாக்கப்பட்ட இயக்கம். சசிகலா, தினகரன் குடும்பம் தவிர பிரிந்தவர்கள் அனைவரும் தாய் கழகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வம், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். இதையடுத்து சபாநாயகர் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக தடை விதித்துள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறிய தினகரனின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவரது அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.
எனவே, சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் இனி அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே, சபாநாயகர் தனது நடவடிக்கையை விலக்கிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவர் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய மந்திரிசபையில் மோடி இடம் அளித்தார். இந்த தடவை தமிழகத்தில் இருந்து பா.ஜனதா எம்.பி.க்கள் ஒருவர் கூட இல்லை என்பதால் மத்திய மந்திரி சபையில் தமிழர்கள் இடம் பெறுவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஆனால் தமிழகத்தின் முக்கியத்துவத்தை கருதி தமிழக பா.ஜனதா தலைவர்களில் யாராவது ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி அளிக்கலாமா? என்று மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் தமிழக பா.ஜனதா தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிய வந்துள்ளது.
அவரது அழைப்பின் பேரில் தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “பா.ஜனதா கட்டுக்கோப்பான அமைப்பாகும். மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க.வுக்கு மேல்-சபையில் 13 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எனவே அதற்கேற்ப முடிவு எடுப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களை மத்திய மந்திரியாக்கினால் அவர்களை எம்.பி.யாக்க வேண்டிய தேவையாகும். இதுகுறித்தும் மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்றார்.
பாராளுமன்ற மேல்-சபையில் எம்.பி.க்களாக இருக்கும் கனிமொழி (திமு.க.), லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகிய 6 பேரின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிகிறது. விரைவில் அவர்களுக்கு பதில் புதிய 6 எம்.பி.க்களை தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய உள்ளனர்.
தற்போது சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். தி.மு.க. கூட்டணியில் வைகோ மற்றும் காங்கிரசுக்கு (மன்மோகன்சிங்) தலா ஒரு இடம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதுபோல அ.தி.மு.க.வில் ஒரு மேல்-சபை எம்.பி. இடத்தை கேட்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தமிழக பா.ஜனதா தலைவர்களில் ஒருவர் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய மந்திரிசபையில் மோடி இடம் அளித்தார். இந்த தடவை தமிழகத்தில் இருந்து பா.ஜனதா எம்.பி.க்கள் ஒருவர் கூட இல்லை என்பதால் மத்திய மந்திரி சபையில் தமிழர்கள் இடம் பெறுவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஆனால் தமிழகத்தின் முக்கியத்துவத்தை கருதி தமிழக பா.ஜனதா தலைவர்களில் யாராவது ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி அளிக்கலாமா? என்று மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் தமிழக பா.ஜனதா தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிய வந்துள்ளது.
அவரது அழைப்பின் பேரில் தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
தமிழக பா.ஜனதா தலைவர்களில் யாருக்கு மத்திய மந்திரியாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இல.கணேசன் கூறுகையில், “அதுபற்றி மோடிக்குதான் தெரியும். தமிழக பா.ஜனதா தலைவர்கள் ஒவ்வொருரையும் மோடி அறிந்து வைத்துள்ளார். எனவே அவர் சரியான முடிவு எடுப்பார்” என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க.வுக்கு மேல்-சபையில் 13 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எனவே அதற்கேற்ப முடிவு எடுப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களை மத்திய மந்திரியாக்கினால் அவர்களை எம்.பி.யாக்க வேண்டிய தேவையாகும். இதுகுறித்தும் மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்றார்.
பாராளுமன்ற மேல்-சபையில் எம்.பி.க்களாக இருக்கும் கனிமொழி (திமு.க.), லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகிய 6 பேரின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிகிறது. விரைவில் அவர்களுக்கு பதில் புதிய 6 எம்.பி.க்களை தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய உள்ளனர்.
தற்போது சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். தி.மு.க. கூட்டணியில் வைகோ மற்றும் காங்கிரசுக்கு (மன்மோகன்சிங்) தலா ஒரு இடம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதுபோல அ.தி.மு.க.வில் ஒரு மேல்-சபை எம்.பி. இடத்தை கேட்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தமிழக பா.ஜனதா தலைவர்களில் ஒருவர் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.
மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை, மக்களின் நலன்தான் முக்கியம் என்று ரவீந்திரநாத்குமார் கூறினார்.
மதுரை:
தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றிபெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.
தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றிபெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.
தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பெற்ற ஓட்டுகள் பாதித்ததா? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அ.ம.மு.க. கட்சியை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அந்த கட்சிக்கு அ.தி.மு.க.வினர் பலர் ஆதரவு தெரிவிப்பதாகவும், எனவே அந்த ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்றும் பரவலாக நம்பப்பட்டது.
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய பாதிப்பை அ.ம.மு.க.வினால் எல்லா தொகுதிகளிலும் தர முடியவில்லை. இது அ.ம.மு.க.வுக்கு அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று நிம்மதியையும் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தர்மபுரி, சிதம்பரம், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அ.ம.மு.க. கட்சியால் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாதகத்தை ஏற்படுத்த முடிந்தது.
தர்மபுரியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஓட்டுகளை பெற்றார். அங்கு அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஓட்டுக்களை வாங்கியுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் 53 ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகள், பா.ம.க.வுக்கு கிடைத்திருந்தால் தி.மு.க.வுக்கு கூடுதல் நெருக்கடியை அளித்திருக்க முடியும்.
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 லட்சத்து 229 ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க.வுக்கு 4 லட்சத்து 97 ஆயிரத்து 10 வாக்குகள் கிடைத்தன. அ.ம.மு.க.வுக்கு 62 ஆயிரத்து 308 ஓட்டுகள் கிடைத்தன. இந்த ஓட்டுகள் கிடைத்திருந்தால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.
ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 ஓட்டுகள் கிடைத்தன. அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 ஓட்டுகள் வந்தன. அங்கு அ.ம.மு.க.வுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 806 ஓட்டுகள் கிடைத்தன. அ.ம.மு.க.வின் ஓட்டுகள் கிடைத்திருந்தால் பா.ஜ.க. வெற்றி அடைந்திருக்க முடியும். ஆனால் வேறு தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு அ.ம.மு.க.வுக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை.
அதுபோல 22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதித்துள்ளது.
வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் தலா ஒரு லட்சத்துக்கும் மேலாக ஓட்டுகளை வாங்கி மக்கள் நீதி மய்யம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. சில இடங்களில் அ.ம.மு.க.வை விட அதிக ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் பெற்று 3-ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அ.ம.மு.க. கட்சியை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அந்த கட்சிக்கு அ.தி.மு.க.வினர் பலர் ஆதரவு தெரிவிப்பதாகவும், எனவே அந்த ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்றும் பரவலாக நம்பப்பட்டது.
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய பாதிப்பை அ.ம.மு.க.வினால் எல்லா தொகுதிகளிலும் தர முடியவில்லை. இது அ.ம.மு.க.வுக்கு அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று நிம்மதியையும் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தர்மபுரி, சிதம்பரம், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அ.ம.மு.க. கட்சியால் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாதகத்தை ஏற்படுத்த முடிந்தது.
தர்மபுரியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஓட்டுகளை பெற்றார். அங்கு அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஓட்டுக்களை வாங்கியுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் 53 ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகள், பா.ம.க.வுக்கு கிடைத்திருந்தால் தி.மு.க.வுக்கு கூடுதல் நெருக்கடியை அளித்திருக்க முடியும்.
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 லட்சத்து 229 ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க.வுக்கு 4 லட்சத்து 97 ஆயிரத்து 10 வாக்குகள் கிடைத்தன. அ.ம.மு.க.வுக்கு 62 ஆயிரத்து 308 ஓட்டுகள் கிடைத்தன. இந்த ஓட்டுகள் கிடைத்திருந்தால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.
ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 ஓட்டுகள் கிடைத்தன. அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 ஓட்டுகள் வந்தன. அங்கு அ.ம.மு.க.வுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 806 ஓட்டுகள் கிடைத்தன. அ.ம.மு.க.வின் ஓட்டுகள் கிடைத்திருந்தால் பா.ஜ.க. வெற்றி அடைந்திருக்க முடியும். ஆனால் வேறு தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு அ.ம.மு.க.வுக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை.
அதுபோல 22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதித்துள்ளது.
வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் தலா ஒரு லட்சத்துக்கும் மேலாக ஓட்டுகளை வாங்கி மக்கள் நீதி மய்யம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. சில இடங்களில் அ.ம.மு.க.வை விட அதிக ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் பெற்று 3-ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்...
சென்னை:
தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி வெற்றிபெற்றார். அவர் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய சென்னை தொகுதியில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை விட 3 லட்சத்து 1520 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.
தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்தனைவிட 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
தேனி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் குமார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட 76 ஆயிரத்து 693 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
ஆரணி தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையை 2 லட்சத்து 30 ஆயிரத்து 806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை விட 3 லட்சத்து 32 ஆயிரத்து 142 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை விட 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தர்மபுரி தொகுதியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமாரை விட 63 ஆயிரத்து 460 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.
மதுரை தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசனை விட 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.
திருநெல்வேலி தொகுதியில் சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பண்டியன் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்தை விட 1 லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி வெற்றிபெற்றார். அவர் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய சென்னை தொகுதியில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை விட 3 லட்சத்து 1520 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.
தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்தனைவிட 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை விட 4 லட்சத்து 60 ஆயிரத்து 691 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஆரணி தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையை 2 லட்சத்து 30 ஆயிரத்து 806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை விட 3 லட்சத்து 32 ஆயிரத்து 142 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை விட 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தர்மபுரி தொகுதியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமாரை விட 63 ஆயிரத்து 460 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.
மதுரை தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசனை விட 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.
திருநெல்வேலி தொகுதியில் சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பண்டியன் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்தை விட 1 லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:
அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளன. நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.
மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது. ஜூன் 3-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று துரைமுருகன் கூறி இருந்தார். ஆனால் அதுபோல் எதுவும் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று நான் கூறி இருந்தேன்.
துரைமுருகன் சொல்வது போல் நடக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.
அவர் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை. எனவே, துரைமுருகன் தனது பதவியில் இருந்து விலகுவாரா?
தினகரனை பொறுத்தவரை மக்கள் அவரை நிராகரித்து விட்டனர். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தமிழக திட்டங்கள் பற்றி மேற்கொண்ட தவறான பிரசாரமும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.
எதிர் காலத்தில் இந்த தேர்தல் கூட்டணி தொடருமா என்பது பற்றி நான் எதுவும் கூற முடியாது. அது கட்சியின் கொள்கை சார்ந்த முடிவாகும்.
பா.ஜனதாவுடன் சேர்ந்ததால் அ.தி.மு.க. தோற்றதா? என்பது போன்ற யூகமான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளன. நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.
தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்.
துரைமுருகன் சொல்வது போல் நடக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.
அவர் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை. எனவே, துரைமுருகன் தனது பதவியில் இருந்து விலகுவாரா?
தினகரனை பொறுத்தவரை மக்கள் அவரை நிராகரித்து விட்டனர். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தமிழக திட்டங்கள் பற்றி மேற்கொண்ட தவறான பிரசாரமும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.
எதிர் காலத்தில் இந்த தேர்தல் கூட்டணி தொடருமா என்பது பற்றி நான் எதுவும் கூற முடியாது. அது கட்சியின் கொள்கை சார்ந்த முடிவாகும்.
பா.ஜனதாவுடன் சேர்ந்ததால் அ.தி.மு.க. தோற்றதா? என்பது போன்ற யூகமான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற பொதுத்தேர்தலில், எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னமே தங்கள் இதயம் கவர்ந்த சின்னம் என்பதை எடுத்துக் கூறும் வகையிலும், ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பதை நிலைநாட்டும் வகையிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கும் வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் இதயமார்ந்த நன்றி.
அகில இந்திய அளவில் பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தேச பக்தியும், மக்கள் தொண்டும் தனது இரு கண்களாகக்கொண்டு எழுச்சிமிகு நல்லாட்சியை நடத்திய பிரதமர் நரேந்திரமோடியின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது.
இந்திய வாக்காளப் பெருமக்கள் உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் இந்தத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்தி இருக்கின்றார்கள். நம் தேசத்தின் குடிமக்கள் அனைவருமே பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களே.
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதைக் காட்டுகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
வாக்காளப் பெருமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம். இன்னும் சிறப்புடன் பணியாற்றி, அனைத்துத் தொகுதி மக்களின் அன்பையும், நல்லாதரவையும் பெறுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றி வாய்ப்பை பாராளுமன்றத் தேர்தலில் நாம் இழந்திருந்தாலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்று ஆரூடம் சொன்னவர்களின் கூற்றை அடியோடு புறக்கணிக்கும் வகையில், அ.தி.மு.க. வாக்கு வங்கி பத்திரமாக உள்ளது என்ற உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க.வினர் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதல்களாலும், சுயநலம் கொண்டு தனி மனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசை மாறிய அ.தி.மு.க.வினர் அனைவரும் ஜெயலலிதாவின் உழைப்பையும், ‘எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் தொண்டாற்றும் ’என்று அவர் சூளுரைத்ததையும் நினைவில்கொண்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க.வை காத்திட தொடர்ந்து உழைப்போம். வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா அமைத்த நல்லரசு தொடரவும், அ.தி.மு.க. வின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டியும், தமிழக சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க.வின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலில், எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னமே தங்கள் இதயம் கவர்ந்த சின்னம் என்பதை எடுத்துக் கூறும் வகையிலும், ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பதை நிலைநாட்டும் வகையிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கும் வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் இதயமார்ந்த நன்றி.
அகில இந்திய அளவில் பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தேச பக்தியும், மக்கள் தொண்டும் தனது இரு கண்களாகக்கொண்டு எழுச்சிமிகு நல்லாட்சியை நடத்திய பிரதமர் நரேந்திரமோடியின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது.
இந்திய வாக்காளப் பெருமக்கள் உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் இந்தத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்தி இருக்கின்றார்கள். நம் தேசத்தின் குடிமக்கள் அனைவருமே பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களே.
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதைக் காட்டுகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
வாக்காளப் பெருமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம். இன்னும் சிறப்புடன் பணியாற்றி, அனைத்துத் தொகுதி மக்களின் அன்பையும், நல்லாதரவையும் பெறுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றி வாய்ப்பை பாராளுமன்றத் தேர்தலில் நாம் இழந்திருந்தாலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்று ஆரூடம் சொன்னவர்களின் கூற்றை அடியோடு புறக்கணிக்கும் வகையில், அ.தி.மு.க. வாக்கு வங்கி பத்திரமாக உள்ளது என்ற உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க.வினர் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதல்களாலும், சுயநலம் கொண்டு தனி மனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசை மாறிய அ.தி.மு.க.வினர் அனைவரும் ஜெயலலிதாவின் உழைப்பையும், ‘எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் தொண்டாற்றும் ’என்று அவர் சூளுரைத்ததையும் நினைவில்கொண்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க.வை காத்திட தொடர்ந்து உழைப்போம். வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தேனியில் தாம் பெற்ற வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறினார்.
தேனி:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வெற்றி சான்றிதழ் தரப்பட்டது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வெற்றி சான்றிதழை வழங்கினார்.
வெற்றி சான்றிதழை பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வெற்றி சான்றிதழ் தரப்பட்டது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வெற்றி சான்றிதழை வழங்கினார்.
வெற்றி சான்றிதழை பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனைவிட அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தேனி:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடும் இழுபறிக்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.
சிதம்பரம்:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் கட்சி தலைவர் திருமாவளவனும், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 497010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு, சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எதிர்த்து போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்றார். இதனால் ரவிக்குமார் எளிதில் வெற்றி பெற்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X