search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    மராட்டியத்தில் நக்சலைட்டுகள் பகுதியில் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக அமித்ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #LoksabhaElections2019 #BJP #Amitshah
    மும்பை:

    மராட்டியத்தில் காட்சி ரோலி மற்றும் சந்திராபூர் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்தது. பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அங்கு நேற்று 11 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

    2 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் காட்சிரோலி மற்றும் சந்திராபூருக்கு வந்தார். ஹெலிகாப்டர் இறங்கும் மைதானத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.

    ஆனால் அவர் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பிரசாரம் செய்யாமல் ரத்து செய்து விட்டார்.

    இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய நிதி மந்திரியுமான சுதிர் முஸ்கான்டிவர் கூறும் போது, “தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக அங்கு செல்ல முடியாததால் அவர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை” என்றார்.

    ஆனால் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #LoksabhaElections2019 #BJP #Amitshah
    மத்திய அரசின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.



    தொடர்ந்து பேசிய மோடி கூறியதாவது:-

    நாம் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் மனங்களின் குரலாக எதிரொலிக்கின்றது. இந்த நாட்டின் எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் இது பிரதிபலிக்கின்றது. தேசியவாதம் என்பது நமது முன்னுரிமையான குறிக்கோள். நல்லாட்சி என்பது நமது தாரக மந்திரம்.

    நமது தேர்தல் அறிக்கையில் கால நிர்ணயத்துடன் நிறைவேற்றத்தக்க 75 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பன்நோக்கு பார்வையுடன் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முன்னேற வேண்டுமானால் முன்னேற்றம் என்பதை மிகப்பெரிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்கு தூய்மை இந்தியா திட்டம் தந்த வெற்றியை நான் நினைவுகூர வேண்டும். இந்த திட்டம் இன்று எத்தனை பெரிய வெகுஜன இயக்கமாக இன்று மாறியுள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. ‘ஒரே நோக்கம்-ஒரே திசையிலான பயணம்’ என்ற குறிக்கோளுடன் முன்னேற்றத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

    வரும் 2047-ம் ஆண்டு நமது 100-வது சுதந்திர திருநாளை கொண்டாடும்போது இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடாக திகழ வேண்டும் என்பதுதான் நமது தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கடந்த ஐந்தாண்டுகளில் நல்லாட்சி, எளிமையான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி மற்றும் பொறுப்புள்ள ஆட்சியாக நாம் செயல்பட்டதால் அரசின் திட்டப்பலன்கள் உரியவர்களை சென்றடைய முடிந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு புதிய வாக்குறுதிகள் வழங்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 20 பேர் கொண்ட குழுவை பிரதமர் மோடியும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அமைத்தனர்.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முக்கிய இடம் பிடித்திருந்தனர்.

    நாட்டின் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக 15 துணைக் குழுக்கள் அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த மாதமே பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நிறைவு பெற்றது.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு “சங்கல்ப் பத்ரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் நடந்தது.

    தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். அவர் கூறியதாவது:-

    ஏழை-எளியவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்து கொடுத்தது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அரசு, ஏழைகளின் அரசாக திகழ்ந்தது. சுமார் 50 கோடி இந்தியர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அந்த 50 முக்கிய முடிவுகளும் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றுவதாக அமைந்துள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் மிகப்பெரிய பலன்களை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பணியாற்ற 6 கோடி பேரிடம் யோசனை பெற்று இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறோம்.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இதையடுத்து மதியம் 12 மணி அளவில் 45 பக்க பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

    இந்தியா விரைவில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருப்பதால், பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் 75 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * விவசாயம் ஊக்குவிக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை.

    * 60 வயதான சிறு-குறு விவசாயிகளுக்கு மாதாந்திர பென்சன் வழங்கப்படும்.

    * விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா பயிர் கடன் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

    * விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கிரிடிட் கார்டு திட்டம் கொண்டு வரப்படும்.

    * விவசாய பொருட்கள் இறக்குமதி பெருமளவு குறைக்க நடவடிக்கை.

    * இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டங்கள்.

    * விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச வருமான உத்தரவாத திட்டம் உருவாக்கப்படும்.

    * அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.

    * சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும்.

    * உலகில் 3-வது பலம் வாய்ந்த பொருளாதார நாடாக உருவாக்க நடவடிக்கை.

    * ராணுவத்தில் தன்னிறைவு அடைய திட்டங்கள்.

    * கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

    * காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ, 370 அரசியல் சாசன சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

    * 2022-ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் 2 மடங்காக உயர்த்தப்படும்.


    * முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக்கு முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.

    * நதிகள் இணைப்புக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.

    * நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.

    * பாராளுமன்றம் - சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.

    * 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்.

    * பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

    * மக்களிடம் கருத்து கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மேலும் எளிதாக்கப்படும்.

    * மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்டம்.

    * பொது சிவில் சட்டம் இயற்றப்படும்.

    * தூய்மை இந்தியா திட்டத்தில் 100 சதவீதம் தூய்மை எட்டப்படும்.

    * குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.

    * அயோத்தியில் சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டப்படும்.

    * 50 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும்.

    * 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் தடங்களும் மின் மயமாக்கப்படும்.

    * ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறந்த குடிநீர், கழிவறை வசதிகள் உறுதி செய்யப்படும்.

    * நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.

    * நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.

    * மேக் இன் இந்தியா திட்டம் மேலும் தீவிரமாக்கப்படும்.

    * நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் மாற்றப்படும்.

    * அனைத்து மாநிலங்களிலும் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி பாராளுமன்றம்- சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

    * பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
    தேர்தல் விதிமுறைகளை நான் எந்த வகையிலும் மீறவில்லை. எனக்கு பிடித்தமான கடவுளின் பெயரை வெளியே கூறி பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது என்று நடிகர் சுரேஷ்கோபி கூறினார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
    திருவனந்தபுரம்:

    பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி தற்போது பா.ஜனதா கட்சி சார்பில் டெல்லி மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.

    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்தின் போது சுவாமி ஐயப்பன் பெயரையோ அல்லது வழி பாட்டுத்தலங்களை குறிப்பிட்டோ பிரசாரம் செய்யக் கூடாது என்று மாநில தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியிருந்தார்.

    இந்த நிலையில் திருச்சூர் தேக்கின்காடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சுரேஷ்கோபி கலந்து கொண்டு பேசினார். அப்போது சபரிமலை சுவாமி ஐயப்பன் மக்களின் உணர்வாக உள்ளார். சபரிமலை கோவில் விவகாரத்தில் பக்தர்களின் மனம் புண்பட்டு உள்ளது. அதில் நானும் ஒருவன். ஆனால் இந்த விவகாரத்தை நான் தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்த விரும்பவில்லை என்றார்.

    இது திருச்சூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அனுபமா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தியதால் அதுபற்றி 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி சுரேஷ் கோபிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து நடிகர் சுரேஷ்கோபி கூறியதாவது:

    தேர்தல் விதிமுறைகளை நான் எந்த வகையிலும் மீறவில்லை. சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் என்று அந்த கூட்டத்திலேயே நான் கூறினேன். எனக்கு பிடித்தமான கடவுளின் பெயரை வெளியே கூறி பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது. இதற்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். எனக்கு கலெக்டர் அனுப்பி உள்ள நோட்டீசுக்கு தகுந்த விளக்கம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
    விவசாயக் கடனுக்கு வட்டி கிடையாது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

    ஒவ்வொரு துறையிலும் குழு அமைத்து, விவாதிக்கப்பட்டு பாஜக தேர்தல் அறிக்கை உருவாகி உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை 130 கோடி மக்களுக்கும் திருப்தி அளிக்கும். புதிய பாரதத்தை நோக்கி பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 74 சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்.  தேசப் பாதுகாப்புக்கு மோடி அரசு முன்னுரிமை தரும்.

    கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  விவசாய கடனுக்கு வட்டி கிடையாது.  5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அதாவது, கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

    நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும். 60 வயதான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.



    நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 2022ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரு மடங்காக விரிவுபடுத்தப்படும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #BJPManifesto
    பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் வெளியிட்டார். #LokSabhaElections2019 #BJPManifesto
    புதுடெல்லி:

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன.

    காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவுக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும், நாட்டின் வளர்ச்சி, தேச பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


    முதற்கட்ட வாக்குப்பதிவு 11-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உறுதிமொழி பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், பாஜக அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் பற்றிய தகவல்களுடன், பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. நடைமுறையில் சாத்தியமாகும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கையை தயாரித்திருப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

    நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும்  மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளின் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டதாகவும், பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் எவ்வித ஊழல்களும் நடைபெறவில்லை என்றும் கூறினார். #LokSabhaElections2019 #BJPManifesto
    பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி நிதி கிடைக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #BJP #TTVDhinakaran

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து கீழப்பாவூர், ஆலங்குளம், பேட்டை, நெல்லை, மேலப்பாளையம், நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி பகுதியில் பிரசாரம் செய்தார்.

    நெல்லை டவுனில் நடந்த கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசும் போது கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் வாக்களித்தனர். பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. அந்த கோபத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களை கடந்த 5 ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறது. மக்கள் மீது பல்வேறு வரி சுமைகளை ஏற்றியது.

    தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களித்த ஒரே காரணத்தால் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சித்தது. அந்த அரசுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சமரசம் செய்துள்ளது.


    மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பது எந்த விதத்தில் நியாயம். அதனால் தான் நாங்கள் அதை துரோகிகள் கூட்டணி என்று சொல்கிறோம். இந்த தேர்தலில் துரோகிகளின் கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய முற்போக்கு கூட்டணிகளில் இடம் பெற்றிருந்தனர். அதாவது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தனர். பா.ஜ.க. கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தனர். அதனால் தான் நாங்கள் அந்த கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறோம். எங்கள் கட்சி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காது. இதேபோல் மு.க.ஸ்டாலின் சொல்வாரா? அவர் சொல்லமாட்டார். ஏனென்றால், தி.மு.க. பதவி, ஆட்சி அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணிக்கும் பாடம் புகட்ட வேண்டும்.

    பா.ஜ.க. மதத்தின் பெயரால் நாட்டை பிரித்து ஆள நினைக்கிறார்கள். அமைதி பூங்காவான நமது நாட்டுக்கு மத சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலாக இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #BJP #TTVDhinakaran

    பாஜக தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியினரை குறி வைத்து வருமானவரி சோதனை நடத்தியதாக கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளார். #kamalnath
    போபால்:

    மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 11 கோடி பணம் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

    இது சம்பந்தமாக கமல்நாத் கூறியதாவது:-

    மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக தனது எந்திரத்தை எதிர்க்கட்சியினரை பழிவாங்க பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

    5 ஆண்டு காலத்தில் இவர்கள் செய்த சாதனையை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.

    இந்த தோல்வி பயத்தால் தான் வருமான வரித்துறையினரை ஏவி எதிர்க்கட்சியினரை குறி வைத்து சோதனை நடத்துகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இதைத்தான் செய்தார்கள். இப்போதும் அது தொடர்கிறது.



    பா.ஜ.க. அரசின் இது போன்ற நடவடிக்கைகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. இவர்கள் என்னவெல்லாம்  செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதன் மூலம் எங்களை நீக்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.

    மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். அவர்கள் தக்க பதில் சொல்வார்கள்.

    இவ்வாறு கமல்நாத் கூறினார்.

    இது சம்பந்தமாக பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கூறும் போது ‘மம்தா பானர்ஜி வழியில் கமல்நாத்தும் செயல்பட ஆரம்பித்துள்ளார். வருமான வரித்துறை கடமையை செய்கிறது. அதை விமர்சிப்பது ஒரு முதல்-மந்திரிக்கு அழகல்ல. வருமான வரி சோதனையில் பணமும், ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதற்கு கமல்நாத் பதில் சொல்ல வேண்டும்’ என்றார். #kamalnath
    மேற்குவங்காளத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார பாடலுக்கு தடைவிதித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசை விமர்சிக்கும் வகையில் பாடல் ஒன்றை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்கின்றனர்.

    ‘இனி திரிணாமுல் இருக்காது’ என தொடங்கும் அந்த பாடலை அமீத் சக்ரவர்த்தியை எழுத, பா.ஜ.க. எம்.பி.யும், பாடகருமான பாபுல் சுப்ரியோ இசையமைத்து பாடி உள்ளார்.



    பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் இனி அந்த பாடலை பிரசாரத்துக்கு பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி பாபுல் சுப்ரியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதற்கிடையில், பா.ஜ.க.வின் பாடலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரசை தரக்குறைவாக விமர்சித்ததாக பாபுல் சுப்ரியோ மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. #BJP #ThemeSong #BabulSupriyo #ElectionCommission 
    மீண்டும் ஒருமுறை மோடி அரசு (ஃபிர் ஏக் பார் மோடி சர்க்கார்) என்னும் பாஜகவின் தேர்தல் பிரசார முழக்கம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. #BJPtagline #PhirEkBaar #ModiSarkar #LSpolls
    புதுடெல்லி:

    ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் ‘இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடல் இன்று வெளியானது. 

    இதேபோல், மீண்டும் ஒருமுறை மோடி அரசு (ஃபிர் ஏக் பார் மோடி சர்க்கார்) என்னும் பாஜகவின் தேர்தல் பிரசார முழக்கம்  டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

    இதை வெளியிட்டு பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடந்த 5 ஆண்டுகால பாஜக அரசு செய்து முடித்த பணிகளை முன்வைத்தும், மோடி தலைமையிலான ஆட்சி எடுத்த மிகப்பெரிய நடவடிக்கைகளை மையப்படுத்தி ‘செயல்திறன் மிக்க ஆட்சி’, ‘நேர்மையான ஆட்சி’ ‘மிகப்பெரிய திடமான நடவடிக்கைகளை எடுத்த ஆட்சி’ என மூன்று வகைகளில் மீண்டும் ஒருமுறை மோடி அரசு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த பிரசார முழக்கம் வடிவமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார். #BJPtagline #PhirEkBaar #ModiSarkar #LSpolls
    உண்மையிடம் பிடிபடாமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #Modicanthide #Rahul #Rafalescam
    புதுடெல்லி:

    பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியை நேற்றிரவு ஒளிபரப்பியது. இந்த பேட்டியின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு நீங்கள் உதவி செய்ததாக வரும் தகவல்கள் தொடர்பாக... என்று நேர்காணல் செய்த பெண்மணி கேள்வி எழுப்பினார்.

    அதற்குள் இடைமறித்த பிரதமர் மோடி, நீங்கள் சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா, இல்லையா? என்று மறுகேள்வி கேட்டார். 

    ரபேல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று கொண்டது. ஆனால், ரபேல் விவகாரம் தொடர்பாக சிலர் தொடர்ந்து கூறிவரும் பொய்களை ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.

    சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் சில தவறான தகவல்களையும் உங்கள் நிறுவனம் தலைப்பு செய்தியாக்கி விடுகிறது. ஆனால், வெளிச்சத்துகு வர வேண்டிய உண்மைகளை நீங்கள் இருட்டடிப்பு செய்து விடுகிறீர்கள் எனவும் மோடி வேதனையுடன் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இந்த பேட்டியின் ஒரு பகுதியை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோ பதிவின் அடிக்குறிப்பாக, ‘திரு.மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது.  உங்களது ‘கர்மா’ (முன்வினைகள்) உங்களை காட்டிக்கொடுத்து விடும். அதை இந்த பேட்டியின்போது உங்களின் குரல் மூலம் இந்த நாட்டால் கேட்க முடிகிறது. 

    உண்மை என்பது மிகவும் வல்லமையான ஆயுதம். இந்த ஊழல் தொடர்பாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா? என சவால் விடுகிறேன்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  #Modicanthide #Rahul #Rafalescam
    மேற்கு வங்காளத்தின் கூச் பெகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் கொல்கத்தா மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார் என குற்றம்சாட்டினார். #LokSabhaElection2019 #PMModi #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், கூச் பெகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார் என குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் மம்தா ராணுவ நடவடிக்கைக்கு எதிராக இருக்கிறார். நமது தாயகத்தை மம்தா மதிக்க தவறிவிட்டார். எல்லையில் ஊடுருவல்காரர்களுக்கு மம்தா துணைபோகிறார். இந்தியாவை துண்டாடும் முயற்சிக்கு மம்தா துணைபோகிறார்.

    மத்திய அரசின் திட்டங்கள் கொல்கத்தா மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார். தற்போது பா.ஜ.,வுக்கு ஆதரவான அலையால் மம்தாவின் தூக்கம் பறிபோய் விட்டது. சாரதா சிட்பண்ட் ஊழல் நடந்துள்ளது. இதற்கு மம்தா துணைபோகிறார். இந்த மாநிலத்தில் ஏற்பட்ட ஊழல்கள் குறித்து இம்மக்கள் அறிவர். இந்த மாநிலத்தை காவலாளியான நான் காப்பேன் என தெரிவித்தார். #LokSabhaElection2019 #PMModi #MamataBanerjee
    ×