search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் பா.ஜ.க.வில் தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை மற்றும் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.

    மாநகராட்சி தேர்தல் பணிக்குழு தலைவரும், சென்னை பெருங்கோட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இதையடுத்து கே.அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட 500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதா?, அதற்கு தகுதியான நபராக உள்ளாரா? என்பதை அறிவதற்காகத்தான் விருப்ப மனு பெறப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவித்த பின்னர், கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி, எந்த இடங்களில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் போட்டியிட்டு, அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மற்ற அனைத்தும் முடிவு செய்யப்படும்.

    பாஜக - அதிமுக

    பிரதமர் மோடியின் பெருந்தன்மையின் காரணமாக வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற காலத்தில் விவசாயிகள் இந்த சட்டத்தை ஒட்டுமொத்தமாக ஏற்கக்கூடிய சூழல் வரலாம்.

    அவ்வாறு, விவசாயிகள் வேண்டும் என்று கேட்டால் இந்த சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை.

    பாலியல் குற்றங்கள் செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என மக்களுக்கு புரியவந்தால் குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும். காவல் துறை குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் சயானி கோஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அகர்தலா:

    மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், அடுத்து திரிபுரா மற்றும் கோவா மாநில சட்டமன்றத் தேர்தல்களை குறிவைத்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில், 2023 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தனது பணிகளை மேற்கொண்டுள்ளது. வரும் 25ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. இதற்காக கட்சியின் முக்கிய தலைவர்கள் திரிபுராவில் முகாமிட்டு பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த மேற்கு வங்காள தலைவர் சயானி கோஷ், நேற்று இரவு அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடினார். அவரை மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

    இதனையடுத்து சயானி கோஷை இன்று காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சயானி கோஷ் கைது செய்யப்பட்டார். கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சதார் துணைக்கோட்ட காவல் அதிகாரி ரமேஷ் யாதவ் தெரிவித்தார். மேலும், சயானி கோஷூடன் வந்திருந்த சிலர், முதல்வர் பங்கேற்ற தெருமுனை பிரச்சாரம் நடைபெற்ற பகுதியில் கற்களை வீசி தாக்கியதாகவும் அதிகாரி ரமேஷ் யாதவ் கூறினார்.

    சயானி கோஷ் கைது செய்யப்பட்டதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமர் எந்த பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பார்க்காமல் கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் படங்களை மட்டும் பார்வையிட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த அண்ணாமலை தமிழக வெள்ளச்சேதங்களை ஊர் ஊராகச் சென்று எல்லா பகுதிகளிலும் பார்வையிட்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி கூறுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.

    மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமாக உள்ள நிலையில் அதனை சீரமைக்க இதுவரையிலும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, தமிழக அரசை குற்றம் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ளச்சேதங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதில் கன்னியாகுமரி மாவட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பேரிடர் இழப்பீடு என்பது மாநில அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும் இணைந்துதான் வழங்கவேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசை மறைத்துவிட்டு பேசுகிறார்கள். இது ஏன்? என்று தெரியவில்லை.

    பேரிடர் மீட்பு பணிகள் என்பது மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவு செய்யவேண்டிய ஒன்று. பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசு ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. மீண்டும் நாங்கள் அதை வலியுறுத்துவோம். நாங்கள் இரவு-பகலாக வேகமாக பணியாற்றி கொண்டிருக்கிறோம். அதை பாராட்டுவதற்கு அவர்களுக்கு மனமில்லை. களியக்காவிளை- நாகர்கோவில், நாகர்கோவில்- காவல்கிணறு வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக உள்ளது.

    இது குறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே பேசியிருக்கிறார். நாங்களும் பேசி இருக்கிறோம். ஆனால் அது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் இரண்டு வெள்ள சேதங்களை கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்துள்ளது. தற்போது வந்துள்ளது மூன்றாவது சேதம். கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் சாலைகள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு ரூ.91 கோடியும், நாகர்கோவில் மாநகராட்சி பணிகளுக்கு ரூ.28 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி 11 மாவட்டங்களில் பா.ஜனதா சார்பில் 19-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    சென்னை:

    பாரதிய ஜனதா மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையாக கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் ஏழை, எளிய மக்களும், நடுத்தரவர்க்க மக்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

    வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்து உடமைகள் பாழாகின. தினசரி வேலைவாய்ப்பை நம்பி இருப்பவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

    எனவே பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் தர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

    அண்ணாமலை

    ஆகவே பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களில் பா.ஜனதா கட்சியின் சார்பில் வருகிற வெள்ளிக்கிழமை (19-ந்தேதி) அன்று காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் கீழ்கண்ட பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கலந்துகொள்ளும் பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:-

    காஞ்சிபுரம்-டால்பின் ஸ்ரீதர், லோகநாதன்

    செங்கல்பட்டு- கரு.நாகராஜன், தங்ககணேசன்

    திருவள்ளூர் கிழக்கு- முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி, தொழில் பிரிவு- பாஸ்கர்

    திருவள்ளூர் மேற்கு- சக்ரவர்த்தி, அரசு தொடர்பு பிரிவு பாஸ்கரன்

    சென்னை கிழக்கு- முன்னாள் எம்.எல்.ஏ. ராதா ரவி, மீனாட்சி நித்யசுந்தர்

    தென்சென்னை- முன்னாள் எம்.பி. வி.பி.துரைசாமி, முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன்

    மத்திய சென்னை கிழக்கு- நடிகை குஷ்புசுந்தர், வினோஜ் பி.செல்வம்

    மத்திய சென்னை மேற்கு- பால்கனகராஜ், குமரிகிருஷ்ணன்

    வடசென்னை கிழக்கு- நகைச்சுவை நடிகர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம்

    வடசென்னை மேற்கு- சுமதி வெங்கடேஷ், காயத்ரி ரகுராம்

    சென்னை மேற்கு- எம்.என்.ராஜா, ஆசிம்பாஷா

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் குறைக்கவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
    தூத்துக்குடி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளசேத பாதிப்புகளை பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று பார்வையிட்டார்.

    முன்னதாக அவர் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக கூறி உள்ளது.

    ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.

    அந்த வகையில் இந்த தொகை மிகவும் குறைவு.

    எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த தி.மு.க. தற்போது இவ்வளவு குறைவான தொகையை அறிவித்து உள்ளது விவசாயிகளிடம் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது.

    எனவே இந்த நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது எப்படி பார்க்கின்றார் என்று தெரியவில்லை.

    தமிழக முதல்-அமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிகழ்ச்சியினை ஒரு ‘டூரிஸ்ட் பேக்கேஜ்’ மாதிரி செய்கின்றனர்.

    மழை வெள்ள பாதிப்பு பார்வையிட செல்லும் முதல்-அமைச்சர் விவசாய நிலங்களில் இறங்கி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வாய்ப்பாக அமையும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து இன்னொருவர் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல. தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் (19-ந்தேதி) 11 மாவட்டங்களில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.

    தி.மு.க. பெட்ரோல் விலையை ரூ.5 குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு ரூ.3 மட்டுமே குறைத்து உள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் குறைக்கவில்லை. எனவே அதனை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து நடத்தப்பட்ட 2-வது கருத்து கணிப்பில் பா.ஜனதா 239 முதல் 245 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 403 தொகுதிகள் உள்ளன.

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார் என்பது தொடர்பாக ஏற்கனவே ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் அமைப்பு சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    இதில் பா.ஜனதா 213 முதல் 221 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மேலும் ஒரு கருத்து கணிப்பில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    டைம்ஸ் நவ்-போல்ஸ்ட் ராட் நடத்திய இந்த கருத்து கணிப்பில் பா.ஜனதா 239 முதல் 245 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த முறை பா.ஜனதா 312 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 119 முதல் 125 இடங்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்சி கடந்த தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 28 முதல் 38 இடங்களையே பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ்


    காங்கிரசுக்கு 5 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


    உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பா.ஜனதா மீது அதிருப்தி நிலவுகிறது. எனவே, தங்களை காப்பாற்றிக்கொள்ள கோடிகளை வாரி இறைக்கிறார்கள்.
    புதுடெல்லி :

    உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் பொதுக்கூட்டங்களுக்கு ஆள் திரட்ட அரசுப்பணத்தை மாநில அரசு செலவிடுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இச்செய்தியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கு காலத்தில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர். அப்போது, மாநில அரசு அவர்களுக்கு பஸ் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால், இப்போது மோடி, அமித்ஷா பொதுக்கூட்டங்களுக்கு ஆள் திரட்ட பொது மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பயன்படுத்துகிறது.

    உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பா.ஜனதா மீது அதிருப்தி நிலவுகிறது. எனவே, தங்களை காப்பாற்றிக்கொள்ள கோடிகளை வாரி இறைக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கோயில்களில் மதநிகழ்வுகளை ஒளிபரப்பிய பா.ஜ.க.வினர் மீதும், அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை சீமான் வலியுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் திரையிட்டு ஒளிபரப்பிய பா.ஜ.க.வினர் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டப் பொதுத்தளங்களாக விளங்கும் கோயில்களை மதவெறி அரசியலுக்கும், கட்சியின் வேர்பரப்பலுக்கும், தன்னலச் செயல்பாடுகளுக்கும் பா.ஜ.க.வினர் பயன்படுத்த முனைவது வன்மையானக் கண்டனத்திற்குறியது.

    தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது?

    அத்துமீறிக் கோயிலுக்குள் நுழைந்து பா.ஜ.க.வினர் திரையிட்டபோதும் அதனைத் தடுக்காது காவல்துறை என்ன செய்ததென்று புரியவில்லை. இத்தகையச் செயல்களில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது இதுவரை எவ்வித வழக்கும் தொடுக்காது தி.மு.க. அரசு அமைதிகாப்பது ஏன்?

    கோயில்களும், வழி பாட்டுத்தலங்களும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய மதப்பரப்புரைக் கூடங்களாக மாறுமென்றால், அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்.ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? எனும் கேள்விக்கு என்னப் பதிலுண்டு! பா.ஜ.க.வை வன்மையாக எதிர்ப்பதாகக் கூறி, மக்கள் மன்றத்தில் பரப்புரை செய்து வாக்கு வேட்டையாடிய தி.மு.க., தற்போது அதிகாரமிருந்தும் எதிர்ப்புணர்வைக் காட்டாது சமரசம் செய்வது ஏன்?

    தமிழக அரசு

    ஆகவே, இனிமேலாவது பா.ஜ.க.வின் மதவாத செயல்பாடுகளுக்குத் துணைபோகாது, கோயில்களில் மதநிகழ்வுகளை ஒளிபரப்பிய பா.ஜ.க.வினர் மீதும், அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...2 நாட்களுக்கு சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா 325 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 48 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 403 தொகுதிகள் உள்ளன.

    இந்த நிலையில் வாக்காளர்களின் மனநிலையை அறிவதற்காக ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் அமைப்பு சார்பில் நவம்பர் முதல் வாரத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    அதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 41.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சி 23.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 22.2 சதவீத வாக்குகள் கிடைத்தது.

    தற்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பா.ஜனதாவுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது. அந்த கட்சி 213 முதல் 221 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    2017-ம் ஆண்டு முதல் மிகச்சிறிய அளவிலான 0.7 சதவீத வாக்காளர்கள் இடையே மட்டும் பா.ஜனதா மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

    அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 152 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சரிவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு 16 முதல் 20 இடங்களே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சரிவு சமாஜ்வாடி கட்சிக்கு சற்று சாதகமாக அமையும்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் தீவிர பிரசாரம் வாக்காளர்கள் மத்தியில் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 2.6 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா 325 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 48 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தது, பிட்காயின் முறைகேடு போன்றவற்றால் பா.ஜனதாவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, ‘‘முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை மாற்றும் பேச்சுக்கே இல்லை. அவர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார்’’ என்றார்.
    இடைத்தேர்தல் தோல்வி, பிட்காயின் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நீக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்க அப்போதைய கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதையடுத்து முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார். பா.ஜனதா ஆட்சி அமைந்தது. ஆனால் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அவர் சட்டசபையில் பா.ஜனதாவின் பலத்தை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார்.

    இதையடுத்து காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வர் பதவி ஏற்றார். அவர்கள் 14 மாதங்கள் ஆட்சி செய்த நிலையில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்தது. பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டத்தில் அந்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவினர். அதன் பிறகு அதாவது கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது. எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

    அவர் ஆட்சி அதிகாரத்தில் 2 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் வயது மூப்பு காரணமாக பதவியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து யாருமே எதிர்பார்க்காத நிலையில் போலீஸ் மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை, முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

    அவர் பதவி ஏற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சட்டசபையில் காலியாக இருந்த சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலை பா.ஜனதா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சந்தித்தது. ஆனால் அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இது பசவராஜ் பொம்மைக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பிட்காயின் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    இதில் சில மந்திரிகள் மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரமும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது பசவராஜ் பொம்மையின் தலைமை மீது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மீது பா.ஜனதா மேலிடம் அதிருப்தியில் உள்ளது.

    கடந்த 10-ந்தேதி டெல்லி சென்றிருந்த பசவராஜ் பொம்மை, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இடைத்தேர்தல் தோல்வி, பிட்காயின் விவகாரத்தை குறிப்பிட்டு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பசவராஜ் பொம்மையை நீக்கிவிட்டு, எந்த குற்றச்சாட்டும் இல்லாத ஒருவரை முதல்-மந்திரி பதவியில் அமர்த்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    பசவராஜ் பொம்மை டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் மாலை திரும்பிய நிலையில், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் நேற்று திடீரென உப்பள்ளியில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். இது பா.ஜனதாவில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் அவர் மட்டுமின்றி மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, சி.டி.ரவி, ஹாலப்பா ஆச்சார், முருகேஷ் நிரானி உள்ளிட்டவர்களின் பெயர்களும் உள்ளன.

    பசவராஜ் பொம்மை மட்டுமின்றி குஜராத் மாதிரியில் ஒட்டுமொத்த மந்திரிசபையையும் மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்தும் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதனால் பசவராஜ் பொம்மையின் பதவி தப்புமா? என்பது கேள்விக்குறியதாக உள்ளது.
    இந்து மதம் வேறு, இந்துத்வா வேறு. இதுபோன்ற விஷயங்களை தான் நாம் வெளிப்படுத்த வேண்டும். இதை ஆழமாக புரிந்து கொண்ட 100, 200 அல்லது 500 பேரை செயலாக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
    மும்பை :

    மராட்டிய மாநிலம் வார்தாவில் உள்ள சேவாகிராமம் ஆசிரமத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 4 நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் சித்தாந்தம் உயிர்ப்புடனும், துடிப்புடனும் உள்ளது. நமது சித்தாந்தம் அழகிய ஆபரணம். அதில் முடிவில்லாத ஆற்றல் உள்ளது. இது தான் நமது பலம். காங்கிரஸ் கட்சியின் அன்பு, பரிவு மற்றும் தேசிய அளவிலான சித்தாந்தத்தை பா.ஜனதா மறைத்துவிட்டது. ஊடகங்களும், தேசமும் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டுள்ளதால் அது மறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல நமது மக்களிடம் நாமே நமது கொள்கைகளை தீவிரமாக பரப்பாததாலும் மறைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்து மதம் வேறு, இந்துத்வா வேறு. இதுபோன்ற விஷயங்களை தான் நாம் வெளிப்படுத்த வேண்டும். இதை ஆழமாக புரிந்து கொண்ட 100, 200 அல்லது 500 பேரை செயலாக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும்.

    சீக்கியர்கள் அல்லது இஸ்லாமியர்களை இந்து மதம் தாக்குமா?. ஆனால் இந்துத்வாவாதிகள் அதை செய்வார்கள். இந்து மதம் மற்றும் இந்துத்வாவிற்கு வித்தியாசம் உள்ளது என நாங்கள் கூறுகிறோம். நீங்கள் இந்து என்றால் உங்களுக்கு இந்துத்வா ஏன் வேண்டும்?. இந்த புதிய பெயர் உங்களுக்கு எதற்கு?.

    காங்கிரஸ் சித்தாந்தம் இந்தியாவில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும். பா.ஜனதா அவர்களின் சித்தாந்தத்தை கண்டறிந்து அதில் உறுதியாக உள்ளனர். நாமும் நமது சித்தாந்தத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இதை நாம் செய்ய தொடங்கினால், அவர்களின் சித்தாந்தம் உறைபோட்டு மூடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×