search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களே கிடைத்திருந்தன.

    இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 150 இடங்கள் வரைதான் கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த தடவை காங்கிரஸ் கட்சி ஆச்சரியப்படும் அளவுக்கு வெற்றிகளை குவிக்கும் என்று நம்பிக்கையோடு பேசி வருகிறார். மோடி நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவர் உறுதிபட பொதுக்கூட்டங்களில் கூறி வருகிறார்.

    இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில் ராகுல்காந்தி மனம் திறந்து கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்களது முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். அவர்கள் முடிவை தெரிந்த பிறகே எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

    இந்த தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவது நிச்சயம். இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களால் மோடியை தோற்கடிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?

    தற்போது இந்தியாவில் வேலை இல்லா பிரச்சனை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது. புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு இந்த பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து இந்தியாவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது.

    உலகம் முழுக்க உள்ள அரசியல் வாதிகளை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் தங்கள் எதிராளிகளின் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தது தெரியும். அதுதான் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

    வெறுப்பு அரசியலால் எதையும் சாதிக்க இயலாது. பாராளுமன்றத்தில் நான், மோடியை கட்டி பிடித்து வாழ்த்தியது அந்த அடிப்படையில்தான். ஆனால் அதை பெரும்பாலானவர்கள் சரியான முறையில் உணரவில்லை.

    23-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ஆட்சி பற்றிய தெளிவான நிலை தெரிந்து விடும். புதிய ஆட்சி உடனடியாக அமைந்து விடும் என்றே நினைக்கிறேன். புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது.



    எனது இலக்கு எல்லாம் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக நான் நீண்ட விவாதம் செய்ய வேண்டியதில்லை. மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டர்கள். எங்களது எண்ணங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். 23-ந் தேதி அதற்கான விடை கிடைத்து விடும்.

    ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. எனக்கு இந்த கருத்து கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. மக்களின் எண்ணங்களை முழுமையாக நம்புகிறேன்.

    பிரதமர் மோடி 5.55 லட்சம் கோடி ரூபாயை 15 பணக்காரர்களுக்கு கொடுத்து விட்டார். இதன் மூலம் காவலாளியே திருடனாக மாறியது எல்லோருக்கும் தெரியும். அந்த பணத்தை வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் கொடுக்கும் திட்டமானது வெளிப்படையானது. அதில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை. இந்த திட்டத்தின் கீழ் வேலை இல்லாதவர்களுக்கு பணம் நேரிடையாக கையில் கிடைக்கும். இடைத்தரகர்கள் பயன்பெற முடியாது.

    ரபேல் போர் விமானம் ஒப்பந்த திட்டத்தால் பல இடைத்தரகர்கள் பயன் அடைந்தனர். அந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதைச்சொன்னால் மோடி கோபப்படுகிறார். கோபம் மோடியின் கண்களை மறைத்துள்ளது.

    2014-ம் ஆண்டு மோடி வெற்றிபெற்றதும் மன்மோகன்சிங்கை சென்று பார்த்திருக்க வேண்டும். நீங்கள் அனுபவசாலி. உங்கள் உதவி எனக்கு தேவை என்று சொல்லி இருக்க வேண்டும். அதுபோல மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார் ஆகியோரிடமும் பேசி இருக்க வேண்டும்.

    அப்படி அவர் செய்திருந்தால் அவரை தோற்கடிப்பது கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் அவர் நிறைய தவறுகள் செய்துள்ளார். மிகவும் ஆணவமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்டுள்ளார். யாருடைய கருத்தையும் கேட்பதில்லை. எனவே மோடியை தோற்கடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை.

    தென் இந்தியாவில் மாறுபட்ட நிலையில் மக்கள் மனநிலை உள்ளது. இந்தியாவை நாக்பூரில் இருந்து சிலர் வழிநடத்துகிறார்கள் என்று தென் இந்திய மக்கள் நினைக்கிறார்கள். நான் தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது மக்களின் இந்த மன உணர்வை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    இது சரியல்ல என்பதை அன்றே உணர்ந்தேன். ஆந்திர மக்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் தவிக்கிறார்கள். தென் இந்தியா புறக்கணிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நான் வயநாடு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டுள்ளேன்.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி என்னையும், எனது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆனால் நான் பதிலுக்கு அதே போன்று விமர்சனம் செய்து பேசவில்லை. அவரது குடும்பத்தினரை குறை கூறி எதுவுமே சொன்னது இல்லை.

    பிரதமர் என்ற முறையில் மோடியை நான் மதிக்கிறேன். அன்புதான் வெற்றி பெறும். வெறுப்பு அரசியலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. தேர்தல் முடிந்த பிறகும் கூட அன்பு மட்டுமே தொடர்ந்து நீடிக்கும்.

    இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
    அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை கமல் “பொறுக்குவதற்காகவே” இந்து தீவிரவாதி என பேசியுள்ளார் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    பாரதிய ஜனதாவின் தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசும்போது மகாத்மா காந்தியை நல்ல இந்து என்று பேசியிருக்கலாம், ஆனால் கோட்சேவை பற்றி பேசுவதற்காக இந்து தீவிரவாதி என சொல்லவில்லை. அவர் இந்துக்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை கூறியுள்ளார்.

    அரவக்குறிச்சி தேர்தலுக்கும், மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரவக்குறிச்சியில் உள்ள இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களின் ஓட்டுக்களை “பொறுக்குவதற்காக” பேசியுள்ளார். எத்தனை பேர் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என இவ்வாறு அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.

    எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து தீவிரவாதம் என்பது சூடான ஜஸ்கிரீம் சாப்பிடுவது போல.. பிரதமர் மோடிக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அதனை வரவேற்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

    திருநாவுக்கரசர் கோட்சே ஆர்.எஸ்.எஸ். என கூறுவது அவர் வரலாறு தெரியாமல் பேசுவதையே காட்டுகிறது. கமல் எப்போதும் திருந்துவதாக தெரியவில்லை. அவர் ஒரு குழப்பவாதி. மக்கள் அவரது பேச்சை சகித்துக் கொண்டுதான் கேட்கிறார்கள். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை ஆளுனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. பா.ஜனதாவும் அதனை தான் வலியுறுத்தும்.

    பிரதமர் மோடி ஒரு நல்ல இந்து. அதனால் தான் கமல் பேச்சை கண்டித்துள்ளார். கோட்சேவை பயங்கரவாதி என்பதற்கு பதில் தீவிரவாதி என கமல் கூறிவிட்டதாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் அதை நல்ல அர்த்தத்தில் கூறவில்லை..

    கடற்கரை ஓரங்களில் எண்ணை வளம் இருப்பதை கடந்த ஆட்சியாளர்களே ஆய்வு நடத்தி பணிகள் நடந்து கொண்டுதான் இருந்தது. தற்போதைய அரசும் அதற்கான ஆராய்ச்சி பணியைதான் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்பது ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது சிறிதளவு பாதிப்பாகவே இருக்கும். அவ்வாறு ஏற்படும் குறுகிய பாதிப்புக்கும் விவசாயிகளை திருப்திபடுத்தும் விதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகளே அல்ல. அப்படியிருக்கும் போது அவர்களை எப்படி பிரதமர் சந்திக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பா.ஜனதா அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜனதா அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கும். 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஆட்சி அமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது.



    தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என்று பா.ஜனதா கூறி வருகிறது.

    பிராந்திய அடையாளங்கள், வரலாற்று கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி வரும் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாரதிய ஜனதா கட்சியின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது என வைகோ கூறியுள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ந்தேதி பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியின்போது, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், கொல்கத்தா பல்கலைக் கழகம், மற்றும் வித்யா சாகர் கல்லூரி அருகில் முழக்கங்களை எழுப்பினர்.

    இதனை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வினர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் மோதல் உருவானது.

    வித்யாசாகர் கல்லூரிக்கு உள்ளே நுழைந்த பா.ஜ.க. குண்டர்கள், வங்கத்து மக்கள் போற்றி வணங்கி வரும் சமூக சீர்திருத்தவாதி, தத்துவவாதி, கல்வியாளர், எழுத்தாளர் போன்ற பன்முகச் சிறப்புகளைப் பெற்று, வங்க மறு மலர்ச்சிக்கு வித்திட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கின்றனர்.

    மேற்கு வங்க மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையாகவும் முதல்வர் பொறுப்பை ஏற்ற மம்தா பானர்ஜியை வீழ்த்த வேண்டும் என்று நரேந்திர மோடி, அமித்ஷா இருவரும் துடிக்கிறார்கள்.எனவேதான், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. திட்டமிட்டு வன்முறைகளை அரங்கேற்றி வருகிறது.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் அத்துமீறல் பேச்சுக்கள், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து திரும்பத் திரும்ப முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பாராளுமன்றத் தேர்தலின் கடைசி 7-வது கட்டத்தில் மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு 19 -ந்தேதி தேர்தல் நடை பெறுகிறது. இத்தேர்தல் பரப்புரை 17 ஆம் தேதிதான் முடிவுக்கு வரவேண்டும். ஆனால் கொல்கத்தா வன்முறையைக் காரணம் காட்டி, அங்கு நிலவும் சூழல் காரணமாக தேர்தல் பரப்புரையை ஒரு நாள் முன்னதாக இன்று முடித்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் சதிகார செயலாகும்.



    மேற்கு வங்காளம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவே இருந்தன.

    நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்புமிக்க தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பரப்புரையில் மதவாத அரசியல், ராணுவ நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் தொடர்ந்து பேசினர்.

    தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து, மே 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 15-ந்தேதி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, அவர்களின் பேச்சுக்களை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, இருவர் பேச்சிலும் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் சான்று அளித்தது வெட்கக்கேடான நியாயப்படுத்த முடியாத செயலாகும்.

    இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உரியது; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியளித்தார்.
    லக்னோ:

    வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதி மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்த இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக போற்றி, மதித்து வருகின்றனர்.
     
    இதற்கிடையே, கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது அக்கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியளித்தார்.
    சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கமல்ஹாசனை விட சிறப்பாக படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சரித்திர உண்மை என்று சொல்லி சரித்திரத்தை திரித்து பார்க்கிறார். திரித்து வெளியிடுகிறார். ரணத்தை ஆற்றுகிற ரணமாக இருக்கிறது இந்து தீவிரவாதம் என்று சொல்கிறார்.



    ரணமாக இல்லை. அது ஆறிக்கொண்டிருப்பதை குத்திக்கிளறி ரத்தம்வர வைத்து பிரிவினைவாதத்தை தூண்டிக் கொண்டு இருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தில் பேசியதை சாதனை என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவாராம். சட்டை கலையாமல் அவரை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல 2 இரண்டு இளம்பெண்கள் மீண்டும் முயற்சி செய்த சம்பவத்தை அறிந்த இந்து அமைப்பினர், பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான அய்யப்ப பக்தர்கள் குவிவார்கள்.

    இது போல ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். தற்போது வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படுகிறது. சில நாட்களே சபரிமலை கோவில் நடை திறந்து இருக்கும் என்பதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலம் காலமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலை நடை திறக்கும் போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.

    தற்போது சபரிமலை கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். ஏற்கனவே சபரிமலை சென்று வந்த இளம்பெண்ணான பிந்துவும் சபரிமலைக்கு மீண்டும் செல்வதற்காக போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டார்.

    தற்போது சபரிமலைக்கு பிந்து உள்பட 3 பெண்களும் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அது பற்றி அந்த பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த 3 பெண்களும் அங்கிருந்துச் சென்றனர்.

    இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்து சபரிமலையில் இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்லாமல் இருக்க மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
    பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்காக  நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்த எனது அனுபவத்தில் ஒன்றை சொல்கிறேன். பா.ஜனதா கட்சியோ அல்லது அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோ மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. நரேந்திர மோடியும் 2–வது முறையாக பிரதமராக முடியாது. 

    தேர்தல் முடிந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத, பா.ஜனதா அல்லாத அரசு தான் மத்தியில் அமையும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மத்திய அரசுக்கு தலைமை தாங்குவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயர் ஒருமித்த கருத்துடன் பரிந்துரைக்கப்பட்டால் நல்லது. அதேசமயம் காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் நாங்கள் வேறு எந்த தலைவரையும் பிரதமர் பதவிக்கு ஏற்க மாட்டோம் என்ற பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை எனக் கூறினார்.

    பா.ஜனதா கட்சிக்கு 125 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்ற அவர், காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை கூற மறுத்து விட்டார். 
    நான் பேசியதை முழுமையாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். நான் சரித்திர உண்மையை தான் பேசினேன் என இந்துக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.
    தோப்பூர்:

    திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரில் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. அதை நான் ஒருமுறை தான் கூறினேன். ஆனால் ஊடகங்கள் 200 முறைக்கு மேல் சொல்லி விட்டார்கள். 

    அரவக்குறிச்சியில் நான் பேசியதை சரியாக கேட்காமல் நான் கலகத்தை விளைவிக்கிறேன் என என் உள்மனதை புண்படுத்துகிறார்கள். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்துக்கள். அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசமாட்டேன்.

    என்னை நான் தலைவராக பார்த்துக் கொண்டதே இல்லை. என்னை பல இடங்களில் கையெடுத்து கும்பிடுகிறார்கள். சில இடங்களில் அவமானப்படுகிறார்கள். அரவக்குறிச்சியில் நான் பேசியதை முழுவதுமாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். உண்மை கசக்கத்தான் செய்யும். அந்த கசப்பு மருந்தாக மாறும். குற்றம் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா? நம்புவது போல் குற்றம்சாட்டுங்கள். என் மீது நடவடிக்கை எடுக்க பல வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள். அது ஊடக நண்பர்களுக்கம் பொருந்தும்.

    மதச் செறுக்கு, ஜாதி செறுக்கு எங்கும் எடுபடாது. உண்மையே வெல்லும். தீவிரவாதி என்று தான் சொன்னேன். பயங்கரவாதி என்றோ, கொலைகாரன் என்றோ நான் சொல்லவில்லை. நான் தீவிர அரசியலில் இறங்கி உள்ளேன். எனக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறுகினேன். பிரிவினை பேச மாட்டோம். 

    என்னை அவமானப்படுத்த எனது கொள்கையை கையில் எடுத்தால் தோற்றுப் போவீர்கள். எனது கொள்கை நேர்மை. இது போன்ற விளையாட்டுக்கள் என்னிடம் வேண்டாம். இது அறிவுரை தான். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி வீழ்த்துவோம். வீழ்த்துவோம் என்பதையும் சர்ச்சை ஆக்காதீர்கள்.

    எந்த ஜாதியை பற்றியும், மதத்தை பற்றியும் விமர்சித்து பேசுவேன். இவர்கள் என் மக்கள் என்பதால் அந்த உரிமையில் பேசுவேன். நான் பேசியதால் யார் மனதும் புண்படவில்லை. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    பள்ளிக்கூடமே செல்லாத நடிகர் கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

    கொடைக்கானல்:

    பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விஸ்வரூபம் படம் வெளியாகும்போது முஸ்லீம்களால் கமல்ஹாசனுக்கு கடுமையான மிரட்டல் வந்தது. பின்னர் அவர்களது காலில் விழுந்து தனது படத்தை வெளியிடும்படி கெஞ்சினார்.

    அத்தகைய கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்றும், கோட்சேவை தரக்குறைவாகவும் விமர்சிக்க தகுதியற்றவர். பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் இடைநின்ற மாணவரான கமல்ஹாசனுக்கு இந்துக்களின் வரலாறு எப்படி தெரியும். அவருக்கு வருகிற தேர்தலில் மக்கள் தெளிவான பாடத்தை புகட்டுவார்கள். 100 ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதற்காக பள்ளப் பட்டியில் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்று கூறி உள்ளார்.


    அவரது கருத்துக்கு கே.எஸ்.அழகிரி, வீரமணி போன்றவர்கள் ஆதரவு தெரித்துள்ளனர். அவர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்களே. வருகிற தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கு போட்டு வாக்காளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஜூன் 3-ந் தேதி தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்பேன் என்று கூறுகிறார். இது அவரது கனவு மட்டுமே. ஒருபோதும் பலிக்காது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சரக்குக்கும், முருக்குக்கும் சொந்தக்காரர். எனவே அவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகத்தான் பேசுவார். இதில் வியப்பு இல்லை.

    ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஊழல் புகாரில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்கள். அவர்களது ஊழலை நாடே அறியும். தான் நின்றால் தோற்று விடுவோம் என்பதால்தான் தனது மகனை ப.சிதம்பரம் நிறுத்தினார். இருந்தாலும் அவரும் வெற்றி பெறப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீண்டும் நானே பிரதமராக வருவேன் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    2019 பாராளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளார். பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான கோரிக்கையை விடுத்தார். 

    இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் கடைசி பொதுக்கூட்டம் இதுவாகும். ஆனால் என்னுடைய வளர்ச்சி திட்டங்களுடன் புதிய ஆட்சியில் வருவேன் எனக் கூறியுள்ளார். 

    உங்களுடைய அன்பு வெற்றியின் மீதான நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. கடைசி கட்டத்தில், வெற்றிக்கான வெற்றி அழகாக இருப்பதை உறுதி செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
    ×