என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 94530
நீங்கள் தேடியது "slug 94530"
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனில் சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - கால் டீஸ்பூன்
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் சிக்கன், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். சிக்கனில் உள்ள தண்ணீரில் சிக்கன் வேக வேண்டும். சிக்கனில் தண்ணீர் எல்லாம் வற்றியதும் சிக்கனை மிக்சியில் போட்டு உதிரியாக அரைத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானது சோம்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த சிக்கனை போட்டு வதக்கவும்.
சிக்கனில் நன்றாக மசாலா சேர்ந்து உதிரியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - கால் டீஸ்பூன்
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் சிக்கன், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். சிக்கனில் உள்ள தண்ணீரில் சிக்கன் வேக வேண்டும். சிக்கனில் தண்ணீர் எல்லாம் வற்றியதும் சிக்கனை மிக்சியில் போட்டு உதிரியாக அரைத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானது சோம்பு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த சிக்கனை போட்டு வதக்கவும்.
சிக்கனில் நன்றாக மசாலா சேர்ந்து உதிரியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சிக்கன் கீமா பொடிமாஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முட்டை சேர்த்து சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 100 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு - 1/2 ஸ்பூன்,
வெங்காயத்தாள் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.
இறால் - 100 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு - 1/2 ஸ்பூன்,
வெங்காயத்தாள் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான சுவையான கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்
நாட்டு முட்டை - 3
வெங்காயம் - ஒன்று
ப.மிளகாய் - 2
மிளகுதூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
ப.மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரைடீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும். ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் சுத்தம் செய்த கீரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.
ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்
நாட்டு முட்டை - 3
வெங்காயம் - ஒன்று
ப.மிளகாய் - 2
மிளகுதூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ப.மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரைடீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும். ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் சுத்தம் செய்த கீரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.
லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, சுவையான கீரை ஆம்லெட் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான செஸ்வான் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 250 கிராம்,
மைதா - 3 டீஸ்பூன்,
கார்ன் பிளவர் - 2 டீஸ்பூன்,
முட்டை - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 50 கிராம்,
வெங்காயம் -1,
குடைமிளகாய் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 1,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு,
செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு அதனுடன் மைதா, உப்பு, கார்ன் பிளவர், முட்டை (பாதி) சற்று நீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.
அடுத்து வெங்காயம், தக்காளி, கேப்சிகம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அரைத்த காய்ந்த மிளகாய், தக்காளி சாஸ் சேர்க்கவும்.
கொஞ்சமாக கார்ன் பிளவர் கரைத்து வாணலியில் ஊற்றவும்.
கடைசியாக பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுக்கவும்.
சிக்கன் - 250 கிராம்,
மைதா - 3 டீஸ்பூன்,
கார்ன் பிளவர் - 2 டீஸ்பூன்,
முட்டை - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 50 கிராம்,
வெங்காயம் -1,
குடைமிளகாய் - 1,
தக்காளி - 1,
பூண்டு - 1,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு,
தக்காளி சாஸ் - சிறிது.
செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு அதனுடன் மைதா, உப்பு, கார்ன் பிளவர், முட்டை (பாதி) சற்று நீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.
அடுத்து வெங்காயம், தக்காளி, கேப்சிகம் போன்றவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் அரைத்த காய்ந்த மிளகாய், தக்காளி சாஸ் சேர்க்கவும்.
கொஞ்சமாக கார்ன் பிளவர் கரைத்து வாணலியில் ஊற்றவும்.
கடைசியாக பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் போட்டு வறுத்து எடுக்கவும்.
சூப்பரான செஸ்வான் சிக்கன் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாம்பார் சாதம், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை அவியல். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 4
உப்பு - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிது
மசாலாவிற்கு...
தேங்காய் துருவல் - அரை கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 1
மிளகு - 1 தேக்கரண்டி
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு இரு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த முட்டையை அதில் போட்டு கலந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி முட்டை மசாலாவில் ஊற்றவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான முட்டை அவியல் ரெடி.
முட்டை - 4
உப்பு - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிது
மசாலாவிற்கு...
தேங்காய் துருவல் - அரை கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 1
மிளகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு இரு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த முட்டையை அதில் போட்டு கலந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி முட்டை மசாலாவில் ஊற்றவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான முட்டை அவியல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீன், தேங்காய் சேர்த்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வஞ்சிர மீன் - 250 கிராம்
சோளமாவு - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி
மிளகு பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.
அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
வஞ்சிர மீன் - 250 கிராம்
சோளமாவு - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - பாதி
மிளகு பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.
அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மீன் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா?. சூப்பராக இருக்கும். இன்று மீன் முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் முட்டை - 200 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன்
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.
மீன் முட்டை நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
மீன் முட்டை - 200 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.
மீன் முட்டை நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான மீன் முட்டை பிரை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி - 5
முட்டை - 4
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பெ.வெங்காயம் - 3
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.
அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
சப்பாத்தி - 5
முட்டை - 4
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பெ.வெங்காயம் - 3
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.
அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
ருசியான முட்டை சப்பாத்தி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 4
பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை :
கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.
அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.
மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.
இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.
பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.
முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.
முட்டை - 4
பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.
அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.
மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.
இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.
பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.
முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.
சூப்பரான அவித்த முட்டை பிரை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளி ரசம், மிளகு ரசம், பைனாப்பிள் ரசம் என்றெல்லாம் ருசித்திருப்பீர்கள். இன்று சிக்கனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2
ஏலக்காய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
ப.மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி, கரைத்த புளியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.
பின் அதை வடிகட்டி விடவும்.
பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும்.
இப்போது மணக்கும் சிக்கன் ரசம் ரெடி.
இந்த ரசத்தை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.
சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
புளி - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2
ஏலக்காய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
ப.மிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி, கரைத்த புளியை ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்.
பின் அதை வடிகட்டி விடவும்.
பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும்.
இப்போது மணக்கும் சிக்கன் ரசம் ரெடி.
இந்த ரசத்தை சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - 300 கிராம்
முட்டை - 3
வடித்த சாதம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.
இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.
கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இறால் - 300 கிராம்
முட்டை - 3
வடித்த சாதம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
செய்முறை:
இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.
இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.
கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் இந்த வாழை இலை மீன் மசாலா மிகவும் பிரபலம். இன்று இந்த வாழை இலை மீன் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் - 6,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - 100 மிலி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
வாழை இலை - தேவையான அளவு
செய்முறை :
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.
நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.
வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.
மீன் துண்டுகள் - 6,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - 100 மிலி,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
வாழை இலை - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை :
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.
நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.
வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X