என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
புதுடெல்லி:
தேர்தலில் ஓட்டுப் பதிவு எந்திரத்தில் ஒட்டப்படும் பேப்பரில் கட்சி சின்னம் இருக்கும். கட்சிகளின் பெயர்கள் இருக்காது.
இந்த நிலையில் வாக்குப் பதிவு எந்திரத்தில் பா.ஜனதாவின் சின்னமான தாமரைக்கு கீழே பி.ஜே.பி. என்று ஆங்கிலத்தில் எழுத்து உள்ளது. இது சட்ட விரோதம் ஆகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேற்கு வங்காள மாநிலம் பார்ரக்போர் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பி.ஜே.பி. என்ற பெயர் உள்ளது என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, அகமது பட்டேல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தினேஷ் திரிவேதி, தீரக் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அப்போது பி.ஜே.பி. என்ற எழுத்து நீக்கப்பட வேண்டும். அல்லது அனைத்து கட்சிகளின் பெயர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் அசோக் மனு சிங்வி கூறியதாவது:-
வாக்குப்பதிவு எந்திரத்தில் பி.ஜே.பி. என்கிற எழுத்து தெளிவாக தெரிகிறது. எந்த கட்சியும் சின்னம் மற்றும் பெயரை ஒரே இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்றார்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும் போது, “கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தை அணுகிய பா.ஜனதா தாமரை சின்னத்தின் வெளிப்புறம் மிகவும் மெல்லிய கோடால் உள்ளது. அது அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி மாற்றம் செய்யப்பட்டது. தாமரை சின்னத்தில் நீரின் பிரதிபலிப்பும் அடர்த்தியாக்கப்பட்டது. அந்த பிரதிபலிப்புதான் எப் மற்றும் பி போன்ற எழுத்துக்கள் போல தெரிகின்றன. அது பி.ஜே.பி. போன்ற எழுத்து போல் தெரியவில்லை” என்றார். #BJP #Loksabhaelections2019
மும்பை:
நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 11-ந்தேதி, 18-ந் தேதி, 23-ந்தேதிகளில் 3 கட்டங்களாக 303 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் பிரதமர் மோடி பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகையில், “பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது” என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒருவர் கனவு காண்பதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமர் மோடி தூக்கத்தில் மட்டும் அல்லாது விழித்துக் கொண்டிருக்கும்போது கனவு காண்கிறார். எந்த பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை. நான் இதை தைரியமாக கூறுகிறேன். நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலிலும் பா.ஜனதாவை விட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக வாக்கு பெற்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தேசியவாதம் பற்றி மோடி பேசுகிறார். கடந்த 1947, 1964, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த போர்களில் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. நம்மிடம் உள்ள வலுவான பாதுகாப்பு படையே அதற்கு காரணம். ஒரு தனி மனிதர் அல்ல.
ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு காரணமாக பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். பணக்காரர்களின் கருப்பு பணத்தை மாற்றுவதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்காக இல்லை.
தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுகிறது. பிரதமர் மோடி செல்லும் ஒவ்வொரு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கும் ரூ.10 கோடிக்கும் மேல் செலவிடப்படுகிறது. இது குறித்து தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பவில்லை. மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தயக்கம் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #PChidambaram
மெதினிநகர்:
பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஜார்க்கண்ட் மாநிலம் பல்லாமு மாவட்டம் மெதினிநகரில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவு உள்ளது. மோடி மீண்டும் பிரதமராகும் போது அந்த சட்டப் பிரிவை நீக்குவோம்.
இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். துப்பாக்கி குண்டுகளுக்கு அஞ்ச மாட்டோம். அதை தடுப்போம்.
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பாகிஸ்தான் பயங்ரவாத இயக்கத்தை பயன்படுத்தி இந்தியா மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தது.
10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராணுவ வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அந்த சம்பவத்தை எப்போதும் மறக்க முடியாது.
காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்து இருக்கிறார். ஒரு நாட்டுக்கு எப்படி 2 பிரதமர் இருக்க முடியும்.
பிரதமர் மோடியால் நாட்டின் பாதுகாப்பு பலம் பெற்று வருகிறது. அவருக்கு பா.ஜனதா எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார். #amitshah #pmmodi #bjp #kashmir370
திருவனந்தபுரம்:
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேரளாவில் பாரதீய ஜனதா தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீட்டை விட்டு வெளியே சென்றால் எந்த தாக்குதலுக்கும் ஆளாகாமல் அவர்கள் வீடு திரும்புவார்களா? என்ற நம்பிக்கை இல்லை.
ஆனால் உத்தரபிரதேசத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்று கூறி இருந்தார்.
பிரதமர் மோடியின் பேச்சு வெளியான சில மணி நேரங்களில் கேரள முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் கொடுத்தார்.
இது தொடர்பாக அவர், பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-
கேரளாவில் பாரதீய ஜனதா தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பிரதமர் மோடி எந்த அடிப்படையில் கூறினார் என்பதை தெரிவிக்க வேண்டும். பிரதமரிடம் இருந்து இத்தகைய கருத்தை எதிர்பார்க்கவில்லை.
கேரளாவை பற்றி அவருக்கு தெரியாமல் இருந்தால் மத்திய அரசின் குற்ற ஆவண காப்பக பதிவேடுகளை பார்வையிட்டு உண்மையை தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் ஏஜென்சிகள் வெளியிட்ட தகவல்களில் கேரளம் பாதுகாப்பான பகுதி என்றும், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மை தெரியாமல் பிரதமர் பேசுகிறார்.
சங்பரிவார் அமைப்புகள் சில மாநிலங்களை ஆள்வது போல நினைக்கிறார். கேரளாவில் சட்டம் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #pmmodi #bjp #pinarayivijayan
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று சாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். பின்னர் இரவில் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை நடைபெற்ற விஸ்வரூபதரிசனத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு, விவசாயிகளை பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் நிச்சயமாக வெற்றிபெறுவோம். இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
மோடி ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லை. 7-வது சம்பள கமிஷன் நிறைவேற்றப்படவில்லை. மோடி தனது 5 ஆண்டு சாதனை பற்றி பேசாமல் புல்வாமா தாக்குதல் பற்றி பேசி வருகிறார். ஜி.எஸ்.டி. வரியால் 6 கோடி மக்கள் வேலையை இழந்து தெருவில் நிற்கின்றனர். 10 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறினார். ஆனால் வழங்கவில்லை.
இவ்வாறு முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.
பேட்டியின் போது காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயந்திநாதன், விவசாய அணி மாவட்ட தலைவர் வேல் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர். #Congress #Narayanasamy #Modi
மும்பையில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளில் வருகிற 29-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பிரதமர் நரேந்திர மோடி, பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியான சிவசேனா வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார்.
அவருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். மேலும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்த தேர்தல் அரசை நியமிக்கப்போகும் தேர்தல் இல்லை. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் தேர்தல்.
எனவே உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வர இருக்கும் கட்சிக்கு வாக்குகளை பதிவுசெய்து உங்கள் வாக்குகளுக்கு வலுசேர்த்துக்கொள்ளுங்கள். தற்போது இருக்கும் ஒரே கேள்வி என்ன என்றால் பா.ஜனதா தனது முந்தைய 2014-ம் ஆண்டு வெற்றி எண்ணிக்கையை முறியடிக்குமா என்பது தான். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தடவை கிடைத்த தொகுதிகள் கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அவர்கள் 50 இடங்களை கூட பெறமாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியானது நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் உடனே முதல்-மந்திரியையும், உள்துறை மந்திரியையும் மாற்றிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த கலாசாரத்தை நாங்கள் மாற்றிவிட்டோம்.
முந்தைய காங்கிரஸ் அரசு நடுத்தர மக்களை தங்களின் சுயநலத்திற்காகவும், பேராசைக்காகவும் பயன்படுத்திக்கொண்டது. ஆனால் எங்கள் தலைமையிலான அரசாங்கம் நடுத்தர மக்களால் கிடைத்த நன்மைகளை கோடிட்டு காட்டியது. தொலைபேசி கட்டணம் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்தது. எங்கள் அரசின் முயற்சியால் தொலைத்தொடர்பு கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கிறது. மேலும் இணைய சேவையும் உலகிலேயே மிக மலிவாக கிடைக்கிறது.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரெயில் சேவையை மேம்படுத்துவதே எங்களின் முதல் குறிக்கோளாக இருக்கும். புல்லட் ரெயில் திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
இதன்காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் 275 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் பாதைகள் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #PMModi #BJP
கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, தேசிய அமைப்பு துணை செயலாளர் பி.எல்.சந்தோஷ், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பாராளுமன்ற தேர்தல் நிலவரம், பா.ஜனதாவுக்கு சாதகமாக உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் எடியூரப்பா பேசியதாவது:-
துமகூரு, கலபுரகி, கோலார் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அங்குள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் இதை சொல்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தன்று இது உண்மை என்று தெரியவரும்.
சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த (மே) மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நீங்கள் அனைவரும் அந்த தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும். இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மிக முக்கியம்.
அதனால் யாரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம். அவ்வாறு திட்டமிட்டிருந்தால் அதை தவிர்க்க வேண்டும். தேர்தல் முடிவு வெளியான பிறகு நீங்கள் எங்கு வேண்மென்றாலும் செல்லுங்கள்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
சிஞ்சோலி தொகுதியில் பா.ஜனதா சார்பில் ராமச்சந்திர ஜாதவ் வேட்பாளராக நிறுத்தும்படி கர்நாடக தலைவர்கள், மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனால் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சுனில் வல்யாபுரே கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடியூரப்பா இறங்கியுள்ளார்.
எம்.எல்.சி. பதவி வழங்குவதாகவும், அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகவும் கூறியதாக தெரிகிறது. அதற்கு சுனில் வல்யாபுரே, தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறி இருக்கிறார். #BJP #Yeddyurappa
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா நிறுத்தப்படுவார் என்று கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டார். இதனால் பிரியங்கா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வாரணாசியில் பிரியங்கா போட்டியிடவில்லை என்ற காங்கிரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.
பிரியங்காவின் பழங்கதைகள் அழிக்கப்பட்டது. வெற்றிகரமான ஒரு அரசியல் தலைவருக்கு எதிராக புதிதாக அரசியலுக்கு வந்துள்ள வாரிசின் தலை எழுத்தை வாரணாசி எழுதி புதிய இந்தியா உருவாக வாய்ப்பு ஏற்படும் என நம்பினேன். அவர்கள் நாளுக்கு 5 முறை சொல்லிக்கொள்ளும் புதிய இந்தியாவை அவர்களின் படைகள் ஈர்க்க தவறிவிட்டது. அதனால் புதிய இந்தியா அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அனுபவமில்லாத வாரிசுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #ArunJaitley
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்