என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் பொய் பிரசாரம் செய்தாலும் நாட்டு மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது மூன்றாம், ஐந்தாம் கட்ட தேர்தலில் பிரதிபலிக்கும். மோடி மீண்டும் பிரதமராவார். தூத்துக்குடியில் தாமரை வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போனதற்கு தி.மு.க.தான் காரணம். உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.
ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு நான் வருவேன். அ.தி.மு.க. வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு உண்டு. அவர்களது வெற்றிக்கு பாடுபடுவேன். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பது எனது விருப்பம். தூத்துக்குடியில் துப்பாக்கி நடமாடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதியே சொல்லியுள்ளார்.
பயங்கரவாத கலாச்சாரம் எந்த விதத்திலும் தூத்துக்குடியில் தலை எடுத்து விடக்கூடாது. இன்று தி.மு.க.வை சேர்ந்தவர் தனது சகோதரரை சுட்டுக்கொன்று உள்ளார். இது உண்மையிலேயே கவலை அளிக்கக் கூடியது.
இதே போல் எத்தனை பேர் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. தூத்துக்குடி அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும். இங்குள்ள இளைஞர்களுக்காக தொழிற்சாலைகள் ஏற்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டம்.
தூத்துக்குடி மேம்பாட்டிற்கு எனது பணி எப்போதும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழகத்தில் 40 இடங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அத்திட்டத்தை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம் என்றார்.
மேலும் அவர் கூறும் போது, இத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. தான். ஹைட்ரோகார்பன் திட்டத்திலும் 54 இடங்களில் கையெழுத்து இடும்போதும் தமிழகத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அதை முறைப்படுத்தி நடைமுறைப்படுத்த யோசனை செய்வோம் என்ற அவர் மக்களுக்கு விருப்பமில்லாத எதையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்றார். #BJP #TamilisaiSoundararajan #DMK
கோவளம்:
கேரள மாநிலத்தின் 20 பாராளுமன்றத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. திருவனந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட கோவளம் சொவ்வரா வாக்குச் சாவடியில் 151-வது பூத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
முதலில் சுமார் 76 பேர் ஓட்டு போட்டனர். 77-வது நபர் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்களித்த போது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள விளக்கு ஒளிர்ந்ததாக குற்றம் சாட்டினார்.
இதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 151-வது பூத்தில் மட்டும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான கே.வாசுகி இந்த வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடந்ததா என்பதை பரிசோதித்து பார்ப்பது இப்போது இயலாத காரியம் என்பதால் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் மக்கள் வாக்களித்தனர். #LokSabhaElections2019
இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி தியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜனதா கட்சி சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.
சன்னி தியோல் பா.ஜனதாவில் இணைந்தது பற்றி நிர்மலா சீதாராமன் கூறும்போது ‘சன்னி தியோல் மக்களின் மனநிலையை நன்கு அறிந்தவர். சிறந்த தலைவராக விளங்குவார் என்று நம்புகிறோம்’ என்று கூறினார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று தெரிகிறது. #BJP #SunnyDeol
பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 26-ந்தேதி மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இவர் பாராளுமன்ற மேல்-சபையின் முன்னாள் துணை சபாநாயகர் ஷியாம்லால் யாதவின் மருமகள் ஆவார். காங்கிரசில் இருந்து ஷாலினி யாதவ் சமீபத்தில் விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
இதுபற்றி ஷாலினி யாதவ் கூறும் போது, எங்களது கட்சி தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையின் கீழ் பணியாற்றுவேன். அவரது வழி காட்டுதலின்படி செயல்படுவேன் என்றார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராம்பூரில் ஒன்பதாவது முறை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆசம் கான். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜெயப்பிரதாவை பா.ஜனதா நிறுத்தியுள்ளது.
ஆசம்கானால் தனது அரசியல் ஆசானான அமர்சிங்குடன் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறியவர் ஜெயப்பிரதா. இவருக்கும் ஆசம்கானுக்கும் இடையே ராம்பூரில் ஏப்ரல் 23 நடைபெறவுள்ள தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜெயப்பிரதா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
கேள்வி:- சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- எனக்கு இந்த பகுதி மக்களை 2004 முதல் தெரியும். அவர்களுக்கும் நான் சமாஜ்வாடி கட்சியில் எப்படி இருந்தேன் என்பதும் தெரியும். நான் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து பார்த்ததே இல்லை. என் பிறந்தநாளின் போது கோவிலுக்கு செல்லும் போது மசூதிக்கும் செல்வேன்.
ஆனால் ஆசம்கான் அப்படி இல்லை. எனக்கு இந்துக்கள், முஸ்லீம்கள் என இரு தரப்பிலும் இருக்கும் செல்வாக்கை பார்த்து பயந்துதான் 2009 முதல் அந்த கட்சியில் என்னை தனிமைப்படுத்தினார்.
கே:- சமாஜ்வாடி கட்சிக்கும் பா.ஜனதா கட்சிக்கும் என்ன வித்தியாசம்?
ப:- பா.ஜனதா என்பது தேசிய கட்சி. சமாஜ்வாடி மாநில கட்சி. ஒரு பெண் பிரபலமாகவும் அரசியல் வாதியாகவும் பா.ஜனதா கட்சியில் என் கவுரவமும் மரியாதையும் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது. சமாஜ்வாடி கட்சியில் நான் அவமானப் படுத்தப்பட்டேன். அங்கே நான் இழந்த கவுரவம் இங்கே கிடைத்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் மோசமான விதி முறைகளால் எனது சினிமா வாழ்க்கையை இழந்தேன்.
கே:- பொதுக் கூட்டங்களில் சினிமாவில் நீங்கள் பேசிய வசனங்களை பேச சொல்லியோ பாட சொல்லியோ கேட்கிறார்களா?
ப:- இல்லவே இல்லை. இந்த மக்களுடன் ஒரு அரசியல்வாதியாக 2004 முதல் இருக்கிறேன். தொடக்கத்தில் இதுபோன்ற கோரிக்கைகள் இருந்தன. இப்போது இல்லை. இந்த மக்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். ஆசம் கான் போன்றவர்கள்தான் என்னை சினிமாக்காரராக பார்க்கிறார்கள்.
கே:- ஒருவேளை நீங்கள் எம்.பி.யாகி, மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தால் உங்களை மோடி அமைச்சரவையில் பார்க்க முடியுமா?
ப:- அப்படி ஒரு எதிர்பார்ப்போ எண்ணமோ என்னிடம் சுத்தமாக இல்லை. பா.ஜனதாவை பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க வைப்பதே என்னுடைய நோக்கம். ஆனால் மோடி பிரதமரானால் எந்த பணி கொடுத்தாலும் அதில் ஈடுபட தயாராக இருக்கிறேன்.
கே:- ஜெயா பச்சன் சமாஜ்வாடியில் இருக்கிறாரே?
ப:- அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருடன் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ActressJayaPrada
பனாஜி:
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா எம்.பி. பனாஜியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தேசிய முற்போக்கு கூட்டணி அரசும் வாஜ்பாய் அரசு போன்று தோல்வியை சந்திக்க போகின்றன. 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் அரசு இந்தியா ஒளிர்கிறது என்ற தலைப்பில் பிரசாரம் செய்து தோல்வி அடைந்தனர். அதே நிலைதான் இப்போதும் ஏற்படும்.
நான் ஒரு ஜோதிடர் அல்ல. ஆனால் நான் ஒன்றை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பா.ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து அதிக இடங்களில் வெற்றி பெறும்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் தனது 5 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றவில்லை. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மோடியும், பா.ஜனதாவும் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்துகின்றனர் இது வெட்கப்படக் கூடியது. அரசியலுக்காக ராணுவத்தை பயன்படுத்தக் கூடிய அவரது செயல் கண்டிக்கதக்கது. இந்திய ராணுவம் நரேந்திரமோடியின் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது நாட்டுக்கும், மக்களுக்கும் சொந்தமானது.
அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும், நமது வீரர்களின் தியாகத்தையும் அவமதித்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது குறித்து காங்கிரசுக்கு பா.ஜனதா பாடம் நடத்த தேவையில்லை. காங்கிரஸ் பழமை வாய்ந்த கட்சி. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என 2 பிரதமர்களை இழந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் கூறும்போது, “மத்தியில் ஆட்சி அமைக்க தேவைப்படும் அளவுக்கு காங்கிரசுக்கு பெரும் பான்மை கிடைக்காது. எனவே தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம்“ என்றார். #anandsharma #rahulgandhi #pmmodi
அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
இவ்வாறு அவர் கூறினார். #Amitshah #BJP
உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மத்தியில் ஒரு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. இந்த நாட்டு மக்கள் அந்த அரசின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், அதிகாரத்தை பிடித்ததும் மக்களின் நம்பிக்கைக்கு அவர்கள் வஞ்சனை செய்தனர்.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது உள்பட அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டார்கள். தங்களுக்கு அதிகாரம் அளித்த மக்களையும் மறந்து விட்டனர்.
அதிகாரம் மக்களுக்கானது அல்ல; ஆட்சியாளர்களுக்கு உரிமையான சொத்து என்பது போன்ற மனநிலையில் அவர்கள் மிதக்க தொடங்கி விட்டனர்.
பிறந்ததில் இருந்து நான் நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒருவரின் சார்பில் உங்கள் முன்னால் இன்று நிற்கிறேன். இந்த தேர்தலில் அவர் உங்கள் வேட்பாளராக நிற்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் எதிரிகளிடம் தனிப்பட்ட ஏச்சுப்பேச்சுகளை தாங்கி இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவும் பாடுபடும் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். #NDAgovt #NDAbetrayed #Priyanka #Priyankainwayanad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்