search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து உள்ளார். #PMModi #Rajinikanth
    புதுடெல்லி:

    ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மோடியிடம் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- நடிகர் ரஜினிகாந்தும், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உள்ள நதிநீர் இணைப்பு திட்டத்தை பாராட்டியுள்ளாரே?...

    பதில்:- அதற்காக நான் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை கூறுவதில் அவர் யோசிப்பார். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் கருத்து கூறி இருப்பதற்கு மகிழ்ச்சி. மிகப்பெரிய நடிகர், அவர் சாமானிய மக்களின் தண்ணீர் பிரச்சினையை, பேசி இருப்பது நல்ல விஷயம். அதற்கு நான் நன்றியை கூறுகிறேன்.

    கேள்வி:- அவரது பாராட்டை பா.ஜ.க.வுக்கு ஆதரவு என எடுத்துக்கொள்ளலாமா?

    பதில்:- நான் அவரை 2013, 2014-ல் சந்தித்து பேசினேன். அதன் பிறகு சந்திக்க வில்லை.

    கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால் கட்சி எதுவும் அவர் தொடங்கவில்லை. ஒரு சகோதரராக அவருக்கு ஏதேனும் ஆலோசனை கூற விரும்புவீர்களா?

    பதில்:- அவர் என்னை நேரில் சந்திக்கும்போது, அது பற்றி பேசுவேன்.

    கேள்வி:- அவரை சினிமாவில் நடிக்க கூறுவீர்களா? அல்லது அரசியலுக்கு வருமாறு ஆலோசனை சொல்வீர்களா?.

    பதில்:- நான் அவருக்கு ஆலோசனையை நேரிலே கூறுவேன். ஊடகம் வாயிலாக ஏன் கூற வேண்டும்?

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #Rajinikanth
    பாரதிய ஜனதா கட்சியின் கடைசி தொண்டன் உயிருடன் உள்ளவரை இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்டகவுன் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று பங்கேற்று உரையாற்றினார்.

    அம்மாநிலத்தில் உள்ள 11 பாரளுமன்ற தொகுதிகளிலும் பாஜக அபார வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கு தனியாக பிரதமர் தேவை என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்த கருத்து தொடர்பாக ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

    காஷ்மீருக்கென தனியாக ஒரு பிரதமர் நியமிக்கப்பட்டால் இந்தியாவில் இரண்டு பிரதமர்கள் ஆட்சி செய்வதை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்கிறாரா? என வினவிய அமித் ஷா, பாஜகவில் கடைசி தொண்டன் உள்ளவரை இந்தியாவில் இருந்து காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது என கூறியுள்ளார். #BJPworker #Amit Shah 
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். #LoksabhaElections2019 #BJP #AmitShah
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, ராஜ்நந்தகாவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா,  சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் நடைபெற்ற நக்சலைட்கள் தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி கொல்லப்பட்டார்.

    பீமா மாண்டவி கொல்லப்பட்டது அரசியல் சதி.  எனவே, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.  #LoksabhaElections2019 #BJP #AmitShah
    குஜராத் மாநிலம் துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #GujratBJPMLA #CourtTerminatesMLA
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுபா மானக். இவரது வெற்றியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பாஜக வேட்பாளர் மானக், குறைபாடுள்ள வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது  வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இவ்வழக்கு விசாரணையின்போது, மானக்கின் வேட்பு மனுவில் தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மக்கள் அளித்த தீர்ப்பின்படி மானக்கை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.



    இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, துவாரகா எம்எல்ஏ பபுபா மானக்கின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. #GujratBJPMLA #CourtTerminatesMLA 
    சென்னையில் பேட்டியளித்த மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், பா.ஜ.க.வின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு அளித்த நடிகர் ரஜினிக்கு நன்றி என தெரிவித்தார். #PiyushGoyal #Rajinikanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டவர் மத்திய மந்திரி பியூஷ் கோயல்.

    பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்தார். அவர் பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நதிகள் இணைப்பே தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    பா.ஜ.க.வின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு நன்றி. பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும். 2022-ம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.

    நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக் கொண்டோம் என தெரிவித்தார். #PiyushGoyal  #Rajinikanth
    பாரதிய ஜனதா கட்சி இதுவரை இல்லாத அளவில் பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகிறது. #Loksabhaelections2019 #BJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இரு தேசிய கட்சிகளும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளையும் விட்டு கொடுத்துள்ளன.

    இதற்கிடையே பாராளுமன்றத்தில் 272 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கையும் பா.ஜனதாவும், காங்கிரசும் கொண்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

    நாடு முழுவதும் மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சுமார் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அதையும் விட அதிகமான இடங்களில் களம் இறங்கி உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி கடந்த 1999-ம் ஆண்டு 339 தொகுதிகளில் போட்டியிட்டது. 2004-ம் ஆண்டு 364 தொகுதிகளில் போட்டியிட்டது. 2009-ம் ஆண்டு 433 தொகுதிகளில் போட்டியிட்டது.

    2014-ம் ஆண்டு 428 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த ஆண்டு அதையும் விட அதிகமாக வேட்பாளர்களை நிறுத்த பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்தனர்.

    இதுவரை பா.ஜனதா சார்பில் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 135 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.

    பா.ஜனதா இன்னும் 30 முதல் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்போது பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 440-ஐ எட்டும்.

    பா.ஜனதா வரலாற்றில் இவ்வளவு அதிக தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

    டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. அந்த 7 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. உத்தரபிரதேசத்திலும் இன்னும் 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.

    அதுபோல மத்திய பிரதேசத்திலும் மிக முக்கிய தொகுதிகளான இந்தூர், போபால் உள்பட 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. பஞ்சாபில்-3, அரியானாவில்-2, ராஜஸ்தானில் ஒரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டியது உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானாவில் கூட்டணி அமையாததால் பா.ஜனதா கட்சி அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனால்தான் இந்த தடவை பா.ஜனதா வேட்பாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. #Loksabhaelections2019 #BJP
    பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை குறித்த ரஜினிகாந்தின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது என்று இல.கணேசன் தெரிவித்தார். #Loksabhaelections2019 #BJP #LaGanesan #Rajinikanth
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இல.கணேசன் எம்.பி. நாகர்கோவிலில் நேற்று பிரசாரம் செய்தார்.

    முன்னதாக இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலும், பயங்கரவாதத்தை அழிக்கும் வகையிலும் இருக்கிறது.

    ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பயங்கரவாதத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது. கி.வீரமணி இந்து கடவுளை அவதூறாக பேசியதை மூடி மறைக்கும் வகையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.

    கடந்த தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை இழந்து விட்டது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

    தன்னை கொல்ல சதி நடப்பதாக ராகுல் மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டாலினின் பேச்சுக்கள் பண்பில்லாதவை. போலித்தனமாவை. தற்போது கண்ணியம் என்பது பிரசாரத்தில் இல்லாமலே போய் விட்டது. பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை குறித்த ரஜினியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 40 தொகுதிகளையும் கைப்பற்றும். தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #BJP #LaGanesan #Rajinikanth
    தேனியில் மோடி பிரசார கூட்டத்தில் இறங்க வேண்டிய ராணுவ ஹெலிகாப்டர் ராகுல் காந்தி பேசும் மேடை அருகே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Loksabhaelections2019 #PMModi #Rahulgandhi
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக லோகிராஜனும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேலும் போட்டியிடுகின்றனர்.

    இவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஆண்டிப்பட்டி அருகே எஸ்.எஸ்.புரத்தில் நாளை (13-ந் தேதி) பிரதமர் நரேந்திரமோடி தேனி வருகிறார். இதற்காக பிரசார மேடை மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதே போல தேனி அன்னஞ்சிபிரிவு அருகே இன்று மாலை தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக மேடை அருகே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.



    தேனியில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அடுத்தடுத்து வருகை தருவதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு மதுரையில் இருந்து கூட்டம் நடக்கும் ஆண்டிப்பட்டி பிரசார மேடைப்பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர் மோடி பங்கேற்கும் ஆண்டிப்பட்டி தளத்தில் இறங்குவதற்கு பதிலாக தேனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கியது.

    சிறிது நேரம் கழித்தே தவறுதலாக தரை இறங்கியது பைலட்டுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து விரைவாக அங்கிருந்து கிளம்பிய ராணுவ ஹெலிகாப்டர் ஆண்டிப்பட்டியில் மோடிக்கு அமைத்திருந்த தளத்துக்கு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மீண்டும் ஒரு முறை சோதனை ஓட்டம் நடத்தி இடத்தை உறுதி செய்தனர். #Loksabhaelections2019 #PMModi #Rahulgandhi
    உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை எனவும், சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SmritiIrani
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , வேட்பாளருமான ராகுல் காந்தியை எதிர்த்து  பாஜக சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.

    இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று அமேதி தொகுதியை  அடைந்த ஸ்மிரிதி இரானி, உத்தரபிரதேச மாநிலம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 2014ம் ஆண்டு ஸ்மிர்தி இரானி  வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.   இதனை எதிர்கட்சியினர் தொடர்ந்து மறுத்து வந்தனர்.



    இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில்  ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை எனவும், அவரது சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதில் ரூ.1.75 கோடி அசையும் சொத்துக்கள் ஆகும். இரானிக்கு ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன. ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும்  ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கியிருக்கும் வீடுஆகியவற்றுடன் சேர்த்து ரூ.2.96 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஸ்மிரிதி இரானியின் கணவர் ஜுபின் இரானியின் சொத்து மதிப்பில் ரூ.1.69கோடி அசையும் சொத்துக்கள் எனவும், ரூ.2.97கோடி அசையா சொத்துக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #SmritiIrani
    பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியதற்கு, அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. #ImranKhan #LokSabhaElections2019 #Modi
    இஸ்லமாபாத்,

    மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடர வாய்ப்பு இருப்பதாக இம்ரான்கான் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. அவரது இந்தக் கருத்தை முன்வைத்து பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. அதேபோல், பாகிஸ்தானிலும் இம்ரான் கருத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. 

    இந்த நிலையில், இம்ரான்கான் கருத்துக்கு பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்திய பொதுத்தேர்தல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொல்ல வந்த கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும், யார் தோல்வியடைய வேண்டும் என்பதை இந்திய மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.



    பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரேஷி இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்திய ஊடகங்கள் அனைத்து விஷயங்களையும் பதற்றத்துக்குரியவையாக மாற்றி விடுகின்றன. பிரதமரின் கருத்தானது, அவர் சொன்னதைத் தாண்டி வேறொரு முறையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மோடி குறித்து பிரதமர் இம்ரானுக்கு என்ன கருத்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தியத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள்” இவ்வாறு அவர் கூறினார். 
    திமுக தலைவர் முக ஸ்டாலின் நிச்சயமாக ஆட்சிக்கு வரவே முடியாது என தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி முத்தரையர் காலனி பகுதியில் தூத்துக்குடி பா.ஜ.க. பாராளுமன்ற வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பிறகு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தூத்துக்குடியில் தாமரை வெற்றிபெற்றே ஆக வேண்டும். தூத்துக்குடிக்கு வந்த ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடையவே இங்கு போட்டியிடுகின்றனர் என்கின்றார். அதைபார்த்து இன்னொருவர் சிரிக்கின்றார். தேர்தல் தேதி முடிவு வரும்போது யார் சிரிக்கிறார்கள், யார் அழுகின்றனர் என்று தூத்துக்குடி மக்கள் பார்க்கதான் போகின்றார்கள்.

    தாமரை- இரட்டை இலையோடு சேர்ந்து சிரிக்கதான் போகின்றது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு அவசரம் காட்டுகின்றார். ஆனால் அவர் ஆட்சிக்கு வரவே முடியாது. அவர் முதலிலையே எழுதி வைத்துகொள்ளலாம். மேலும் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் மோடியும் சேர்ந்து அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் ஆழ் கடல் மீன்பிடிப்பதற்கு மானியம் மட்டும் 40 லட்சம் வழங்கப்படும், குளிர்சாதன வசதிகள் படகில் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

    தேர்தல் கமிசன் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர். பெயரை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வைத்துள்ளோம் என்று ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். காமராஜர், எம்.ஜி.ஆர். மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பெருமை சேர்ப்பது இந்த கூட்டணி. உலகத்திலையே மிக பிரபலமான ஊழலை செய்து திகார் சிறையில் ஒரு ஆண்டுகள் இருந்தவர்கள் இதெல்லாம் தூத்துக்குடி மக்களுக்கு தெரியாது என்று வாக்கு கேட்கிறார்கள். என் மீது எந்த வழக்கும் கிடையாது. எனவே தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan
    கோவை பிரசாரத்தில் பிரதமர் மோடி குறித்த லியோனி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவினர் மறியலில் ஈடுபட்டனர். #DindigulLeoni
    கோவை:

    தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கோவை மதுக்கரையில் நேற்று இரவு பிரசாரம் செய்தார்.

    பிரதமர் மோடி போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டி பேசினார். அப்போது அங்கு நின்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் லியோனி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பாரத் மாதா கீ ஜே’ என கோ‌ஷம் எழுப்பினார்.

    இதனால் ஆவேசமடைந்த தி.மு.க.வினர் அவரை விரட்டினர். அப்போது தி.மு.க.வினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அங்கு பதட்டமான சூழல் நிலவியது. பாலசுப்பிரமணியத்தை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதாவினர் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.இது தொடர்பாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் என்பவர் மதுக்கரை போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் முறையான அனுமதி பெற்று தேர்தல் பிரசாரம் நடந்த போது, மதுக்கரை 1-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ராசு என்ற செல்வராஜ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதேபோல மதுக்கரை காந்திநகரை சேர்ந்த சத்திய பிரகாஷ் என்பவரும் போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், திண்டுக்கல் லியோனி தனது பிரசாரத்தில் பாரத பிரதமரையும், இந்து கடவுள்களையும் அவதூறாக பேசினார். அப்போது அங்கு நின்ற பாலசுப்பிரமணியத்தை 3 பேர் மிரட்டி தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இருதரப்பு புகார்களையும் பதிவு செய்து கொண்ட போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #DindigulLeoni
    ×