என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94574"
கும்பகோணம்:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இதனால் தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மேலும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டு மென்றால் பா.ம.க வாக்குச் சாவடிகளில் கைப்பற்ற வேண்டும் சாதிய வன்முறைகளை தூண்டி விட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது .நேற்று நடைபெற்ற சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ இட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதுபோல் தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை, நீலத்தநல்லூர் போன்ற பகுதிகளிலும் தலித்துகள் மீது வன்முறை நடைபெற்றுள்ளது. அரசியல் ஆதாயம் தேட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. இதை கடுமையாக முயற்சித்து இவர்கள் தோல்வி அடைந்தனர்.
அரியலூரில் நடைபெற்ற பொன்பரப்பியில் இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. மேலும் 2 ஆயிரம் வாக்குகள் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இதனால் கள்ள ஓட்டு போட்டது கூட காரணமாக இருக்கலாம். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்
இது குறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் இன்று சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்.
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சிறப்பாக பணியாற்றின.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து விடக்கூடாது என்று பலர் பகிரங்க முயற்சியில் இறங்கினர். அதை நாங்கள் தெளிவாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம்.
இந்த கூட்டணியில் இணைந்த பிறகு நாங்கள் வெற்றிக்கரமாக கடந்து இருக்கிறோம். அவர்கள் செய்த வன்முறைகள் எல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ம.க. போன்ற ஜாதி வெறி கட்சி. பா.ஜ.க. போன்ற மதவெறி கட்சிகள் செயல்படுகிற வரை சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஏற்படாது .
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #ariyalurponparappi
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் மாநிலம் ஷிகர்பூரை அடுத்த அப்துல்லாபூர் ஹூல சேன் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன்குமார் (25).
இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்.
நேற்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் பவன்குமாரின் ஊர் அடங்கிய புலந்த்சாகர் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஓட்டு போட பவன்குமார் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார்.
அப்போது சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மாவின் சின்னத்தை அழுத்துவதற்கு பதிலாக பா.ஜனதாவின் தாமரை சின்னத்தை அழுத்தி விட்டார்.
பா.ஜனதா வேட்பாளரும், தற்போதைய அத்தொகுதி எம்.பி.யுமான போலாசிங்குக்கு ஓட்டு போட்டு விட்டார். தான் தவறாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டதால் பவன்குமார் அதிர்ச்சியும், வெறுப்பும் அடைந்தார்.
அவரது ஆத்திரம் திடீரென்று தாமரை சின்னத்தை அழுத்திய தனது கை விரல் மீது திரும்பியது.
இதனால் கைவிரலை துண்டிக்க முடிவு செய்தார். உடனே கத்தியால் கை விரலை வெட்டி தண்டித்து கொண்டார்.
அதன்பின் பவன்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, “தான் தவறுதலாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டு விட்டேன். எனது தவறுக்கு தண்டனையாக கை விரலை துண்டித்து கொண்டேன்” என்று கூறி உள்ளார். #LokSabhaElections2019 #BSPSupporter
திண்டுக்கல்:
தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று நடந்தது. காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.
இன்று புனித வியாழக்கிழமையாகும். இன்றைய தினம் கிறிஸ்தவர்கள் புனித வாரமாக கடைபிடித்து வருகிறார்கள். இதனால் ஏராளமானோர் நோன்பு இருந்து வருகின்றனர்.
கடும் வெயிலும் கொளுத்தி வருவதாலும், இந்த தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாலும் அரசு இதற்கு செவிமடிக்கவில்லை என்ற காரணத்தினாலும் வாக்கினை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
தேர்தல் முடிந்த கையோடு நாளை(19-ந்தேதி) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பெரும் பாலான வாக்குச்சாவடிகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை புனித வெள்ளியாகும். அன்றைய தினம் கத்தோலிக்க திருச்சபையின் கடன் திருநாளாகும். எனவே இந்த சமயத்திலும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதால் கிறிஸ்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து கிறிஸ்தவர்கள் கூறுகையில்,
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு சிறுபான்மையினரை நசுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்நிலையை அவர்கள் மாற்றவேண்டும் என்றனர். #HolyThursday #TNElections2019
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
இன்று காலை அம்ரேலி நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார். அவர் கூறியதாவது:-
குஜராத் மாநிலம்தான் எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது. இங்கு நான் கற்றுக் கொண்டது ஏராளம். அந்த படிப்பினை காரணமாகத் தான் பிரதமர் பதவியில் என்னால் திறம்பட செயல்பட முடிகிறது.
2017-ம் ஆண்டு சீனாவுடன் டோக்லாம் எல்லைப் பகுதியில் திடீர் பிரச்சனை ஏற்பட்டது. குஜராத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம்தான் அந்த பிரச்சனையை தீர்க்க உதவியாக இருந்தது.
இன்று இங்கு நீங்கள் திரண்டிருப்பது தேர்தல் பிரசார பேரணிக்காக அல்ல. நான் உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
குஜராத்தில் சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் 40 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி முடிக்கப்பட்டு இருந்தால் குஜராத் இன்று வளமான மாநிலமாக இப்போது இருப்பதை விட மிக சிறப்பாக இருந்து இருக்கும்.
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு நான் பிரமாண்ட சிலை அமைத்ததை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்ததன் மூலம் நான் நேருவுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை. இதை அரசியல் ஆக்கக் கூடாது.
காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதம் இருந்தது. அந்த மாநிலம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நாங்கள் வந்தபிறகு பயங்கரவாதத்தை கடுமையாக ஒடுக்கி இருக்கிறோம். அந்த மாநிலம் முழுவதும் இருந்த பயங்கரவாதத்தை தற்போது 2 மாவட்டங்களுக்குள் அடக்கி இருக்கிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரில் எந்த பெரிய குண்டு வெடிப்பும் நடக்கவில்லை என்பதை பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு நாம் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறோம். அப்படி பதிலடி கொடுத்த பிறகு பாகிஸ்தான் பணிந்ததை நீங்களே பார்த்தீர்கள்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளிப்படையாகவே போனில் பேசி சமரசத்திற்கு தயாராக இருந்தேன் என்று கூறினார். இதற்கு முன்பு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இப்படி பேசப்பட்டது இல்லை. அத்தகைய வலுவான நிலையை நாம் உருவாக்கி இருக்கிறோம்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சி, கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில்தான் மிக மோசமான தோல்வி தழுவியது. வரலாறு காணாத அளவுக்கு அந்த கட்சிக்கு வெற்றி எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது.
என்றாலும் அவர்களுக்கு இன்னும் ஆசை விடவில்லை. இந்த தடவை மிக குறைவான இடங்களில் போட்டி போடும் காங்கிரசார் ஆளும் கட்சியாக மாற கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு மோடி பேசினார். #PMModi #BJP
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
2-வது கட்ட தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தின் வெற்றிக்காக கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து வெற்றிக்காக பாடுபட்டோம். சென்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு அமோக ஆதரவு இருந்தது.
மோடியை பிரதமர் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது. ஏனெனில் அவர் நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டார். ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஓங்கி உள்ளது.
பாரதிய ஜனதா கூட்டணிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் எதிர்க்கட்சி தலைவர்களின் (கனிமொழி, துரைமுருகன்) வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தி உள்ளனர். மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவரிடம் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளதே? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் ரங்கசாமி பா.ஜனதா கூட்டணியில்தான் இடம் பெற்றுள்ளார். வருமான வரித்துறை யார் வசம் உள்ளது?
2016-ம் ஆண்டு நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் நடந்த போது எனது வீட்டில்கூட வருமான வரி சோதனை நடந்தது என்று தெரிவித்தார். #LoksabhaElections2019 #Narayanasamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்