search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94549"

    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.16 விலையில் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Vodafone



    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.16 விலையில் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.16 சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இச்சலுகை முதற்கட்டமாக அசாம், கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வோடபோன் ரூ.16 சலுகையை பயனர்கள் வோடபோன் வலைதளம், மை வோடபோன் ஆப் மற்றும் விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இத்துடன் ரூ.33, ரூ.49 மற்றும் ரூ.98 விலையில் டேட்டா சலுகைகளை வோடபோன் வழங்குகிறது. வோடபோனின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ரூ.16 சலுகையில் 1 ஜி.பி. டேட்டா 24 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது.



    ரூ.16 சலுகையில் வாய்ஸ் கால் அல்லது எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு நாள் வேலிடிட்டி கொண்டிருக்கும் வோடபோன் சலுகையில் வேலிடிட்டியை நீட்டிக்க முடியாது. முதற்கட்டமாக சில வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கும் இச்சலுகை விரைவில் மற்ற வட்டாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    கடந்த மாதம் வோடபோன் நிறுவனம் யூத் ஆஃபர் என்ற பெயரில் அமேசான் பிரைம் சந்தாவில் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கியது. இத்துடன் ரூ.509 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் படி மாற்றியமைத்தது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இச்சலுகையில் முன்னதாக தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது.
    ஏர்டெல் நிறுவன சேவையை தேர்வு செய்யும் முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel



    ஏர்டெல் நிறுவன சேவையை தேர்வு செய்யும் முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு ரூ.248 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.229 சலுகைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    தற்சமயம் ஏர்டெல் சேவையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.76, ரூ.179, ரூ.248 மற்றும் ரூ.495 விலையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ.229 சலுகைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.248 சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    தினசரி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய அறிமுக சலுகை இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.248 சலுகையை போன்று ரூ.495 விலையில் சலுகையை ஏர்டெல் வழங்குகிறது.



    ரூ.495 சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.76 விலையிலும் ஏர்டெல் சலுகை கிடைக்கிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு 100 எம்.பி. டேட்டா, அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    இதுமட்டுமின்றி ரூ.178 விலையிலும் ஏர்டெல் சலுகை வழங்கப்படுகிறது. இதில் வாடி்க்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகள் முதல் முறை ஏர்டெல் பிரீபெயிட் சேவையில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.19 விலையில் வைபை ஹாட்ஸ்பாட் வவுச்சர்களை வழங்குகிறது. #BSNL



    இந்தியாவில் மொபைல் கெக்டிவிட்டி மற்றும் 4ஜி பரப்பளவு இதுவரை இல்லாத அளவு அதிகரித்து இருக்கும் நிலையில், அரசாங்கம் வைபை கனெக்டிவிட்டியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. 

    கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் மத்திய தொலைதொடர்பு மந்திரி மனோஜ் சின்கா 2019 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் பத்து லட்சம் வைபை ஹாட்ஸ்பாட்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் என்றும் இதற்கென டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

    அந்த வகையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. பி.எஸ்.என்.எல். வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி நாட்டின் முக்கிய நகரங்களில் வைபை ஹாட்ஸ்பாட் பயன்படுத்த புதிய வவுச்சர்களை அறிவித்துள்ளது.



    இந்தியா முழுக்க 20 டெலிகாம் வட்டாரங்களில் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல். தற்சமயம் தனது வாடிக்கையாளர்களுக்கு வைபை ஹாட்ஸ்பாட் வவுச்சர்களை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வைபை ஹாட்ஸ்பாட்களுக்கென நான்கு புதிய திட்டங்களை இதற்கென அறிவித்திருக்கிறது.

    நான்கு புதிய திட்டங்களின் விலையும் ரூ.100-க்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றின் துவக்க விலை திட்டம் ரூ.19 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவது திட்டம் ரூ.39 விலையில் ஏழு நாட்களுக்கு 7 ஜி.பி. டேட்டா வழங்குகிறது.

    மூன்றாவது திட்டத்தின் விலை ரூ.59 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 15 ஜி.பி. டேட்டா 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. நான்காவது திட்டத்தில் ரூ.69 கட்டணத்தில் 28 நாட்களுக்கு 30 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து திட்டங்களுக்கான கட்டணமும் சேவை வரியுடன் சேர்த்தது தான் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. பயனர்கள் இந்த சலுகையை ஆன்லைனிலேயே தேர்வு செய்து கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
    ரியல்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி 3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme



    இந்தியாவில் குறுகிய காலக்கட்டத்தில் ஒப்போவின் ரியல்மி பிராண்டு அதிக பிரபலமாகி இருக்கிறது. ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அதிக விற்பனையை பதிவு செய்திருக்கிறது. 

    ரியல்மியின் முதல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமானது. எனினும், இதுவரை ரியல்மி ஆறு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துவிட்டது. ஏற்கனவே ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகி வரும் நிலையில், விற்பனையை மேலும் அதிகப்படுத்த சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரியல்மி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் மொபைல் பொனாசா விற்பனை நாளை (மார்ச் 25) துவங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் இந்த மொபைல் பொனாசா விற்பனை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.



    சிறப்பு விற்பனையில் ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி யு1 மற்றும் ரியல்மி 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விற்பனையில் ரியல்மி 3 பேஸ் வேரியண்ட் விலை ரூ.8,999 என்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.500 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதே விற்பனையில் ரியல்மி 3 ரேடியண்ட் புளு வெர்ஷனும் விற்பனை செய்யப்படுகிறது. 

    இத்துடன் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு நாட்களுக்கு மட்டும் கிடைக்கும். இதேபோன்று ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
    இந்திய பிரீமியர் லீக் 2019 போட்டிகள் துவங்கியதை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவன பீரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #BSNL #IPL2019



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரீமியர் லீக் கிரிகெட் தொடர் துவங்கியிருப்பதை தொடர்ந்து புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

    ரூ.199 மற்றும் ரூ.499 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளில் பயனர்களுக்கு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச கிரிகெட் எஸ்.எம்.எஸ். அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் போட்டி பற்றிய தகவல்கள் பயனர்களுக்கு எஸ்.எம்.எஸ். வடிவில் அனுப்பப்படும்.

    பி.எஸ்.என்.எல். ரூ.199 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இலவச அழைப்புகள் ஒரு வட்டாரத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பயனர்கள் மற்ற வட்டாரங்களில் பேச தனி கட்டணம் வசூலிக்கப்படும். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தவிர பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.



    28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இச்சலுகையில் பயனர்களுக்கு ஐ.பி.எல். கிரிகெட் போட்டிகள் தொடர்பான தகவல்கள் எஸ்.எம்.எஸ். வடிவில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ரூ.199 மற்றும் ரூ.499 சலுகைகள் இந்தியா முழுக்க 20 வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.

    ரூ.499 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங்குடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., இலவச கிரிகெட் போட்டி தொடர்பான எஸ்.எம்.எஸ்.கள் வழங்கப்படுகிறது. இச்சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. 

    தினமும் 1 ஜி.பி. டேட்டா போதாது என்போருக்கு ஜியோ ரூ.149 விலையில் வழங்கும் சலுகையை பயன்படுத்தலாம். இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் மீண்டும் 100 சதவிகித கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. #Vodafone



    வோடபோன் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்து, இதனை டிசம்பர் 2018 வரை மட்டுமே வழங்கியது. 

    இந்நிலையில், 100 சதவிகித கேஷ்பேக் சலுகையை மீண்டும் வழங்குவதாக வோடபோன் அறிவித்துள்ளது. 100 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை தேர்வு செய்யப்பட்ட அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது.

    இதனை ஆக்டிவேட் செய்ய மைவோடபோன் செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். முன்னதாக 100 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை மூன்று அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு வழங்கப்பட்டது. இம்முறை கூடுதலாக ஒரு சலுகைக்கும் சேர்த்து மொத்தம் நான்கு அன்லிமிட்டெட் சலுகைகளுக்கு வழங்கப்படுகிறது.



    வோடபோன் ரூ.199, ரூ.399, ரூ.458 மற்றும் ரூ.509 உள்ளிட்ட சலுகைகளுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகையை வோடபோன் ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்களின் வடிவில் வழங்குகிறது. இதனால் ரூ.199 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 மதிப்புள்ள நான்கு வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதேபோன்று ரூ.509 செலுத்தும் போது ரூ.50 மதிப்புள்ள பத்து வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இதன்பின் மேற்கொள்ளும் ரீசார்ஜ்களில் 25 சதவிகிதம் தள்ளுபடி பெற முடியும். 

    கேஷ்பேக் வழங்கப்படும் அன்லிமிட்டெட் சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ.199 சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி, 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 

    ரூ.399 சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி, 1 ஜி.பி. டேட்டாவும், ரூ.458 சலுகையில் 1.5 ஜி.பி. டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.504 சலுகையில் 1.5 ஜி.பி. டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. டேட்டா அளவு தீர்ந்ததும், கூடுதல் டேட்டாவிற்கான கட்டணம் செலுத்த வேண்டும்.
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    புதிய சலுகை பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும். இதனை ஆக்டிவேட் செய்து கொள்ள வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதுவரை அதிகாரப்பூர்வமாக சேவை துவங்கப்படாத ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். புதிய முடிவினை எடுத்திருக்கிறது.

    பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 18003451504 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுத்து பிராட்பேண்ட் சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ததும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் முகவரியில் கட்டணமின்றி பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.



    வழக்கமான பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்துவோர் இதற்கென தனி கட்டணம் செலுத்த வேண்டும், அந்த வகையில் புதிய சலுகையின் பேரில் இந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இலவச பிராட்பேண்ட் சேவை மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். மேலும் சில இலவசங்களை வழங்குகிறது.

    இந்த இணைப்பின் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது. 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். தற்சமயம் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. இதனால் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். 

    புதிய சலுகையின் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க முயற்சிக்கிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஆண்டு சலுகைகளை வாங்கும் போது 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை டிசம்பர் 31, 2018 வரை அறிவிக்கப்பட்டு தற்சமயம் மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    ஐடியா நிறுவனத்தின் நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகையை பயன்படுத்துவோருக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. #Idea



    ஏர்டெல், வோடபோன், பி.எஸ்.என்.எல். நிறுவனங்களைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா அமேசானுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. 

    ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள சலுகையை தேர்வு செய்வோருக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிரீமியம் திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பிரைம் வீடியோவில் பார்த்து ரசிக்கலாம்.

    இத்துடன் அமேசான் மியூசிக், இபுக் மற்றும் 1, 2 நாட்களில் இலவச டெலிவரி, பிரத்யேக அறிமுகங்கள், முன்கூட்டியே விற்பனை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.



    ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் சந்தாவை ஆக்டிவேட் செய்வது எப்படி?

    ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் ஐடியா நிர்வானா போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்யவும்.
    ஐடியா மூவிஸ் மற்றும் டி.வி. செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யவும்.
    மொபைல் நம்பரை பதிவு செய்து ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பெறவும்.
    சிறப்பு டேட்டா - அமேசான் சலுகைக்கான பேனரை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் செலபிரேஷன் சலுகை மீண்டும் அமலாகியிருக்கிறது. அதன்படி பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #RelianceJio



    ரிலையன்ஸ் ஜியோ தனது இரண்டாம் ஆண்டு விழா துவங்கியது முதல், ஜியோ செலபிரேஷன் பேக் என்ற பெயரில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கி வருகிறது. அவ்வப்போது அறிவிக்கப்பட்டும் இச்சலுகை பயனர்களுக்கு அதிவேக 4ஜி டேட்டாவினை நான்கு நாட்களுக்கு வழங்குகிறது.

    அந்த வகையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் இச்சலுகையை தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜியோ செலபிரேஷன் பேக் மார்ச் 17 ஆம் தேதி வரை வேலிடிட்டி கொண்டிருப்பதாக தெரிகிறது.

    நான்கு நாட்களுக்கு இலவச டேட்டா வழங்கும் இச்சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 8 ஜி.பி. டேட்டா கிடைக்கும். ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இலவச சலுகை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் பகுதியில் பார்க்க முடியும்.



    ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் ஆக்டிவேட் ஆகியிருந்தால், ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் 2 ஜி.பி. டேட்டா மற்றும் திட்டத்தின் வேலிடிட்டி பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முன்னதாக ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் சலுகை இதேபோன்றே வழங்கப்பட்டிருந்தது.

    இந்தியாவில் முன்னணி இடத்தை பிடிக்க ஜியோ தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிகளவு வாடிக்கையாளர்களுடன் 2019 ஆம் ஆண்டு ஜியோ அதிகளவு வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு களமிறங்கிய ஜியோ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் குறைந்த விலை சலுகைகளை வழங்கி பிரபலமாகி இருக்கிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.599 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

    புதிய ரூ.599 சலுகை மும்பை மற்றும் புது டெல்லி அல்லாத வட்டாரங்களில் கிடைக்கிறது. இச்சலுகையில் அதிவேக டேட்டா பலன்கள் வழங்கப்படவில்லை என்றாலும், இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நீண்ட வேலிடிட்டி, டேட்டா மட்டும் வழங்கும் சில சலுகைகளை நிறுத்துவதாக அறிவித்தது. 



    ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் புதிய ரூ.599 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள் (மும்பை மற்றும் டெல்லி தவிர பகுதிகளில்) உள்ளிட்டவை 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வேலிடிட்டியை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

    புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படும் நிலையில், இதில் எவ்வித டேட்டா பலன்களும் வழங்கப்படவில்லை. முதற்கட்டமாக இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

    ஏற்கனவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.549, ரூ.561, ரூ.2798, ரூ.3998 மற்றும் ரூ.4498 உள்ளிட்ட சலுகைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இவற்றில் முறையே 60, 80, மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ரூ.349 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்து தற்சமயம் பத்து நாட்கள் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது. #BSNL #Offer



    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.349 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது. முன்னதாக ரூ.399 சலுகையை பி.எஸ்.என்.எல். மாற்றியமைத்தது. புதிய மாற்றத்தின் மூலம் ரூ.349 சலுகையில் பத்து நாட்கள் வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கும். 

    ரூ.349 சலுகையை தேர்வு செய்யும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு இனி தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 64 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது.

    பி.எஸ்.என்.எல். ரூ.349 சலுகை பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ரூ.349 சலுகையின் மாற்றம் கொல்கத்தா மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட்டாரங்களில் அமலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுதவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2.2 ஜி.பி. டேட்டா ஏப்ரல் 30 வரை வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவினை தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோ சலுகையுடன் ஒப்பிடும் போது பி.எஸ்.என்.எல். ரூ.349 சலுகையில் பயனர்களுக்கு குறைந்த வேலிடிட்டியில் 500 எம்.பி. குறைவான டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் ரூ.349 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.298 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.297 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    போட்டி நிறைந்த சந்தையில் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது. முன்னதாக போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு இலவச தினசரி டேட்டா பலன்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்தது. 

    புதிய ரூ.298 சலுகை பி.எஸ்.என்.எல். சிறப்பு வவுச்சராக அறிவிக்கப்பட்டிருப்பதாக டெலிகாம் டாக் தெரிவித்திருக்கிறது. இந்த சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்படும் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.



    புதிய ரூ.298 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. ரூ.299 சலுகையில் ரிலையன்ஸ் ஜியோ 28 நாட்களுக்கு 84 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். 3ஜி மற்றும் 2ஜி சேவையை வழங்குகிறது. வோடபோன் நிறுவனம் ரூ.255 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    ×