search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94556"

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி திருவிழாவையொட்டி கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது.

    விழாவின் எட்டாம் நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பழங்கள் மற்றும் மலர்கள் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்பு பூஜை நடந்தது. 5 மணிக்கு அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்ட வெள்ளை குதிரை வாகனம் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது.

    அங்கு அய்யா வழி பக்தர்களின், ‘அய்யா சிவ சிவா அரகரா அரகரா‘ என்ற பக்தி கோஷத்திற்கிடையே, கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக தலைமை பதிக்கு வந்தது. வாகனம் வரும் வழிகளில் அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து வழி பட்டனர். பின்னர் இரவு 11 மணிக்கு வாகனம் சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது.

    அங்கு வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் அய்யா வைகுண்டர் காட்சியளித்தார். தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், பெரிய யுகப்படிப்பும், அன்ன தர்மமும் நடந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது.

    4-ந்தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    குமரி மாவட்டம் சாமிதோப்பு ஐயா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    குமரி மாவட்டம் சாமிதோப்பில் ஐயா வைகுண்டர் தலைமைப்பதி அமைந்துள்ளது. இந்த பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று காலையில் கொடியேற் றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு முத்திரிபதமிடுதல் நிகழ்ச்சியும், 4 மணிக்கு நடை திறப்பும், திருவிளக்கு ஏற்றுதலும், 5 மணிக்கு ஐயாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடியை சுவாமி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பையன் ராஜா தலைமை தாங்கினார். பால்பையன், பையன் காமராஜ், பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாகன பவனியும், மதியம் அன்னதானமும் நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஐயா வழி பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழா அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடையும், பகலில் உச்சிப்படிப்பு, இரவில் வாகன பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    இன்று (சனிக்கிழமை) இரவில் வைகுண்டசாமி பறங்கி நாற்காலியிலும், நாளை அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் விழாவில் பூஞ்சப்பர வாகனத்திலும், 5-ம் நாள் பச்சை சாத்தியும், 6-ம் நாள் சர்ப்ப வாகனத்திலும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் பவனி வருதல் நடக்கிறது.

    8-ம் நாள் விழாவான வருகிற 1-ந் தேதி மாலையில் ஐயா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடுதல் நடைபெறும். தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக் கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ந் தேதி ஐயா அனுமன் வாகனத்திலும், 3-ந் தேதி இந்திர வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் நிறைவு நாளான 4-ந் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். 
    ×