search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    தேர்தல் ஆணைய ஆதரவுடன் 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி திட்டமிடுகிறது என்று அரவக்குறிச்சி பிரசாரத்தில் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, அண்ணாநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரி 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது. எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்களை அழைத்து அவரே கூறினார். ஆனால் இரவு 11 மணிக்கு மேலே அகில இந்திய தேர்தல் ஆணையம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு என அறிவிக்கிறது. அப்படியானால் மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த தவறு என்ன ஆனது.

    தேர்தல் ஆணையம் மீதான சந்தேகம் பற்றி நாங்கள் புகார் சொன்னால், தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் செய்வது சரி என்கிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு, உத்தரவுக்கு பணிந்து தான் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நாங்கள் சொல்கிறோம், தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும். அல்லது சிறப்பு பார்வையாளரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும்.

    இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்திற்கு வித்திட வாய்ப்பு இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிற அச்சத்துடன் தான் அ.தி.மு.க. உள்ளது. இதனால் 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி தயாராக இருக்கிறது. தேர்தல் முடிவு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிராகத்தான் இருக்கும். பிளஸ்-1, பிளஸ் -2 மாணவர்களுக்கு 6 பாடத்தில் இருந்து 5 பாடமாக குறைத்து, மொழிப்பாடத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையென்றால் அதிக மாணவர்கள் தமிழை புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.


    ஆனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அப்படிவராது என தெரிவித்துள்ளார். அது நம்பிக்கை அளித்தாலும் கூட எந்த சூழ்நிலையிலும் தமிழ் படிப்பை மாணவர்கள் கைவிடும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்றுதான் நம் வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது ஆகின்ற காரியமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், குஷிநகர் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார்.

    தலித் மக்களின் ரட்சகராக தன்னை காட்டிக் கொள்ளும் மாயாவதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் தலித் இளம்பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட பின்னரும் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துக்கொண்டு, தலித்துகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார் என மோடி குற்றம்சாட்டினார்.

    ராஜஸ்தான் மாநில அரசும் ‘நடந்தது நடந்து விட்டது’ என்னும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தின்படி இந்த அல்வார் கற்பழிப்பு சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்தது வெட்கக்கேடான சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று இரு பயங்கரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் மோடி ஏன் பயங்கரவாதிகளை கொல்ல வேண்டும்? என்று சிலர் கவலைப்படுகின்றனர்.

    ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தங்களை தாக்க வரும்போது அவர்களை சுட்டுக் கொல்வதற்கு எனது வீரர்கள் தேர்தல் கமிஷனின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா? எனவும் மோடி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் எதிரே நிற்கிறார்கள். இவன் மீது துப்பாக்கியால் சுடலாமா, வேண்டாமா? என்று தேர்தல் கமிஷனிடமிருந்து எனது வீரர்கள் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா?.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதிகளை களையெடுத்து காஷ்மீரை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி விட்டது. இந்த தூய்மைப் பணியும் எனது பணிகளில் ஒன்றுதான் என மோடி குறிப்பிட்டார்.
    பிரதமர் மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் அழிக்க தயங்க மாட்டார் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

    அமராவதி:

    தெலுங்குதேச தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி எங்களுக்கு நீதியை போதிக்க முயற்சித்து வருகிறார். ஆனால், பிரதமர் மோடி இதற்கு மாறாக செயல்படுபவர்.

    அவர் தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் அழிப்பார். அழிந்துவிட்டவர்களை மறுபடியும் உயிர்த்தெழ செய்வார். இவ்வாறு பல அரசியல் தலைவர்களை அழித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது ஆதாயத்துக்காக இந்திய ராணுவத்தையும், பாதுகாப்பு துறையையும் பயன்படுத்தி உள்ளார். நாட்டில் மத மோதல்களை அவர் உருவாக்குகிறார்.


    மோடியால் இந்திய ஜனநாயகம் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது. ஜனநாயகத்தை கொன்றதற்காக அவரையும், அவரது அணியினரையும் 23-ந்தேதி மக்கள் வெளியேற்றுவார்கள்.

    ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய புதிய அணியை மக்கள் தேர்வு செய்வார்கள்.

    இந்திய தேர்தல்துறை பாரதிய ஜனதாவின் உத்தரவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    நாங்கள் தேர்தல் துறையை எதிர்க்கவில்லை. ஆனால், அதில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலர் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் இருவரும் தேர்தல் விதிமுறைகளை மீறினால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    எதிர்க்கட்சிகள் 50 சதவீத விவிபாட் எந்திரத்தின் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஆனால், தேர்தல் கமி‌ஷன் அதை ஏற்க முன்வரவில்லை.

    தேர்தல் கமி‌ஷனுக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு இருக்கிறது? என்று தெரியவில்லை. விவிபாட் எந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எப்போது குரல் எழுப்பினாலும் தேர்தல் கமி‌ஷன் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டு எங்கள் குரலுக்கு எதிராக உள்ளது.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

    அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் அமைச்சர்கள் பாதி பேர் பாஜகவுக்கு ஓடி விடுவார்கள் என்று தினகரன் பேசியுள்ளார்.

    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்க ஓட்டு போட்டீர்கள். அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதுக்கு பரிசுபெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். 2016-ல் யாரை நீங்கள் வெற்றிபெறச்செய்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அவர் வெற்றிபெற்ற பின் உங்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. மீண்டும் மந்திரி பதவி கிடைக்காததால் சோகமாக திரிந்தார்.

    அவருக்கு தன்னை தவிர யார் மீதும் நம்பிக்கை இல்லை. இங்குள்ள பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரைக்கும், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் தாக்குபிடிக்க முடியாமல் தி.மு.க.வில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவரது சுபாவத்திற்கு ஏற்ற கட்சி தி.மு.க.தான்.

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதுபோல தி.மு.க. வில் வேட்பாளர் பஞ்சம் இருக்கிறது. தி.மு.க. இப்போது அகதிகள் முகாம் ஆகி விட்டது. இளைஞர் பட்டாளம் அந்த கட்சியில் இல்லை. வயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக தி.மு.க. ஆகி விட்டது.

    இப்போது மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை சொல்லி ஓட்டுகேட்க முடியாமல் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவோம் என்கிறார். இது ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் என எங்கள் மீது தி.மு.க.வினர் பொய்களை பரப்பி விட்டனர்.

    நீதி விசாரணை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் நமது வக்கீலின் வாதத்தால் உண்மையை சொல்ல நேரிடுமே என பயந்து கொண்டு ஆஜராகாமல் இருக்கிறார்.

    ஜெயலலிதாவின் உடல்நிலை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் நிலையில் இல்லை என்பதே உண்மை. உடல் நலம் தேறி வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் விசாரணை கமி‌ஷனில் கூறியுள்ளனர். நீதிமன்றங்களை விட மக்கள் மன்றங்கள்தான் பெரிது. அ.தி.மு.க. தொண்டனின் உடலில் தி.மு.க. எதிர்ப்பு ரத்தம் ஓடுகிறது.

    எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் என் சித்தியிடம்(சசிகலா) சொல்லி நானே முதல்வராக பதவி ஏற்றிருப்பேன். கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம். ஆனால் முதல்வராக்கிய சசிகலாவையும், என்னையும் கட்சியை விட்டு நீக்கி விட்டனர். அரசியலில் ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்தவர்களை விடக்கூடாது. மோடியின் ஆட்சியில் தொழில்கள் முடங்கி விட்டன. 6 லட்சம் தொழிலாளர்கள் நடு ரோட்டுக்கு வந்து விட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் இருக்கும் அமைச்சர்களில், கைகளில் கயிறு கட்டி இருக்கும் பாதிபேர் பா.ஜ.க.வுக்கு சென்று விடுவார்கள். மற்றவர்கள் தங்களின் தொழிலை பார்க்க போய்விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரசாரத்தின்போது மாவட்ட செயலாளர் பி.எஸ். என். தங்கவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 6வது கட்டமாக டெல்லியில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

    இந்த தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6 என 5 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. பெரிய அளவில் அசம்பாவிதம் இன்றி 5 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.

    6வது கட்டமாக நாளை நடைபெறவுள்ள தேர்தலில் டெல்லியில் 7 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற கட்சிகளின் தலைவர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். 



    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் மொத்தம் 164 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கு ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித், பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஆம் ஆத்மி சார்பில் அதிஷி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரெயில் நிலையம் அதிகாலை 4 மணி முதல் இயங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது நினைவு கூரத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் 6ம் கட்டமாக நாளை 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    6-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14), அரியானா (10), மேற்கு வங்காளம் (8), பீகார் (8), மத்திய பிரதேசம் (8), டெல்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 59 தொகுதிகளிலும் நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்தது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) 59 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

    59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் திக்விஜய் சிங், மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், ரீடா பகுகுணா, கீர்த்தி ஆசாத், கவுதம் காம்பீர், பூபிந்தர் கூடா, ராதா மோகன் சிங், ரகுவன்ஸ் பிரசாத் சிங், மீனாட்சி லெகி, அஜய்மக்கன், விஜேந்தர்சிங், ஷீலா தீட்சித் ஆகியோர் முக்கியமானவர்கள்.

    59 தொகுதிகளிலும் 10 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 5 கோடியே 42 லட்சம் பேர். பெண் வாக்காளர்கள் 4 கோடியே 75 பேர்.

    இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 7 மாநிலங்களிலும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதிக்கு பாதி பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால் நாளை ஓட்டுப்பதிவு நடக்கும் 7 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


    2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த 59 தொகுதிகளில் 44 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. லோக் ஜனசக்தி கட்சி 16 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

    காங்கிரஸ் கட்சிக்கு இந்த 59 தொகுதிகளில் 2 இடங்களே கிடைத்திருந்தன. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும், அகாலி தளம் 1 இடத்திலும், சமாஜ்வாடி கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

    ஆனால் இந்த தடவை பா.ஜனதாவுக்கு 2014-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்தது போல 44 இடங்களில் வெற்றி கிடைக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரப்படி இந்த 44 இடங்களில் பாதி இடங்களை பா.ஜனதா இழக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் 6-வது கட்ட தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

    இதுவரை நடந்துள்ள 5 கட்ட தேர்தல்கள் மூலம் 424 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. நாளை நடக்கும் 59 தொகுதிகளையும் சேர்த்தால் 483 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று விடும்.

    19-ந்தேதி 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் அத்துடன் 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து விடும். 23-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும்.
    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பாரதீய ஜனதா தலைவர்கள் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பில் பணப்பெட்டிகளை கடத்துகிறார்கள் என்று மம்தா பானர்ஜி புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.

    மோடி மீதும், பா.ஜனதா மீதும் மம்தாபானர்ஜி தினமும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அந்த வரிசையில் நேற்று அவர் புதிய குற்றச்சாட்டு ஒற்றை வெளியிட்டார். பர்கானாஸ் மாவட்டம் அசோக் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களுக்கு பா.ஜனதாவினர் ஏராளமான பணத்தை அள்ளி கொடுக்கிறார்கள்.

    சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதிகோசின் காரில் இருந்து ஏராளமான பணத்தை கைப்பற்றி உள்ளனர். ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர் தங்களுக்கு வழங்கப்படும் இசட்பிளஸ், ஒய் பிளஸ் பாதுகாப்பு படையை பயன்படுத்தி பணப்பெட்டிகளை கடத்தி செல்கிறார்கள்.

    தங்களது வாகனத்திலேயே கட்டு கட்டாக பணத்தை அடுக்கி பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள். தேர்தல் சமயத்தில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர்களும் பிரசாரத்துக்கு வரும் போது அவர்களது ஹெலிகாப்டர்களையோ, கார்களையோ பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த கார்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை கடத்துவதே இதற்கு காரணம் ஆகும்.


    பிரதமர் மோடி வந்த விமானத்தில் இருந்து ஒரு பெட்டி எடுத்து செல்லப்படுவதை சில தினங்களுக்கு முன்பார்த்தோம். அதன் பிறகு படம் எடுக்க தடை செய்து விட்டார்கள். எனவே பா.ஜனதா தலைவர்களால் இதுபோல எத்தனை பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டதோ? யாருக்கு தெரியும்.

    பணத்தால் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம். எப்போது பணம் கொண்டு சென்றாலும் கண்டுபிடித்து விடுவோம்.

    இரவில் பணத்தை பட்டு வாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த பணத்தை எல்லாம் விழித்திருந்து பிடிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன். பிரசாரம் ஓய்ந்து விட்டதால் எளிதாக பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது.

    இவ்வாறு மம்தாபானர்ஜி கூறினார்.

    பாட்னாவில் சத்ருகன்சின்கா தொகுதியில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பாட்னா:

    நடிகர் சத்ருகன்சின்கா காங்கிரஸ் வேட்பாளராக பாட்னா ஷாகில் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதாவில் இருந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். பாட்னா தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

    மே 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கும் அத்தொகுதியில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று பாட்னா தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்கிறார். அப்போது சத்ருகன்சின்கா வீடு வழியாக அமித்ஷாவின் ரோடு ஷோ செல்கிறது.

    இதை கண்டித்துள்ள காங்கிரஸ் இது மலிவான அரசியல் என்று விமர்சித்துள்ளது. ஆனால் பா.ஜனதா தரப்பில் கூறும்போது ரோடு ஷோ தனிப்பட்ட நபருக்கு எதிராக நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சத்ருகன் சின்கா கூறியதாவது:-


    அமித்ஷா இங்கு தாராளமாக வரலாம். சில பேர் சொல்கிறார்கள் அமித்ஷா இங்கு தனது பலத்தை என்னிடம் காட்ட வருகிறார் என்று கூறுகிறார்கள்.

    இந்த தேசம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. அவர்கள் நல்ல மனதுடன் வந்தால் வரவேற்கப்படுவார்கள். அவர்களுக்கு தேநீர், பக்கோடா கூட வழங்கப்படும். மேலும் அவர்களிடம் பொதுமக்கள் கேள்விகளையும் கேட்பார்கள். அவர்கள் தங்களது பலத்தை காட்டுவதற்காக வருகிறார்கள் என்றால் நான் சொல்கிறேன். அவர்களுக்கு பீகார் குடும்பம் தங்களது பலத்தை காட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவதூறு துண்டு பிரசுரம் செய்த விவகாரத்தில் குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார் என்று ஆம் ஆத்மி வேட்பாளருக்கு காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி எம்.பி. தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷியும், காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங் லல்வியும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் காம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி புகார் கூறி இருந்தார். காம்பீர் வினியோகித்த துண்டு பிரசுரத்தில் தன்னை பற்றி மோசமாக அவதூறு பரப்பப்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

    காம்பீர் சார்பில் வெளியிடப்பட்ட லட்சக் கணக்கான துண்டு பிரசுரத்தில் தனது ஒழுக்கம் குறித்து மோசமான வகையில் அவதூறு வார்த்தையுடன் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக அதிஷி கண்ணீர் மல்க தெரிவித்தார். இத்தகைய எண்ணத்துடன் கூடிய காம்பீர் வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார் என்று காம்பீர் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-


    கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு நான் சவால் விடுகிறேன். துண்டு பிரசுரம் விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். நிரூபிக்கவில்லை என்றால் கெஜ்ரிவால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறாரா?

    இவ்வாறு காம்பீர் கூறினார்.

    மேலும் தன் மீது அவதூறு கூறியது தொடர்பாக அவர் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    அதிமுக ஆட்சியை கலைக்க வாக்களிப்போம் என்று அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரையில் இன்று அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தான் வெற்றிபெறும். தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைப்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியை கலைப்போம். அதற்காக வாக்களிப்போம்.

    இது துரோகிகளின் ஆட்சி. ஊழல் ஆட்சியாக உள்ளது. ஊழலை மையமாக கொண்டு அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது.

    தி.மு.க.வோடு நாங்கள் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்? ஜெயலலிதா ஆட்சியை கலைக்க தி.மு.க. வோடு கூட்டணி வைத்தவர் தான் ஓ.பி.எஸ். பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வருகிற 23-ந் தேதி தெரியவரும்.

    அன்றைய நாளில் தோல்வியோடு அமைச்சர்கள் காணாமல் போவார்கள். அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மறைமுகமாக மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தேர்தல் ஆணையம் என்பது இருக்கிறதா என தெரியவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.

    அ.தி.மு.க.வினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சினை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதனை தடுக்க தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டர்கள் நுழைய வாய்ப்பு உள்ளது.

    தேனி தொகுதியில் மறுவாக்குபதிவு யாரும் கேட்கவில்லை. ஆனால் மறுவாக்குபதிவு நடக்கும் போது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ் மகனின் வேட்புமனுவில் பிரச்சினை இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக மாநில பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பா, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து விமர்சித்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜே.டி.எஸ். கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஜே.டி.எஸ். கட்சி தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதல் மந்திரியாகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா வெளிப்படையாகவே பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

    கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பா.ஜனதாவின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் பா.ஜனதாவின் வகுப்பு வாரியான அரசியலுக்கு முடிவு கட்ட ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா முதல் மந்திரியாக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ராகுல் காந்தியையும், சித்தராமையாவையும் கர்நாடக மாநில பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ள மாட்டார். அதே போல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதல் மந்திரியாக ஆக மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈஸ்வரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கங்கையை தரிசிக்க ராகுல் காந்தி வருவார் என தாக்கி பேசியுள்ளார்.
    வாரணாசி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், வரும் 12, 19 ஆகிய தேதிகளில் மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் மத்திய மந்திரியும், உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளருமான ஸ்மிரிதி இரானி நேற்று நடந்த பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஆனால் கபடதாரிகளான காங்கிரஸ் கட்சியினர்  மற்றும் மகா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிரதமரை குறை கூறுவதை தவிர வேரு எதையும் செய்வதில்லை. ஆண்டு தோறும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் ராகுல் காந்திக்கு இந்தியாவின் கங்கை,  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதாவது தேர்தலின்போது மட்டும் தான் தெரியும்.  அப்போது தான் வருகை தந்து தரிசனம் செய்வார்.  

    மேலும் காங்கிரஸ் கட்சியினர் அயோத்தியாவிற்கு வருவார்கள். ஆனால், ராமர் ஆலயங்களுக்கு சென்று ராமரை வணங்கமாட்டார்கள். ஓட்டு தான் அவர்களுக்கு முக்கியம். மக்களை ஓட்டு வங்கிகளாக தான் பயன்படுத்துகிறார்கள். வாரணாசி தொகுதியில் களத்தில் இறங்கி நேரடியாக போட்டியிட முடியவில்லை. மேலும் ராகுல் காந்தி,  அமேதியையும் விடுத்து வயநாட்டிற்கு சென்று விட்டார்.

     இவ்வாறு அவர் பேசினார்.  
    ×