search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் டாக்டர்அன்புமணி ராமதாஸ் இந்த வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதற்கு காரணம் காட்டவே மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று தி.மு.க.வினர் புகார் அளித்தனர். இந்த வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக வாக்காளர்களோ, வாக்குச்சாவடி முகவர்களோ, தேர்தல் பிரிவு அதிகாரிகளோ புகார் அளிக்கவில்லை. ஆனால் இங்கு தேவையற்ற மறுஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் பா.ம.க.விற்கு முழுமையாக ஓட்டளித்து இருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க.வினர் மறுஓட்டுப்பதிவு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தர்மபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு அரசியல் தெரியாது. அவரை மக்கள் ஏற்கவில்லை.

    பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த நாளில் இருந்து எங்களை தரக்குறைவாக மு.க.ஸ்டாலின் பேசினார். முதலில் ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்று கூறிய அவர், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றபோது தேர்தல் முடிந்த பின்னர் பிரதமரை முடிவு செய்வோம் என்றார். பின்னர் மீண்டும் ராகுல்காந்தி தான் பிரதமர் என்று கூறினார்.

    இந்தநிலையில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சந்தித்தபோது அவரிடம் 1 மணிநேரம் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பா.ஜனதாவுடனும் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தோல்வி பயம் வந்து விட்டதால் அவர் குழப்பத்தில் இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சராக வேண்டும் என்ற அவருடைய கனவு எப்போதும் நிறைவேறப்போவது இல்லை.

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க.வும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வும் அமோக வெற்றி பெறும். இதேபோல் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.வேலுச்சாமி அ.தி.மு.க. நிர்வாகி மதிவாணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் விலகினார்.
    சேலம்:

    அதிமுக அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்  விலகினார். இதனைத்தொடர்ந்து சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    சேலம்:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கருத்துக் கணிப்புகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. அதிமுக மாநில கட்சிதான், தேசிய கட்சி அல்ல. எனவே, தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே என்னால் கருத்து கணிப்பு பற்றி சொல்ல முடியும், தேசிய அளவில் சொல்ல முடியாது

    2016 தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் நான் வெற்றி பெற்றேன். சேலத்தில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.

    எனவே, யார் வெற்றி பெறுவார்கள் என்பது 23ம் தேதி தெரியும். பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.



    விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது. மக்களின் நன்மைக்காகவே புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் தேவைப்படுகிறது. விபத்துக்களை தவிர்க்க இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப சாலைகள் போடப்படுகின்றன. வெறும் 7 சதவீத விவசாயிகள் மட்டுமே சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நடிகை குஷ்பு சென்னையை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    சென்னை எனக்கு புகழ், குடும்பம் என எல்லாவற்றையும் தந்துள்ளது. என் மனதில் இருந்த துன்பத்தை போக்கியது. நான் பாஸ் போர்ட்டில் மும்பை வாசியாக இருந்தாலும், இதயப்பூர்வமாக சென்னை வாசியாக உணர்கிறேன். இந்த சிறப்பான நகரத்துக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.

    சென்னை காலத்துக்கேற்ப நிறைய மாறி இருக்கிறது. ஆனாலும் இங்கு கலாசாரம் வேரூன்றி இருக்கிறது. எனது மகள்கள் இங்கே வளர்ந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு நடிகையாக, தற்போது விளம்பர பலகைகள், பேனர்களை அண்ணா சாலையில் பார்க்க முடிய வில்லை என்பது சற்று வருத்தம் தான். முன்பெல்லாம் பட ரிலீசின் போது மவுண்ட் ரோட்டுக்கு சென்ற போது பெரிய பெரிய பேனர்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் தமிழ் படமான ‘தர்மத்தின் தலைவன்’ வெளியான போது நான் மவுண்ட் ரோட்டுக்கு சென்றேன்.

    அங்கு பெரிய அளவில் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்களை பார்த்து கொண்டிருந்தனர். அதில் பிரபுவின் படம் மட்டும் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

    எனது கணவர் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்‘ படம் வெளியான போது மவுண்ட்ரோட்டில் அவரது படத்துடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. நான் தென்னிந்தியாவில் முதலில் தெலுங்கு படத்தில்தான் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விஜயவாகினி ஸ்டூடியோவில் 1986-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கியது.

    அந்த நாட்களை என் வாழ்வாளில் மறக்க முடியாது. ரஜினிகாந்துடன் நான் நடித்த ‘பாண்டியன்’ படத்தின் படப்பிடிப்பு முட்டுக்காடு பகுதியில் நடைபெற்ற போது ரசிகர்களும், சுற்றுலா பயணிகளும் பெரிய அளவில் திரண்டிருந்தனர். அதேபோல ‘அண்ணாமலை’ படத்தின் ஒரு பாடல் காட்சி போட்கிளப் பகுதியில் நடந்த போதும் அப்பகுதி பொதுமக்கள் தெரு முழுவதும் திரண்டு நின்று பார்த்தனர். இதை என்னால் மறக்க முடியாது.

    ஒரு அரசியல்வாதியாக எனக்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் பெரிய செல்வாக்கு இருந்தது. இது எனக்கு கிடைத்த அரியாசனமாக உணர்ந்தேன். நான் சென்னையில் நீண்ட காலமாக வசித்த போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நான் பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அவர் காரில் கடந்து செல்வதை பார்க்க தெருக்களில் மக்கள் அலை போல திரண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தினமும் காலை 9.30 மணிக்கு மியூசிக் அகாடமி ரோட்டில் காரில் செல்வார். நானும் மக்களுடன் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன். அவர் மதியம் சாப்பிட செல்லும் போது சாலையின் எதிர் திசைக்கு சென்று அவரை பார்ப்பேன்.


    இது சில வாரங்கள் சென்று கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அவர், ஒரு நாள் அவரது மெய்க்காப்பாளர்களை அனுப்பி என்னை யார்? என விசாரித்துள்ளார்.

    எனக்கு அமைதி தேவை என்றால் உடனே மெரினா கடற்கரைக்கு சென்று விடுவேன். தி.நகர் கடைகளுக்கு சென்று சேலைகள் வாங்கியதையும் மறக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார். சட்டமன்ற தேர்தல் வரும்போது, தமிழகம் முழுவதும் அவர் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு, மக்கள் ஆதரவோடு ஆட்சி நாற்காலியில் அமருவார் என்று நம்புகிறோம்.

    என்னை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க.வுடன் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், ரஜினிகாந்த் அரசியலுக்கு உள்ளேயே அடியெடுத்து வைக்கமாட்டார்.


    அவர் தமிழக அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு மிக முக்கியமான காரணமே கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் சமூகம் பாழ்பட்டு விட்டது. அதைத்தான் அவர் சிஸ்டம் கெட்டு விட்டது என்று கூறி உள்ளார். சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார். இது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இங்கு அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு 29 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே கோவில் கல்வெட்டில் எம்.பி என ரவீந்திர நாத்குமார் பெயர் வைத்தது தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலய கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திர நாத்குமார் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.

    ரவீந்திர நாத்குமார் பெயர் இடம் பெற்ற கல்வெட்டை வைத்தது அப்பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகன் என்பது தெரியவந்தது.

     தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்க வந்த அ.தி.மு.க வக்கீல் அணியினர்.

    இதனிடையே ரவீந்திர நாத்குமார் சார்பாக அ.தி.மு.க வக்கீல் அணியினர் இன்று மதியம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். இது தொடர்பாக ரவீந்திர நாத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பெயரை எம்.பி என பொறித்தது தொடர்பாக சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ்காரர் வேல்முருகன் மீது தேர்தல் விதிமீறல், நம்பிக்கை மோசடி, போலிஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.
    வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே கல்வெட்டில் எம்.பி என பெயர் வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஓ.பி.எஸ் மகன் புகார் அளித்துள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலய கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

    இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திர நாத்குமார் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.

    ரவீந்திர நாத்குமார் பெயர் இடம்பெற்ற கல்வெட்டை வைத்தது அப்பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதுபற்றி வேல்முருகன் கூறும்போது, எங்களை பொறுத்தவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு எப்போதும் முதல்வர்.

    தற்போது துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால் அவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தேன். தேனி பாராளுமன்ற வேட்பாளர் என பொறிக்க சொன்ன இடத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என தவறுதலாக இடம்பெற்றுவிட்டது என்றார்.

    போலீஸ்காரர் வேல்முருகன் ஏற்கனவே ஜெயலலிதா மறைந்த போது சீருடையுடன் மொட்டையடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும் காவிரி நீர் விவகாரத்தில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். கடைசியாக அவர் தேனி மாவட்ட ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது காவல்துறை கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

    இதனிடையே ரவீந்திர நாத்குமார் சார்பாக அ.தி.மு.க வக்கீல் அணியினர் இன்று மதியம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

    இது தொடர்பாக ரவீந்திர நாத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை கமல்ஹாசன் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது என அவர் மீண்டும் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

    இந்து மதம் ஆண்டாண்டு பழமையானது- முதன்மையான மதம். கேதர்நாத்தில் உள்ள சிவாலயம் பாண்டவர்கள் வழிபட்டது. அந்த அளவுக்கு இந்து மதம் மிகவும் தொன்மையானது.

    இந்தியாவுக்கு வந்தவர்களும், ஆள வந்தவர்களும், வாழ வந்தவர்களும் இந்து மதத்தின் சிறப்புகளை அழிக்க முற்பட்டனர். அதையெல்லாம் தாண்டி இந்துமதம் தழைத்தோங்கி உள்ளது.


    கமல்ஹாசன் கூறுவது போல இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது அல்ல, இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    “வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும்” என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரத்தில் பிரசாரத்தின்போது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று (நேற்று) பிரசாரம் முடிவடைகிறது. ஆனால் எடப்பாடியாரின் சாதனைகள் தொடரும். சாதகமான கருத்துக்களை தெரிவிப்பவர்களை மட்டுமே டி.டி.வி.தினகரனுக்கு பிடிக்கும்.

    அவர் பித்தலாட்ட அரசியல் செய்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரை கடுமையாக விமர்சித்து உள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார். இன்று ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும், அ.தி.மு.க.வை முடக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இதுதான் அவருடைய வாடிக்கை. தி.மு.க. செய்கிற வேலையைத்தான் தினகரன் செய்கிறார்.

    தினகரனுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் கிடையாது. ஜெயலலிதா பெயரை சொல்லும் அருகதை தினகரனுக்கு கிடையாது.

    மக்கள் நீதிமய்யம் சார்பில் என் மீது போடப்பட்டு உள்ள வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். எம்.ஜி.ஆர் பக்தர், ஜெயலலிதா தொண்டர்கள், எடப்பாடியாரின் தம்பிகள் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மாற்றம் வரும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எளிமையான ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட மக்கள் ரோட்டில் வந்து நிற்கிறார்கள். அ.தி.மு.க.வின் பின்னால் மக்கள் இயக்கம் உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மக்கள் தீர்ப்பு அமையும்.

    தி.மு.க. இதுவரை நேர்மையான முறையில் ஆட்சியை கைப்பற்றவில்லை. அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் குறுக்கு வழியில் ஆட்சி பிடித்தனர். மக்கள் நேர்மையான ஆட்சியை விரும்புகின்றனர். வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையப்போகிறது.

    காங்கிரஸ் கட்சி உடைந்தது போன்று, தி.மு.க.வும், முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்த 70 வயதை நெருங்கும் தலைவர் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் பின்னால் இருக்க கூடியவர்கள் மற்றொரு அணியாகவும் பிரிய போகிறார்கள். தி.மு.க.வில் உள்ள நல்ல மனிதர்கள் வந்து விடுவார்கள். அல்லது மாற்று அணி உருவாக்குவார்கள். இதுதான் தி.மு.க.வின் நிலை.

    ஆட்சியை கைப்பற்றுவதற்காக மு.க.ஸ்டாலின் வசனம் எழுதி பேசிக் கொண்டு இருக்கிறார். இது சினிமா படத்துக்கு பொருந்தும். நிஜத்தில் நடப்பது இல்லை. எடப்பாடியார் ஆட்சி நிம்மதியாக கம்பீரமாக நடைபெறும். எனவே, எடப்பாடியார் ஆட்சி நிலையான ஆட்சியாக இருக்கும்.

    இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    நான்கு தொகுதி இடைத்தேர்தலில் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதுதொடர்பாக அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை மூலம் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நல்லதை எந்நாளும் போற்றி அல்லதை அறவே அகற்றுகின்ற அரசியல் ஞானம் மிகுந்த அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு பணிவார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், இவ்வரசு பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது.

    ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய அன்புப்பாதையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்திற்காக செயல்படும் இந்த அரசு மெருகோடு, மிடுக்கோடு தொடர்ந்து நடைபெற, வருகின்ற மே 19 அன்று நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், உங்களின் பொன்னான ஆதரவை ‘இரட்டை இலை’ சின்னத்தில் வழங்கி, கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, அதன் மூலம் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாசத்தினையும் உறுதிபட இந்நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென, வாக்காளப் பெருமக்களாகிய உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.

    கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
    தேனி:

    ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயர் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தைரியத்தை ஓ.பன்னீர்செல்வம்தான் கொடுத்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்வெட்டு.

    தேர்தல் ஆணையத்தில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல்குறித்து எந்த புகார் அளித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது நடந்துள்ள விதி மீறல் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது இதன் பிறகாவது அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கிறார்கள்? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவு நியாயமாக நடக்கும் என்று நம்புகிறோம். அதே போல் அன்றைய தினம் நடைபெறும் 4 சட்டமன்ற தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடக்க தேர்தல் ஆணையம் உறுதியளிக்க வேண்டும்.

    23-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×