search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94542"

    தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். #Gajastorm #Storm

    சென்னை:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கடந்த வாரம் சூறையாடிய கஜா புயல் பாதிப்பு துயரம் இன்னமும் நீங்கவில்லை.

    வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கஜா புயல் கரையை கடந்து சென்ற பிறகு புயலால் ஏற்பட்ட பின்விளைவுகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழு சமாளித்து விட்டதாக முதலில் கருதப்பட்டது.

    ஆனால் மறுநாள் சனிக்கிழமை முதல் கஜா புயல் பாதிப்பு விவரங்கள் மெல்ல மெல்ல தெரிய வந்தன. வேதாரண்யம் மட்டுமே துண்டிக்கப்பட்டதாக தமிழக மக்கள் நினைத்து இருந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் கஜா புயல் நடத்திய கோர தாண்டவம் தெரிய வந்தது.

    குறிப்பாக திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருப்பது வெளிஉலகத்துக்கு தெரிய வந்தது. அதன்பிறகுதான் இந்த 4 மாவட்டங்களிலும் குக்கிராம மக்களும் மிக கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கிராம மக்களின் வாழ்வதாரங்களை கஜா புயல் அழித்து சென்று இருக்கும் வேதனைகளும் வெளிப்பட்டன. இதன் மூலம் கஜா புயல் சேத விவரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கஜா புயலால் வீடுகள், பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மின்சார கம்பங்கள் என அனைத்து தரப்பிலும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 1 லட்சத்து 17 ஆயிரத்து 624 வீடுகள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    1 லட்சத்து 70 ஆயிரத்து 54 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 735 கால்நடைகள் பலியாகி உள்ளன. 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு பயிர்கள் நாசமாகி உள்ளன.


     

    கஜா புயல் தாக்குவதற்கு முன்பே சுமார் 60 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு தமிழக அரசு இடமாற்றம் செய்து இருந்தது. கஜா புயல் தாக்கிய பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கானவர்கள் வீடுகள் சேதம் அடைந்து பரிதவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    தற்போது சுமார் 500 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 2½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும்ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, ஒரு லிட்டர் மண்ணெய் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து தீவிரமாக செய்து வருகிறார்கள். இந்த நிவாரணப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக கூடுதலாக 11 அமைச்சர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

    மின் விநியோகத்தை சீரமைப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது, தேவைக்கு ஏற்ப உணவு மற்றும் உணவு பொருட்களை வினியோகம் செய்வது, சுகாதாரத்துக்காக மருந்து, மாத்திரைகளை வழங்குவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

    இதனால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் முழு வீச்சில் அரசு அதிகாரிகளின் பணிகள் நடந்து வருகிறது.

    4 மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. 3,559 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் வயர்கள் அறுந்து விழுந்து நாசமாகி விட்டன. அந்த பகுதிகளில் புதிய மின் கம்பங்களை நட்டு மின் வயர்களை இணைக்கும் பணிகளில் சுமார் 13 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று வரை சுமார் 50 சதவீத மின் வினியோக சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. திருவாரூர் நகரில் 90 சதவீத இடங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. கிராமங்களுக்கு மின் உபகரணங்களை கொண்டு செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


     

    மின் வினியோகம் மற்றும் சுகாதாரத்துக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் கூடுதல் பணியாட்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் இருந்து 1000 பேர் வந்துள்ளனர். இவர்கள் ஒத்துழைப்புடன் இன்னும் 2 நாட்களில் மின் வினியோகம் முழுமையாக சீரடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிராமப் பகுதிகளில் அதிகளவு மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் தற்காலிகமாக ஜெனரேட்டர் மூலம் சில கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்து வருகிறார்கள். மின் கம்பிகளை கிராமத்துக்குள் இழுத்து செல்வதில் இடையூறு நிலவுவதால் கிராமங்களில் மின் வினியோகம் சீராக கூடுதலாக சில நாட்கள் தேவைப்படும் என்று தெரிகிறது.

    மின்சாரம் இல்லாத நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக கைவசம் இருந்த பொருட்களை வைத்து பொதுமக்கள் சமாளித்து விட்டனர். இன்று பல கிராமங்களில் சுத்தமான குடிநீர், உணவு கிடைப்பதில் சவாலான நிலை காணப்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு உணவு பொருட்களை வினியோகம் செய்யும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விடும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 150 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் மரங்கள் அகற்றப்படாததாலும், மின் கம்பங்களை சீரமைக்காததாலும், நிவாரண பணிகளுக்கு அதிகாரிகளால் செல்ல முடியவில்லை.

    அங்குள்ள மக்கள் உணவு கிடைக்காமலும், குடிநீர் இல்லாமலும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    நாகை மாவட்டத்தில் அக்கரைபேட்டை, விழுந்த மாவடி, பண்ணைச்சேரி, வேதாரண்யம், வெள்ளப் பள்ளம், தலைஞாயிறு, ஆறு காட்டுத்துறை, கோடியக்கரை மற்றும் அதை சுற்றியுள்ள 40 கிராமங்களில் மக்கள் உணவுக்காக தவிக்கிறார்கள்.

    கீழ்வேளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம் பட்டிணம், பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம் உள்ளிட்ட 40 கிராமங்களை சேர்ந்த மக்கள் உணவு, குடிநீருக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, வடுவூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 60 கிராம மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்.

    இந்த பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாததால் அரசு அதிகாரிகளால் நிவாரணம் வழங்க செல்ல முடியவில்லை. அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களை தேடி வர வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரண முகாம்களை தேடி பொது மக்களால் செல்ல முடியவில்லை.

    அந்த கிராமங்களில் சில தன்னார்வலர்கள் மட்டும் உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு முழுமையான நிவாரண உதவிகளை அவர்களால் வழங்க முடியவில்லை. மின்சப்ளையும் வழங்கப்படாததால் இரவு நேரங்களில் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. #Gajastorm #Storm

    தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    தண்ணீர் நமது தாகத்தை போக்குவதோடு நமது வாழ்வையும் வளமாக வைத்து கொள்கிறது. பலர் காரமாக எதையாவது சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் அவ்வளவு தான். கத்தி கூப்பாடே போட்டு விடுவார்கள். இந்த நிலையில் நாம் நீர் அருந்த கூடாது. ஏனென்றால், இவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்துமாம்.

    பலருக்கு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், பொதுவாகவே இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இது போன்ற நிலையில், உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும். அத்துடன் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் தடைபட கூடும்.

    சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், அதற்கு முன்பும்… இப்படி எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இவை செரிமான கோளாறை தரும். மேலும், மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.

    நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களின் உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான். அதிக தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். மேலும், ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.

    உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.

    பாட்டிலில் நாம் நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். எனவே, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்காதீர்கள்.

    தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடலில் சோடியம் அளவை இவை குறைத்து பாதிப்பை தரும். மேலும், உயிருக்கே கூட இதனால் ஆபத்து ஏற்படலாம். 
    இளையான்குடி பாசன கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. #DMK
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன் தலைமையில் நடந்தது.

    பேரூர் செயலர் நஜிமுதீன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்ற ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வைகை தண்ணீர் இளையான்குடி பகுதியில் உள்ள பாசன கண்மாய்களுக்கு கிடைக்க தண்ணீர் திறக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவைத்தலைவர் பெரியசாமி, துணைச் செயலர் மலைமேடு, நிர்வாகிகள் மூக்கையா, மலைச்சாமி, சேதுபதி துரை, சுந்தரம், அய்யனார், சிவனேசன், பழனிவேல், அஜய்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK
    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்தது. மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    விருதுநகர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்தது. விருதுநகரில் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மின்வெட்டும் ஏற்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    சிவகாசி, திருச்சுழி, வத்திராயிருப்பு, பிளவக்கல், கோவிலாங்குளம், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    விருதுநகர்-33

    வெம்பக்கோட்டை-22.2

    பிளவக்கல்-3.2

    மாவட்டத்தில் 296.8 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசியது. இன்று காலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக கோவில் வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதிகாலையில் பெய்த மழை காரணமாக கோவில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    குடியாத்தம் அடுத்த பிச்சானூரில் உள்ள வெங்கடேச பெருமாள் சிலையில் நீர் வடிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்து வழிபட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பிச்சானூர் அப்பு சுப்பையர் வீதியில் தென் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று காலை வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அப்போது, வெங்கடேச பெருமாள் சிலையின் மூக்கு பகுதியில் இருந்து திடீரென தண்ணீர் வடிந்தது. அர்ச்சகர் துணியை வைத்து துடைத்தும் தண்ணீர் வருவது நிற்கவில்லை.

    பக்தர்கள் சாமி சிலையில் வடிந்த தண்ணீரை ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கினர். இத்தகவல், பிச்சனூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பரவியது.

    ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்து வெங்கடேச பெருமாளை வணங்கி செல்கின்றனர்.
    திருப்பூரில் பலத்த மழை பெய்ததால் 30 ஆண்டுகளுக்கு பிறகு கவுசிகா ஆற்றில் நீர் வர தொடங்கியது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    திருப்பூரில் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.

    மழை காரணமாக 30 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் உள்ள கவுசிகா ஆற்றில் நீர் வர தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- திருப்பூர் - 15, அவினாசி -43.40, பல்லடம் - 48, தாராபுரம் -9, மூலனூர்- 8.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அருவியில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று இரவு மழை பெய்தது. இது போல் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மழை பெய்தது.
    காரிமங்கலம் அரசு விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளை தண்ணீர் எடுத்துவர காப்பாளர்கள் தொடர்ந்து வற்புறுத்துதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அரசு மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அருகிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பழமையான இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் தவிக்கிறார்கள். குறிப்பாக கட்டிடத்தின் சிமெண்டு மேற்கூரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழுமோ? என்ற நிலையில் உள்ளது. மாணவிகளுக்கான குளியல் அறை, கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. 

    இந்த நிலையில் மாணவிகளை விடுதி முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் தொட்டியில் இருந்து விடுதியில் சமையல் செய்வதற்கும் மற்றும் கழிப்பறைகளுக்கும் தண்ணீர் எடுத்துவர காப்பாளர்கள் தொடர்ந்து வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் குடங்களில் தண்ணீர் எடுத்து சுமந்து செல்கிறார்கள். 

    ஏழ்மையான நிலையில் இருக்கும் இந்த மாணவிகளை குடங்களில் தண்ணீர் எடுத்துவர வலியுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றங்கரையோரம் குளித்தபோது நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    சத்தியமங்கலம்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ஆனந்த் (வயது 18). ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் எபின் (23). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் கொண்டமுத்தனூர் கிராமத்தை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரைக்கு வந்தனர்.

    அவர்களுடன் நண்பரான அலெக்ஸ் என்பவரும் வந்திருந்தார். ஆனந்தும், எபினும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அலெக்ஸ் ஆற்றங்கரையில் நின்றார்.

    குளித்துக்கொண்டிருந்த ஆனந்தும், எபினும் ஆற்றின் ஆழமாக பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் ஆற்று நீரில் மூழ்கினர். இதை பார்த்த அலெக்ஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆற்றில் இறங்கி 2 வாலிபர்களையும் தேடினர். நேற்று பகலில் நடந்த இந்த தேடுதல் பணியில் அந்த பகுதி மீனவர்களும் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை வரை தேடியும் 2 வாலிபர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் நேற்று தேடும் பணி நிறத்தப்பட்டது.

    இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரர்களும், மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றில் மூழ்கிய ஆனந்த் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அவர் ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்படாம்பாளையம் பிரிவில் ஆற்றில் மிதந்தது.

    உடலை பார்த்து ஆனந்தின் உறவினர்கள் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆற்றில் மூழ்கிய இன்னொரு வாலிபரான எபினும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.
    திருவாரூர் அருகே சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் விட கோரி விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே மாங்குடி, திருநெய்ப்பேர், குன்னியூர், வடகரை ,ஆத்தூர், கூடூர், கல்யாணமகாதேவி, புதுப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாண்டவையாற்றில் தண்ணீர் விட்டு பயிர்களை காப்பாற்ற பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த பயனும் விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை.

    இதனையடுத்து திருவாரூர் அருகே மாங்குடி பாண்டவையாறு பாலத்தின் அருகே அனைத்து கட்சியை சேர்ந்த விவசாயிகள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பாண்டவையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தியும், தண்ணீர் முறையாக வழங்காத தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

    மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர் அதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை, வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், முன்னாள் பொதுச்செயலாளர் பிரபாகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நுகர்வோர் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ரமேஷ். ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு நிர்வாகி கனகராஜ், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொகுதி மேம்பாட்டிற்கு தேவையானவை குறித்து கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

    திருவாரூர் தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் உள்நோக்கத்துடன் நடைபெறுவதாக கருத வேண்டாம். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இங்கு சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளர்கள். அனைத்து தேவைகளும் முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப் படும்.

    திருவாரூரில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். திருவாரூர் விளமல் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும். ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை. தற்போது சம்பா விதைப்பு நடைபெற்று வரும் சூழலில் விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. வயல்களுக்கு தண்ணீரைகொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்-அமைச்சரின்் உத்தரவின்படி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தண்ணீர் பிரச்சினை சரியாகி விடும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 
    சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வழங்கக்கோரி திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    சம்பா பயிர்களை காப்பாற்ற தேவையான அளவு தண்ணீரை வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். முக்கொம்பு அணையை விரைவாக சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று திருவாரூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சேரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, மாவட்ட செயலாளர் கலியபெருமாள், தி.மு.க. விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் தேசபந்து, காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் மீனாட்சிசுந்தரம், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கோசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர். 
    ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆரணி:

    ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிக்குட்பட்ட இ.பி. நகர் புதுத்தெருவில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பைப்லைன் மூலம் மினி டேங்க்கிற்கு இணைப்பு கொடுக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதுப்பற்றி அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டனர்.

    அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. குடிநீர் வழங்கப்படாததால் கடந்த 15 நாட்களாக இ.பி.நகர் புதுத் தெரு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆத்திரமடைந்த மக்கள் குடிநீர் வழங்கக்கோரி ஆரணியில் இருந்து ராட்டினமங்கலம் செல்லும் புறவழிச் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.

    ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×