search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ரூ.149 சலுகையில் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

    ரூ.149 ஏர்டெல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    முன்னதாக மே மாத வாககில் ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டு தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்டது. மற்ற சேவைகளில் எவ்விதம மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பை விட புதிய மாற்றம் ஜியோ சலுகைக்கு போட்டியளிக்கும் வகையில் உள்ளது. 

    ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.149 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும்.

    முன்னதாக ரூ.399 விலையில் வழங்கி வந்த சலுகையை ஏர்டெல் மாற்றியமைத்தது. இந்த சலுகையில் தற்சமயம் தினமும் 2.4 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    ஐடியா செல்லுலார் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் குறிப்பிட்ட தொகை கேஷ்பேக் வடிவில் திரும்ப வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு கேஷ்பேக் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கூப்பன் வடிவில் வழங்கப்படும் இந்த தொகையை கொண்டு ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த சலுகையை பெற அனைத்து ரீசார்ஜ்களும் மை ஐடியா செயலி அல்லது ஐடியா வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இத்துடன் ஐடியா அறிவித்திருக்கும் மற்றொரு திட்டத்தில் அன்லிமிட்டெட் ரீசார்ஜ் செய்யும் போது பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கார்கள், பைக்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வென்றிட முடியும். ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள ஐடியா அறிவித்திருக்கும் புதிய வழிமுறையாக இது பார்க்கப்படுகிறது.

    ஜூன் 5 முதல் ஆகஸ்டு 15-ம் தேதி வரை ஐடியா செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த கூப்பனை ரூ.199 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ரூ.199 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஐடியா பிரீபெயிட் ரூ.398 சலுகையில் முந்தைய ரூ.199 சலுகையில் வழங்கப்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. எனினும் ரூ.398 சலுகையில் 70 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.199 சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஹாலிடே ஹங்காமா என்ற பெயரில் இதே போன்ற சலுகையை அறிவித்தது. இதில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.50 கேஷ்பேக் வழங்கப்பட்டது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஹாலிடே ஹங்காமா ஆஃபர் எனும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஜியோ போஸ்ட்பெயிட் சலுகையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ ஹாலிடே ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.399 ரீசார்ஜ் செய்து ரூ.100 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ சேவைகள் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் மைஜியோ செயலியை பயன்படுத்துவோர் போன்பெ மூலம் பணம் செலுத்தும் போது ரூ.100 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    ஜியோ சலுகையை பெறுவது எப்படி?

    - மைஜியோ செயலியில் லாக் இன் செய்து ரீசார்ஜ் செய்யக்கோரும் - - -

    - ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

    - இனி பை (Buy) பட்டனை க்ளிக் செய்து கட்டணம் செலுத்தலாம் (ரூ.50 - 
    உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது)

    - போன்பெ வாலெட்-ஐ பேமென்ட் ஆப்ஷனாக தேர்வு செய்ய வேண்டும்

    - போன்பெ கணக்கில் சைன்-இன் செய்து, மொபைல் நம்பர் மூலம் உறுதி செய்ய வேண்டும்

    - போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்த வேண்டும் (ரூ.50 கேஷபேக் போன்பெ வாலெட்-இல் சேர்க்கப்படும்)

    புதிய ரிலையன்ஸ் ஜியோ சலுகை ஜூன் 1-தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ரூ.299 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் எல்லையற்ற வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும்.

    இத்துடன் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 45 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த சலுகையை போன்று ரூ.299 விலையில் ஏர்டெல் மற்றொரு சலுகையை வழங்கி வருகிறது. இந்த சலுகையிலும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1.4 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


    கோப்பு படம்

    புதிய சலுகை இந்தியா முழுக்க ஓபன் மார்கெட் ஆப்ஷனாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. புதிய சலுகையின் விவரங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் குறிப்பிடப்படவில்லை.

    ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு எவ்வித போட்டியும் ஏற்படுத்தவில்லை. டெலிகாம் நிறுவனங்கள் தற்சமயம் அறிவிக்கும் அனைத்து சலுகைகளிலும் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் புதிய சலுகை எந்நேரமும் வாய்ஸ் கால் மேற்கொள்வோருக்கு ஏற்றதாக இருக்கும். எனினும் நாட்டில் டேட்டா போட்டி இன்னமும் தீர்ந்ததாக தெரியவில்லை. முன்னதாக ஏர்டெல் ரூ.449 பிரீபெயிட் சலுகையை அறிவித்து தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கியது. இத்துடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 70 நாட்களுக்கு வழங்கப்பட்டுகிறது.
    பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டுகளை வெளியிட்டு, புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பதாஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் உடன் இணைந்து இந்திய டெலிகாம் சந்தையில் சிம் கார்டுகளை வெளியிட்டுள்ளது. ஸ்வதேசி சம்ரிதி என அழைக்கப்படும் சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.144, ரூ.792 மற்றும் ரூ.1,584 என மூன்றில் ஒரு சலுகையை தேர்வு செய்ய வேண்டும். 

    மூன்று சலுகைகளிலும் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமி்டடெட் வாய்ஸ் கால் மற்றும் பல்வேறு சலுகைகள் வெவ்வேறு வேலிடிட்டி கொண்டுள்ளன. முதற்கட்டமாக இந்த சிம்கார்டுகள் பதாஞ்சலி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு பின் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்வதேசி சம்ரிதி சிம் கார்டு வைத்திருப்போருக்கு பதாஞ்சலி பொருட்களை வாங்கும் போது 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் - பதாஞ்சலி அறிவித்திருக்கும் ரூ.144 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (மும்பை மற்றும் டெல்லி தவிர்த்து), 2 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ரூ.792 மற்றும் ரூ.1584 சலுகைகளிலும் இதேபோன்ற சலுகைகள் முறையே 180 மற்றும் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்வதேசி சிம் கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், முதற்கட்டமாக இவற்றை பதாஞ்சலி ஊழியர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். மேலும் இந்த சலுகைகள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.
    ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.449 விலையில் கிடைக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

    ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.449 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் ரூ.448 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா சுமார் 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.


    கோப்பு படம்

    முன்னதாக ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. ஒரு சலுகையின் விலை ரூ.193 என்றும் ரூ.49 என நி்ர்ணயம் செய்யப்பட்டது. இதில் ரூ.193 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.49 சலுகையில் 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. 

    இத்துடன் ஏர்டெல் வாடிக்கைாயளர்களுக்கு ரூ.49 விலையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இந்த சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும். இதேபோன்று ரூ.92 விலையில் வாடிக்கையாளர்களுக்கு 6 ஜிபி டேட்டா சுமார் ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஐபிஎல் கிரிகெட் தொடரை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் சிறப்பு டேட்டா சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை காண வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.



    மும்பை:

    ஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடர் நிறைவுற இருக்கும் நிலையில், இறுதி போட்டியை காண ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் துவங்கிய போது ரிலையன்ஸ் ஜியோ ரூ.251 விலையில் புதிய சலுகையை அறிவித்திருந்தது.

    51 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையில் தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இதே மாதத்தில் ரூ.251 சலுகையை ஊக்குவிக்கும் நோக்கில் கிரிக்கெட் டீசர் திட்டத்தை அறிவித்து, 8 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குகிறது. இந்நிலையில், தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் இதே போன்ற சலுகைகளை வழங்குகிறது.



    கோப்பு படம்

    நான்கு நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய கிரிக்கெட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 2 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது. புதிய ஆட்-ஆன் சலுகை குறுகிய கால சலுகையா என்பது குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. 

    குறிப்பாக, புதிய சலுகை வழங்கப்படிருப்பதை மைஜியோ செயலியின் மைபிளான்ஸ் பகுதியில் சென்று பார்க்க முடியும். ரூ.101 மதிப்புள்ள புதிய ஆட்-ஆன் சலுகை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆட்-ஆன் சலுகை என்பதால் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் எதுவும் வழங்கப்படவில்லை.

    ரிலையன்ஸ் ஜியோ ரூ.251 சலுகை 2018 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்ப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் இந்த டேட்டாவை கொண்டு எவ்வித வீடியோ மற்றும் இதர சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதே சலுகை புதிய ஆட்-ஆன் சலுகைக்கும் பொருந்தும்.
    பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் மூன்று நம்பர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,199 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை ஃபேமிலி பிளான் என அழைக்கப்படுகிறது. இந்த சலுகையில் பிராட்பேன்ட் இன்டர்நெட் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

    புதிய பிஎஸ்என்எல் ஃபேமிலி சலுகையில் 10Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா அளவு கடந்ததும் டேட்டா வேகம் 2Mbps  ஆக குறைக்கப்படும்.

    பிஎஸ்என்எல் புதிய சலுகைக்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மூன்று பிஎஸ்என்எல் எண்களை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு சிம் கார்டிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 



    இந்த சலுகையின் கீழ் வழங்கப்படும் டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிஎஸ்என்எல் சலுகையில் எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படவில்லை. எனினும், பிரத்யேக ரிங்பேக் டோன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மூன்று பிஎஸ்என்எல் எண்களில் ஒன்றுக்கு இலவச ஆன்டைன் டிவி சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு சிம் கார்டுக்கு ஆன்லைன் கல்வியில் ஒரு பாடத்திற்கு ஒருமாத சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் ஜியோ ஃபைபர் சேவைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் சார்பில் ஃபைபர் பிராட்பேன்ட் சேவை துவங்கப்பட்டது. இத்துடன் மூன்று FTTH சலுகைகளில் டேட்டா அளவை மும்மடங்கு அதிகரித்தது. ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் ரூ.1045, ரூ.1395 மற்றும் ரூ.1895 விலையிலான சலுகைகளில் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்குவதாக அறிவித்தது.
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சலுகையின் விலை ரூ.193 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி கூடுதல் டேட்டா தினமும் பெற முடியும். இதே போன்று ரூ.49 சலுகையிலும் 1 ஜிபி கூடுதல் டேட்டா பெற முடியும். 

    தற்சமயம் ஏர்டெல் அன்லிமிட்டெட் சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆட்-ஆன் சலுகைகளை பெற முடியும். இதன் வேலிடிட்டி அன்லிமிட்டெட் சலுகைகளின் வேலிடிட்டி இருக்கும் வரை செல்லுபடியாகும். ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஐடியா செல்லுலார் ஆட்-ஆன் சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    முதற்கட்டமாக ரூ.193 மற்றும் ரூ.49 சலுகைகள் பஞ்சாப் வட்டாரத்தில் வழங்கப்படும் நிலையில் மற்ற வட்டாரங்களில் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.193 டேட்டா ஆட்-ஆன் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டா வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அன்லிமிட்டெட் சலுகையின் வேலிடிட்டி முடியும் வரை செல்லுபடியாகும்.

    குறிப்பிட்ட வாடிக்கையாளர் ரூ.349 விலை சலுகையை பயன்படுத்தும் பட்சத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் நிலையில், கூடுதலாக ரூ.193 விலையில் ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி கூடுதல் டேட்டாவும் சேர்த்து தினமும் 3.5 ஜிபி டேட்டா பெற முடியும். இதே சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.199, ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.509 விலை சலுகைகளுக்கும் பொருந்தும்.


    கோப்பு படம்

    ஏர்டெல் சார்பில் ரூ.49 விலையிலும் புதிய ஆட்-ஆன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வழக்கமான அன்லிமிட்டெட் சலுகையுடன் 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.349 சலுகையை பயன்படுத்துவோர் கூடுதலாக ரூ.49 சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா கூடுதலாக பெற முடியும்.

    முன்னதாக ஏர்டெல் வாடிக்கைாயளர்களுக்கு ரூ.49 விலையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இந்த சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும். இதேபோன்று ரூ.92 விலையில் வாடிக்கையாளர்களுக்கு 6 ஜிபி டேட்டா சுமார் ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவை பொருத்த வரை ரூ.11 முதல் ரூ.101 விலையில் குறைந்தபட்சம் 400 எம்பி முதல் அதிகபட்சம் 6 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளும் அன்லிமிட்டெட் சேவைவையை வழங்குவதோடு, எவ்வித வேலிடிட்டி எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை.

    சமீபத்தில் ஐடியா செல்லுலார் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட்-ஆன் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ரூ.92 மற்றும் ரூ.53 விலையில் அறிவிக்கப்பட்ட சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 6 ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கும், 3 ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சுனாமி சலுகை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ரூ.499 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 45 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.509 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    மார்ச் மாத வாக்கில் ஏர்டெல் நிறுவனம் ரூ.499 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் மாதம் 40 ஜிபி டேட்டா, அனிலிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களும் 40 ஜிபி டேட்டா வழங்குகின்றன. 

    பிஎஸ்என்எல் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகையில் டேட்டா ரோல்ஓவர் வசதி வழங்கப்படவில்லை. டேட்டா ரோல்ஓவர் வசதி பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதம் பயன்படுத்த முடியும். பிஎஸ்என்எல் தற்சமயம் அறிவித்துள்ள ரூ.499 சலுகையில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வழங்குவதை விட அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.499 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் வாய்ஸ் காலிங் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய சலுகை எந்தெந்த வட்டாரங்களில் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    முன்னதாக டேட்டா சுனாமி என்ற பெயரில் பிஎஸ்என்எல் ரூ.98 விலையில் சலுகையை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ரூ.98 விலையில் கிடைக்கும் இந்த சலுகையில் 26 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் ரூ.3399 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. #Airtel
    புதுடெல்லி:

    பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இந்தியா இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க இருக்கின்றன. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2600 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    அமேசான் இந்தியா தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் சுமார் 65-க்கும் அதிகமான 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இருநிறுவனங்களும் நாடு முழுக்க ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய இந்த தி்ட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் முறை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேடு செய்யும் போது ஸ்மார்ட்போனுக்கு ரூ.3399 விலையில் வாங்க முடியும். ஏர்டெல் இந்தியா சார்பில் 35 மாதங்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    ரூ.600 கூடுதல் கேஷ்பேக் ஏர்டெல் சேவையில் ரூ.169-க்கு ரீசார்ஜ் செய்து பெற முடியும். 



    ஏர்டெல் மற்றும் அமேசான் வழங்கும் ரூ.2600 கேஷ்பேக் பெறுவது எப்படி?

    - அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி வாங்க வேண்டும். இவற்றில் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ஹானர், எல்ஜி, லெனோவோ, மோட்டோ மற்றும் பல்வேறு இதர மாடல்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    - ஸ்மார்ட்போனினை வாங்கிய முதல் 18 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ்களை ஏர்டெலில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் ரூ.500 திரும்ப பெற முடியும்.

    - இனி அடுத்த 18 மாதங்களில் ரூ.3500 மதிப்புள்ள ரீசார்ஜ் செய்து ரூ.1500 திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஏர்டெல் சார்பில் ரூ.2000 பெற முடியும்.

    - அடுத்து அமேசான் சார்பில் வழங்கப்படும் ரூ.600 கூடுதல் கேஷ்பேக் தொகையை பெற ரூ.169 மதிப்புடைய ஏர்டெல் ரீசார்ஜ்களை செய்ய வேண்டும். இதற்கு https://www.amazon.in/hfc/mobileRecharge - முகவரியை பயன்படுத்த வேண்டும். இனி ரூ.25 மதிப்புள்ள கேஷ்பேக் தொகை 24 மாதங்களில் வழங்கப்படும். கேஷ்பேக் தொகை அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும்.

    ஏர்டெல் வழங்கும் ரூ.169 ரீசார்ஜ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக சில 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஏர்டெல் இதுபோன்ற சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா சுனாமி என அழைக்கப்படும் புதிய சலுகை 26 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    ரூ.98 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் தினமும் 1.5 ஜிபி வீதம் மொத்தம் 39 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிஎஸ்என்எல் சலுகையில் டேட்டா தவிர வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. இந்த சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறது.

    பிஎஸ்என்எல் போன்றே ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.98 விலையில் பிரீபெயிட் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.


    கோப்பு படம்

    பாரதி ஏர்டெல் நிறுவனமும் ரூ.92 விலையில் 6 ஜிபி டேட்டா சுமார் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.99 சலுகையில் 26 நாட்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (லோக்கல்/எஸ்டிடி மற்றும் ரோமிங்) வழங்கப்படுகிறது. எனினும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மும்பை மற்றும் டெல்லியில் வழங்கப்படுவதில்லை.

    முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.118 விலையில் பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
    ×