search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94530"

    சிக்கனை தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைத்து தயார் செய்யப்படுகிறது கால்மி கபாப். இந்த கால்மி கபாப்பை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 1/4 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1/2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பொடி - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    ஃப்ரஷ் கிரீம் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

    எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் போட்டு நன்றாக கலந்து 24 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கால்மி கபாப் ரெடி.

    புதினா சட்னி, வெங்காயம் ஆகியவற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, பூரி, தோசை, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் கொத்துக்கறி. இன்று இந்த கொத்துக்கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் கொத்துக்கறி - 200 கிராம்,
    எண்ணெய் தேவைக்கு.

    தாளிக்க...

    இடிச்ச பூண்டு - 3,
    இடிச்ச சின்ன வெங்காயம் - 5,
    காய்ந்த மிளகாய் - 5,
    கறிவேப்பிலை - சிறிது,
    மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
    கொத்தமல்லி, புதினா, உப்பு, நெய் - ½ தேக்கரண்டி.



    செய்முறை :

    மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மட்டன் கொத்துக்கறி, உப்பு, மட்டன் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொத்துக்கறி வேகும் வரை மூடி வைக்கவும்.

    இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நெய், புதினா, மல்லி சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் கொத்துக்கறி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் மாசி கருவாட்டு தொக்கு போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாசி - 1 துண்டு (25 கிராம்)
    பெரிய  வெங்காயம் - 100 கிராம்
    பழுத்த தக்காளி - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு குழிகரண்டி
    கடுகு, உளுந்து - தலா அரைடீஸ்பூன்
    கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    மாசி கருவாட்டு துண்டை அம்மியில் வைத்து பொடித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

    தக்காளியையும் பச்சைமிளகாயும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம் சோத்து வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான மாசி தொக்கு ரெடி.

    சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட்டிஷ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விருதுநகர் மட்டன் சுக்காவை தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த சுக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்னவெங்காயம் - 200 கிராம்
    எலும்பில்லாத மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 30 கிராம்
    சீரகத்தூள் - 40 கிராம்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    நல்லெண்ணெய் - 30 மில்லி.
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், பொன்னிறமாக வந்தவுடன் மட்டனையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    மட்டன் நன்கு வெந்தது தண்ணீர் ஏதும் இல்லாமல் டிரையாக வந்தவுடன், சீரகத்தூளை தூவி, உப்பு சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான விருதுநகர் மட்டன் சுக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி - 100 கிராம்
    வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்)
    சின்ன வெங்காயம் - 10
    தக்காளி - ஒன்று
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் -  ஒரு டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரைக்கால் கப்
    கறிவேப்பிலை - 5 இலைகள்
    பூண்டுப் பல் - ஒன்று
    பட்டர் (அ) நல்லெண்ணெய்  - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள்  - அரைக்கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் பட்டர் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.

    குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிடவும்.

    பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான சூப்பரான சிக்கன் சூப் ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் விருப்பம் தான்.. அதிலும் பிஷ் ஃப்ரைடு ரைஸ் என்றால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். இன்று பிஷ் ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - ஒரு கப்
    வறுத்த மீன் - 2 துண்டுகள்
    சோயா சாஸ் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    தக்காளி சாஸ் - 1
    வினிகர் - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 2
    முட்டை - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 1
    கேரட், பீன்ஸ், கோஸ் - ஒரு கப்
    நெய் - 3 ஸ்பூன்
    பூண்டு - 4 பல்



    செய்முறை :

    வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும்.

    சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும்.

    முட்டையை உதிரியாக பொரித்து வைக்கவும்.

    கடாயில் நெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சாஸ் வகைகள் மற்றும் வினிகரை சேர்த்து காய்கறிகளை வேகவிடவும்.

    அடுத்து அதில் பொரித்த முட்டை, வறுத்த மீன் மற்றும் சாதத்தை கொட்டி கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று பாலக்கீரை சிக்கன் சேர்த்து சூப்பரான பாலக் சிக்கன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாலக்கீரை - 1 கட்டு
    சிக்கன் - 1/2 கிலோ
    வெங்காயம் - 300 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்க்கவும். தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.

    சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கன், காய்கறி நூடுல்ஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன், வெஜிடபிள் சேர்த்து நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எண்ணெய் - 5 தேக்கரண்டி,
    வெங்காயம் - 2,
    குடைமிளகாய் - 1,
    முட்டைகோஸ் - 1/4,
    கேரட் - 3,
    பீன்ஸ் - 2,
    முட்டை - 2,
    மட்டன் - 100 கிராம்,
    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
    உப்பு, சர்க்கரை - ½ தேக்கரண்டி,
    சோயா சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    மட்டனை உப்பு, வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் முட்டையை ஊற்றி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.

    கடைசியாக பின்பு நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்னர் வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மட்டனை வைத்து எளிய முறையில் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரைக்க...

    மட்டன்கொத்துக்கறி - 150 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,
    சோம்பு தூள் - அரை தேக்கரண்டி,
    மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
    உப்பு - சிறிது.



    செய்முறை :

    மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான மட்டன் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனில் ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 250 கிராம்,
    தக்காளி - 2,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தனியாதூள் - அரை டீஸ்பூன்,
    புளி - சிறிதளவு,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    உப்பு - தேவையான அளவு.  

    தாளிக்க...

    மிளகு - அரை டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டனை குக்கரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி நன்றாக நசுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி, ப.மிளகாய், தனியா, சீரகத் தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.

    கடைசியாக கரைத்த புளி கரைசல், கொத்தமல்லி தூவி கொதி வரும் போது இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை வகை உணவுகளுடன் மட்டன் ரோகன் ஜோஸினை சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    கிராம்பு - 3
    ஏலக்காய் - 5
    இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு டேபிள்ஸ்பூன்
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    அரைத்த தக்காளி விழுது - 100 மில்லி
    முந்திரிப்பருப்பு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு  
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எண்ணெயில் வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கிய பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் அதில் மட்டன், தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    கலவை நன்றாக வெந்ததும் அதனுடன் தக்காளி விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின்னர் முந்திரி விழுதைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    கலவையை நன்கு கலக்கிவிட்டு, கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

    10 நிமிடங்கள் வரை மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.

    5-10 மில்லி வெண்ணீரில் குங்குமப்பூவை சேர்த்து நன்றாகக் கலக்கி, அந்நீரை அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கி, நறுக்கிய கொத்துமல்லித்தழையை தூவி இறக்கவும்.

    சூப்பரான மட்டன் ரோகன் ஜோஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹாங்காங் ஃப்ரைடு இறாலை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 500 கிராம்
    கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
    மைதா மாவு - 25 கிராம்
    முட்டை - 1
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    சர்க்கரை - 1 டீஸ்பூன்
    வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 50 கிராம்
    இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
    செலரி இலைகள் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு - 10 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயத்தாள் - 10 கிராம்
    பச்சை மிளகாய் - 2



    செய்முறை:

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    செலரி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தமாக கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செலரி, காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    இதில் பொரித்த இறால், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவிக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான ஹாங்காங் ஃப்ரைடு இறால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×