search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது.
    கொல்கத்தா:

    எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், மத்திய அரசு தீபாவளியையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதேபோல் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்கும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை குறைத்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. சில மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அவென்யூவில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து எஸ்பிளனேடு மெட்ரோ ரெயில் நிலையம் வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. 

    இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பேரணி புறப்பட்ட தயாரானபோது பாஜக அலுவலகம் முன்பு பேரிகார்டுகளை அமைத்து போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. மோதலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    சமீபத்தில் நடந்த 29 எம்.எல்.ஏ. தொகுதிகள், 3 எம்.பி. தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்ய பா.ஜ.க. தேசிய செயற்குழு இன்று கூடுகிறது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில்  பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இன்று காலை பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதில் டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் காணொளி வாயிலாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    கட்சியில் உயர் பதவி வழங்கப்படுவதை தடுக்க பா.ஜ.க. பெண் நிர்வாகி குறித்து முக நூலில் அவதூறு பரப்பிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி தில்லைநகர் பகு தியைச் சேர்ந்தவர் காளீஸ் வரன் (வயது 45). பா.ஜ.க. மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். திருச்சியை அடுத்த கல்லணை அருகே உள்ள கிளிக்கூடு பகுதியை சேர்ந்தவர் சுசிலா குமாரி (40). இவர் புறநகர் மாவட்ட பா.ஜ.க. செயலாளராக உள் ளார்.

    இதில் சுசிலா குமாரிக்கு பா.ஜ.க.வில் உயர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள திலகா (42) என்பவருக்கு பிடிக்கவில்லை. எனவே சுசிலா குமாரிக்கு களங்கம் ஏற்படுத்த திலகா திட்டம் தீட்டியுள்ளார்.

    ஏற்கனவே திலகா அதே பகுதியில் உள்ள காளி கோவிலை நிர்வகித்து வருகிறார். அங்கு பில்லி, சூனியம் எடுத்தல், மாந்திரீகம் தொடர்பாக பிரார்த்தனைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

    இதனை பார்த்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிமுத்துக்குமரன் (45) என்பவர் திலகாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனக்கு பெரும் பணமிழப்பு ஏற்பட்டதாகவும், அந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும், அதற்கு பிரார்த்தனை செய்யுமாறும் கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரை முகநூலில் நண்பராகும்படி திலகா கேட்டுக்கொண்டார். மேலும் தான் அனுப்பும் சில படங்கள், கருத்துக்களை குறிப்பிட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

    அதன்படி திலகா, பா.ஜ.க. மாவட்ட செயலாளரான காளீஸ்வரனின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து, அவரது படத்துடன் போலியான ஒரு முகநூல் பக்கத்தை தொடங்கினார். அதில் அரசியல் எதிரியான சுசிலா குமாரி குறித்து அவதூறு தகவல்களை ரவிமுத்துக்குமரனுக்கு அனுப்பி, போலியான முகநூல் பக்கத்தில் பதிவிட வைத்துள்ளார்.

    அதேபோல் இந்த பிரச்சினையில் தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் திலகா, அவதூறு படங்கள், கருத்துக்களை ரவி முத்துக்குமரனுக்கு அனுப்பியதும், தனது பக்கத்தில் இருந்து அழித்து விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதேபோல் காளீஸ்வரன் பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் பக்கத்தில் சுசிலா குமாரி பற்றிய தகவல்களை பரப்பி வந்துள்ளார்.

    இதனை அறிந்த காளீஸ்வரன் தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார். பின்னர் அந்த புகார் குறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்.

    இதில் திலகாவும், ரவி முத்துக்குமரனும் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் அதிரடியாக கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறியபோதும் தொடர்ந்து சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.
    சென்னை:

    முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    தமிழக அரசுதான் முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருவதாக  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார். இருந்தாலும் அணை திறக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 8ஆம் தேதி பாஜக சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

    இதேபோல் அதிமுக சார்பில் 9ம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    மத்திய அரசு வரியை குறைத்த பிறகும் பெட்ரோல்-டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு, மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் தீபாவளி பரிசு என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். மத்திய அரசின் இம்முடிவினால் விலைவாசியும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு தாம் வரியைக் குறைத்ததோடு நில்லாது, மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட்வரியை குறைத்து, நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு எல்லா மாநிலத்தையும் கேட்டுக்கொண்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் பல அரசுகளும் இதைப் பின்பற்றி, மாநில அரசின் பெரும்பங்கான வாட்வரியை உடன் குறைத்து உத்தரவிட்டனர்.

    இதன்படி புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை ரூ.7-8 ரூபாயும் - டீசல் விலையை ரூ.9-10 ரூபாயும், குறைத்து உத்தரவிட்டது. புதுச்சேரி அரசு இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும், டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் குறைந்துள்ளது.

    இதர பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநில அரசுகளில் 7 ரூபாயும், உத்தரபிரதேச மாநில அரசில் 12 ரூபாயும், உத்தரகாண்ட் மாநில அரசில் 2 ரூபாயும் மாநில அரசின் வாட் வரியில் குறைத்துக் கொள்ளப்பட்டது.

    ஆனால் நம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. அரசு, மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது, பிறகு தேர்தல் சமயத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது.

    இப்போது மத்திய அரசு தங்களுடைய பங்கிலே பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு பத்து ரூபாயும் குறைத்திருக்கும்போது, மற்ற மாநில அரசுகள் மக்களின் வரிச்சுமையை குறைத்திருக்கும்போது, தமிழக அரசு தன் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

    மாநில அரசு தங்கள் பங்கை குறைக்க முன் வந்தால்தான் குறைப்பதாக கட்டியம் கூறிய தமிழக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்?

    தமிழக அரசு தீபாவளி பரிசாக மக்கள் வரிச்சுமையை குறைக்க முன் வருமா? அப்படி குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ள மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றுமா? அல்லது வழக்கம் போல் நாடகங்களில் ஈடுபடுவார்களா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும்.
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் 7-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம். 7-ந் தேதி சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான மனுக்கள் வழங்கலை நான் தொடங்கிவைக்கிறேன். இதர மாநகராட்சிகளில் 10-ந் தேதி காலை முதல் மாநில நிர்வாகிகள் நேரில் சென்று விருப்பமனுக்களை பெற உள்ளார்கள். நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான விருப்பமனுக்கள் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பெறப்படும். விருப்பமனு பரிசீலனைக்கு பிறகு இறுதியாக வேட்பாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.

    அந்தந்த மாவட்ட தலைவர்கள் இதற்குரிய பணிகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் விருப்பமனுக்களை பெற வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனை பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.
    சென்னை:

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) கீழ் தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 565 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிலுவைத்தொகை ரூ.1,178 கோடியை விடுவிக்க வேண்டும் என்று அக்டோபர் 27-ந் தேதி மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது ஒரு வாரத்தில் நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார்.

    ஆனால் 5 நாட்களிலேயே, தமிழக அரசு கோரியதைவிட அதிகமாக ரூ.1,361 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.

    மத்திய அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.246 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வெறும் ரூ.1 கோடியே 85 லட்சம் வரை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்


    இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 500 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டபோதிலும், தமிழக அரசு 2 ஆயிரத்து 190 லட்சம் மனித வேலை நாட்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி மாவட்டத்துக்கு ஒரு குறைதீர் அதிகாரி, சமூக தணிக்கை குழு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்று எந்த ஒரு அதிகாரியும் நியமிக்கப்படவில்லை.

    இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கோரியபோதிலும், கடந்த மாதம் 25-ந் தேதி வரை தமிழக அரசு இந்த விவரங்களை அளிக்கவில்லை. தமிழக அரசின் அலட்சியப் போக்கால் மீனவர்கள் விடுவிக்கப்படுவது தாமதமாகி வருகிறது.

    கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சியில் என்னைச் சந்தித்து முறையிட்டனர். மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறவில்லை.

    கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனை பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சென்னை பத்திரிகை தகவல் மையத்தின் இயக்குனர் பி.குருபாபு உடன் இருந்தார்.

    மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பா.ஜனதா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் அனைவரும் கோபத்தில் உள்ளனர். அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவே சாட்சி.
    பெங்களூரு

    சட்டசபை இடைத்தேர்தல் முடிவு குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிந்தகியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஹனகல் தொகுதியில் பா.ஜனதாவும் வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளுக்கு தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் சிந்தகியில் பா.ஜனதாவும், ஹனகல் தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதியை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

    கடந்த சட்டசபை தேர்தலில் சிந்தகியில் காங்கிரசுக்கு 3-வது இடம் தான் கிடைத்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

    மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பா.ஜனதா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் அனைவரும் கோபத்தில் உள்ளனர். அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவே சாட்சி. ஹனகல் தொகுதியில் சீனிவாஸ் மானே கடந்த முறை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த முறை அவர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு உள்ளது. அத்துடன் ஹனகல் தொகுதி முதல்-மந்திரியின் சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. அனைத்து வகையிலும் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் இருந்தது. பா.ஜனதா ஆட்சியில் உள்ள எங்களின் நண்பர்கள் பைகளில் பணத்தை நிரப்பி கொண்டு சென்று வாக்காளர்களுக்கு வினியோகம் செய்தனர். ஆனாலும் ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து, மோடி ஆணவத்தை கைவிட வேண்டும், 3 கருப்பு சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
    புதுடெல்லி :

    3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன.

    இதையொட்டி காங்கிரஸ் கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து, மோடி ஆணவத்தை கைவிட வேண்டும், 3 கருப்பு சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் கொள்ளையை நிறுத்த வேண்டும்’’ என கூறி உள்ளார்.
    பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் வீரமரணம் அடையும் போலீசாரின் வாரிசுகளுக்கும் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கடமையின்போது வீரமரணம் அடையும் ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் துணை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து பிரதமரின் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையில் பொறுப்பேற்ற புதிய மந்திரிசபையின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில்  இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் பங்கேற்றனர்.

    இன்றைய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவாக பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் பணியின்போது வீரமரணம் அடையும் அனைத்து மாநிலங்களின் போலீசாரின் வாரிசுகளுக்கும் விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    நக்சலைட்கள், மாவோயிஸ்ட்டுகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் வீரமரணம் அடையும் போலீசாரின் வாரிசுகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

    மேலும், இந்த திட்டத்தின்கீழ் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மாதாந்திர உதவித்தொகையை இரண்டாயிரத்தில் இருந்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாகவும், மாணவிகளுக்கான உதவித்தொகையை இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதில் இருந்து மூவாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்தமுறை பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அவரது தலைமையிலான மத்திய அரசின் முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய பிரதமர் மோடி அடுத்த மாத துவக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு அதிபர் சிறிசேனா உறுதி செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, வெளிநாட்டுப் பயணத்தில் முதல் நாடாக மாலத்தீவு செல்கிறார். ஜூன் மாத துவக்கத்தில் மாலத்தீவு செல்லும் மோடி, அங்கிருந்து இலங்கைக்கு செல்ல உள்ளார். இத்தகவலை இலங்கை அதிபர் சிறிசேனா இன்று உறுதி செய்துள்ளார். 

    டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். அவரை மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர்.

    மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறிசேனா, மோடியின் இலங்கை பயணத்தை உறுதி செய்தார்.

    இலங்கைக்கு இந்திய பிரதமர் மோடி வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவரது வருகையை பெருமையாக கருதுவதாகவும் சிறிசேனா கூறினார். 

    ‘மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில் தலை தூக்கி உள்ளது. சில நாடுகளில் உள்நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்’ என்றும் சிறிசேனா கூறினார்.
    தமிழகத்துக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று கொண்ட அற்புதமான நிகழ்விற்கு கட்சிக்காக உழைத்த தொண்டர்களான மாவட்ட தலைவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் போலவே அழைப்பு விடுத்து அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி பணியாற்றுவோம்.

    இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும்.

    இன்னும் பல வெற்றிகள் பல மாநிலங்களில் குவிக்க இருக்கிறது. தமிழகத்திலும் பா.ஜனதா பலம் பெற இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெற பலம் பெற தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

    மக்களுக்கு எதிரான, மக்களுக்குத் துன்பம் தரக் கூடிய பிரச்சனைகளை இந்த அரசு ஆதரிக்க போவதில்லை, பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்ற தவறான பிரசாரம் எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது. பா.ஜனதா தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அடிப்படையில் எங்களுடைய பணி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உங்கள் கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் பெயரை தமிழகத்திலிருந்து மேலிடத்திற்கு பரிந்துரை செய்வீர்களா? என்ற கேள்விக்கு,

    ‘இதுகுறித்து கட்சி தலைமையும், பிரதமர் மோடியும் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    ×