என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களே கிடைத்திருந்தன.
இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 150 இடங்கள் வரைதான் கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த தடவை காங்கிரஸ் கட்சி ஆச்சரியப்படும் அளவுக்கு வெற்றிகளை குவிக்கும் என்று நம்பிக்கையோடு பேசி வருகிறார். மோடி நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவர் உறுதிபட பொதுக்கூட்டங்களில் கூறி வருகிறார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில் ராகுல்காந்தி மனம் திறந்து கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். அவர்கள் முடிவை தெரிந்த பிறகே எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.
இந்த தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவது நிச்சயம். இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களால் மோடியை தோற்கடிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?
தற்போது இந்தியாவில் வேலை இல்லா பிரச்சனை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது. புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு இந்த பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து இந்தியாவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது.
உலகம் முழுக்க உள்ள அரசியல் வாதிகளை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் தங்கள் எதிராளிகளின் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தது தெரியும். அதுதான் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
வெறுப்பு அரசியலால் எதையும் சாதிக்க இயலாது. பாராளுமன்றத்தில் நான், மோடியை கட்டி பிடித்து வாழ்த்தியது அந்த அடிப்படையில்தான். ஆனால் அதை பெரும்பாலானவர்கள் சரியான முறையில் உணரவில்லை.
எனது இலக்கு எல்லாம் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக நான் நீண்ட விவாதம் செய்ய வேண்டியதில்லை. மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டர்கள். எங்களது எண்ணங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். 23-ந் தேதி அதற்கான விடை கிடைத்து விடும்.
ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. எனக்கு இந்த கருத்து கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. மக்களின் எண்ணங்களை முழுமையாக நம்புகிறேன்.
பிரதமர் மோடி 5.55 லட்சம் கோடி ரூபாயை 15 பணக்காரர்களுக்கு கொடுத்து விட்டார். இதன் மூலம் காவலாளியே திருடனாக மாறியது எல்லோருக்கும் தெரியும். அந்த பணத்தை வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் கொடுக்கும் திட்டமானது வெளிப்படையானது. அதில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை. இந்த திட்டத்தின் கீழ் வேலை இல்லாதவர்களுக்கு பணம் நேரிடையாக கையில் கிடைக்கும். இடைத்தரகர்கள் பயன்பெற முடியாது.
ரபேல் போர் விமானம் ஒப்பந்த திட்டத்தால் பல இடைத்தரகர்கள் பயன் அடைந்தனர். அந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதைச்சொன்னால் மோடி கோபப்படுகிறார். கோபம் மோடியின் கண்களை மறைத்துள்ளது.
2014-ம் ஆண்டு மோடி வெற்றிபெற்றதும் மன்மோகன்சிங்கை சென்று பார்த்திருக்க வேண்டும். நீங்கள் அனுபவசாலி. உங்கள் உதவி எனக்கு தேவை என்று சொல்லி இருக்க வேண்டும். அதுபோல மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார் ஆகியோரிடமும் பேசி இருக்க வேண்டும்.
அப்படி அவர் செய்திருந்தால் அவரை தோற்கடிப்பது கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் அவர் நிறைய தவறுகள் செய்துள்ளார். மிகவும் ஆணவமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்டுள்ளார். யாருடைய கருத்தையும் கேட்பதில்லை. எனவே மோடியை தோற்கடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை.
தென் இந்தியாவில் மாறுபட்ட நிலையில் மக்கள் மனநிலை உள்ளது. இந்தியாவை நாக்பூரில் இருந்து சிலர் வழிநடத்துகிறார்கள் என்று தென் இந்திய மக்கள் நினைக்கிறார்கள். நான் தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது மக்களின் இந்த மன உணர்வை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
இது சரியல்ல என்பதை அன்றே உணர்ந்தேன். ஆந்திர மக்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் தவிக்கிறார்கள். தென் இந்தியா புறக்கணிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நான் வயநாடு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டுள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில் மோடி என்னையும், எனது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆனால் நான் பதிலுக்கு அதே போன்று விமர்சனம் செய்து பேசவில்லை. அவரது குடும்பத்தினரை குறை கூறி எதுவுமே சொன்னது இல்லை.
பிரதமர் என்ற முறையில் மோடியை நான் மதிக்கிறேன். அன்புதான் வெற்றி பெறும். வெறுப்பு அரசியலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. தேர்தல் முடிந்த பிறகும் கூட அன்பு மட்டுமே தொடர்ந்து நீடிக்கும்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:
பாரதிய ஜனதாவின் தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசும்போது மகாத்மா காந்தியை நல்ல இந்து என்று பேசியிருக்கலாம், ஆனால் கோட்சேவை பற்றி பேசுவதற்காக இந்து தீவிரவாதி என சொல்லவில்லை. அவர் இந்துக்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி தேர்தலுக்கும், மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரவக்குறிச்சியில் உள்ள இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களின் ஓட்டுக்களை “பொறுக்குவதற்காக” பேசியுள்ளார். எத்தனை பேர் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என இவ்வாறு அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.
எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து தீவிரவாதம் என்பது சூடான ஜஸ்கிரீம் சாப்பிடுவது போல.. பிரதமர் மோடிக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அதனை வரவேற்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
திருநாவுக்கரசர் கோட்சே ஆர்.எஸ்.எஸ். என கூறுவது அவர் வரலாறு தெரியாமல் பேசுவதையே காட்டுகிறது. கமல் எப்போதும் திருந்துவதாக தெரியவில்லை. அவர் ஒரு குழப்பவாதி. மக்கள் அவரது பேச்சை சகித்துக் கொண்டுதான் கேட்கிறார்கள். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை ஆளுனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. பா.ஜனதாவும் அதனை தான் வலியுறுத்தும்.
பிரதமர் மோடி ஒரு நல்ல இந்து. அதனால் தான் கமல் பேச்சை கண்டித்துள்ளார். கோட்சேவை பயங்கரவாதி என்பதற்கு பதில் தீவிரவாதி என கமல் கூறிவிட்டதாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் அதை நல்ல அர்த்தத்தில் கூறவில்லை..
கடற்கரை ஓரங்களில் எண்ணை வளம் இருப்பதை கடந்த ஆட்சியாளர்களே ஆய்வு நடத்தி பணிகள் நடந்து கொண்டுதான் இருந்தது. தற்போதைய அரசும் அதற்கான ஆராய்ச்சி பணியைதான் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்பது ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது சிறிதளவு பாதிப்பாகவே இருக்கும். அவ்வாறு ஏற்படும் குறுகிய பாதிப்புக்கும் விவசாயிகளை திருப்திபடுத்தும் விதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகளே அல்ல. அப்படியிருக்கும் போது அவர்களை எப்படி பிரதமர் சந்திக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று பா.ஜனதா கூறி வருகிறது.
பிராந்திய அடையாளங்கள், வரலாற்று கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி வரும் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ந்தேதி பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியின்போது, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், கொல்கத்தா பல்கலைக் கழகம், மற்றும் வித்யா சாகர் கல்லூரி அருகில் முழக்கங்களை எழுப்பினர்.
இதனை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வினர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் மோதல் உருவானது.
வித்யாசாகர் கல்லூரிக்கு உள்ளே நுழைந்த பா.ஜ.க. குண்டர்கள், வங்கத்து மக்கள் போற்றி வணங்கி வரும் சமூக சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கல்வியாளர், எழுத்தாளர் போன்ற பன்முகச் சிறப்புகளைப் பெற்று, வங்க மறு மலர்ச்சிக்கு வித்திட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கின்றனர்.
மேற்கு வங்க மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையாகவும் முதல்வர் பொறுப்பை ஏற்ற மம்தா பானர்ஜியை வீழ்த்த வேண்டும் என்று நரேந்திர மோடி, அமித்ஷா இருவரும் துடிக்கிறார்கள்.எனவேதான், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. திட்டமிட்டு வன்முறைகளை அரங்கேற்றி வருகிறது.
பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் அத்துமீறல் பேச்சுக்கள், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து திரும்பத் திரும்ப முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேற்கு வங்காளம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவே இருந்தன.
நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்புமிக்க தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பரப்புரையில் மதவாத அரசியல், ராணுவ நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் தொடர்ந்து பேசினர்.
தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து, மே 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 15-ந்தேதி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, அவர்களின் பேச்சுக்களை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, இருவர் பேச்சிலும் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் சான்று அளித்தது வெட்கக்கேடான நியாயப்படுத்த முடியாத செயலாகும்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உரியது; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ரணமாக இல்லை. அது ஆறிக்கொண்டிருப்பதை குத்திக்கிளறி ரத்தம்வர வைத்து பிரிவினைவாதத்தை தூண்டிக் கொண்டு இருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தில் பேசியதை சாதனை என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவாராம். சட்டை கலையாமல் அவரை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான அய்யப்ப பக்தர்கள் குவிவார்கள்.
இது போல ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். தற்போது வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படுகிறது. சில நாட்களே சபரிமலை கோவில் நடை திறந்து இருக்கும் என்பதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலம் காலமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலை நடை திறக்கும் போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது சபரிமலை கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது சபரிமலைக்கு பிந்து உள்பட 3 பெண்களும் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அது பற்றி அந்த பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த 3 பெண்களும் அங்கிருந்துச் சென்றனர்.
இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்து சபரிமலையில் இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்லாமல் இருக்க மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஸ்வரூபம் படம் வெளியாகும்போது முஸ்லீம்களால் கமல்ஹாசனுக்கு கடுமையான மிரட்டல் வந்தது. பின்னர் அவர்களது காலில் விழுந்து தனது படத்தை வெளியிடும்படி கெஞ்சினார்.
அத்தகைய கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்றும், கோட்சேவை தரக்குறைவாகவும் விமர்சிக்க தகுதியற்றவர். பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் இடைநின்ற மாணவரான கமல்ஹாசனுக்கு இந்துக்களின் வரலாறு எப்படி தெரியும். அவருக்கு வருகிற தேர்தலில் மக்கள் தெளிவான பாடத்தை புகட்டுவார்கள். 100 ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதற்காக பள்ளப் பட்டியில் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்று கூறி உள்ளார்.
அவரது கருத்துக்கு கே.எஸ்.அழகிரி, வீரமணி போன்றவர்கள் ஆதரவு தெரித்துள்ளனர். அவர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்களே. வருகிற தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கு போட்டு வாக்காளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஜூன் 3-ந் தேதி தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்பேன் என்று கூறுகிறார். இது அவரது கனவு மட்டுமே. ஒருபோதும் பலிக்காது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சரக்குக்கும், முருக்குக்கும் சொந்தக்காரர். எனவே அவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகத்தான் பேசுவார். இதில் வியப்பு இல்லை.
ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஊழல் புகாரில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்கள். அவர்களது ஊழலை நாடே அறியும். தான் நின்றால் தோற்று விடுவோம் என்பதால்தான் தனது மகனை ப.சிதம்பரம் நிறுத்தினார். இருந்தாலும் அவரும் வெற்றி பெறப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்