search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்றும், அப்படி பேசியதாக நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலக தயாராக இருப்பதாகவும் ஆசம் கான் விளக்கம் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #AzamKhan
    ராம்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஆசம் கான் பேசும்போது, ஜெயப்பிரதா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.



    இந்நிலையில் பிரசாரத்தின்போது பேசியது குறித்து ஆசம் கான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா குறித்து நான் ஆட்சேபனைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை.

    வேறு ஒருவரைப் பற்றி நான் பேசினேன். தன்னிடம் 150 துப்பாக்கிகள் இருப்பதாகவும், ஆசம் கானைப் பார்த்தால் சுட்டுக்கொல்வேன் என்றும் கூறிய ஒருவரின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்துகொண்டார்கள் என்று பேசினேன். அவர் ஆர்எஸ்எஸ் கால்சட்டை அணிந்தவர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. கால்சட்டை என்பது ஆண்கள் அணிவது.

    நான் இந்த தொகுதியில் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவன். மந்திரியாகவும் பதவி வகித்துள்ளேன். என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும். யாருடைய பெயரையாவது நான் குறிப்பட்டு அவமதிக்கும் வகையில் பேசியதாக நிரூபித்தால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிவிடுவேன். ஊடகங்கள் எனது கருத்தை திரித்து கூறிவருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை ஜெயப்பிரதா 2004 மற்றும் 2009 பொதுத்தேர்தலில் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 2010ல் அவர் நீக்கப்பட்டார். அதன்பின்னர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AzamKhan

    நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம் கானுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #AazamKhan #LokSabhaElections2019
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார் . ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.



    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார். இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.

    ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.

    ஆனால், காக்கி என்று ஆசம் கான் குறிப்பிட்டது, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை என சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #AazamKhan #LokSabhaElections2019
    சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் கூறுவது மட்டுமின்றி, இரட்டை வேடமும் போடுவதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார். #PinarayiVijayan #Sabarimala #PMModi
    திருவனந்தபுரம் :

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா முழுவதும் பெரும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. தற்போது இந்த பிரச்சினை அடங்கி இருக்கும் நிலையில், பா.ஜனதா போன்ற அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை தங்கள் பிரசாரத்தில் பயன்படுத்தி வருகின்றன.

    குறிப்பாக தமிழகத்தில் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதாக புகார் கூறினார். சபரிமலை விவகாரத்தில் போராடிய பக்தர்களை கேரள அரசு சிறையில் அடைத்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர், இந்துக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கையை மாநில அரசு சீரழிப்பதாக தெரிவித்தார்.

    இவ்வாறு சபரிமலை விவகாரத்தில் மாநில அரசை குற்றம் சாட்டிய பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொல்லத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சபரிமலை விவகாரத்தில் மோடி கூறியிருப்பது முற்றிலும் பொய். இதுபோன்ற ஒரு தவறான கருத்தை பிரதமர் எப்படி கூற முடியும்? சபரிமலை விவகாரத்தில் யாராவது கைது செய்யப்பட்டால், அவர்கள் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு இருப்பார்கள்.



    மற்ற மாநிலங்களில் சங் பரிவார் அமைப்பு தொண்டர்கள் சிறைக்கு செல்லாமல் இருக்கலாம் அல்லது பிரதமரின் தலையீடு காரணமாக அவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லாமல் இருக்கலாம். இதில் பிரதமரின் தயவுக்கு நன்றி. ஆனால் கேரளாவில் அது நடக்காது. யார் எந்த தவறு செய்தாலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

    சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் கூறுவது மட்டுமின்றி, இரட்டை வேடமும் போடுகிறார். சபரிமலையில் கடந்த ஆண்டு உச்சக்கட்ட போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, அங்கே 144 தடை உத்தரவு போடக்கூறியது மத்திய அரசுதான். அதைப்போல அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய படைகளை அனுப்பவும் அவர்கள் முன் வந்தார்கள். அப்படி கூறியவர்கள் தற்போது மாநில அரசு மீது பழிபோடுகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக சபரிமலை விவகாரத்தையோ, ஐயப்ப சுவாமியின் பெயரையோ கட்சியினர் பயன்படுத்தக்கூடாது என மாநில தலைமை தேர்தல் கமிஷனர் தீகரம் மீனா கூறி இருக்கிறார். எனவே இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி இருக்கும் பிரதமர் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறினார். #PinarayiVijayan #Sabarimala #PMModi
    பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal #PMModi
    புதுடெல்லி :

    முதல்கட்ட தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு தற்போது ஆபத்தில் உள்ளது. பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. டெல்லியில் மட்டும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால், ஆம் ஆத்மியோ அரியானா மாநிலத்திலும் கூட்டணி அமைக்க விரும்புகிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக, டெல்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.

    நேற்றைய கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கலந்துகொண்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “காங்கிரசின் நிலைப்பாடு உங்களுக்கு தெரியும். டெல்லியில் ஏறக்குறைய முடிவு செய்துவிட்டோம். ஆனால், கூட்டணியை பிற மாநிலங்களுடன் இணைப்பது சரியல்ல” என்று கூறினார். #ArvindKejriwal #PMModi
    இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக சக்திவாய்ந்த பேரலை வீசுவதை காண்கிறேன் என காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi #BJPwave
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் இழைத்த அநீதிகளுக்கு யார் பரிகாரம் செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பிய மோடி, 1984-ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கும், காஷ்மீரில் பண்டிதர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நீதி வழங்க காங்கிரஸ் தயாரா? என்று கேட்க விரும்புவதாக தெரிவித்தார்.

    ‘காங்கிரஸ் அரசின் கொள்கைகளால்தான் காஷ்மீர் பண்டிதர்கள் நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஓட்டு வங்கிக்காக காஷ்மீர் பண்டிதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை காங்கிரஸ் கட்சியினர் பெரிதுப்படுத்தவில்லை.

    காஷ்மீர் பண்டிதர்கள் தங்களது வீடுகளை இழந்து, இங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானுக்கு செல்ல காங்கிரசின் கொள்கைகளே காரணமாக இருந்தது.

    ஆனால், எங்கள் ஆட்சியில் காஷ்மீர் பண்டிதர்கள் மீண்டும் இங்கே வந்து தங்களது சொந்த மண்ணில் வாழ்வதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. பாகிஸ்தானில் இருந்து அவதிப்பட்டு பாரத அன்னையை நம்பி இங்கு வந்திருப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்கு சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்த அப்துல்லா குடும்பமும் முப்தி குடும்பமும் 3 தலைமுறை மக்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டன. இந்த குடும்பங்களுக்கு விடை கொடுக்கும்போது தான் காஷ்மீரின் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். இவர்கள் மோடியை ஒழிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், இந்த நாட்டை ஒருபோதும் இவர்களால் பிளவுப்படுத்த முடியாது.

    சமீபத்தில் இங்கு நடைபெற்ற முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலில் பாரமுல்லா, ஜம்மு மாவட்டங்களில் பெருவாரியான அளவில் வாக்களித்ததன் மூலம் நமது நாட்டின் ஜனநாயக வலிமையை நீங்கள் நிலைநாட்டி இருக்கிறீர்கள். பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் சரியான பதிலடியை தந்து விட்டீர்கள்.

    இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக சக்திவாய்ந்த பேரலை வீசுகிறது. கருத்துக் கணிப்புகளின்படி காங்கிரஸ் கட்சியை விட மூன்று மடங்கு அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனவும் மோடி கூறினார். #powerfulwave #favourofBJP #BJPwave #Modi #LSpolls
    தஞ்சை அருகே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #LokSabhaElections2019

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் (வயது 75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார்.

    இவர் பிரதமர் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் பார்ப்பவர்களை எல்லாம் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வாராம்.

    இந்த நிலையில் கோவிந்தராஜ் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்று இரவு மோடியின் படத்தை கழுத்தில் போட்டு கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவாக தனியாக நின்று பிரசாரம் செய்தார். அங்குள்ள கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கோபிநாத் (33) என்பவர் வந்தார். அவர் திடீரென மோடிக்கு ஆதரவாக எப்படி பிரசாரம் செய்யலாம்? என கூறி முதியவர் கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கோபிநாத் ஆத்திரம் அடைந்து கோவிந்தராஜை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாங்க முடியாமல் கதறினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி கோவிந்தராஜ் மகள் அற்புத அரசு ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

    மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஆர்வலரை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு திரண்டனர். இதையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #BJP #LokSabhaElections2019

    ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். #DharmendraPradhan #BJP
    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்திற்குட்பட்ட சவுத்வார் நகரில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசினார்.



    ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு மற்றும் உப்பு ஆகியவை  ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வாக்குறுதி அளித்தார்.

    தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் இவற்றால் மாநிலத்தில் உள்ள சுமார் 3.26  கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். #BJPwillprovide #5kgrice #5kgriceOdisha #DharmendraPradhan 
    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து முத்தரசன் தேர்தல் பிரசாரம் செய்தார். #Mutharasan #PMModi

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்கினார்.

    நாடு இதுவரை 16 தேர்தலை சந்தித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்து பிரசாரம் செய்துள்ளோம். ஆனால் இத்தேர்தல் வித்தியாசமானது. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கோ‌ஷத்தை முன்வைத்து பிரசாரம் செய்கிறோம். நாட்டை பிளவுபடுத்தும், பிரிவுபடுத்தும், சீரழிக்கும் கட்சி ஆட்சியில் உள்ளது.

    குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக பா.ஜனதா ஆட்சியில் நம் நாடு சிக்கி தவிக்கிறது. தேசத்தை காப்பாற்ற வேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்தல் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த தேர்தல் அமைந்துள்ளது.


    மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசினால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். கருத்துரிமை பறிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசு உள்ளது.

    ஆனால் மோடியால் அனுப்பப்பட்ட கவர்னர் கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கடும் தொல்லைகளை அளித்து வருகிறார். அவர் டெல்லி மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு குடைச்சல், தொல்லை அளித்து வருகிறார். திட்டங்களை செயல்படுத்த விடாமல் அவர் தடுத்து வருகிறார்.

    மோடி ஆட்சி மோசடி ஆட்சி. ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திலேயே தவறான தகவல்களை அளித்தவர்கள். எனவே இந்த ஆட்சியை வெளியேற்ற வேண்டியது மக்களின் கடமையாக உள்ளது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு அரசு பதவிகளை அலங்கரித்த தியாகி வெங்கடசுப்பாரெட்டியார் மகன் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும். இந்த வெற்றியின் மூலம் மத்தியில் ஆளும் மோடி அரசை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் பிரமுகர் ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். #Mutharasan #PMModi

    கூட்டணிக்காக அ.தி.மு.க.வை பாஜக நிர்ப்பந்திக்கவில்லை என்று, அவர் ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது பிரதமர் மோடி கூறினார். #PMModi #BJP #ADMK
    புதுடெல்லி :

    தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். ‘தினத்தந்தி’ குழும செய்தியாளர்கள் எஸ்.சலீம், அசோக வர்‌ஷினி ஆகியோர் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேட்டி கண்டனர்.

    அப்போது பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் சமயத்தில் வேலைப்பளு நிறைந்திருக்கும் போதும், தாங்கள் ஓய்வில்லாமல், உற்சாகமாக பணியாற்றி வருகிறீர்கள். ஓய்வில்லா உழைப்பை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் பாராட்டி உள்ளார். இடைவெளி இல்லாமல் பணியாற்ற தங்களுக்கு, எங்கிருந்து சக்தி கிடைக்கிறது?

    பதில்:- நமது சமூகத்தில் உள்ள சராசரி மனிதனின் அன்றாட உழைப்பை நான் உற்று நோக்குகிறேன். அது மட்டுமல்லாமல் வெயில், பனி, பாலைவனம் என பாராமல் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், தீபாவளி, ராக்கி உள்ளிட்ட பண்டிகைகளில் பணியாற்றும் காவல்துறையினர், இரவு-பகல் பாராது உழைக்கும் விவசாயிகள் நாட்டிற்காக அரும் பணியாற்றுகின்றனர். இவர்களை பார்த்துதான், என்னால் முடிந்த அளவு, உழைக்க வேண்டும் என எண்ணி அதன்படி செயல்படுகிறேன். இது எனது கடமையே. நாட்டு மக்கள் எனக்கு அளித்திருக்கும் பொறுப்பை உணர்ந்து அவர்களுக்காக நான் ஒவ்வொரு மணித்துளியையும் வீணாக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

    கேள்வி:- சார்... நீங்கள் தற்போது 69 வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறீர்கள்... வாழ்க்கை உங்களை எப்படி நடத்துகிறது?

    பதில்:- என்னை விட சுகானுபாவர் இல்லை என்றே நான் கூறுவேன். இந்த ஜனநாயக நாட்டில், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய பெரும் பணி எனக்கு கிடைத்து உள்ளது. இதனை பாக்கியமாக கருதுகிறேன்.

    கேள்வி:- ராகுல் காந்தி என்ற பெயரை கேட்டதும் தங்களின் மனதில் தோன்றுவது அன்பா? வெறுப்பா? அல்லது பகைமையா?

    பதில்:- இந்த மூன்றில் எதுவும் இல்லை.

    கேள்வி:- உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

    பதில்:- நான் குறிப்பிட்ட ஒருவரை பற்றி மட்டும் மதிப்பீடு செய்வது சரியில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி மதிப்பீடு செய்ய சொன்னால், நான் சாதாரணமானவன். பா.ஜ.க. அல்லது வேறு கட்சியினருடன் பாகுபாடு இன்றி பழகுபவன்.

    கேள்வி:- ராகுல்காந்தி அமேதி, வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார். வடஇந்தியாவை போன்றே, தென்னிந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கவே, வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் குறிப்பிட்டு உள்ளார். இது போல் பிரதமரும் தென்பகுதியில் போட்டியிட வேண்டும் என பா.ஜ.க.வில் ஏதேனும் ஆலோசனைகள் கூறப்பட்டதா, விவாதிக்கப்பட்டதா? கடந்த முறை நீங்கள் 2 தொகுதிகளில் போட்டியிட்டீர்களே?

    பதில்:- ஸ்மிரிதி இரானி அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்த காட்சிகளை பார்த்தாலே தெரிந்து இருக்கும். அவர் (ராகுல் காந்தி) ஏன் வேறு ஒரு தொகுதியை நாடிச் சென்றார் என்று. அரசியலுக்காக ஏதேனும் ஒரு காரணத்தை கூறலாம். ஆனால், பாதுகாப்பு கருதியே, அவர் வேறு ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், சத்தீ‌‌ஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி மாநிலங்களை அவர் தேர்வு செய்யவில்லை. கேரளாவை அவர் தேர்வு செய்ததால்தான் அனைவரின் மனதிலும் இந்த கேள்வி எழுகிறது. எனது முடிவை எப்போதும் நான் எடுப்பதில்லை.. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். தேவையில்லாமல் யோசித்து நான் குழப்பி கொள்ள விரும்பவில்லை..

    கேள்வி:- ராகுல் மட்டுமல்லாது பிரியங்காவுக்கும் காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

    பதில்:- இது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம். அது அவர்களது குடும்ப கட்சி. எனவே அதனை காப்பாற்ற குடும்பத்தினர் பாடுபடுகின்றனர். செய்துதானே ஆக வேண்டும்.

    கேள்வி:- உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்காவின் தாக்கம் என்னவாக இருக்கும்?

    பதில்:- இதற்கு பதில் நான் முன்னதாக கூறி விட்டேன்.

    பா.ஜ.க. வடமாநில கட்சியா?

    கேள்வி:- கர்நாடகம் தவிர தென்னிந்தியாவை பொறுத்தவரை, பா.ஜ.க. வெற்றி பெற ஏன் சிரமப்படுகிறது ?

    பதில்:- இது முற்றிலும் மாறுபட்ட கருத்து. பா.ஜ.க. வட மாநிலத்தைச் சார்ந்த கட்சி என்றனர். பிறகு நகர்ப்புறவாசிகளுக்கான கட்சி என்றனர். பின்னர் உயர்வகுப்பினருக்கான கட்சி என்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள்தான் பா.ஜ.க. எம்.பி.க்களாக உள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் எங்களது கட்சியினரே எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். நகர்ப்புற கட்சி என்றனர். ஆனால் கிராமங்களிலும் வெற்றி வாகை சூடி, பஞ்சாயத்துகளை கைப்பற்றினோம். வடமாநில கட்சி என்றனர். ஆனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் இவை அனைத்தும் வடக்கு பகுதியை சார்ந்தது அல்ல. ஆந்திராவிலும் எங்கள் ஆதரவில் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் நாங்கள் இல்லை என கூற முடியாது.



    கேள்வி:- தென்னிந்தியாவில் பா.ஜ.க. வளர்ச்சியடைய ஏன் சிரமப்படுகிறது?

    பதில்:- இல்லவே இல்லை... குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளோம். இதுபோல் தென்னிந்தியாவில் நாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    கேள்வி:- கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கி மக்களவை தேர்தலை எதிர்கொண்டீர்கள். ஆனால் தற்போது தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் செய்து கொண்டது ஏன்?

    பதில்:- திராவிட கட்சிகளுடன் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. 2014-ம் ஆண்டு எங்களது நோக்கம் வேறாக இருந்தது. அப்போது ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். நாங்களும் மாற்று அணியை தேர்ந்தெடுத்தோம். தற்போது, கூட்டணி வைக்க முடிவு செய்து போட்டியிடுகிறோம். இதற்கு முன்பும் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து உள்ளது.

    கேள்வி:- மக்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணிக்காக தி.மு.க.வை தவிர்த்து, அ.தி.மு.க.வை தேர்வு செய்தது ஏன்?

    பதில்:- அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு நீண்ட கால நட்பு உள்ளது. பாராளுமன்றத்திலும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்த கட்சி அ.தி.மு.க.

    கேள்வி:- ஆனால் ஒரு சில கட்சிகள், அ.தி.மு.க.வை கூட்டணிக்காக நிர்ப்பந்தப்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனரே?

    பதில்:- அரசியலில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது; கட்டாயப்படுத்தவும் பா.ஜ.க.வுக்கு தெரியாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. இது தான் உண்மை. ஆனால் பா.ஜ.க.வுடன், ஜெயலலிதா பாராட்டி வந்த நட்பு குறித்து அனைவரும் அறிவர்.

    கேள்வி:- ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி முழக்கமிடும் போது, தமிழ்நாட்டில் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளதாக எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர். இதற்கு தங்களின் பதில் என்ன?

    பதில்:- தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சிறிய அளவிலான பங்குதாரர் மட்டுமே. தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கூட்டணி வைத்து உள்ளோம். ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் முடிவடையாது.

    கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்குமா? அதன் நிலை என்னவாகும்?

    பதில்:- நரேந்திர மோடி மீதே குற்றச்சாட்டு எழுந்தாலும் அவர் முழுமையாக விசாரிக்கப்படுவார். விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

    கேள்வி:- ஜி.எஸ்.டி. வரி அமலாக்கப்பட்ட பிறகு, அதிக அளவிலான வரி செலுத்துவதாக, புகார் தெரிவித்து உள்ளனர். இதனால் விலைவாசியும் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனரே?

    பதில்:- இதில் உண்மை இல்லை. ஜி.எஸ்.டி வரிக்கு முன்பு சோதனைச்சாவடிகளில் (செக்போஸ்ட்) தலா இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, செலவானது. தற்போது அவை நீக்கப்பட்டதும் அத்தொகை நாட்டு மக்களின் நன்மைக்காக செலவிடப்படுகிறது.

    கேள்வி:- அது மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி. வரியால், வியாபாரிகள், நிறுவனங்கள் மட்டுமே பயனடைவதாக கூறுகின்றனர். சாமானிய மக்களுக்கு இதனால் பலன் இல்லை என்றும் கூறப்படுகிறதே?

    பதில்:- இதில் உண்மை இல்லை. உணவகம் போன்ற இடங்களில் 33 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைந்து உள்ளது. சாமான்ய மக்களும் பயன் அடைகின்றனர். இதன் விவரங்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

    கேள்வி:- மத்திய பா.ஜ.க. அரசின், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால், தொழில்கள் முடக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது சரிதானா?

    பதில்:- கடந்த 1992-ம் ஆண்டு, மன்மோகன் சிங் நிதி மந்திரியாகவும், நரசிம்மராவ் பிரதமராகவும் இருந்த போது நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு, பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்திய முதல் இடத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகிறது.



    கேள்வி:- நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார். இதை, புகழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறீர்களா? இல்லை சந்தேகத்தோடு பார்க்கிறீர்களா?

    பதில்:- இம்ரான்கான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை நாம் மறக்கக்கூடாது. பந்து வீசுவதை போல, அவருடைய சமீபத்திய கருத்து இந்தியாவின் தேர்தலில் தலையீடு செய்வதாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு, இம்ரான்கான் வீசிய பந்தை எப்படி சிக்சர் அடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும். பாகிஸ்தான் தேர்தலின் போது, நவாஸ் ஷெரீப்பை அவர் எவ்வாறு விமர்சித்தார் என்றும் தெரியும். மோடியின் நண்பர் (நவாஸ் ஷெரீப்) ஒரு துரோகி என்றார்.

    கேள்வி:- உங்களுடைய 5 ஆண்டு பணியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? தேர்தலில் மீண்டும் நீங்கள் வெற்றி பெற்றால் நாட்டுக்கு நீங்கள் செய்யும் பணி என்ன? குறிப்பாக தமிழகத்திற்கு என்ன செய்வீர்கள்?

    பதில்:- கடந்த 2014-ம் ஆண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ளவை நிறைவேற்றப்பட்டு விடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், தற்போது தமிழகம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய நாங்கள், முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

    கேள்வி:- ‘பி.எம். நரேந்திர மோடி’ வாழ்க்கை வரலாறு திரைப்படத்துக்கு தேர்தல் கமி‌‌ஷன் தடை விதித்து இருப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?

    பதில்:- தேர்தல் கமி‌‌ஷன் என்பது சுதந்திரமான அமைப்பு ஆகும். நான் பிரதமராக தற்போது பதவி வகித்து வரும் பட்சத்தில், இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    கேள்வி:- பிரசார கூட்டங்களில் பாலகோட், புல்வாமா தாக்குதல் குறித்து பேசியதற்கு, உங்களிடம் தேர்தல் கமி‌‌ஷன் விளக்கம் கேட்டு உள்ளதே?

    பதில்:- தேர்தல் கமி‌‌ஷன் சுதந்திரமான அமைப்பு. இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள் இதன் கட்டுப்பாட்டில் அடங்குவர். பா.ஜ.க.விடம் இது குறித்து விளக்கம் கேட்டால் அதுபற்றி உரிய விளக்கம் அளிக்கப்படும். தேச நலனுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் புகழை பேசக்கூடாது என தேர்தல் கமி‌‌ஷனின் விதிகளில் உள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது.

    கேள்வி:- பிரசார கூட்டங்களில் பிரதமர் ராணுவத்தையும், ராணுவ வீரர்களை பற்றியும் பேசி, அரசியலாக்குவதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனரே?

    பதில்:- ராணுவத்தை பற்றி நான் பிரசாரங்களில் பேசுவதில்லையே. ராணுவ வீரர்களின் வீரத்தை பற்றித்தான் நான் பேசி வருகிறேன். விண்வெளியில் அரசு செய்த சாதனையை சொல்லக்கூடாதா? இதில் என்ன தவறு உள்ளது? பாலகோட் சம்பவம் நிகழாவிட்டால், எதிர்க்கட்சியினர் அதனை பற்றி விமர்சிக்காமல் இருப்பார்களா? அபிநந்தன் திரும்பி வந்திருக்காவிட்டால், எதிர்க்கட்சியினர் என்னை சும்மா விட்டு விடுவார்களா? அவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #BJP #ADMK
    கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இது நடைபெறும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கொப்பல் தொகுதிக்கு உட்பட்ட கங்காவதியில் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக கூட்டத்தில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேசியதாவது:-

    கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழும். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இது நடைபெறும். 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வெறும் 37 தொகுதிகளில் வென்ற ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சி செய்கிறது.

    மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஊடகங்கள் அதை வெளிப்படுத்துகின்றன. ஆனால் ஊடகங்களை மிரட்டும் வகையில் குமாரசாமி பேசியுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். இதற்காக குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இந்த தேர்தலில் குமாரசாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன். ஆனால் இந்த கூட்டணி அரசு அந்த திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டது.



    கூட்டணி கட்சிகள் பண பலம், சாதி பலம், அதிகார பலத்தை கொண்டு தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. இது சாத்தியமில்லை. அந்த கட்சிகளுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் வளர்ச்சியில் கர்நாடகம் 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

    ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவரை மோடி ஜனாதிபதி ஆக்கியுள்ளார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த அப்துல் கலாமை பா.ஜனதா ஜனாதிபதி ஆக்கியது. நாங்கள் சாதி, மத அரசியலை செய்வது இல்லை.

    நாங்கள் அனைத்து சாதி, மதத்தினரையும் முன்னேற்ற பாடுபடுகிறோம். ஆனால் நாங்கள் சாதி அரசியல் செய்வதாக முத்திரை குத்துகிறார்கள்.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார். #Yeddyurappa #BJP
    கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் போட்டி பிரசாரம் செய்கிறார்கள். இதையொட்டி உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. #RahulGandhi #PMModi
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தல் கர்நாடகத்தில் 2 கட்டமாக வருகிற 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் 18-ந் தேதியும், தார்வார், சிவமொக்கா உள்பட மீதமுள்ள 14 தொகுதிகளில் 23-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் செய்ய இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகளின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் கொளுத்தும் வெயிலிலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று கொப்பல் தொகுதியில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் போட்டி பிரசாரம் செய்கி றார்கள்.

    அவர்கள் இருவரும் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரிக்க உள்ளனர். பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) மங்களூருவில் மதியம் 2 மணிக்கும், பெங்களூருவில் மாலை 4 மணிக்கும் பிரசாரம் செய்கிறார். இதற்காக பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அரண்மனை மைதானத்தில் நடைபெறும் ஏற்பாடுகளை பா.ஜனதா தலைவர்கள் பார்வையிட்ட காட்சி.


    அதுபோல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை 12 மணிக்கு கோலார், மதியம் 3 மணிக்கு சித்ரதுர்காவில் நடைபெறும் கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    அதை முடித்துக் கொண்டு அவர் மண்டியா தொகுதியில் இடம் பெற்றுள்ள கே.ஆர்.நகர் தாலுகாவில் மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    பிரதமர் மோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட உள்ளதால், கர்நாடகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேசிய தலைவர்களின் அடுத்தடுத்த பிரசாரத்தால் கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. #RahulGandhi #PMModi 
    சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தம் குறித்து பொறுமையுடன் பேசுங்கள் என பா.ஜனதாவுக்கு, சிவசேனா அறிவுரை கூறியுள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
    மும்பை :

    சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜல்காவ் பகுதியில் மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மோதிக்கொண்ட அதிர்ச்சிகரமான வீடியோவை மக்கள் நாடு முழுவதும் கண்டுள்ளனர். தங்கள் கட்சியில் இணைந்தால் குண்டர்கள் கூட வால்மீகியாக மாறிவிடுவார்கள் என பா.ஜனதா கூறியது. ஆனால் இந்த வன்முறை சம்பவம் மூலம் வால்மீகிகள் குண்டர்களாக மாறிய தருணத்தை அனைவரும் உணர்ந்தனர்.

    இது பா.ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு ஏற்பட்ட கறை மட்டும் அல்ல. பா.ஜனதா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தருணம் ஆகும். பா.ஜனதா தன்னைத்தானே மாறுப்பட்ட கருத்துடைய கட்சியாக கூறிக்கொள்கிறது. இந்த வன்முறையையும் வேறுபட்ட கருத்துகளை பிரதிபலிக்கும் நிகழ்வு என கூறி நியாயப்படுத்த முடியாது.



    ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பதிலளிக்கும்போது குறைந்தபட்சம் பொறுமையுடன் பதில் அளியுங்கள். பா.ஜனதாவில் ராணுவ மந்திரியில் இருந்து அனைத்து தலைவர்களும் வாய்க்கு வந்தபடி இந்த பிரச்சினை குறித்து பேசுகிறார்கள்.

    இது கட்சியில் பிரச்சினையை அதிகரிக்க செய்யும். எனவே முடிந்தவரை இதுகுறித்து பேசுவதை குறைத்துகொள்வது நல்லது என்பது எங்களுடைய அறிவுரையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    நமோ டி.வி.க்கும் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காதது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், “ஒன்று அல்லது இரண்டு சேனல்களை தவிர மற்ற அனைத்து சேனல்களும் “நமோ டி.வி.”யாக தான் உள்ளது. அவற்றில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே “நமோ டி.வி.”க்கு தடை விதிப்பதை தவிர்க்க முடியாது” என்று கூறப்பட்டு உள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
    ×