என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
மும்பை:
பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பலம் பெறும் என்று அமித் ஷாவும், அருண்ஜெட்லியும் கூறி வருகிறார்கள்.
பிரதமர் மோடியோ, இந்த தடவை பாரதிய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் சமீபத்தில் பேட்டி அளித்தபோது, “பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை” என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சு பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் முக்கிய இடம்பிடித்துள்ள சிவசேனா கட்சியும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை கூற தொடங்கியுள்ளது. சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தும் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தடவை அதில் 40 இடங்கள் வரை குறையலாம். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது.
இத்தகைய நிலையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் தயவும் ஆதரவும் நிச்சயம் தேவைப்படும். இந்த விஷயத்தில் பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறிய கருத்துக்கள் முழுக்க, முழுக்க சரியானது. அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சி தனி மெஜாரிட்டி பெறாவிட்டாலும் கூட்டணி கட்சிகள் பலத்துடன் ஆட்சி அமைக்கும். அந்த வகையில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் சிவசேனா கட்சி மிகவும் மகிழ்ச்சி அடையும்.
ராம் மாதவ் கருத்துப்படி பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் ஆட்சி செய்யும். அந்த கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகிக்கும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார். #shivsena #BJP
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளார்.
தலைநகர் டெல்லியில் இதுவரை பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மட்டும் டெல்லியில் 2 கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.
டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கும் வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் செய்ய இன்றும், நாளையும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மாலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு டெல்லியில் போட்டியிடும் 7 பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் ஒரே இடத்தில் ஆதரவு திரட்ட உள்ளார்.
பிரதமர் மோடி டெல்லியில் பங்கேற்று பேசும் ஒரே பொதுக்கூட்டம் இது மட்டுமே. எனவே இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தை மிக, மிக பிரமாண்டமாக நடத்த டெல்லி மாநில பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
டெல்லியில் மொத்தம் 272 மண்டலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 20 பஸ்களில் தலா ஆயிரம் தொண்டர்கள், பொதுமக்களை அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை மோடி பங்கேற்று பேசும் கூட்டத்தில் குறைந்தபட்சம் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று மதியம் அரியானாவில் சிக்கா, குருஷேத்திரா நகரங்களில் நடக்கும் 2 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பிறகே டெல்லி ராம்லீலா மைதான கூட்டத்தில் பேச உள்ளார்.
மோடி டெல்லியில் மாலை 5 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் டெல்லி வர இரவு 7 மணி ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தை வாரணாசியில் மோடி பங்கேற்ற பிரமாண்ட கூட்டத்தையும் விட மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Loksabhaelections2019 #BJP #NarendraModi
தற்போது ஆளும் பா.ஜனதா கட்சி, ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இல்லாமல், மாநில கட்சிகளைக்கொண்டு 3-வது அணியின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவின் ஆசை.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இதுதொடர்பாக அவர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, மாநில கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினார்.
இப்போது பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவித்து, 5 கட்ட தேர்தல் முடிந்து இன்னும் 2 கட்ட தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த முயற்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) திருவனந்தபுரம் சென்று அந்த மாநில முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயனை சந்தித்து பேசினார். பூட்டிய அறைக்குள் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்தநிலையில், திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநில கட்சிகளின் நிலைப்பாடு, மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதுதான்.
நமது நாட்டில் மத்திய அரசால் மாநில அரசுகள் ஓரங்கட்டப்படுகின்றன. கூட்டாட்சி முறை பலவீனப்படுத்தப்பட்டிருப்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். கூட்டாட்சி முறைதான் தொடர வேண்டும். மாநிலங்களை பாதிக்கிற முடிவுகளை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பிரதமர் வேட்பாளர் பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள், மத்தியில் அமைந்துள்ள பா.ஜனதா கட்சி அரசை வீழ்த்தும். இதில் சந்தேகமே இல்லை. அடுத்து அமைய உள்ள அரசு மதச்சார்பின்மையையும், கூட்டாட்சி முறையையும் காக்கும். அந்த இலக்கை நோக்கித்தான் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார். #PinarayiVijayan
கொல்கத்தா:
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
மேற்கு வங்கம் மாநிலத்தில் எமர்ஜென்சி காலத்தில் இருந்ததை விட மோசமான செயல்களில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் அவர்களே செய்து வருகிறார்கள். இங்கு இணை அரசு ஒன்றை பா.ஜ.க.வினர் நடத்துகிறார்கள்.
பா.ஜனதா தலைவர்கள் உத்தரவின் பேரில்தான் மேற்கு வங்கத்தில் 4 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இதற்கு முன்பு இத்தகைய அநியாயங்கள் நடந்தது இல்லை.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் தன்னுடன் இருப்பதாக மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். மோடி ஒன்றை உணர வேண்டும்.
திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் யாரும் உங்கள் பக்கம் வர மாட்டார்கள். எங்கள் பக்கம் இருந்து ஒரு கவுன்சிலர் கூட உங்கள் பக்கம் வர மாட்டார்கள். மோடி தேர்தல் பிரசாரம் செய்கிறாரா? அல்லது குதிரை பேரம் நடத்துகிறாரா? என்று தெரியவில்லை.
பிரதமர் மோடி பாசிஸ்டுகளை விட மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரும் இப்படி இருந்தது இல்லை. எனவே பிரதமர் மோடி நிதானத்துடன் பேச வேண்டும்.
உத்தரபிரதேசத்தில் உங்களுக்கு முன்பு போல வெற்றி கிடைக்காது. உங்கள் வெற்றியை அகிலேசும், மாயாவதியும் சேர்ந்து தடுத்து விட்டார்கள். இந்த தடவை உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு அதிகபட்சம் 17 தொகுதிகளில்தான் வெற்றி கிடைக்கும்.
காங்கிரஸ் கட்சிக்கு 7 அல்லது 8 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு மம்தாபானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee
பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதாகவும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் புகார் தெரிவித்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பெண் எம்.பி. சுஷ்மிதா தேவ் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மற்ற தேர்தல் ஆணையர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மீது கூறியுள்ள புகார்கள் குறித்து எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதே போல் தேர்தல் விதிகளை மீறி ராகுல் காந்தி பல இடங்களில் பேசியதாக பாஜகவினர் அளித்த புகார் தொடர்பாகவும் தலைமை ஆணையர் ஆலோசனை நடத்தினார். #ElectionCommission #NarendraModi #Amitshah
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் காங்கிரஸ் 5 தொகுதியில் கூடுதல் பெற்று அட்சியை பிடித்தது. ஆனால் ஓட்டு சதவீதத்தில் பா.ஜனதாவே சற்று முன்னிலை பெற்றது. பா.ஜனதாவுக்கு 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 40.9 சதவீதமும் கிடைத்தன.
பாராளுமன்ற தேர்தலிலும் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவலாம் என்று கருதப்படுகிறது. அங்கு மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று முதல்கட்டமாக 6 தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய பிரதேசத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டது.
100 யூனிட்டுக்கு ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் ரூ.200 ஆக இருந்தது. இதே போல் விவசாயிகளுக்கு பென்சனும் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் கொண்டுவந்த இந்த திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்து விட்டது. இதனால் தேர்தல் முடிவு எங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
பாராளுமன்ற தேர்தலில் எது பிரச்சினை என்று மக்களுக்கு நன்கு தெரியும். பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து அரசியல் செய்வதை மக்கள் நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள்.
புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானது தொடர்பாக மோடி முதலில் பதில் அளிக்க வேண்டும். பாதுகாப்பில் குளறுபடு ஏற்பட்டது எப்படி என்று பற்றி அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும். மோடி அரசின் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.
பாராளுமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக வரும். தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரும்.
பெரும்பாலான கட்சிகள் பா.ஜனதாவை எதிர்க்கின்றன. இதனால் தேர்தலுக்கு பிறகு அவை அனைத்தும் ஒன்றிணைக்கப்படும். பா.ஜனதாவை வெளியேற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக இருக்கும்.
திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா, ராஷ்டிரிய சமிதி, ஆகிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் அவைகள் பா.ஜனதாவை கடுமையாக எதிர்க்கின்றன. இதுமாதிரியான கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற ஒன்றிணைக்கப்படும்.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றிபெறும்.
இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார். #KamalNath
மதுரை:
மதுரையில் அ.ம.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது. அவர்கள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி அல்ல. மக்கள் வெறுக்கும் அணி.
எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடையும். அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் அவர்கள் கோபத்துடன் பேசி வருகிறார்கள்.
மதுரையில் பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கோபமாக பேசி இருக்கிறார். இது ஏற்புடையதல்ல. ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறபோது அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவும்.
இதனால் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார்.
தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளன. ஆனால் தோல்வி பயம் காரணமாக தேர்தல் விதிமுறைகளையும் மீறி விட்டு அமைச்சர்களும், அரசு கொறடாவும் சபா நாயகரை சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #Panneerselvam
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் மெகா உணவு பூங்கா அமைப்பதற்கு பா.ஜனதா பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதாக அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இது உண்மை இல்லை என அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘ராகுல் காந்தி கூறும் அந்த உணவு பூங்காவுக்கு கியாஸ் வினியோகம் செய்வதில்லை என முடிவு செய்திருப்பதாக மன்மோகன் சிங் அரசுதான் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து இருந்தது. அது ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பொய்களை கூறி ராகுல் காந்தி மக்களை தவறாக வழிநடத்துகிறார்’ என்று தெரிவித்தார்.
விவசாயிகளின் நலன் குறித்து ராகுல் காந்தி பேசிவரும் நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொழிற்சாலைகளுக்காக விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய ஸ்மிரிதி இரானி, இந்த நிலங்களை திருப்பிக்கொடுக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டு 3 ஆண்டுகள் கடந்த பிறகு கூட இன்னும் அந்த நிலங்கள் திருப்பி வழங்கப்படவில்லை எனவும் கூறினார். #RahulGandhi #Smritiirani
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடக்க உள்ள குந்துகோல் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும். குந்துகோல் மட்டுமின்றி சிஞ்சோலி தொகுதியிலும் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.
கூட்டணி ஆட்சி கவிழும் என்பதற்கு தேவேகவுடா, சித்தராமையா ஆகியோரின் பேச்சே சாட்சி. மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 100 பேர் வந்தாலும் குந்துகோல் தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததும், அதன் பயன் எங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். #JagadishShettar
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக இருப்பவர் நடிகை ரம்யா. இவர் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார்.
இவர் சமூக வலைத்தளங்களில் பா.ஜனதாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் பல்வேறு அம்சங்கள் அடங்கிய தகவல்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக, டுவிட்டரில் அவர் பதிவிடும் சில தகவல்கள் அவ்வப்போது பெரும் விவாத பொருளாக மாறி விடுகின்றன.
இந்த நிலையில், நடிகை ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்தார். அதில், ‘சர்வாதிகாரியான’ ஹிட்லர் சிறுமி ஒருவரின் காதை திருகுவது போன்ற படமும், பிரதமர் நரேந்திர மோடி சிறுவன் ஒருவனின் காதை திருகுவது போன்ற படமும் இடம் பெற்று இருந்தது. மேலும், ‘உங்களின் கருத்துகள் என்ன?’ என்று அவர் மக்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
நடிகை ரம்யாவின் இந்த டுவிட்டர் செய்தி ‘சர்வாதிகாரி’ ஹிட்லரும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே குணம் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.
இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. மேலும், நடிகை ரம்யா பதிவிட்ட ஹிட்லரின் படம் ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.
அதாவது ஹிட்லரின் கைகள், சிறுமியின் தோள் மீது இருக்கும் படத்தை ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்து ஹிட்லரின் கைகள் சிறுமியின் காதுகளை திருகுவது போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்து உண்மையான படத்தையும் வெளியிட்டனர்.
மேலும், நடிகை ரம்யாவின் டுவிட்டர் பதிவுக்கு கன்னட காமெடி நடிகர் ‘புல்லட் பிரகாஷ்’ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் புல்லட் பிரகாஷ் கூறியிருப்பதாவது-
‘ரம்யா மேடம் (பத்மாவதி), இந்த குழந்தையை போல் நீங்கள் இருந்த போது உங்களது தந்தை உங்கள் காதை திருகி இருந்தால் நீங்கள் 2 தேர்தல்களில் வாக்களிக்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். நரேந்திர மோடி பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை. நாளை வீடியோ மூலம் பதில் அளிக்கிறேன்’.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ராகுல்காந்தி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நடிகை ரம்யா ஆகியோரின் படங்களை பிறருடன் ஒப்பிட்டு தவறான முறையிலும் கருத்து கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #ActressRamya #PMModi #Hitler
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல், 3 கட்டங்களாக முடிவடந்த நிலையில், இன்று 4வது கட்டமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையடுத்து காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சித்ராகூட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மெகா கூட்டணியின் தலைவர் ராகுல் காந்தி தான். நாட்டில் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தால் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார். அவரது தாய் கூட ராகுல் எங்கு இருக்கிறார் என கண்டறிய இயலவில்லை. நிரந்தரமாக மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது எனக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ஒருமித்த குரலாகும்.
இவ்வாறு அவர் பேசினார். #AmitShah #LSElections2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்